Jump to content

மெட்ரோவுடன் மேம்பால ரயில் ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ரோவுடன் மேம்பால ரயில்(MRTS) ஒருங்கிணைப்பு பேச்சு துவக்கம்!

ஆவணங்களை அளிக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு..

 

tirumailai_mrts_station_chennai__madras_  yN1ESQAFvH_Puzhuthivakkam%20MRTS%20Pictu

 

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துடன், மேம்பால ரயில் போக்குவரத்தை (Madras Rapid Transit System - MRTS) ஒருங்கிணைப்பதற்காக, அதிகாரிகள் நிலையிலான, அதிகாரபூர்வ பேச்சு துவங்கியுள்ளது.

இதற்காக மேம்பால ரயில் திட்ட ஆவணங்களை ஒப்படைக்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில், முதல்கட்டமாக, 42 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதில் விமான நிலையம் முதல், சின்னமலை வரையும், பரங்கிமலை முதல் நேரு பூங்கா வரையிலான வழித்தடங்களில், போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடற்கரை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் திட்டத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டத்தை நிர்வகித்து வரும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை, இதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் மேம்பால ரயில் திட்டங்களை(MRTS) ஒருங்கிணைப்பதற்கான அதிகாரிகள் கூட்டம், அண்மையில் சென்னையில் நடந்தது.

இதில் மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ., தெற்கு ரயில்வே ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுடன், இரண்டு தனியார் கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், எம்.ஆர்.டி.எஸ்., எனப்படும் மேம்பால ரயில் திட்டத்தை ஒருங்கிணைப்பது குறித்து, முதல் முறையாக அதிகாரபூர்வ பேச்சு துவக்கப்பட்டுள்ளன. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கலந்தாலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்கினர்.

மேம்பால ரயில் திட்டத்தை பயன்படுத்தும் பயணியர் எண்ணிக்கை குறித்தும், இந்த ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு, ரயிவே துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

மேம்பால ரயில் திட்டம் தொடர்பான அரசாணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வீட்டுவசதி துறை, வருவாய் துறையினரிடமும், ஆவணங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், எந்தெந்த ரயில் நிலையங்களில், எந்த பகுதி இருப்பு பாதையை, ரயில்வே வைத்துக்கொள்வது, எதை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒப்படைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்கரை ரயில் நிலையத்தை அழகுபடுத்துவதற்கான வரைவு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக அடுத்த கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேம்பால ரயில் கடந்து வந்த பாதை...

முதல்கட்டம்

-    கடந்த, 1984ல், கடற்கரை - மயிலாப்பூர், மேம்பால ரயில் திட்ட பணிகள் துவக்கம்

-  நீளம்: 8.55 கி.மீ.,

-  நிலையங்கள்: எட்டு

-  இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து, 1998ல் துவக்கம்

-  100 சதவீத நிதி மத்திய அரசு வழங்கியது.


இரண்டாம் கட்டம்

-   கடந்த, 1998ல், மயிலாப்பூர் - வேளச்சேரி இரண்டாம் கட்டப்பணிகள் துவக்கம்

-    நீளம்: 11 கி.மீ.,

-   நிலையங்கள்: ஒன்பது

-  ரயில் போக்குவரத்து, 2007ல் துவக்கம்

- இரண்டாம் கட்ட திட்ட பணிக்கான நிதியில் தமிழக அரசின் பங்கு, 67 சதவீதம்; மத்திய அரசு பங்கு, 33 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பு.


இரண்டாம் கட்டம் விரிவாக்கம்

-    கடந்த, 2007ல், வேளச்சேரி - பரங்கிமலை, இரண்டாம் கட்ட விரிவாக்க திட்ட பணிகள் துவக்கம்

-  நீளம் : 5 கி.மீ.,

-   நிலையங்கள்: மூன்று

-  திட்ட செலவில், மூன்றில் இரண்டு பங்கு தமிழக அரசும்; மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசும் ஏற்றுள்ளது

-  நிலம் கையகப்படுத்துதல் வழக்குகளால் இறுதி கட்ட பணிகள் தொய்வடைந்துள்ளன.

 

தினமலர்

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் ரயில்கள்(MRTS) வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு ?

42504.jpg

சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை இனி மெட்ரோ ரயில் நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும். இவ்வழித்தடம் 20 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மெட்ரோ ரயில் நிர்வகிக்கும்பட்சத்தில் இந்த வழித்தடங்களின் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பறக்கும் ரயில் நிலையங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால் அதனை கடைகள், உணவகங்களுக்குவாடகைவிட்டு வருமானத்தை பெருக்கும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடும் என தெரிகிறது.சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு, இந்தப் பயன்பாடு 20 சதவிதம் உயர்ந்துள்ளது.

இவ்வழித்தடத்தில் பயணிகள் சேவையை மேம்படுத்தவும்,பராமரித்து மேம்படுத்தவும் சென்னை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.இதற்கான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து வரைவு அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் அதன் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலுடன் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தா சந்தித்து வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு இறுதி அறிக்கை தயார்செய்யப்பட்டு மெட்ரோ ரயில்வசம் பறக்கும் ரயில் வழித்தடம் ஒப்படைக்க முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

புதிய தலைமுறை செய்தி

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.