Jump to content

என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். (சாந்தி நேசக்கரம் )


shanthy

Recommended Posts

மௌனம் பலநேரங்களில் சிறந்த ஆயுதமாகிறது. சிலநேரம் மௌனமே அழிவுமாகிவிடுகிறது. என் மௌனமும் என்பற்றிய தவறான கற்பிதங்களை வளர்க்கவும் என்மீதான பழிகளை நானே ஏற்பது போலான தருணத்தில் என் மௌனம் கலைத்தேன்.


என்வாழ்வில் எவ்வித ஆதரவோ ஆற்றுதலோ தராத சிலருக்கு என்பற்றிய எழுத்து கலாசார உடைப்பாகவும் கட்டாக்காலிக் கருத்தாகவும் இருக்கிறது. பலருக்கு என் தரப்பு நியாயத்தையும் சிலருக்கு கோபத்தையும் கொடுத்திருக்கிறது. இதில் யார் மீதும் வருத்தமில்லை.


சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லாமல் மௌனித்தலும் தவறென்பதை உணர்கிறேன். அதுவே எனது எழுத்தனாது.
எனக்காக யாராவது இரக்கப்படவோ கண்ணீர் விடவோ அல்லது கைதரவோ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. அப்படி யாரும் கருதவும் வேண்டாம் என்பதை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


என்னைநான் ஆற்றுப்படுத்த எடுத்த முடிவாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.


நானும் பத்தோடு பதினொன்றாய் என்னைச்சுற்றிய குறுகிய பரப்பினுள் இருந்திருந்தால் மௌனமாயே இருந்து என்னைக் கொன்றிருப்பேன்.
எனது உலகம் பலவகை மனிதர்களோடானது. எனது பணிகள் பொதுவானவை. என் இயங்குதளம் வேறுபட்டது.


நான் இயங்கும் பொதுவெளியில் நான் போகும் இடமெங்கும் பலரது கேள்விகள் குடைச்சல்கள் அசௌகரியம் தருகிறது. எல்லா இடைஞ்சல்களுக்கும் முற்று வைக்க வேண்டியது நான் என்பதால் என்னை நானே இந்த உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளேன்.


நாளை நான் இறந்து போனால் என்பற்றி புனைவுகள் யாராலும் எழுதப்படக்கூடாது. என்னைப்பற்றிய உண்மைகளை நானே எழுதிவிட்டு போக வேண்டும்.


பலரது மௌனங்கள் அவர்களது மரணத்தின் பின்னால் பலவாறு புனைகதைகளால் நிரம்பியிருக்கிறது. ஆய்வுகளால் அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. அதேபோல ஒருநிலை எனது மரணத்தின் பின்னர் வேண்டாம்.


தோழி தேவிகா குறிப்பிட்டது போல இலட்சியத் தம்பதிகள் என்று இங்கு யாருமில்லை.


என் வரையில் அவரவர் சுயம் காயப்படாமல் மதிக்கத் தெரியாதவர்களை மோதி மிதித்தல் முகத்தில் உமிழ்தல் தான் சரியான தீர்ப்பு. அதையே நான் செய்திருக்கிறேன்.


இங்கே கருத்திடும் அனைவருக்குமான என் பொதுவான கருத்து இது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்த நியதியும் இல்லை.


நான் தொடர்ந்து என் பணிகளோடு பயணித்துக் கொண்டேயிருப்பேன்.
என்னைப் புரிந்து கொண்டு கருத்துத் தந்த உறவுகள் உங்களுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாசிக்கும்போது குறிப்பாக பிள்ளைகள் அனுபவித்த சிக்கல்களை வாசிக்கும்போது கண்ணீர் மல்கியது.

உங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களின் ஏதாவது ஒரு சில   பகுதிகளை எல்லா புலம்பெயர்ந்ந்த  குடும்பங்களிலும் ஆண்களோ , பெண்களோ  அல்லது ஏட்டிக்குப் போட்டியாக இருவருமோ இழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனினும் ஒட்டுமொத்தமாக இவ்வளவு துயர்களோடு இணைந்து வாழ்வது சாத்தியமில்லை. ஓரளவு சிக்கல் வலுத்தபோது சாத்தியமானால்  நண்பர்களாக பிரிந்திருக்கலாம். அதை மேற்குலகில் வளரும் பிள்ளைகளும் ஏற்றிருப்பார்கள். 

இரு தரப்பிலும் தவறுகள் இருந்திருக்கும்.. ஆனால் உங்கள் பக்கத்தில் பிள்ளைகள் மீதான அக்கறையை மையமாகக்கொண்ட  குடும்பப் பொறுப்புணர்வும் குடும்ப நீதியும் இருக்கிறது.   இப்பதிவில் இன்னொரு பெண்ணின் குறுக்கீடு பற்றிக் குறிப்பிட்டதற்க்கு  அவசியம் இருக்கலாம் ஆனால் அவசியமற்ற ஏனையவர்கள் பற்றிய மேற்கோள்களை மதிப்பீடுகளைத் தவிர்திருக்கவேண்டும்.  

பொதுவாழ்வில் சிறப்புறச் செயல்படுகிறவர் நீங்கள். வன்னியில் தோழன் கவிஞன் தீப செல்வன் போன்றவர்கள் உங்கள் பணிகள் பற்றி சிறப்பாக சொன்னபோது உங்கள் நட்ப்புக்காகப் பெரிதுவந்திருக்கிறேன். எந்த நெருக்கடியிலும் எவ்வளவு கோபத்திலும்  உங்கள் தகுதிக்குத் தாழ்ந்த சொல் பொருள் நிலைக்கு இறங்கிப் போகவேண்டாம். 

என்றும் ஈழமக்கள் நல்வாழ்வுப் பணிசார்ந்தும் எழுத்துச் சார்ந்தும் நீங்கள் தேடிய என்னைப்போன்ற நண்பர்களின் அன்பும் மதிப்பும் உங்களுக்கு துணையிருக்கும். பிள்ளைகளது வெற்றியும் பொதுப்பணிகளும் உங்களைத் துயர்களில் இருந்து விடுவிக்கும். 

Link to comment
Share on other sites

அன்பின் சாந்தி அக்கா. யாழ் இணையத்தில் நீங்கள் எழுதிய மணமுறிவு பற்றிய பதிவின் இணைப்பை ஜெயபாலன் அனுப்பினார். இத்தனை நடந்தும் துயரங்களை உடைக்கும் புன்னகையுடன் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளுடன் எங்கள் சமூகத்தின் துயரத்தை துடைக்கும் ஓர்மத்துடன் இயங்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, உங்கள் வாழ்வு என்றைக்குமே ஒளிரும் என்பது புரிகிறது. முரண்பட்டாலும், எங்கள் மக்களின் துயரங்களைத் துடைக்கும் ஒரு காலத்தில் இணைந்து செயற்பட்டோம். இந்த தம்பியின் அன்பும் நம்பிக்கையும் என்றும் இருக்கும்.
12278726_10153463280788801_5409243981407    Theepachelvan Pratheepan                                              சாந்திக்கு  தீபச் செல்வனிடமிருந்து
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்கா,
உங்களுக்கு தேவைப்படாது ஆனாலும் என் ஆறுதல்கள்.
வரும் காலத்தில் உங்கள் கதையை, ஓர்மத்தை, துணிவை என் குடும்பட்தில் அத்தனை பிள்ளைகளுக்கும் சொல்லுவேன்.
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள்தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.