Jump to content

சிவாஜி


Recommended Posts

  • Replies 351
  • Created
  • Last Reply

என்ன நக்கலா இங்கே டிக்கட்டும் விற்றாச்சு இந்த மாசம் கடைசியில படம்,

Link to comment
Share on other sites

என்ன நக்கலா இங்கே டிக்கட்டும் விற்றாச்சு இந்த மாசம் கடைசியில படம்,

அதானே :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தான் இந்த படம் வருதாம்?$25 டொலருக்கு டிக்கட் எல்லாம் விற்றாச்சு இங்கே பர்வூட் சினிமாவில படம் என்றும் சொல்லிட்டினம் பிறகு என்ன புது கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள சிவாஜி படத்தில் மூன்று காட்சிகளுக்கு மட்டும் வெட்டு விழுந்துள்ளது. ஷ்ரியா தொப்புள் காட்டி நடித்திருந்த காட்சி ஆபாசமாக இருப்பதாக தணிக்கை வாரியம் கூறியதால் அந்தக் காட்சி வெட்டப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள சிவாஜி ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. சமீபத்தில் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் பெரிய அளவில் வன்முறைஇ ஆபாசம் இல்லாததால் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மே 15ம் தேதி படம் தணிக்கை செய்யப்பட்டது. படத்தில் எந்த வெட்டும் விழவில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பில் முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மூன்று காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரு பாடல் காட்சியில் ரஜினி ஷ்ரியாவின் பளபள தொப்புளைத் தடவியபடி வருகிறார். இந்தக் காட்சிக்கு தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அப்போது ஷங்கர் அங்கு இல்லை. அவர் கேன்ஸ் திரை விழாவுக்குப் போயிருந்தார்.

இதையடுத்து அவரது உதவியாளர்கள் போன் மூலம் ஷங்கரைப் பிடித்து தணிக்கை வாரிய உறுப்பினர்களின் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போன் மூலமாகவே தணிக்கை வாரிய அதிகாரிகளிடம் விவாதித்தார் ஷங்கர்.

படத்திற்கு அந்தக் காட்சி முக்கியமானது. அதை எடுத்து விட்டால் படத்தின் கோர்வை கெடும் என்று கூறியுள்ளார். ஆனால்இ காட்சியை கட் செய்தே ஆக வேண்டும் என தணிக்கை வாரியம் திட்டவட்டமாக கூறியதால்இ வேறு வழியின்றி அதற்கு உடன்பட்டார் ஷங்கர்.

ஆனால் இதே காட்சியை வேறு கோணத்தில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தாராம் ஷங்கர். இதையடுத்து புதிய காட்சியை அந்த இடத்தில் கவனமாக சேர்க்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஷங்கர்.

இதேபோல விவேக் பேசிய சில காட்சிகளில் ஆபாசம் தொணிப்பதாக கருதியுள்ளனர் தணிக்கை வாரிய உறுப்பினர்கள். இரு காட்சிகளில் விவேக் பேசும்போது அந்த இடத்தில் வசனம் இடம் பெறாமல் வெறும் வாயசைப்பு மட்டும் வருமாறு மாற்றம் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மூன்று வெட்டுக்களுடன் படத்திற்கு யூ சான்றிழ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கேன்ஸில் உள்ள ஷங்கரை தொலைபேசியில் பிடித்து கருத்து கேட்டபோதுஇ தொப்புள் காட்சியில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. ரசிக்கத்தக்க வகையில்தான் அதை படமாக்கியிருந்தேன்.

அதேபோல விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதை ஏற்கனவே செய்து விட்டோம். சிவாஜி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் மிகச் சிறந்த படமாக வந்துள்ளது என்றார் ஷங்கர்.

thatstamil.com

Link to comment
Share on other sites

007 இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

Link to comment
Share on other sites

வெட்டிய ஷ்ரியாவின் தொப்புள் காட்சி இணையத்தில் கிடைக்குமே? :(

Link to comment
Share on other sites

வெட்டிய ஷ்ரியாவின் தொப்புள் காட்சி இணையத்தில் கிடைக்குமே? :(

:lol::lol:

Link to comment
Share on other sites

சா........எடுத்து வைச்ச டிக்கெட் வேஸ்டாபோச்சுப்பா..இனி போய் என்ன போகமா விட்டு தான் என்ன...ஷேம் ஷேம் பப்பி ஷேம் .....தணிக்கை குழுவிற்கு... :(:lol::lol:

Link to comment
Share on other sites

மழையில் வெட்டாததை

சிவாஜியில் வெட்டிடாங்களே.

வெட்டு தமிழ்நாட்டு பிரதியில் மட்டும்தான்.

வெளிநாடுகளுக்கு ஒரு வெட்டும் இல்லாம வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி பட ரிலீஸை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஐந்து முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

சிவாஜி பட ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி எப்போது வரும் என ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி ரசிகர்மன்றமே ரசிகர்களுக்காக நேரடியாக டிக்கெட்டுக்களை விநியோகித்துள்ளது. ரசிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி படத்தைப் பார்க்கவே இந்த ஏற்பாடு.

இந்த நிலையில், படம் திரையிடப்படும் அத்தனை தியேட்டர்களிலும் அமளி துமளியாக கொண்டாடி விட வேண்டும் என ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இதெல்லாம் தலைவர் காதுகளை எட்ட சட்டுப்புட்டென்று ஐந்து கட்டளைகளை ரசிக மக்களுக்குப் பிறப்பித்துள்ளாராம். தனது மன்ற செயலாளர் சத்யநாராயணா மூலமாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் இந்த கட்டளைகள் பறந்துள்ளதாம்.

அந்த சர்க்குலரில், சிவாஜி பட ரிலீஸின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் ரஜினி.

முதல் கட்டளை: படம் ரிலீஸாகும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாகரீகமான முறையில், அமைதியாக பட ரிலீஸின்போது நடந்து கொள்ள வேண்டும்.

2வது கட்டளை: போக்குவரத்து பாதிக்கும் வகையில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பெரிய பெரிய வளைவுகளை சாலைகளில் அமைக்கக் கூடாது.

3வது கட்டளை: அரசியல் சம்பந்தப்பட்ட வாசகங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது.

4வது கட்டளை: பிறரைக் காயப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் கூடிய பேனர்களை வைக்கக் கூடாது.

5வது கட்டளை: படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக் கூடாது. மக்கள் அனைவரும் செளகரியமாக படம் பார்க்க உதவ வேண்டும்.

இந்த ஐந்து கட்டளைகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என ரஜினி அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இதன் அடிப்படையில் சிவாஜி படத்தைக் கொண்டாட ரசிகர்கள் மாநிலம் முழுவதும் தயாராகி வருகின்றனராம்.

படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் விசிட் செய்து என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆலோசனைகளும் நடத்த ஆரம்பித்து விட்டனராம்.

ரஜினி சொன்னா ராகவேந்திரா சொன்ன மாதிரி, ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பாங்கண்ணு நம்பலாம்!

பஞ் பரமவசிவம் என்பவர் இதற்கு தற்தமிழில் கருத்து தெரிவித்துள்ளார் அவரின் கருத்து.

வானத்தில் பெரிதாய் பறக்கும் பலூன் மாதிரி தான் அவரின் தோற்றம் மீடியா எனும் காற்றின் உதவியுடன் இருந்தது. அதில் போன தேர்தலில் விட்ட அவரின் சொந்த வாய்ஸ் குண்டூசியாக மாறிக் குத்தியதில் புஸ் என்று காற்றுப் போன பலூனான இன்று இருப்பது தான் அவரின் உண்மை நிலை. முதலில், குழம்பாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கட்டும். இவர் யோசிசிசிசிக்கும் நேரத்தில் விஜயகாந்தும், கமலும் பல படங்கள் வெற்றிகரமாக எடுத்து விட்டார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சனையில் யோசித்தால், பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்வதானால் ' நாடும் மக்களும் நாசமாகி விடுவார்கள் '. கல்மனத்தையும் கரைத்த கும்பகோணம் வராதவர். இவர் வந்தால் பிரளயம் நடக்கும் என்ற நினைப்பு மட்டும் இன்னும் பொழைப்பைக் கெடுக்கிறது. -- மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்காத ரஜினி, துறவுக்கும் போகாம, இல்லறத்துக்கும் போகாம குழப்பும் ரஜினி.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....! அது போல் இந்த ரஜினி காந்த் கதை. அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப் பார்ப்போம். ---- ரஜினி - விஜயகாந்த இருவரும் பிரபலமான பின் நடந்த முறைகளைப் பார்ப்போம். ரஜினி- ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, சுஜாதா பிலிம்ஸ் போன்ற தயாரிப்புகளில் தான் நடிப்பார். அவரால் எந்த ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமும் மேல் வந்ததில்லை. விஜயகாந்த்- அம்மா மூவிஸிலிருந்த நடித்ததில் 80% புதிய பேனர்களே. ரஜினி:: புதிய இயக்குனர்கள் யாரையுமே அறிமுகப்படுத்தியதில்லை. விஜயகாந்த்: ஆபாவாணன், செல்வமணி தொடங்கி பல இளம் இயக்குனர்களின் சினிமா வாழ்க்கைக்கு காரணமானவர். முண்ணணியில் இருந்த போது சரத்குமார், போன்றோரை தைரியமாக அறிமுகப்படுத்தினார் (வில்லனாக) விஜயகாந்த். ரஜினி எந்த ஒரு நடிகரையும் அறிமுகப்படுத்தியதில்லை. வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து, அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த். திரையுலகமே வேலை நிறுத்தத்தில் இருந்த போது உல்லாசபுரி அமெரிக்காவில் சுதந்திரமாய் இருந்தவர் ரஜினி. ஆனால், அந்தப் பிரச்சனையில் இறங்கி தீர்வு காண தோள் கொடுத்தவர் விஜயகாந்த். எம்ஜிஆருக்குப் பின், சினிமா அலுவலகம் வருபவர்களுக்கு வாய், வயிரார உணவு தந்தவர் விஜயகாந்த். வேறுபாடுடன் உணவு பரிமாறப்படும் சூழல் மாற்றி, படப்பிடிப்பில் கறி சோறு அனைவருக்கும் முதலில் போட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த் மற்றவருக்கு என்ன உணவு கிடைக்கிறது என்பது பற்றிய கவலை இல்லாதவர். காவிரிப் பிரச்சனையில் தமிழர்களை மிரட்டியவர் ரஜினிகாந்த். அய்யா அய்யா என்று காலில் விழுந்து விட்டு, கருணாநிதி முதுகில் குத்தியவர் ரஜினிகாந்த். கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகச் சொன்னவர். கார்கிலுக்கு 5 லட்சம் தானம் கொடுத்து, வீரர்கள் உடல் வரும் போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் எங்கே, கருணாநிதி முன்னிலையில் , பொதுகூட்டத்தில் அறிவிப்புடன் 2 லட்சம் தந்த ரஜினி எங்கே... ? யாருடனும் முகம் கொடுத்துப் பேசாத, திரையுலகப் பிரச்சனைக்கு வந்து உதவாத ஒரு மனிதர் ரஜினிகாந்த். அவரின் பயத்தின் மெளனத்தை மோனம் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்.

thatstamil.com

Link to comment
Share on other sites

007 என்னுடைய கட்டளை என்னவென்றா எல்லாரும் கள்ளசீடி எடுத்து பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா

ரஜினி ஒரு குழந்தை மாதிரி என்று கூறியுள்ளார் அவருக்கு ஜோடியாக களேபரமான காஸ்ட்யூம்களில் சிவாஜியில் கலக்கியுள்ள ஷ்ரியா.

ராஜாதி ராஜா, முரட்டுக்காளை, மாவீரன் என ரஜினியை அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரோ, பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா என கூறுகின்றனர். அரசியல்வாதிகளுக்கோ ரஜினி குறித்த பயம் இன்னும் முழுசாகப் போகவில்லை. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ஷ்ரியாவின் பார்வையிலோ ரஜினி ஒரு குழந்தை மாதிரி தெரிகிறாராம்.

சிவாஜியில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து யாராவது ஷ்ரியாவிடம் கேட்டால் கதை கதையாக சொல்லி மாய்ந்து போகிறார். குறிப்பாக ரஜினி குறித்து பேச ஆரம்பித்தால் ஓயவே மாட்டேன் என்கிறார்.

ஒரு அழகான குழந்தையைப் பார்த்தால் யாருக்குமே பிடிக்கும். அந்தக் குழந்தையுடன் விளையாடி, மகிழ தோணும். ரசிக்கப் பிடிக்கும், அப்படித்தான் ரஜினி சாரும். அவரும் ஒரு குழந்தை மாதிரிதான். அனைவரும் விரும்பும் அன்புக் குழந்தைதான் ரஜினி சார்.

சிவாஜி படத்தில் நடித்த அனுபவம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது. ஒரு நடிகைக்கு வாழ்க்கையில் ஒரு முறைதான் இப்படிப்பட்ட அனுபவம், வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலியாக நானும் அமைந்திருக்கிறேன்.

உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நான் ரொம்பவே தயங்கினேன். காரணம், எனக்கும், அவருக்கும் இடையே கிட்டத்தட்ட 40 வருட வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படப்பிடிப்பின்போது பல காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று ரஜினி சார் அறிவுரை கூறினார், எனது பயத்தைப் போக்கி ஜாலியாக நடிக்க வைத்தார்.

வெறும் நடிகராக மட்டும் ரஜினியை நான் பார்க்கவில்லை. ஒரு கடவுளாக பார்க்கிறேன். அவரது ஈடுபாடு, நேரம் தவறாமை, இரக்கம், கவனம் எல்லாமே ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பாடம் போல இருக்கிறது. யாருடனும் அவரை ஒப்பிடவே முடியாது ...

ஷ்ரியாவின் பாராட்டு, புகழுரை தொடர்ந்து கொண்டிருந்தது. நமக்குத்தான் வாங்கிக் கொள்ள காதில் இடம் இல்லை, ஓடி வந்து விட்டோம்.

இப்படித்தான் முன்பு மீனா, ரஜினியை புகழ்ந்து தள்ளிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சங்கோஜமாகிப் போன ரஜினி, மீனாவை நேரில் கூப்பிட்டு இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது, ஓ.கே. என்று அட்வைஸ் செய்தாராம்.

ஷ்ரியாவை விட்டால், ரஜினியை இடுப்பில் தூக்கி வைத்து 'அம்புலி மாமா'வைக் காட்டி 'பப்பு' ஊட்டி விடுவார் போலிருக்கே!!

:rolleyes: குழந்தை மாதிரியா இல்லை குழந்தை குடுக்கிறவர் மாதிரியா

Link to comment
Share on other sites

ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா

:lol: குழந்தை மாதிரியா இல்லை குழந்தை குடுக்கிறவர் மாதிரியா

நம்ம சூப்பர்ஸ்டார பற்றி இப்படில்ல சொல்றது நால்லாலே சொல்லிடம்ல :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'அவர்' அழைப்பாரா?

ரஜினியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க அழைப்பு வருமா, ரஜினி அழைப்பாரா என்று ஆவலோடு காத்திருக்கிறார் திரிஷா.

கை நிறையப் படங்களுடன் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு படு வேகமாக ஓடிக் கொண்டிருந்த திரிஷா, தனக்குத்தானே ஸ்பீட் பிரேக்கர் போட்டுக் கொண்டு ஒரு படத்துடன் நிதானமாகியுள்ளார்.

எல்லாம் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க எந்த நேரமும் அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பால்தான்.

திரிஷாவுக்கு இதுவரை நடித்த எந்தப் படத்திலும் திருப்தி வரவில்லையாம். இதுவரை நடித்த படங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஒரு படத்தைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.

என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று திரிஷாவிடம் கேட்டால், லேசா லேசா படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு போய் விடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன்.

ஆனால், மெளனம் பேசியதே, சாமி, மனசெல்லாம் என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுக்க ஆரம்பித்ததால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தேன். அந்தப் படங்ளும் தோல்வி அடைந்திருந்தால் மாடலிங்கில் செட்டிலாகியிருப்பேன். இந்நேரம் கல்யாணம் கூட ஆகிப் போயிருக்கும்.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார் நடிகையாக வருவேன் என்று கனவில் கூட நான் நினைத்ததில்லை. அதுவும் இத்தனை குறுகிய காலத்திற்குள் வந்திருப்பது வியப்பாக உள்ளது.

பீமா, கிரீடம் ஆகிய படங்களை முடித்துள்ளேன். தெலுங்கில் அடவரி .. ரிலீஸ் ஆகி ஹிட் ஆகியுள்ளது. எனது அடுத்த படம் குறித்து பெரும் பேச்சு நிலவுகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஊகச் செய்திகள்தான்.

இப்போதைக்கு விஜய்யுடன் ஜோடியாக நடிக்க மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளேன். மற்ற படம் எதுவும் இல்லை.

ரஜினி சாருடன் நடிப்பது குறித்து எனக்கு யாரும் எந்தத் தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை. மற்றவர்களைப் போல நானும், ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வருமா என்று ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்.

ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க அவர்தான் காரம். எனவே அவர் எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும் உடனே டேட்ஸ் தர காத்திருக்கிறேன் என்றார் திரிஷா.

அவர் அழைப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிவாஜி"க்கு வந்த புதிய சிக்கல்!

"சிவாஜி" படம் தொடங்குவதற்கு முன்னால் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்குகிற வேலையில் இருந்தார் ஷங்கர். அதற்கு அட்வான்ஸும் வாங்கிவிட்டார். இப்படியான நிலையில் தான் ரஜினி ஏவி.எம்முக்கு தேதி கொடுக்க, ஷங்கரிடம் பேசி இங்கே கொண்டு வந்துவிட்டார்கள்.

அப்போது சிரஞ்சீவி தரப்புக்கு அடுத்து நான் எடுக்கும் தமிழ் படத்தின் தெலுங்கு உரிமையை உங்களுக்கு தருகிறேன் என்று எழுதிக் கொடுத்திருந்தாராம் ஷங்கர்.

"சிவாஜி" படத்தின் உரிமையை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கு 16 கோடிக்கு விற்றுவிட்டது ஏவி.எம்.

எங்களுக்கு தராமல் எப்படி அடுத்த ஆளுக்கு கொடுக்கலாம் என்று டென்ஷனில் இருக்கிறது சிரஞ்சீவி குரூப். படம் தங்களுக்கு கிடைக்காவிட்டால் கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு போகவும் தயாராக இருக்கிறார்கள்!

webulagam

Link to comment
Share on other sites

ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா

அதாவது, வெறும் பால் மட்டும்தான் குடித்தாராம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்செட்டில் ரஜினி

அமெரிக்காவில் வாழ்ந்த ஆன்மீக குருவான சச்சிதானந்த சுவாமிகள் மீது ரஜினி மிகப்பெரிய பற்று வைத்திருந்தார். பாபா படம் டிரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு ரஜினி சச்சிதானந்த சுவாமியை விருப்பப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து விழாவில் கலந்து கொள்ள வைத்தார்.

ஆனால் வந்த இடத்தில் சச்சிதானந்த சுவாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் துறந்தார். இதனால் ரஜினி மிக வருத்தத்தில் ஆழ்ந்தார். அதோடு பாபா படமும் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அதைப் போல தற்போது ரஜினிகாந்த உட்பட சிவாஜி படத்தின் டெக்னீசியன்கள் கலந்து கொண்ட கெட் டு கெதரில் சவுண்ட இன்ஜினியர் இறந்து போன சம்பவம் தெரிந்தது. சவுண்ட் இன்ஜினியரின் பேரும் சச்சிதானந்தம்

என்பதால் செண்டிமென்ட் வேலை செய்து சிவாஜி படமும் ஓடாது என்று கோடம்பாக்கத்தில் சில குசும்பர்கள் வதந்தி கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பயங்கர அப்செட்டாகிவிட்டார் ரஜினி.

அய்யோ பாவம் பிள்ளை !

webulagam

Link to comment
Share on other sites

திரிஷா, பொலப்ப பாருமா,.

ரஜினிக்கு இதுதான் கடைசி படம். இனிமேலாவது இமயமலை போய் நிம்மகியாக இருக்கட்டும்.

வடிவேலு அவர்களுக்கு,

விஜயகாந்தை பற்றி இவ்வளவு சொன்ன பரமசிவத்திற்கு. அவரும் தமிழர் கிடையாது என்பது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை ஏனப்பா எங்கிட்ட கே;கிறீங்கள்? பரமசிவத்திட்டயே கேக்க வேண்டிய தானே.

எனக்கு தெரிந்து வியயகாந்த் மதுரையில் பிறந்தவர் என்டு கேள்விப்பட்டனனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பாருங்கள் ரஜனி துள்ளுவதை :rolleyes:

சிவாஜியில்

http://tamilvideo.info/view_video.php?view...6f606eb525ffdc5

Link to comment
Share on other sites

அவர் மதுரைதான், பூர்வீகம் விஜயநகர்.(ஆந்திரபிரதேசம்)

ஆனால் மற்ற தமிழ்நடிகர்களைவிட தமிழர்களுக்கும், ஏழைகளூக்கும், உதவி என்று வந்தவர்களுக்கும், சிறிய நடிகர்களுக்கும் நிறைய செய்துள்ளார்.

விஜயகாந்த் பாராட்டப்பட வேண்டியவர்.

பிகு. பெரியார், வை.கோ, வி.கா அனைவர் பூர்வீகமும் ஆந்திரபிரதேசம்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு தங்களால் முடிந்தவரை உதவியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி சிறப்பு முன்னோட்டம்

preview_sivaji_2205(1).jpg

preview_sivaji_2205(2).jpg

வாஜி படம் ரீலிஸ் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பிரமாண்ட கட்அவுட், சுவர் விளம்பரம் என்று ஆர்வத்தை வெளிப்படுத்திய ரஜினி ரசிகர்கள் ஜூன் 15ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரஜினியின் ரசிகர்களுக்காக சிவாஜி பற்றிய ஒரு சிறப்பு முன்னோட்டம்.

படத்தின் பெயர் : சிவாஜி

நடிப்பு : ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி, மணிவண்ணன் மற்றும் பலர்.

இயக்கம் : ஷங்கர்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

படல்கள் : வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய்.

வசனம் : சுஜாதா

கேமரா : கே.வி.ஆனந்த்,

எடிட்டிங் : ஆண்டனி,

சண்டை : பீட்டர் ஹெய்ன்.

ஆடைகள் :மனிஷ் மல்கோத்ரா.

சிவாஜி சில துளிகள்

· இதுவரை எடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகியிருக்கும் படம் சிவாஜி.

· ரஜினியின் 100வது படம் இது. ஏ.வி.எம்.மின் 168வது படைப்பு.

· ரஜினி தனது 30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை எந்த படத்திலும் ஒரு வருடம் நடித்ததில்லை. முதல் தடவையாக சிவாஜியில் ஓராண்டுக்கு மேல் நடித்துள்ளார்.

· இந்த படத்தில் ரஜினி வகிடு எடுத்த ஸ்பெஷல் விக்கை பயன்படுத்தியுள்ளார்.

· ரஜினி படம் என்றால் பஞ்ச் வசனம் இல்லாமலா? ரஜினிக்காக, சுஜாதா பஞ்ச்களை பின்னி எடுத்திருக்கிறாராம்.

· சஹானா சஹாரா பாடல் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது.

· நடிகர் சுமன் வில்லனாக நடித்துள்ளார்.

· சிவாஜியில் புக் ஆனதுமே உச்சத்துக்கு போன நடிகை ஸ்ரேயாவின் புகழ் படம் வெளியான பின்னர் இன்னும் மேலே போகும் என்பது உறுதி.

· சந்திரமுகியில் ரஜினியுடன் சேர்ந்து வடிவேலு கலக்கியதைப்போல இந்த படத்தில் விவேக் தனது ஸ்டைலில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

· சிவாஜி படத்தில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாவில் தொப்புள் காட்சிகள் சிலவற்றை நீக்கி விட்டு யு சான்றிதழ் கொடுத்துள்ளது, தணிக்கைக்குழு.

· அலுவலகம், வீடு, பெட்ரூம், பாத்ரூம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சொகுசு பேருந்து சிவாஜிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய்.

· படத்தில் மல்லிகா செராவத், நயன்தாரா ஆகியோர் தலா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளனர்.

· இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடை ஊழியராக ஸ்ரேயா நடித்துள்ளார்.

· 30 டாடா சுமோ கார்கள் அணிவகுத்து சேசிங் செய்யும் காட்சி த்ரில்லாக எடுக்கப்பட்டுள்ளது.

· படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரிலும் சிவாஜி சூட்டிங் நடந்தது.

· சென்னை பின்னி மில் மற்றும் ஐதராபாத் பிலிம் சிட்டியில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் செட் அமைத்து பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

· வாஜி வாஜி சிவாஜி பாடலுக்காக ஐதராபாத் பிலிம் சிட்டியில் ரூ.2,75 கோடியில் பிரமாண்ட செட் போடப்பட்டது.

· கே.வி.ஆனந்தின் கேமரா ரஜினியை மிகவும் இளமையாக காட்டியிருக்கிறது.

சிவாஜியின் கதை இதுதான்

அப்பா ரஜினி வெளிநாட்டில் பெரும் பணக்காரராக இருக்கிறார். வெளிநாட்டிலேயே தனது காலம் கழிந்து விட்டதால் மகன் ரஜினியை தாய் நாட்டுக்கு கல்வி சேவையாற்றும்படி அனுப்பி வைக்கிறார். தந்தையில் சொல்லே தாரக மந்திரம் என்று நினைக்கும் மகன் ரஜினி தமிழ்நாட்டுக்கு வருகிறார். பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கிறார். இதனால் ரஜினியின் செல்வாக்கு உயருகிறது.

ரஜினி இலவசமாக கல்வி கற்றுக் கொடுப்பதால் கல்வி நிறுவனங்கள் மூலம் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரஜினியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல்வாதிகள் அவரை ஒழிக்க திட்டமிடுகிறார்கள். இதன் எதிரொலியாக வீண்பழி சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார் ரஜினி. அதோடு ரஜினியில் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஜெயிலில் இருந்து வெளியே வரும்போது ரஜினியின் கையில் இருப்பது ஒரு ரூபாய் நாணயம் மட்டும்தான். அதை வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு போராடி மீண்டும் பழைய நிலைக்கு வருகிறார் சூப்பர் ஸ்டார். அதன் பிறகு தன் மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விட்டு, ஏழை மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை பழிவாங்குகிறார். இந்த கதையைத்தால் விறுவிறுப்பாக ரசிகர்களுக்கு படைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

SIVAJI01-1305.jpg

SIVAJI02-1305.jpg

SIVAJI06-1305.jpg

Link to comment
Share on other sites

விட்டால் இவர் சிவாஜி படத்தை இங்கேயே ரிலீஸ் பண்ணிவிடுவார் போல் இருக்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.