Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து விடயங்களும் தோல்வியே


Recommended Posts

உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­க­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. 

எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்கப்பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. அனைத்து விடயங்களிலும் தோல்வியே காணப்பட்டுள்ளது என சுவிட்ஸர்­லாந்தில் இயங்­கி­வரும் மனித உரிமை அமைப்பின் இலங்­கைக்­கான பிர­சார முகா­மை­யாளர் யுவேஸ் போவி தெரி­வித்­துள்ளார். 

மேலும் அவர் அந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது ஆரம்ப காலத்தில் இருந்தே, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள தெருக்­களில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக இலங்­கையில் தமிழ் பெண்­களால் முன்­னெ­டுக்கப்படு­கின்ற எதிர்ப்பு போராட்­ட­மா­னது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்கு என்ன நடந்­தது மற்றும் எங்கே இந்த வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் இருக்­கின்­றனர், அவர்­களின் தலை­விதி என்ன என்­ப­ன­வற்றை முன்­வைத்து எடுக்­கப்­ப­டு­வது ஒன்­றாகும். 

ஆகஸ்ட் 30 ஆம் திக­தியை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் சர்­வ­தேச தினம் என பிர­க­டனம் செய்து, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான உண்­மைகள், அவர்­க­ளுக்­கான நீதி மற்றும் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட இழப்­புக்­கான நல்­ல­தொரு பதி­லை­பெ­றுதல் ஆகி­ய­வற்­றினை இந்த எதிர்ப்­பு­போ­ராட்­டத்தின் கோரிக்­கை­யாக கொண்டு கிட்­டத்­தட்ட 200 நாட்­க­ளுக்கு தொடர தீர்­மா­னித்­துள்ளோம். இந்த பொன்­னான நாளில், அச்­சு­றுத்­த­ப்பட்­டுள்ள மக்­க­ளுக்­கான சங்கம் இலங்கை தமிழ் பெண்­களின் எதிர்ப்பு போராட்­டத்தை ஆத­ரித்தும் மற்றும் தமிழ் பெண்­க­ளோடு ஒன்­றிணைந்து பெர்­ஸி­லுள்ள காசினோ பிளாட்ஸ் நகரில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. பல மாதங்­க­ளாக, இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் உள்ள ஐந்து கிரா­மங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோருக்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­பட்டு தங்­க­ளது உற­வு­க­ளுக்­காக குரல் கொடுக்­கின்­றனர்.  

இவர்­களின் இந்த குரல் ஒலி­யா­னது சுடும் சூரியன் எதிர்த்து நின்­றாலும், பாதை ஓரத்தின் அழுக்கு மற்றும் தூசு சிர­மமாய் மாறி­னாலும் இரவின் இருட்டு இடராய் இருந்­தாலும் இலங்­கையின் பாதை ஓரங்­களில் உற­வு­க­ளுக்காய் முழக்­கம்­மி­டு­கின்­றனர். 

அவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள் எங்கு மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர் என்பது பற்­றிய பதில்­களைப் பெறு­வதை தங்­களின் கோரி­க்கை­யாக முன்­வைத்­துள்­ளனர். உல­கி­லேயே இலங்­கை­யா­னது அதி­கூ­டிய வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரை கொண்­டி­ருக்கும் நாடாகும். 

யுத்தம் முடி­வ­டைந்­ததில் இருந்து அப்­பாவி மக்­களின் மர­ணத்­துக்கும் மற்றும் இழப்­பிற்கும் எந்­த­வொரு முடிவும் இன்னும் கிடைக்­க­வில்லை. இலங்கை அர­சாங்­க­மா­னது இன்­று­வரை வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் பிரச்­சனை தொடர்பில் தீர்­வு­காண எடுத்த எந்­த­வொரு முயற்சி­யிலும் தோல்­வி­யி­னையே கண்­டுள்­ளது. பொறுப்­பான அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்:

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைப்­ப­தற்கு ஒரு மசோ­தாவை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றி­யது. எனினும், இந்த நாள்­வ­ரைக்கும் அது நிறு­வப்­ப­ட­வில்லை. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் வழக்­கு­களை விசா­ரிக்க பணிக்க பட்ட எல்லா வகை­யி­லு­மான ஆணைக்­கு­ழுக்கள் இது­வ­ரைக்கும் எந்­த­வொரு வழக்­கு­க­ளையும் விசா­ரணை செய்து தீர்க்­க­வில்லை. நாட்டின் செய­லற்ற தன்மை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பெண்கள் தெருக்­களில் ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். 2017ஆம் ஆண்டு, ஜூன்­மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி சிறிசேன, வலிந்து காணாமல் ஆக்­க­பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை சந்­தித்தார். 

அதன்­போது இந்த எதிர்ப்பு போரா­டத்தில் ஈடு­ப­டுவோர் சிலர், அவர்­களின் கோரிக்­கைகள் அடங்­கிய விண்­ணப்­பத்தை இலங்கை அதி­பரின் கைகளில் ஒப்­ப­டைத்­தார்கள். இந்த சந்­திப்பின் முடிவில், கால அளவில் வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பான மூன்று பட்­டி­யல்­களை பத்­தி­ரி­கை­களில் வெளியீடு செய்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்தார். இவற்றுள் முத­லா­வது பட்­டி­ய­லா­னது இறுதி யுத்­தத்தின் முடிவில் யாரெல்லாம் 

சர­ண­டைந்­தார்­களோ மாற்றும் யாரெல்லாம் தடுப்­பு­கா­வலில் அடைத்து வைக்­க­பட்டு உள்­ளார்கள் என்­பதை பற்­றிய பெயர் பட்­டி­ய­லாகும், இரண்­டா­வது பெயர் பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் இர­க­சிய தடுப்­பு­காவல் நிலை­யங்­களில் தடுத்து வைக்­க­பட்­டி­ருப்­ப­வர்கள் பற்­றி­யது, மற்றும் மூன்­றா­வது பெயர்­பட்­டி­ய­லா­னது யாரெல்லாம் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின்கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்டு இருக்­கின்­ற­னரோ அவர்­களின் பெயர்­பட்­டியல். 

ஆனால் இன்­று­வ­ரையும் இலங்கை அதிபர் தன்னை சந்­தித்து கோரிக்­கை­களை சமர்­ப்பித்த, இந்த வலிந்து காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பாக நீதி­கோரி எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு, தான் கொடுத்த வக்­கு­று­தியை நிறை­வேற்­று­வதில் தோல்­வி­யி­னையே கண்­டுள்ளார். "அர­சாங்­க­மா­னது இப்­போது வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோர்­காக எதிர்ப்பு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வோரின் கோரிக்­கை­களை செயற்­ப­டுத்த வேண்டும், இதன் ஊடாக இலங்­கையில் இன, மத, மற்றும் மொழி என்­ப­வற்றால் வேறு­பட்­டி­ருக்கும் மக்­களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை கொண்டுவரமுடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/23799

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.