Jump to content

`இதுதான் தர்மயுத்தமா?` ஓ.பி.எஸ். மீது சமூக வலைதளத்தில் கேள்விக்கணை!


Recommended Posts

`இதுதான் தர்மயுத்தமா?` ஓ.பி.எஸ். மீது சமூக வலைதளத்தில் கேள்விக்கணை!

அதிமுகபடத்தின் காப்புரிமைடிவிட்டர்

தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அதிமுக அணிகள் இணைக்கப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பிரிந்த அதிமுக-வின் இரண்டு அணிகளும் இன்று மாலை இணைந்தன. தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். சமீப நாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகளின் இணைப்பு இன்று நடைபெற்றதை அடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் எழுந்துள்ளன.

முக்கியமாக அதிமுக இரண்டாக பிரிந்த போது, தர்மயுத்தம் நடத்துவோம் என்று கூறிய ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் இது தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிமுகபடத்தின் காப்புரிமைடிவிட்டர் அதிமுகபடத்தின் காப்புரிமைடிவிட்டர்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைடிவிட்டர்

மேலும், பாஜக அரசின் திரைக்கதையில் அதிமுக இயங்கி வருகிறது என்றும் தனது பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைடிவிட்டர்

இது ஒருபுறமிக்க இந்த இணைப்பு குறித்து டிவிட்டரில் விமர்சித்து கருத்து பதிவு செய்த நடிகர் கமலுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், `போலிக்குல்லா போடுபவர்கள் காவிக்குல்லாவை விமர்சிப்பதா?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழிசைபடத்தின் காப்புரிமைடிவிட்டர்

இதுமட்டுமல்லாமல், அம்மா ஆசையை அமாவாசை அன்று நிறைவேற்றியுள்ளார்கள் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாஜகபடத்தின் காப்புரிமைடிவிட்டர்

மேலும், தமிழக அரசியலை பாஜக பின்னாலிருந்து இயக்குகிறது என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

மோடிபடத்தின் காப்புரிமைடிவிட்டர் பாஜகபடத்தின் காப்புரிமைடிவிட்டர்

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் இந்த இணைப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

ராமதாஸ்படத்தின் காப்புரிமைடிவிட்டர்

 

http://www.bbc.com/tamil/india-41003977

Link to comment
Share on other sites

'அம்மா'வின் ஆன்மாவும், கொதிப்பிழந்த ரத்தத்தின் ரத்தங்களும்! #ADMKMerger

 
 

admk, அதிமுக

இதோ... அதோ… என இழுத்து ஒருவழியாக இணைந்துவிட்டார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும். சிலபல விட்டுக்கொடுப்பு படலங்களும், அரியணை ஏற்றும் படலங்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றன. துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வமோ, "என் மனதில் இருந்த பாரம் இறங்கிவிட்டது", என கூறியிருக்கிறார். ஆனால், அன்று ஜெ., சமாதியில் தியானத்தை முடித்ததும், “நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் சில உண்மை விவரங்களை தெரியப்படுத்த அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது”, எனப் பேசியிருந்தார். சகல உண்மைகளும் இப்போது தெரியவந்து விட்டதா?... உந்தித் தள்ளிய அம்மாவின் ஆன்மா இப்போது எங்கே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது?, இதுமட்டுமல்லாமல் இன்னும் பல கேள்விகளுக்கும் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே பதில் சொல்லமுடியும்.

அதிமுக, ops

நேற்று நடந்துமுடிந்த இரு அணிகள் இணைப்புக் காட்சிகளில் அதிகம் இடம்பிடித்த பெயர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஒருகட்டத்தில் லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகம் போன்றே மாறிப்போயிருந்தது குருமூர்த்தியின் வீடு. அணிகள் இணைப்பில் இழுபறி தொடர்ந்ததால் இரு அணியினரின் முக்கியப் புள்ளிகளும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கூடி, அவருடன் ஆலோசனை நடத்தினர். இந்த இரு அணிகளும் கலந்தாலோசிக்கும் மத்தியஸ்த மனிதராக ஆடிட்டர் குருமூர்த்தி காட்சி தந்ததுதான் ஹைலைட். ‘துக்ளக்’ ஆசிரியர் பொறுப்பு அத்தனை வலிமைமிக்கதாக இருக்கிறதுபோல. தமிழகத்தின் அரசியல் சதுரங்கத்தில் பல நேரங்களில் குழப்பம் ஏற்படும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட சிலர் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ-வின் வீட்டுக்கதவை தட்டுவார்கள். அல்லது தட்ட வைக்கப்படுவார்கள். சிலநேரங்களில் ‘சோ’வே முன்வந்து தலையைக் கொடுப்பார். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களிலும் சரி, 1996-ல் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான த.மா.கா - தி.மு.க கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தபோது நடந்த உரையாடல்களிலும் சரி, ஆந்திராவில் நிகழ்ந்த எம்.எல்.ஏ-க்கள் குழப்பத்திலும் சரி, மத்திய அரசின் ஆளுகைகளிலும் சரி, பத்திரிகையாளர் என்பதைத்தாண்டி தனி அவதாரமெடுப்பார் 'சோ'. தற்போது, அந்த ‘மிஷன்’ ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால், ‘சோ’வின் இடம் அவருக்கானது மட்டுமே. 

ஏற்கெனவே, 'அ.தி.மு.க அணிகளை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது' என்ற குற்றச்சாட்டுக்குக் குறைவில்லை. இந்நிலையில், அணிகள் இணைப்பு விவகாரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் குவிந்து, அந்தக்குற்றச்சாட்டை இன்னும் வலுவாக்கியிருக்கிறார்கள். ஒருவேளை, 'குருமூர்த்தியிடம் சென்று ஆலோசனை கேளுங்கள்' என எம்.ஜி.ஆர் இவர்கள் கனவில் வந்து சொல்லியிருப்பாரோ?.. இல்லை. ‘அம்மா’வின் ஆன்மா அவர்களை உந்தித் தள்ளியிருக்குமோ?.. அதற்கான விடை வெளிப்படையாகத் தெரிந்ததுதான். ஆனால், அதைவிட அசத்தலான காரணம் ஒன்றைச் சொல்லி நமக்கு 'கிச்சுகிச்சு' மூட்டுவார்கள். டி.வி-க்களை அணைத்துவிட்டாலும், இவர்களின் நாக்குகள் ஆடும் நடனத்தை சமூக வலைதளங்களில் பார்க்க வேண்டியிருப்பதுதான் நம் விதி!

                                அதிமுக, gurumoorthy                                 

ஓ.பன்னீர் செல்வத்துக்கு, தான் சொன்ன அறிவுரைகள் பற்றி ஆங்கில இதழ் ஒன்றுக்கு விரிவாக பேட்டியளித்திருந்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. அதைப் படித்தாலே இந்த விஷயத்தில் குருமூர்த்தியின் ஈடுபாடு பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதும், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் பல விஷயங்களை, தான் எடுத்துச் சொன்னதாக குருமூர்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழக முதல்வர் நாற்காலியுடன் நடந்த இந்த ‘தர்மயுத்த’த்துக்கு குருமூர்த்தியை சூத்திரதாரியாக நியமித்தது யார்?

இந்த விவகாரம் தொடர்பாக, 'ஃப்ரன்ட்லைன்' இதழின் ஆசிரியர் விஜயசங்கர் நம்மிடம் பேசியபோது, “கடந்த மூன்று வருடங்களாக பல வலதுசாரி சிந்தனையாளர்கள் அதிகமாக வெளிப்படத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத தைரியம் வந்துள்ளது. தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக்கொள்ளும் அவர்கள், வெளிப்படையாகவே பி.ஜே.பி-யை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த விஷயத்திலும்கூட, அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரும் குருமூர்த்தியைப் பார்த்ததில் பி.ஜே.பி-யின் மறைமுக அரசியல் இருக்கத்தான் செய்கிறது. என்னைப்பொறுத்தவரை, ‘சொந்தக் கால்களில் நிற்கத் தெரியாதவர்கள், இன்று வேறு கால்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்’ அவ்வளவுதான்” என்றார். 

jayalalithaa, அதிமுக

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு முன்னரே, அ.தி.மு.க அணிகள் இணைப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்களாம். ஆனால், அது சற்று தள்ளிப்போய் விட்டதால், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் ஜெ. முதல்வராக இருந்தபோதே தீவிர ஆர்வம் காட்டியது பி.ஜே.பி. ஆனால், பி.ஜே.பி-யுடன் அப்போது கூட்டணி சேர்வதில் ஜெயலலிதாவுக்கு பெரியஅளவில் விருப்பம் இருக்கவில்லை. அவருக்கு தனி சக்தியாக வலம்வருவதில்தான் விருப்பம் அதிகம். ஜெயலலிதா தனக்கென ஒரு கோட்பாட்டை வைத்திருப்பார். தன் முடிவில் யாரேனும் கைவைத்துவிட்டால், அவர்கள் யாரானாலும் அவர்களை எதிர்த்து நின்று ஜெ. மோதுவார். “தமிழகத்தில் பி.ஜே.பி. ஒரு எம்.பி.. தொகுதியில்கூட வென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ஜெயலலிதா. நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி-க்கு எதிராக ஜெயலலிதா வியூகம் வகுத்தார்” என சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா. 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்பு நழுவிவிட, 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் இப்போதே தீவிரமாக இருக்கிறது பி.ஜே.பி. இதற்கு நடுவில் டி.டி.வி. தினகரன் என்னவெல்லாம் செய்யப்போகிறார்? என்பதுதான் அடுத்தக்கட்ட 'ட்விஸ்ட்.' 

 

இவர்கள் 'சைரன்' வைத்த கார்களில் பறக்கலாம்.. வார்னிஷ் செய்த பலகைகளில் ‘மாண்புமிகு அமைச்சர்’ என போட்டுக்கொள்ளலாம்… காவல்துறை சல்யூட்களை ஏற்றுக்கொள்ளலாம்… இன்னும் என்னவெல்லாமோ, அவை அனைத்தையும் அனுபவித்துக்கொள்ளட்டும். ஆனால், விரைவில் இவர்கள் மக்களைச் சந்தித்தாக வேண்டும்… அப்போது, ‘இரட்டை இலை’ சின்னத்துக்குப் பதிலாக ‘முகமூடி’ சின்னம் வாங்கிவந்து தங்களின் முகத்தைக் காட்டாமல் வாக்கு கேட்பார்கள் போல!

http://www.vikatan.com/news/tamilnadu/99935-the-demolition-story-of-jayalalithaas-kingdom.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.