Jump to content

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது

பெங்களூர், மார்ச்.4-: சந்திரனுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

சந்திரன் பற்றி ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை தயாரித்து அனுப்ப இந்தியா திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான திட்டம் ஒன்றை இந்திய வானவெளி மையமான ‘இஸ்ரோ’' தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

ரூ.386 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதை தொடர்ந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. தற்போது அந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணி குறித்து தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது. அந்த பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரன் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு நடத்த ‘சந்திரயான்-1’ என்ற ராக்கெட்டை இந்தியா பறக்க விட முடிவு செய்து உள்ளது. இந்த ராக்கெட் பற்றி கடந்த வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து இம்மாதத்தில் ராக்கெட்டை வடிவமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள்.

இந்த ராக்கெட் அடுத்த ஆண்டு (2008) மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சந்திரனுக்கு விடப்படும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘சந்திரயான்-1’ ராக்கெட் சந்திரனுக்கு ஏவப்படும்.

சந்திரயான்-1 ராக்கெட் சந்திரன் அருகில் உள்ள பகுதிகளையும் சற்று தொலைவில் உள்ள இடங்களையும் படம் பிடித்து முப்பரிமாண வரை படமாக அனுப்பும்.

அந்த ராக்கெட்டில் மொத்தம் 11 வகையான அறிவியல் ஆய்வு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் பொருத்தப்படும். இதில் 5 உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மீதி 6 உபகரணங்களை ஐரோப்பிய வானவெளி ஆய்வு மையம் (3), நாசா விண்வெளி ஆய்வுக்கூடம் (2), பல்கேரிய அறிவியல் கழகம் (1) ஆகியவை வழங்கி இருக்கின்றன.

இவ்வாறு மாதவன் நாயர் தெரிவித்தார்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

இந்தியா பக்கத்து மாணிலத்துக்கு தண்ணியை விட கான்னோம்

ஆனா தண்ணி இல்லாத சந்திரனில் என்னத்தை விட போகிறார்களோ :P

தொழில் நுற்ப்பத்தில் வளந்துட்டம் என்று காட்டலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பக்கத்து மாணிலத்துக்கு தண்ணியை விட கான்னோம்

ஆனா தண்ணி இல்லாத சந்திரனில் என்னத்தை விட போகிறார்களோ :P

தொழில் நுற்ப்பத்தில் வளந்துட்டம் என்று காட்டலாம்

சந்திரனில் தண்ணி இருக்கா எண்டு பார்க்கத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சந்திரனில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வருவோம்.அந்த தண்ணீர் மூலம் தமிழ்நாட்டை வளம்பெறச்செய்வோம்.எனவே எங்களுக்கு வாக்களியுங்கள்.இப்படி தமிழ்நாட்டு ஒருசில அரசியல்வாதிகள் தேர்தல் முழக்கம் செய்யக்கூடும். :mellow:

Link to comment
Share on other sites

சந்திரனில் அமெரிக்கா ஆய்வுகள் செய்து தண்ணீர் இல்லையென்று சொல்லிவிட்டது.

ஆனால் இந்தியர்களின் நோக்கமே வேறு.

எண்கணித சாஸ்திரப்படி அரசியல்வாதிகள் பலருக்கு சந்திரன் பாதகமாக உள்ளதாம். அதனால் சந்திரனுக்கே நேரடியாகச் சென்று யாகம் நடத்தினால் பரிகாரம் உண்டாம். சந்திரனுக்குச் செல்ல ஐயர்கள் தெரிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

சந்திரனில் அமெரிக்கா ஆய்வுகள் செய்து தண்ணீர் இல்லையென்று சொல்லிவிட்டது.

ஆனால் இந்தியர்களின் நோக்கமே வேறு.

எண்கணித சாஸ்திரப்படி அரசியல்வாதிகள் பலருக்கு சந்திரன் பாதகமாக உள்ளதாம். அதனால் சந்திரனுக்கே நேரடியாகச் சென்று யாகம் நடத்தினால் பரிகாரம் உண்டாம். சந்திரனுக்குச் செல்ல ஐயர்கள் தெரிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நம்ம களத்திலதானே நிறைய கள்ள சாமி இருக்குறாங்க, அவங்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா......? :P

Link to comment
Share on other sites

நம்ம களத்திலதானே நிறைய கள்ள சாமி இருக்குறாங்க, அவங்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா......? :P

குமாரசுவாமி அப்படி இல்லையே

:angry:

Link to comment
Share on other sites

ரஷியா 48 வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட ஆய்வுகளை இந்தியாகாரர் அடுத்த வருஷம் செய்ய போகினம். ரஷியா, மற்றும் அமெரிக்காவிடம் சந்திரனை பற்றிய போதியளவு தரவுகள் இருக்கின்றன அவற்றை விட மேலதிகமான தகவல்கள் இந்தியாகாரருக்கு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் அத்துடன் இந்தியா விண்வெளி நிலையத்தால் 3000 km உயரத்தில் செய்மதியை நிலை நிறுத்துவதற்கு அனுப்புகின்ற விண்கலமே கடலில் போய் விழும் போது இவர்களுடைய ரொக்கற் சந்திரன் வரை போகுமா என்பது கேள்விக்குறி தான். :unsure:

Link to comment
Share on other sites

குமாரசுவாமி அப்படி இல்லையே

:angry:

எந்தப் புத்துக்குள்ளா எந்த பாம்பு இருக்கோ தெரியல :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.