Jump to content

சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?


Recommended Posts

சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?

 
சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது?
தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. 
 
முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி அரேபியாவில் பிரபலமான சராஹா செயலி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்துமளவுக்கு படு வேகமாக வைரலாகியது. இதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த செயலி சொற்ப காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்யுமளவுக்கு பரவிவிட்டது.
 
சரி இந்த சராஹா செயலி என்றால் என்ன என்று பார்ப்போம்.
 
முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கருத்துக்களை சராஹா செயலியில் பெற முடியும். இந்த செயலி மற்றவர்கள், சிலவேளைகளில் முகம் தெரியாதவர்கள் தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை சுயமாக மாற்றிக் கொள்ள முடியும் என இந்தச் செயலியை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சராஹா செயலியில் நீங்கள் உருவாக்கும் சுய விபரத்தினை (Profile) யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். மேலும் இதில் மற்றவர்களின் சுய விபரங்களைப் பார்த்து அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அவர்கள் Login செய்தாலும் மற்றவர்கள் அனுப்பும் செய்தி மட்டுமே தெரியும், அதை யார் அனுப்பியது என்ற தகவல் தெரியாது. நீங்கள் மெசேஜ் அனுப்பியர் செயலியை திறந்ததும் அவரது Inboxஇல் செய்தி மட்டும் தெரியும். இப்படி வருகின்ற செய்திகளை நீங்கள் block செய்ய முடியும். அதைவிட அவற்றை அழிக்கவோ, பதிலளிக்கவோ அல்லது விருப்பத்தேர்வு என குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் மிகவும் இலகுவாகா கண்டறிய முடியும்.
 
தற்பொழுது இது அனைத்து மட்டத்திலும் அதிக பிரபலமாகி வருவதால் இதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்த இதை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர் என்று புதிய தகவல்கள் சொல்கின்றன.
 
தனி நபர் பாதுகாப்பு அம்சமாக தேடல் முடிவுகளில் உங்களது பெயர் யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை உங்களது விருப்பத்துக்கேற்ப குறைத்து வைக்க முடியும். மேலும் ஏற்றுக்கொள்ளப்படாத வாடிக்கையாளர்கள் உங்களது சுயவிபரத்தை பயன்படுத்துவதை நிறுத்திவைக்க வைக்க முடியும்.
 
இதன்மூலம் Login செய்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு comment பண்ண முடியும். மேலும் பெயர் உள்ளவர்கள் மட்டுமே உங்களக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் உங்களிடம் இருந்தால் மற்றவர்களை block செய்ய முடியும். இதனால் பெயரற்றவர்கள் மீண்டும் உங்களுக்கு செய்தி அனுப்ப முடியாது.
 
இந்த சராஹா போன்ற வசதிகளை வழங்கும் பல்வேறு செயலிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. எனினும் இவற்றில் இக் யாக், சீக்ரெட் மற்றும் விஸ்பர் போன்ற செயலிகள் பிரபலமானதாக அறியப்படுகின்றது. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் சராஹா செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர் என்று அறியப்படுகிறது. இந்த தரவிறக்க வேகம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தவண்ணமே உள்ளது. 

https://news.ibctamil.com/ta/apps/Sarahah-App-What-Is-It

Link to comment
Share on other sites

மொட்டைக் கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah

 

ப்ஸ்மாஷ், ஸ்மூலே வரிசையில் அடுத்த வைரல் பேபியாக வலம் வந்துகொண்டிருக்கிறது சாரா. நீங்கள் இந்த ஆப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்; ஆனால் நிச்சயம் கடந்த இரண்டு நாள்களில் உங்களின் டைம்லைனில் ஏதாவது ஒரு 'சாரா' ஸ்க்ரீன்ஷாட்டாவது கண்ணில் பட்டிருக்கும். நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள உதவும் டிஜிட்டல் உளவாளிதான் இந்த சாரா. அது எப்படி என்பதில்தான் இதன் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது.

Sarahah-App

எப்படி இயங்குகிறது?

உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களைப் பற்றியும் நீங்கள் யார் என்பதை மறைத்து உங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும். இந்த இரண்டு விஷயங்களின் சங்கமம்தான் சாரா. நம்முடைய அடையாளங்களை வெளிப்படுத்தாமலே, நாம் விரும்பும் நபரிடம் நம் கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க முடியும் என்ற ஒரு விஷயம்தான் சாராவின் சுவாரஸ்ய அம்சம். இதனால்தான் திடீர் திடீரென டவுன்லோட் செய்து, அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள் ஆன்லைன் வாசிகள்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் என இரண்டிலும் சாரா இயங்கும். மேலும் டெஸ்க்டாப் வெர்ஷனும் இருக்கிறது. https://www.sarahah.com இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல், பாஸ்வேர்டு, யூசர் நேம் போன்ற விவரங்களைக் கொடுத்து பதிவு செய்தால் போதும். சாரா அக்கவுன்ட் ரெடி. உடனே அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து, கருத்துக்களை அறியலாம். அதேபோல மற்றவர்களின் சாரா அக்கவுன்ட்டுக்கும் நம் கருத்துக்களை அனுப்பலாம். மிக மிக எளிமையாக இருக்கிறது இவற்றின் செயல்பாடுகள். ப்ளே ஸ்டோரில் 50 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது இன்ஸ்டால் செய்தவர்களின் எண்ணிக்கை.

எஸ்டீடி என்ன?

சாரா என்றால் அரபு மொழியில் நேர்மை என அர்த்தமாம். தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், நிர்வாகத்திடம் தங்கள் குறைகளை தயக்கமின்றி பகிர்வதற்காகவும், ஊழியர்களின் பிரைவசியை பாதுகாக்கவும் டாஃபிக் என்ற சவூதி அரேபியர் உருவாக்கியதுதான் இந்த சாரா. பின்னர் இதுவே ஆப்பாக வெளியாக மத்திய கிழக்கு நாடுகளில் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் இந்த ஆப் மெதுவாக அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பரவியது. அந்நாட்டு இளைஞர்கள் சாரா இணையமுகவரியை ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப்சாட் என செல்லுமிடமெல்லாம் கொண்டுசெல்ல சாரா கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானது. தற்போது இந்தியா வரைக்கும் வந்துவிட்டது இந்த ஆப். இதுதான் இதன் வரலாறு.

Anonymous-Messaging-App

சாராவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

"திபுதிபுவென வைரலாகும் இந்த ஆப்பை பாராட்டு மழையால் நனைத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ்" என்று எழுததான் ஆசை. ஆனால் ப்ளே ஸ்டோரில் மூன்று ஸ்டார்களோடு திணறிக்கொண்டிருக்கிறது சாரா. காரணம் இதன் இன்னொருபக்கம்தான். என்றோ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது, சொல்லாத காதலை சொல்லி விடுவது, மற்றவர்களின் மீது இருக்கும் அக்கறையில் அறிவுரைகள் வழங்குவது என இதன் ஒரு பக்கம் எமோஷனாலான ஒன்றுதான். ஆனால் இன்னொருபக்கம் அப்படியே இணைய உலகை பிரதிபலிக்கிறது இந்த ஆப். அதாவது "வகைதொகையில்லாமல் கிண்டல் செய்வது, ஆபாச மற்றும் வசவு வார்த்தைகளை அள்ளி வீசுவது, உருவகேலி செய்வது, மிரட்டுவது என அத்தனையும் வெசம்...வெசம்" என ஆங்க்ரி எமோஜிக்களை கொட்டுகின்றனர் சாரா யூசர்ஸ். இதற்காக ரிப்போர்ட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்களில் மெசேஜ் அனுப்புபவர்களுக்கு ரிப்ளை செய்யும் வசதி, மோசமான வார்த்தைகளை ஃபில்டர் செய்யும் வசதி போன்றவற்றையும் இணைக்கவிருப்பதாகக் கூறுகிறது சாரா டீம். 

சாராவைப் போலவே யிக்யாக் என்னும் சேவை இதேபோன்ற செயல்பாடுகளுடன் சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு இதேபோல நிறைய எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் புகார்கள் எழ... இறுதியில் அது முற்றிலுமாக முடங்கிப்போனது. சில மாதங்களுக்கு முன்னர் Sayat.me என்னும் தளமும் இதேபோல வைரல் ஆனது. ட்ரெண்ட்டிற்கு ஏற்ப, அவ்வப்போது ஏதாவதொரு விஷயத்தை வைரல் ஆக்குவது என நெட்டிசன்களுக்கு எல்லா நாளும் கார்த்திகைதான். அப்படி திடீரென வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த சாரா, ஃபேஸ்புக், ட்விட்டர் போல நிலையான புகழை தக்கவைத்துக்கொள்வது என்பதெல்லாம் மிக சிரமம்.

ப்ளஸ் மைனஸ் என இரண்டும் கலந்திருப்பதால் இதனை எப்படிக் கையாளப்போகிறோம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.
 

http://www.vikatan.com/news/information-technology/98799-what-is-special-in-new-viral-app-sarahah.html

Link to comment
Share on other sites

சவூதி இளைஞரால் உருவாக்கப்பட்ட ‘சராஹா’ செயலி (Sarahah app) 30 கோடி பேரால் பதிவிறக்கம்

(ரெ. கிறிஸ்ணகாந்)

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டுவரும் செயலியாக 'சராஹா' செயலி (Sarahah app) இடம்பிடித்துள்ளது. குறுகிய காலத்துக்குள் 30 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இத்தகைய சாதனை படைத்துவரும்  சராஹா  மூன்று பேரால் மாத்திரமே இயக்கப்படுகிறது என்பது வியப்பாகும்.

சராஹா, ஒரு விசயத்தை நேரடியாக சொல்ல முடியாதபோது, அதற்கான மாற்றுவழி வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச் செயலியை சிலர்  மொட்டை கடதாசியின் டிஜிட்டல் வடிவம் எனவும்  சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Sarahah

ஏனென்றால் ஒருவர் சொல்லும் கருத்து ஏனைய தரப்பினருக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இதை பயன்படுத்தி தமது கருத்துக்களை நேர்மையாக யாருக்கும் அச்சப்படாமலும் தெரிவிக்கலாம்.

'சராஹா' என்பது ஓர் அரபு சொல்லாகும், இந்த சொல்லுக்கான பொருள் 'நேர்மை' என்பதாகும். இந்த செயலியை பயன்படுத்தி எவருக்கு வேண்டுமானாலும் செய்தி அனுப்பலாம். ஆனால் செய்தி அனுப்பியவர்  யார் ? என்ற  விபரம் பெறுநருக்கு தெரியாது.

அத்துடன் இந்த செய்திக்கு பதிலும் அனுப்ப முடியாது. இந்த காரணங்களினாலேயே 'சராஹா'வை அனைவரும் விரும்புகின்றனர் எனலாம்.

இந்த செயலி சவூதி அரேபியாவை சேர்ந்த ஸைன் அல்-அப்தீன் தௌஃபீக் எனும் 29 வயதான இளைஞரால் உருவாக்கப்பட்டுள்ளது. இச் செயலி தொடர்பாக அவர் கூறுகையில் சராஹாவை கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என்றே எதிர் பார்த்தேன். ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் மாத்திரம் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சராஹாவை பதிவிறக்கம் செய்துள்ளனர், இது தனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

'சராஹா' செயலியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் கடந்த பெப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் இச்செயலியின் பாவனை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

http://metronews.lk/?p=11941

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.