Jump to content

இறைவன்


Recommended Posts

தோரண வாயில் எல்லாம்

விளம்பர விசாரிப்புகள்

வெள்ளை கோபுரம்

வண்ணமேற்றி கொண்டுள்ளது

கருங்கல் தூண்கள்

பளிங்குப் போர்வையில்

பதுங்கிவிட்டன

தொன்னையில் சிரித்த பொங்கல்

நயிலான் பையில் அழுகின்றது

அர்ச்சகரெல்லாம்

நகைக்கடை ஒப்பனைகளாய்

சாமி சயனத்தில் இருப்பதால்

சந்திக்க இயலாதாம்

ஏமாற்ற் வெளினடப்பில்

எதிர்ப்பட்ட சிறுவன்

ஏந்திய கையில் இருந்த

இறைவன் கேட்டான்

“இங்கு விடுத்து

எங்கு தேடினாய் என்னை” என்று

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை!

ஆணாகிய தாங்கள் அமுதினி என்ற பெண் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன? காதலியின் பெயரா?

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதை. நல்லதொரு கருத்து. பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

நண்பருக்கு வணக்கம்

பெண் என்பவள் காதலியாக மட்டும் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை

அமுதினி என் கருத்துக் குழந்தை.

பிழையிருப்பின் மன்னிக்கவும்

நல்ல கற்பனை!

ஆணாகிய தாங்கள் அமுதினி என்ற பெண் பெயரை தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன? காதலியின் பெயரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துச்செறிவான கவிதை. மிகவும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.