Jump to content

அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..! ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணிகள் இணைப்பா..? எங்களுக்கு தெரியாது..!

ஒரே மாதிரி சொல்லும் ஓ.பி.எஸ் அணியினர்!

சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

 

ops45456-18-1503073810.jpg


4 மணிநேரம் இப்படி நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவடைந்தது. இதன்பிறகு ஓ.பி.எஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர் ஆதரவு மூத்த நிர்வாகிகளான பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் ஒரே மாதிரி வார்த்தைகளைத்தான் கூறினர். அணிகள் இணைப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அதுகுறித்து பன்னீர்செல்வம்தான் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் கூறி கலைந்து சென்றனர். பன்னீர்செல்வமும் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தட்ஸ்தமிழ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

- கடுவளி சித்தர். -

 

எடப்பாடியும், பன்நீரும்.... கடந்த ஆறு மாதமாக, இணைப்பு என்று சொல்லி....  
மாறி மாறி குடும்பி  பிடி சண்டை  பிடித்துக்குக் கொண்டிருந்தால்....
இடையில்.... தி.மு.க. வந்து,  ஆட்சியை     பிடித்து  விடும்.

அதுக்குப் பிறகு... கட்டுமரத்துக்கும், மெரினாவில் சமாதி வைத்து,
மெரீனாவை... சுடுகாடு ஆக்கி விடுவார்கள்.
கட்டு மரம்  போவதென்றால்... அ. தி. மு.க. ஆட்சியில் போக வேண்டும் என்பது.. என் விருப்பம்.
அந்த... ஆசையில்... மண் அள்ளி போடாமல், டக்கென்று இணையுங்கப்பு.:grin:

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.