Jump to content

மடு மாதாவின் ஆவணித் திருவிழா


Recommended Posts

மடு மாதாவின் ஆவணித் திருவிழா
 

image_c1f806ab4f.jpgமன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார்
மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடைந்தது. இதில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியைப் பெற்றனர்.

இதன்போது மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

image_95ac3bfae1.jpgimage_63b9d5c619.jpgimage_b2526f409d.jpgimage_9cfe33cd49.jpgimage_31d85e63a5.jpgimage_527f9d751a.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடு-மாதாவின்-ஆவணித்-திருவிழா/46-202404

Link to comment
Share on other sites

மடு அன்னையின் திருவிழா

 
 
மடு அன்னையின் திருவிழா
 

மன்னார் – மடுத் திருத்தலத்தின் திருவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

திருவிழாத் திருப்பலி இன்று காலை 6.15 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறை மாவட்ட அபோஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபர்ட் அந்ராடி ஆண்டகை, யாழ் மறை மாவட்ட இளைப்பாறிய ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை, கண்டி மறை மாவட்ட ஆயர் வியான்னி பெர்னான்டோ ஆண்டகை, ஆகியோரால் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று அன்னையின் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

மடுத்திருப்பதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஆலயத்தில் சுற்று வளாகம் முழுவதும் வெள்ள நீர் தேங்கி நின்றதால் யாத்திரிகர்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.

இதனால் பெருமளவான யாத்திரிகர்கள் நேற்றைய தினமே வீடுகளுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இன்று திருவிழாவின்போது மழை இல்லை எனவும் திருப்பலி இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் வற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருமளவிலான குருக்கள் , அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இம் முறை மடுத் திருவிழாவுக்கு வருகை தந்திருந்தனர். எனக் கூறப்படுகிறது.

hkyki.jpg

ilkj..jpg

iuykhh.jpg

j...jpg

kiuluu.jpg

kk.jpg

kkhkhj.jpg

kky.jpg

ljj.jpg

lkjl.jpg

lkl-2.jpg

uiollj.jpg

uiyiy.jpg

 

jhgjhg.jpg

jyjkuk.jpg

http://newuthayan.com/story/19623.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.