Jump to content

தென்னமரவாடி மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவு தர தமிழ்க் கனடியன் நடைபவனி 2017


Recommended Posts


இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

“பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான புஷ்பராஜா. “பொருளாதார வாய்ப்புகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர சேவைகள் இல்லாத காரணத்தால் கிராமத்திற்கு திரும்பிய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் திண்டாடுகின்றன.”

2017 தமிழ்க் கனடியன் நடைபவனி மூலம் சேகரிக்கப்படும் தொகை முழுவதும் சுயதன்னிறைவு கொண்டதாகவும் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை கொண்டிருப்பதாயும் அமையும் 10 ஏக்கர் அளவிலமைந்த பண்ணை ஒன்றினை தென்னமரவாடியில் உருவாக்க வழி வகுக்கும். அப் பண்ணை தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும்.

நிலையான இந்தப் பண்ணைத் திட்டமானது, வேலைவாய்ப்புக்களையும், இதே கிராமத்திற்கே திரும்பத்திரும்ப முதலிடக்கூடியதாய் அமையும் வருமானங்களை ஈட்டும் வழிகைளையும் உருவாக்குவது மட்டுமல்ல, இளம் வயதினர் இந்தப் பகுதியை நோக்கி வரத்தக்கவிதமாகவும், ஒரு துடிப்பான சமூகத்தை மீண்டும் கட்டமைக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார் 9 வது தமிழ் கனடியப் நடைபவனியின் இணைத் தலைவரான திரு. பிரகல் திரு.

“கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்க் கனடியன் நடைபவனி கனடாவிலும், மற்றும் தாயகத்திற்கும் தேவையான பல திட்டங்களை ஆதரிக்கும்வகையில் நிதிசேகரிப்பை செய்து காட்டியிருக்கிறது, ‘Canadian Heart and Stroke Foundation’, ‘Center for Addiction and Mental Health’, ‘சம்பூர் வீடமைப்பு’ என்பன அத்திட்டங்களில் சிலவாகும்.”என்றார் கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர் வி. சாந்தகுமார். “இத்தகைய வெற்றிகரமான முன்னெடுப்புகள் மூலம், தாயகத்தின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு கனடாவில் உள்ள தமிழர்கள் இன்னுமொருமுறை பங்களிக்கிறார்கள் என்று நம்புகிறோம்.”

நிகழ்வு: 9 வது ‘தமிழ்க் கனடியன் வருடாந்த நடைபவனி’ 2017

திகதி: செப்டெம்பர் 10, ஞாயிற்றுக் கிழமை

இடம்: தொம்ஸன் பார்க், (Brimley Rd. / Lawrence Ave.) ஸ்காபரோ

நேரம்: காலை 8:30 (பதிவுகள்); காலை 9:30 (நடைபவனி ஆரம்பம்)

மேலதிக விபரங்களுக்கும், உறுதிமொழிப்படிவத்தை பெறுவதற்கும் 416-240-0078 என்ற இலக்கத்தை அழைக்கவும்.

ஊடக விசாரணைகளுக்கு: பிரகல் திரு (416) 727 3430

unnamed-3-670x503.jpg

http://www.tamilcnn.lk/archives/662888.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னை மரவாடி குடியிருப்பில் வேறு  இனத்தவர்களும் தங்களின் பூர்வீக நிலம் என உரிமை கொண்டாடுகிறார்கள் 

Link to comment
Share on other sites

தென்னைமரவடி தமிழர்கள் பாரம்பரியமாக இருந்த பழமையான கிராமம் ,1984இல் இவர்கள் துரத்தப்படட பின்பு இவர்களின் வயல்களை சிங்களவர்கள் பயன்படுத்தியவர்கள் .தற்போது மீளவும் பலர் திரும்பவும் எடுத்து விவசாயம் செய்கின்றார்கள் .சில சிங்களவர்களுக்கும் காணிகள் இருக்கின்றன .ஆனால் இக்கிராம மக்கள் மீளவும் குடியமராமல் போனால் வட கிழக்கு இணைப்பே தற்போது இல்லாவிடடாலும் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகலாம் .இதை கருத்தில் கொண்டுதான் அந்த மக்களுக்கு தொழில் வழங்குவதட்காக 10 ஏக்கரில் பண்ணை அமைக்க முடிவெடுத்தோம் .இது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுமானால் கனடாவில் உள்ள வேறு சில அமைப்புக்கள் , சில முதலீட் டாலர்களை கொண்டு கடல்தொழில் சார்ந்த திட்டங்களை செய்யமுடியும் என்று சொல்லியுள்ளார்கள் .

தற்போது 82  குடும்பங்கள் திரும்ப குடியேறியுள்ளார்கள் .பலர் முல்லைத்தீவில் இருக்கின்றார்கள் .தாங்கள் வந்து குடியேறினால் தங்களுக்கு வீடும் ,தொழில் வாய்ப்புகளையும் செய்து தர கோரினார்கள் ,வீட்டு வசதியை சம்பந்தன் ஐயா புனர் வாழ்வு அமைச்சு ,வீடமைப்பு அமைச்சுகளுக்கு ஊடாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் .வேலை வழங்குவதட்காக இந்த பண்ணையை அமைக்க உத்தேசித்தோம் .இதட்குரிய உத்தேச மதிப்பீடு 100000.00கனேடிய டொலர்கள் .இதில் கனேடிய தமிழர் பேரவை (CTC )50000.00டொலர்களையும் ,திருகோணமலை நலன்புரிச்சங்கம் (TWA )25000.00டொலர்களையும்கனடா தமிழ் தேசிய கூட் டமைப்பு (TNA )25000.00டொலர்களையும் சேகரிப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.