Jump to content

புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது


Recommended Posts

புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

20070304001.jpg

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஈகச்சுடரேற்ற, மலர்மாலையை 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் பிரதம ஆசிரியர் ரவி அணிவித்தார்.

'புலிகளின் குரல்' நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை தமிழீழ வானொலி இணைப்பாளர் திருமாறன் நிகழ்த்தினார்.

தொடக்கவுரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிகழ்த்தினார்.

அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:

"புலிகளின் குரல் செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகிவிட்டன.

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுவும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆசானாகவும், எமக்கு எல்லோருக்கும் பல்வேறு வழிகளில் அரசியல் அறிவையும் ஊடகத்துறை சார்ந்த நிபுணத்துவத்தினையும் அது சார்ந்த நுட்பங்களையும் எமக்கு கற்று தந்தவராகவும் விளங்கிய எங்களுடைய 'தேசத்தின் குரல்' பாலா அண்ணனின் பிறந்த நாளில் இதனை தொடக்கி வைப்பதிலே நாங்கள் பெரும் மகிழ்வும் நிறைவும் அடைகின்றோம்.

உண்மையில் எமது ஊடகங்களைப் பொறுத்த வரையில் எந்த ஊடகங்களாக இருந்தாலும் எங்களுடைய விடுதலை அமைப்பினது ஆரம்ப கால கட்டத்திலிருந்தே எமது தேசியத் தலைவரினால் பணிக்கப்பட்டு, எமது பாலா அண்ணனால் நிருவகிக்கப்பட்டதும் கட்டியெழுப்பப்பட்டதும்தான்.

அவர் ஒவ்வொரு ஊடகங்களினுடைய செயற்பாட்டின் போதும் அது சார்ந்த நுட்பங்களையும் விடயங்களையும் எங்களினுடைய போராளிகளுக்கு ஊட்டுவதில் எப்போதும் முன்னின்று உழைத்திருக்கின்றார். அந்த வகையில் எங்களினுடைய பாலா அண்ணனின் பிறந்த நாளில் இந்த செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

20070304005.jpg

சிங்கள இனவாத அரசு சகல வழிகளிலும் தமிழ்மக்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே 'புலிகளின் குரல்' ஒலிபரப்புக் கோபுரத்தை சிறிலங்கா வான்படை தகர்த்தது. தொடக்க காலத்திலிருந்தே சிறிலங்கா படைத்துறை புலிகளின்குரலை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று எதிரியின் சவால்களுக்கு மத்தியில் 'புலிகளின் குரல்' பிரமாண்டமான அடுத்த கட்டத் தொழில்நுட்பத்துக்குள் நுழைகின்றது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை போர்க்களத்துக்குள் சிறிலங்கா அரசு அழைத்து வந்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் அன்றைய சம்பவத்தில் சிறிலங்கா அரசின் உண்மையை உடனடியாக எமது ஊடகங்கள் வெளிப்படுத்தியதால்தான் அரசாங்கத்தின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதில் எமது ஊடகங்களின் பணி என்பதுதான் முக்கியமானதாக இருந்தது" என்றார் அவர்.

20070304009.jpg

20070304007.jpg

தொடர்ந்து 6 மணிக்கு 'புலிகளின் குரல்' செய்மதி வழியிலான ஒலிபரப்பினை ஆழியை இயக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார்.

தொடக்க நிகழ்வின் சிறப்புரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களை நிகழ்வுகளை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று எதிரிகளின் பொய்ப்பரப்புரையை 'புலிகளின் குரல்' முறியடித்து நிற்கின்றது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஊடகத்தில் தான் பெரும்போர் நடத்துகின்றது. இதனை நாம் எதிர்கொண்டு உடைத்தெறிகின்றோம்" என்றார்.

நன்றியுரையை 'புலிகளின் குரல்' நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் நிகழ்த்தினார்.

20070304010.jpg

http://www.eelampage.com/?cn=30978

Link to comment
Share on other sites

'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார்.

இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.

தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஈகச்சுடரேற்ற, மலர்மாலையை 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் பிரதம ஆசிரியர் ரவி அணிவித்தார்.

'புலிகளின் குரல்' நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையை தமிழீழ வானொலி இணைப்பாளர் திருமாறன் நிகழ்த்தினார்.

தொடக்கவுரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிகழ்த்தினார்.

அவர் தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:

"புலிகளின் குரல் செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவையாகிவிட்டன.

இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுவும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் ஆசானாகவும், எமக்கு எல்லோருக்கும் பல்வேறு வழிகளில் அரசியல் அறிவையும் ஊடகத்துறை சார்ந்த நிபுணத்துவத்தினையும் அது சார்ந்த நுட்பங்களையும் எமக்கு கற்று தந்தவராகவும் விளங்கிய எங்களுடைய 'தேசத்தின் குரல்' பாலா அண்ணனின் பிறந்த நாளில் இதனை தொடக்கி வைப்பதிலே நாங்கள் பெரும் மகிழ்வும் நிறைவும் அடைகின்றோம்.

உண்மையில் எமது ஊடகங்களைப் பொறுத்த வரையில் எந்த ஊடகங்களாக இருந்தாலும் எங்களுடைய விடுதலை அமைப்பினது ஆரம்ப கால கட்டத்திலிருந்தே எமது தேசியத் தலைவரினால் பணிக்கப்பட்டு, எமது பாலா அண்ணனால் நிருவகிக்கப்பட்டதும் கட்டியெழுப்பப்பட்டதும்தான்.

அவர் ஒவ்வொரு ஊடகங்களினுடைய செயற்பாட்டின் போதும் அது சார்ந்த நுட்பங்களையும் விடயங்களையும் எங்களினுடைய போராளிகளுக்கு ஊட்டுவதில் எப்போதும் முன்னின்று உழைத்திருக்கின்றார். அந்த வகையில் எங்களினுடைய பாலா அண்ணனின் பிறந்த நாளில் இந்த செய்மதி வழியிலான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

சிங்கள இனவாத அரசு சகல வழிகளிலும் தமிழ்மக்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இதற்காகவே 'புலிகளின் குரல்' ஒலிபரப்புக் கோபுரத்தை சிறிலங்கா வான்படை தகர்த்தது. தொடக்க காலத்திலிருந்தே சிறிலங்கா படைத்துறை புலிகளின்குரலை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று எதிரியின் சவால்களுக்கு மத்தியில் 'புலிகளின் குரல்' பிரமாண்டமான அடுத்த கட்டத் தொழில்நுட்பத்துக்குள் நுழைகின்றது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை போர்க்களத்துக்குள் சிறிலங்கா அரசு அழைத்து வந்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைந்தார்கள். ஆனால் அன்றைய சம்பவத்தில் சிறிலங்கா அரசின் உண்மையை உடனடியாக எமது ஊடகங்கள் வெளிப்படுத்தியதால்தான் அரசாங்கத்தின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இதில் எமது ஊடகங்களின் பணி என்பதுதான் முக்கியமானதாக இருந்தது" என்றார் அவர்.

தொடர்ந்து 6 மணிக்கு 'புலிகளின் குரல்' செய்மதி வழியிலான ஒலிபரப்பினை ஆழியை இயக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்வின் சிறப்புரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களை நிகழ்வுகளை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்று எதிரிகளின் பொய்ப்பரப்புரையை 'புலிகளின் குரல்' முறியடித்து நிற்கின்றது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஊடகத்தில் தான் பெரும்போர் நடத்துகின்றது. இதனை நாம் எதிர்கொண்டு உடைத்தெறிகின்றோம்" என்றார்.

நன்றியுரையை 'புலிகளின் குரல்' நிர்வாக இணைப்பாளர் இ.இராஜேஸ்வரன் நிகழ்த்தினார்.

http://puthinam.com

©

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய தொழில் நுட்பங்களுக்குள்ளே நுழைவதுபோன்று.. புலிகளின் குரலின் இணையவழி ஒலிபரப்பையும் சீர்செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்..

அதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ளார்களா என யாருக்காவது தெரியுமா+?

Link to comment
Share on other sites

"ஊடகம் அதிலும் இன்று வானொலிதான் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் 'புலிகளின் குரல்' ஊடுருவி நிற்கின்றது.

'' புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது "

நான் ஊடகத்துறையில் ஆர்வமும், ஓரளவு ஈடுபாடும் உள்ளவன் என்ற வகையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.

Link to comment
Share on other sites

ஜரோப்பா வில் எந்த வானொலி மீள் ஒலிபரப்பு செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளது?

அலைவரிசை

செய்மதி - யூரோஸ்ரார்.

11.506 GHz.

Symbol Rate - 2894.

Polarization - Vertical.

-Pathivu-

Link to comment
Share on other sites

குண்டு வீசி அழிக்க முனைந்த போதும் அழிவிலிருந்து ஆக்ரோசமாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு வெளிவரும் புலிகளின் குரலுக்கு என் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.