Jump to content

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும்


Recommended Posts

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக கொண்டாட்ட நிகழ்வுகளும்

IMG_3974.jpg
குளோபல் தமிழச் செய்தியாளர்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்களுக்கு மிக அருகில் கொண்டாட்ட நிகழ்வுகளும் இன்றைய தினம் யாழில்.ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் , நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. அதேநேரம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் உள்ள யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பல்கலைகழக வளாகத்தினுள் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலீபனின் நினைவு நாளை மாணவர்கள் அனுஸ்டிக்கும் போது , சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு விழா குழுவினால் பல்கலைகழக வளாகத்தினுள் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளான.

யாழ்.பல்கலைகழகத்தினுள் திலீபனின் திருவுருவபடம் வைத்து உண்ணா நோன்பிருந்து திலீபன் உயிர் நீத்த 26ஆம் திகதி வரையில் அஞ்சலி செலுத்த மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதே கால பகுதியில் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு தினமும் கைலாசபதி கலையரங்கில் திரைப்படங்கள் காட்சி படுத்தப்படவுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் நல்லூர் பின் வீதியில் பருத்துத்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அதேநேரம் நினைவுத்தூபிக்கு முன்பாக உள்ள இடத்தில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

thileeban.jpg

IMG_3918.jpgIMG_3927.jpgIMG_3928.jpgIMG_3931.jpgIMG_3934.jpgIMG_3936.jpgIMG_3940.jpgIMG_3942.jpgIMG_3945.jpgIMG_3949-1024x768.jpgIMG_3973.jpg

http://globaltamilnews.net/archives/41242

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவேந்தலை குழப்பும் வகையில் நிகழ்வு

வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்டும் பங்கேற்பு

 

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் நேற்று நினை­வேந்­தல் நிகழ்வு நடை­பெற்ற சம­நே­ரத்­தில், தென்­னி­லங்கைக் காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வும் நடை­பெற்­றது.

திலீ­ப­னின் நினை­வேந்­த­ லைக் குழப்­பும் வகை­யில் நடை­பெற்ற அந்த நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்­டும் பங்­கேற்­றி­ருந்­தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்று உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்வு நடை­பெற்­ற­போது, நினை­வுத் தூபிக்கு எதி­ராக உள்ள பிர­தே­சத்­தில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்வு இடம்­பெற்­றது. மிகப் பெரிய சத்­த­து­டன் அந்த நிகழ்வு நடை­பெற்­றது.

தியாக தீபத்­தின் நினை­வு­நாள் உரை ஆரம்­பித்­த­போது, காப்­பு­றுதி நிறு­வ­னம் இலங்­கை­யின் தேசிய கீதத்­தைப் பெரும் சத்­தத்­து­டன் ஒலிக்­க­விட்­டுள்­ளது.

திலீ­ப­னின் நினைவு நாளைக் குழப்­பும் வகை­யில் அந்த நிறு­வ­னத்­தின் செயற்­பாடு அமைந்­தி­ருந்­தாக, நினை­வேந்­த­லில் கலந்து கொண்ட பல­ரும் சுட்­டிக்­காட்­டி­னர்.

காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்டே கலந்து கொண்­டி­ருந்­தார்.

http://newuthayan.com/story/29070.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்று உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­ட

அதே இந்தியா இன்று தனது  படையினருக்கு சிறிலன்காவில் அழகான பல நினைவுத்தூபிகளை சிறிலங்கா அரச ஆதரவுடன் அமைத்துள்ளது.ஆனால் எங்களால் ஒரு நினைவுத்தூபியை கூட அமைக்க முடியவில்லை.....நாங்கள் பூர்வீக குடிகள்..இருந்தும்.

Link to comment
Share on other sites

திலீ­ப­னின் நினை­வு­கள் பரு­வ­கால நினை­வு­களா?

 

எம்­ம­வர்­க­ளின் சமூக வலைத் த­ளங்­களை மீண்­டும் ஒரு கலக்­குக் கலக்கி வரு­கி­றார் திலீ­பன். திலீ­ப­னின் ஒளிப்­ப­டங்­கள், அவர் தொடர்­பான விட­யங்­கள் ஈழத்து இளை­ஞர்­க­ளின் சமூக வலைத்­த­ளங்­க­ளில் தற்­போது கொட்­டிக் கிடக்­கின்­றன.

வீர வணக்­கங்­க­ளும் தாரா­ள­மா­கவே செலுத்­தப்­ப­டு­கின்­றன. தவ­றில்லை. ஆனால் நாம் பரு­வ­கா­லத்­தில் எண்­ணி­விட்­டுக் கடந்து போகும் விட­யங்­க­ளாக ஈழத்து நாய­கர் க­ளின் நினை­வு­கள் மாறி­யுள்­ளன என்பது­தான் வேதனை.

இன்­னும் தெளி­வா­கச் சொல்ல வேண்­டு­மா­யின், ஒவ்­வொரு வரு­டத்­தின் மார்ச் மாதம் வந்­தால் ஐ.பி.எல். ஆர்ப்­பாட்­டம் எம்மை ஆட்­கொள்­ளும்.

அது­போல் செப்­ரெம்­பர் வந்­தால் திலீ­ப­னின் அந்தப் போ­ராட்­டம் நினை­வு­ க­ளுக்கு வந்து, வந்த வேகத்­தில் சென்­றும் விடு­கி­றது. திலீ­பன் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி உயி­ரி­ழந்த நாள்­க­ளில் மட்­டும்­தான் அவர் நினை­வு­கூ­ரப்­ப­டத் தகு­தி­யா­ன­வரா? ஏனைய நாள்­க­ளில், நல்­லூர் வீதி­யைப் பயன்­ப­டுத்­தும் போது­கூட திலீ­ப­னின் நினை­வு­கள் எம்­மில் பல­ருக்கு வரு­வ­தே­யில்லை.

அது ஏன்? நல்­லூர் திரு­விழா கடந்த மாதம் நடை­பெற்­றது. வழக்­கம்­போல் லட்­சோப லட்­சம் பக்­தர்­கள் திரண்­ட­னர். தின்­பண்­டக் கடை­கள், புட­வைக் கடை­கள் ஆகி­ய­வற்­றால் வீதி­கள் நிறைந்து வழிந்­தன.

எத்­த­னையோ பேர் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் அமர்ந்­து­கொண்டு குளிர்­பா­னம் அருந்­திக் கொண்­டி­ருந்­தார்­கள். பலர் கால­ணி­க­ளு­டன் நினை­வி­டத்தை ஏறி­மி­தித்து தாண்­டிச் சென்­ற­னர்.

இதன்­போது திலீ­ப­னின் நினை­வ­லை­க­ளும் அவ­ரின் வர­லாற்­றுப் போராட்­ட­மும் எங்கு சென்­றி­ருந்­தன. எனின் திலீ­பன் என்­ப­வன் பரு­வ­லா­கத்­துக்கு மட்­டு­மா­ன­வனா?

http://newuthayan.com/story/29063.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.