Jump to content

தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.... எப்படி என்பது சஸ்பென்ஸ்- ஸ்டாலின்


Recommended Posts

சென்னை: தமிழகத்தில் சில நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன் வைத்தார். ஆட்சிக்கு எதிராக 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது. மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுகவிடம் 89 எம்.எல்.ஏக்கள் எனும் பந்து இருக்கிறது. திமுகவிடம் இருக்கும் பந்தை என்ன செய்யப் போகிறோம் என்பது சஸ்பென்ஸ். ஜனநாயக முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைப்போம். திமுக கூட்டணியின் 98 எம்.எல்.ஏக்கள் என்பது 117 ஆகாதா? 200 ஆகவும் மாறும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் வரும் என்று கூறும் ஸ்டாலின் அதை எப்படி ஏற்படுத்துவோம் என்று கூறாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்து விட்டு சென்றுவிட்டார்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/assembly-poll-tamil-nadu-soon-mk-stalin-294453.html

Link to comment
Share on other sites

'ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம்' - பகீர் கிளப்பும் மு.க.ஸ்டாலின்

 

3%283%29_14366.jpg.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் புதல்வி கார்த்திகாவிற்கும், ரகுநாத்திற்கும் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு தமிழகத்தில் ஓரிரு நாள்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனப் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.  

இந்தத் திருமணத்திற்கு ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ஸ்டாலின் சகோதரி செல்வி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, பொங்களூர் பழனிசாமி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வந்திருந்தார்கள். சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜா வரவில்லை.

 

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ''பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் முதலில் இளைஞர் அணி உறுப்பினராக இருந்து மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராகி பிறகு மாநில இளைஞரணி பொறுப்புக்கு வந்து சட்டமன்ற உறுப்பினராகி தற்போது மாவட்டச் செயலாளர் வரை உயர்ந்திருக்கிறார். என்றைக்கும் தலைவரின் தொண்டனாகவும், என் ஆரூயிர் சகோதரனாகவும் இருந்து வருகிறார்.

அவரைப் பாராட்டுவது என்னைப் பாராட்டுவதற்கு சமம். அன்பு, எளிமை மிக்க மனிதர். அதிர்ந்து பேச மாட்டார். உரத்த குரலில் பேசி பார்த்ததில்லை. அவர் சட்டசபையிலும், பொதுக்கூட்டத்திலும் பேசியதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்படிப்பட்டவரின் மகளின் திருமண விழாவிற்கு நான் கலந்துகொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிப்படையாகச் சொன்னால் இந்தத் திருமண நிகழ்ச்சியில் நான் வரவேற்புரை அல்லது நன்றியுறை ஆற்ற வேண்டும். என்னை வாழ்த்துரை வழங்க சொல்லி விட்டார்கள்.

தந்தை பெரியார் முதன் முதலில் இந்த மாவட்டத்தில்தான் சீர்த்திருத்த திருமணம் செய்து வைத்தார். 1967 அண்ணா முதன் முதலில் சீர்திருத்த திருமணத்திற்கு சட்ட வரைவு கொடுத்து முதல் கையெழுத்தைப் போட்டார். இது சீர்த்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை திருமணம், தமிழ் முறைப்படி செய்யக்கூடிய திருமணம் அதனால்தான் நான் எப்படி வாழ்த்துகிறேன் என்பது மணமக்களுக்கும் தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறது. இத்திருமணத்தை நடத்தி வைக்கின்ற நானும் உணருகிறேன்.

மணமகள் பெயருக்குப் பின்பும், மணமகன் பெயருக்குப் பின்பும் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்கிறது. இந்தப் பட்டம் பெற பாடுபட்டது திராவிட இயக்கம். திராவிட இயக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்மால் படித்திருக்க முடியுமா? அப்படிப்பட்ட  திராவிட இயக்கத்தை அழிக்க சிலர் நினைக்கிறார்கள். யாராலும் இந்த இயக்கத்தைத் தொடக்கூட முடியாது.

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் நான் தலைநகரில் இருக்க வேண்டும் எனப் பலரும் சொன்னார்கள். ஆனாலும், நான் இங்கு வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஆனால், நான் வரவில்லை என்றால்தான் ஆச்சர்யம். இங்கு பேசும் போது வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்மணி 89 எம்.எல்.ஏ-க்கள் 118 எம்.எல்.ஏ-க்களாக மாறாதா என்றார். தலைவர் கலைஞர் எங்களைக் குறுக்கு வழியில் உள்ளே போகச் சொல்லவில்லை. மக்களால் நாங்கள் உள்ளே போக வேண்டும் என்பதையே விரும்புகிறோம். 118 எம்.எல்.ஏ-க்கள் அல்ல 200 எம்.எல்.ஏ-க்களாக மாறும்.

19 எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைச் சந்தித்து தற்போது இருக்கும் முதல்வருக்குத் தங்களுடைய ஆதரவு இல்லை என்று மனு கொடுத்து இருக்கிறார்கள். நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகளும் கவர்னரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்து பேட்டிகொடுக்கும் போது அவர்கள் சொல்லுகிறார்கள் நாங்கள் கவர்னரிடம் மனு கொடுக்கும் போது அவர்களின் உட்கட்சி பிரச்னையில் நான் எப்படித் தலையிட முடியும் என்றாராம்.

ஓ.பன்னீர்செல்வம் 10 எம்.எல்.ஏ.,வோடு கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்த உடனே எப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தீர்கள். 19 மட்டுமல்ல அந்த அணியில் 21 லிருந்து படிப்படியாக 40 வரை சேரும் என்று கூறுகிறார்கள். 89 பந்துகள் இருக்கின்றன. அந்தப் பந்துகளும் தாக்கும்.

அதற்காக இன்னும் எவ்வளவு நாள்கள் பொறுமையாக இருப்பீர்கள் என்கிறார்கள். இது எங்கள் சுயநலத்தினால் அல்ல. மக்களின் பொதுநலத்தை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு மாதங்கள் அல்ல ஓரிரு நாள்களிலேயே ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். நிச்சயம் திருமணம் என்றால் பாயாசம் இருக்கும். தி.மு.க., திருமணம் என்றால் அரசியல் இருக்கும்'' என்றார்.
 

 

 
 
 

http://www.vikatan.com/news/tamilnadu/100890-tamilnadu-to-face-big-political-changes-in-few-days-says-mkstalin.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.