Jump to content

'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது`


Recommended Posts

'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது`

 
யூ ட்யூப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சேபணைக்குரிய வகையில் கருத்துக்களை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன.

யூ டியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வ கண்காணிப்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வளைதளங்களை பயன்படுத்துவார்கள் என்ற மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. யூ டியூபும் அதை தெரிந்து வைத்துள்ளது.

காணொளிகளை பகிரும் இந்தத் தளமானது தன்னுடைய வலைதளத்தில் வேண்டத்தகாத பதிவுகள் மற்றும் கருத்துகளை இடுவதை கண்டறிவதற்காக ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற சிறப்பு வாய்ந்த தன்னார்வ குழுவைக் கொண்டுள்ளது.

ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில பதிவுகள் இருப்பதாக அனுப்பிய பல்வேறு புகார்களில் குறைந்த அளவு புகார்களுக்கு மட்டுமே பதிலளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9,000-க்கும் மேலான புகார்களை தான் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எதுவுமே தீர்க்கப்படவில்லை என்றும் ஒரு தன்னார்வலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள 526 புகார்களில் 15 பதில்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளது என்று கூறும் தன்னார்வலர்கள், இந்தத் தளத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லை என்ற பெரிய பிரச்சனையை இது அடையாளப்படுத்தும் கணக்கீடாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

பாலியல் ரீதியான கருத்துகள்

பதின்ம வயதுள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பகிரும் சில காணொளிகளில் விரும்பத்தகாத ஆட்சேபணைக்குரிய வகையில் கருத்துகளை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் வெளியிடும் இந்த காணொளிகளில் ஆபாசமோ அல்லது நிர்வாணத்தை வெளிப்படுத்தும் எந்தவித காட்சிகளும் இல்லாத போதிலும் பாலியல் ரீதியான கருத்துகள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பதின்ம வயது குழந்தைகளை உடைகள் இல்லாத காணொளிகளை பகிருமாறும், தங்களின் தேகங்கள் குறித்து உரையாட தூண்டும் வகையிலும் காணொளிகளின் கீழ் கருத்துகள் இடப்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகளை தனிச்செய்தியில் உரையாட வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.

குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தும் அல்லது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள விரும்பும் பெடொஃபைல் எனப்படும் நோயுடைய நபர்கள் இந்த வலைதளத்தில் உலவுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தளத்தில் குழந்தைகள் மீது பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தும் எந்தவித உள்ளீடுகள் மற்றும் கருத்துகள் இடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவ்வாறு முறையற்ற செயலில் ஈடுபடும் நபர்களின் கணக்கை நீக்கிவிடுவோம் என்றும் கடந்த மார்ச் மாதம் யூ டியூப் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், பிபிசியிடம் பேசிய தன்னார்வலர்களோ "அவர்கள் தங்கள் கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், தன்னார்வலர்கள் குழு அளித்த புகார்களின் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மக்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

யூ ட்டியூப் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளார் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் கருத்துக்களை கண்டிப்பாக எங்கள் நிறுவனம் அனுமதிக்காது, இது போன்ற கருத்துக்கள் மீது அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் பயனாளர்கள் புகாரளிப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

சைல்ட்நெட் இண்டர்நேசனல் எனப்படும் இணைய பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி வில் கார்ட்னெர், ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற தன்னார்வ குழு அமைப்பு வெளிப்படுத்தியுள்ள இந்தப் பிரச்சனையின் மீது குறிப்பிட்ட நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-40836168

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.