Jump to content

சிவாஜி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

இதோ வருகிறது, அதோ அருகிறது என்று ஏமாற்றியே ரஜனி ரசிகர்களை எல்லாம் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாமல் வைத்திருந்த சிவாஜி "The Boss" இறுதியில் வந்தேவிட்டது. வெளியீட்டுத் திகதியைத் தொடர்ந்து பின் போட்டுப் பின்போட்டுச் செய்யும் "சூக்காட்டுதல்" என்பதே பெரும் விளம்பர உத்திதான். வரலாறு காணதா அடுக்கடுக்கான விளம்பரங்களின் பின்னால் சிவாஜி ஆற அமர வந்தே விட்டது. வெளிவந்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கொழும்புப் பாடசாலைகளில் நன் மாணவ மணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக தகவல். அப்போ தமிழ் நாட்டின் நிலைமை எப்படியிருந்திருக்கும் அன்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

பால்காவடி, பன்னீர் காவடி புஸ்பக்காவடி துலாக்காவடி என போன்ற சுத்த சைவ அனுஷ்டானங்கள் ஒரு புறம், ஆடு பலியிடுதல் கோழி அடித்து விருந்து வைத்தல் போன்ற அசைவ வீர வழிபாடுகள் மறுபுறம்.. டெல்லி வரை சென்று பிளாக் மார்க்கெடில் டிக்கட் வாங்கிய " தீர்த்த யாத்திரைகள்" வேறொரு புறம்..

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே (சில வேளைகளில் இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே எனவும் திருத்த நேரிடலாம்) மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்பட்ட இந்தப் படத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல பூமிப்பந்தெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் தமிழ்க்கொடி தாழ்ந்து பறக்கும் தமிழ் கூறு நல்லுலகு எங்கணும் மட்டுமல்ல கொம்யூனிசக் கிலி பிடித்த கேரளாவில் மட்டுமல்ல சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கும் ஆந்திராவில் மட்டுமல்ல காவேரி ஊறும் கர்நாடகாவில் மட்டுமல்ல நம் அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத தூரத்துக்கும் அப்பால் பல படங்களின் வருகையை தள்ளிப்போட்ட இந்த பராசக்தி ஹீரோவை ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து நாய் படாப்பாடு பட்டுப் பார்க்கப்போனால்....

படமோ கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்க்கான ஹை டெக் திட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜனி தனது ஸ்டைலில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது. ஏவிஎம் , சங்கர், ஏ ஆர் ரகுமான் , சுஜாதா , ரஜனி , விவேக் முதலிய தமிழ்த் திரைப்படத் துறையின் இன்றைய உச்சனிலை வியாபாரிகள் எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்த் திரைப்பட ரசிகனை திறந்த வாய் மூடவிடாமல் திரையையே வெறித்துப்பார்க்க வைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு சுயபுத்தி அவசியமென்பதால் அதை பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுப்போனால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம்.

ரஜனி பொய் முடி, கிலோக் கணக்கில் மேக்கப் பவுடர்கள் முதலியவற்றின் உதவியுடன் என்றும் இளமையாக இருக்கும் பரகசியத்தையும் , ஸ்ரேயா என்னும் மெழுகுப்பொம்மை வளைந்து வளைந்து ஆடுவதையும், விவேக் அடிக்கின்ற கோமாளிக் கூத்துக்களையும், கம்யூட்டர் கிராபிக்ஸ்சில் நல்ல விவேகியான சங்கர் நமக்கெல்லாம் அளக்கின்ற "கதை"களையும் ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று உபாதைகளின் காரணமாக அவர் எழுப்பும் சத்தங்களையும் ... இன்னும் பலவற்றையும் ரசிக்கலாம் அவ்ற்றையிட்டும் பெருமிதப்படலாம்.

உதாரணம் 1 :

சிவாஜி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை குறியீடு மூலம் சங்கர் உணர்த்துகின்றார் அதாகப்பட்டது கறுப்பு ரஜனியை அசல் பேர்சியன் வெள்ளைக் கலருக்கு(ரோஸ் கலருக்கு) கிராபிக்ஸ் மூலமும் சங்கர் மாற்றுகிறார்.

உதாரணம் 2 :

சங்கர் மற்றவர் பணத்தை தண்ணீராய்(தனது சொந்த தயாரிப்புகள் மட்டும் சிறிய பட்ஜட் படங்கள்) இறைத்து படம் எடுப்பதில் பெயர் போனவர். அதையே குறியீடாக கடைசிச் சண்டைக்காட்சியில் பணம் பற பற என்று பறக்கிர காட்சியாக எடுத்துக்காட்டியிருக்கிறார

Link to comment
Share on other sites

  • Replies 351
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை நான் சிவாஜி படம் பார்த்ததில்லை...ஆனால் இந்த இரண்டு Podcasts கேட்டபின், தேவல என்று தோன்றுகிறது!

சிவாஜிக்கு முன்

சிவாஜிக்கு பின்

நன்றி

வன்னி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.