Jump to content

தென்னமரவாடி மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவு தர தமிழ்க் கனடியன் நடைபவனி 2017


Recommended Posts


இனக் கலவரத்தை தொடர்ந்து 1984ம் ஆண்டு பண்டைய தமிழ் கிராமமான தென்னமரவாடி அழிக்கப்பட்டு, உள்ளூர் மக்கள் முற்றுமுழுதாக இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தசாப்தங்களாக இடப்பெயர்ந்திருந்த இக் கிராமத்தவர் தமது பூர்விக நிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு 2010 ஆண்டுதான் அனுமதிக்கப்பட்டனர். திரும்பி வந்த சில குடும்பங்களும், தென்னமரவாடி பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையிலிருந்த காரணத்தால், அங்கு மீளக் குடியேறுவதிலும், அதனை மீளக் கட்டுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

“பல தசாப்தகால இடம்பெயர்வின்பின் மீளக் குடியேறி, தம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப இக் குடும்பத்தினர் பெரும் ஆர்வம் காட்டினாலும், பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.” என்றார் தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான புஷ்பராஜா. “பொருளாதார வாய்ப்புகள், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர சேவைகள் இல்லாத காரணத்தால் கிராமத்திற்கு திரும்பிய குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் திண்டாடுகின்றன.”

2017 தமிழ்க் கனடியன் நடைபவனி மூலம் சேகரிக்கப்படும் தொகை முழுவதும் சுயதன்னிறைவு கொண்டதாகவும் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை கொண்டிருப்பதாயும் அமையும் 10 ஏக்கர் அளவிலமைந்த பண்ணை ஒன்றினை தென்னமரவாடியில் உருவாக்க வழி வகுக்கும். அப் பண்ணை தென்னமரவாடி கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் நிர்வாகிக்கப்படும்.

நிலையான இந்தப் பண்ணைத் திட்டமானது, வேலைவாய்ப்புக்களையும், இதே கிராமத்திற்கே திரும்பத்திரும்ப முதலிடக்கூடியதாய் அமையும் வருமானங்களை ஈட்டும் வழிகைளையும் உருவாக்குவது மட்டுமல்ல, இளம் வயதினர் இந்தப் பகுதியை நோக்கி வரத்தக்கவிதமாகவும், ஒரு துடிப்பான சமூகத்தை மீண்டும் கட்டமைக்கும் முக்கிய காரணியாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார் 9 வது தமிழ் கனடியப் நடைபவனியின் இணைத் தலைவரான திரு. பிரகல் திரு.

“கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்க் கனடியன் நடைபவனி கனடாவிலும், மற்றும் தாயகத்திற்கும் தேவையான பல திட்டங்களை ஆதரிக்கும்வகையில் நிதிசேகரிப்பை செய்து காட்டியிருக்கிறது, ‘Canadian Heart and Stroke Foundation’, ‘Center for Addiction and Mental Health’, ‘சம்பூர் வீடமைப்பு’ என்பன அத்திட்டங்களில் சிலவாகும்.”என்றார் கனடிய தமிழர் பேரவையின் தலைவரான டாக்டர் வி. சாந்தகுமார். “இத்தகைய வெற்றிகரமான முன்னெடுப்புகள் மூலம், தாயகத்தின் வாழ்வில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றொரு பயனுள்ள திட்டத்திற்கு கனடாவில் உள்ள தமிழர்கள் இன்னுமொருமுறை பங்களிக்கிறார்கள் என்று நம்புகிறோம்.”

நிகழ்வு: 9 வது ‘தமிழ்க் கனடியன் வருடாந்த நடைபவனி’ 2017

திகதி: செப்டெம்பர் 10, ஞாயிற்றுக் கிழமை

இடம்: தொம்ஸன் பார்க், (Brimley Rd. / Lawrence Ave.) ஸ்காபரோ

நேரம்: காலை 8:30 (பதிவுகள்); காலை 9:30 (நடைபவனி ஆரம்பம்)

மேலதிக விபரங்களுக்கும், உறுதிமொழிப்படிவத்தை பெறுவதற்கும் 416-240-0078 என்ற இலக்கத்தை அழைக்கவும்.

ஊடக விசாரணைகளுக்கு: பிரகல் திரு (416) 727 3430

unnamed-3-670x503.jpg

http://www.tamilcnn.lk/archives/662888.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னை மரவாடி குடியிருப்பில் வேறு  இனத்தவர்களும் தங்களின் பூர்வீக நிலம் என உரிமை கொண்டாடுகிறார்கள் 

Link to comment
Share on other sites

தென்னைமரவடி தமிழர்கள் பாரம்பரியமாக இருந்த பழமையான கிராமம் ,1984இல் இவர்கள் துரத்தப்படட பின்பு இவர்களின் வயல்களை சிங்களவர்கள் பயன்படுத்தியவர்கள் .தற்போது மீளவும் பலர் திரும்பவும் எடுத்து விவசாயம் செய்கின்றார்கள் .சில சிங்களவர்களுக்கும் காணிகள் இருக்கின்றன .ஆனால் இக்கிராம மக்கள் மீளவும் குடியமராமல் போனால் வட கிழக்கு இணைப்பே தற்போது இல்லாவிடடாலும் எதிர்காலத்தில் சிக்கலுக்குள்ளாகலாம் .இதை கருத்தில் கொண்டுதான் அந்த மக்களுக்கு தொழில் வழங்குவதட்காக 10 ஏக்கரில் பண்ணை அமைக்க முடிவெடுத்தோம் .இது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுமானால் கனடாவில் உள்ள வேறு சில அமைப்புக்கள் , சில முதலீட் டாலர்களை கொண்டு கடல்தொழில் சார்ந்த திட்டங்களை செய்யமுடியும் என்று சொல்லியுள்ளார்கள் .

தற்போது 82  குடும்பங்கள் திரும்ப குடியேறியுள்ளார்கள் .பலர் முல்லைத்தீவில் இருக்கின்றார்கள் .தாங்கள் வந்து குடியேறினால் தங்களுக்கு வீடும் ,தொழில் வாய்ப்புகளையும் செய்து தர கோரினார்கள் ,வீட்டு வசதியை சம்பந்தன் ஐயா புனர் வாழ்வு அமைச்சு ,வீடமைப்பு அமைச்சுகளுக்கு ஊடாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் .வேலை வழங்குவதட்காக இந்த பண்ணையை அமைக்க உத்தேசித்தோம் .இதட்குரிய உத்தேச மதிப்பீடு 100000.00கனேடிய டொலர்கள் .இதில் கனேடிய தமிழர் பேரவை (CTC )50000.00டொலர்களையும் ,திருகோணமலை நலன்புரிச்சங்கம் (TWA )25000.00டொலர்களையும்கனடா தமிழ் தேசிய கூட் டமைப்பு (TNA )25000.00டொலர்களையும் சேகரிப்பதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.