Jump to content

விந்து நாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விந்து நாதம்
**************

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?


இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1 சதை வளர்ச்சி 
2 எலும்பு வளர்ச்சி 
3 ரோம வளர்ச்சி 
4 அறிவு வளர்ச்சி 
5 தோல் பொலிவு 
6 உயிரணு உற்பத்தி 
7 உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட ,சுவர் கெடும் -திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால் ஊடகங்களும் போலி மருத்துவர்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1 விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.
2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ ! விந்து இவ்வளவு முக்கியமானதா இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து விட்டோமே என்று புலம்பி தவித்துலாட்ஜ் டாக்டர்களிடம் ஓட வேண்டாம்.

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும் உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3 மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும் பிறகு 10 உலர் திரட்சைகள்,5 முந்திரி, 5 பாதாம் ,5 பிஸ்தா , 1 அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3 மாதங்கள் உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1 ஓரிதழ் தாமரை 
2 ஜாதிகாய் சூரணம் 
3 அஸ்வாகாந்த சூரணம்

100 சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் நன்றி,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

 

நன்றி

- *சித்தர்களின் குரல் shiva shangar*

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

58 minutes ago, colomban said:

2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

 

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

அதான் சொல்லி போட்டியளே பிரகென்ன கெணறாவது கொளமாவது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

இந்த வெளிப்படை, வெகுளித்தனம் பிடித்திருக்கு..! bjr1.gif

இதிதெல்லாம் வயது வித்தியாசம் இருக்கிறா என்ன..? சுய ஒழுக்கமுடன் வாழ்ந்தால் என்றும் இளமைதானே..? dubitatif.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட , சுவர் கெடும் - திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

திருமூலர் சொல்வதைப் பார்த்தால்....
அந்தக் காலத்திலே... கக்கூசுக்குள்  நின்று, 
"கைப்பழக்கம்"  செய்கின்றவர்கள், நிறைய இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. tw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

இதோ... வந்திட்டன்,  ராஜா..... :grin:
ஆஹா.... வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற  தலைப்பு. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2017 at 10:02 PM, தமிழ் சிறி said:

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

 

நான் அந்தளவு பழைய ஆள் இல்லை த.சி.

எங்கள் காலத்தில் , குஷ்பு / அமலா / கெளதமி / நதியா /சுகன்யா போன்றோரே இருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

K.B.Sundarambal.jpeg

மேலே இருக்கும் படத்திலிருப்பவர் காலத்து ஆட்களெல்லாம் அப்பட்டமாக பொய் சொன்னால் எப்படி..?  :unsure::mellow::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

உந்த போற வயதை  சொன்னால் எல்லோருக்கும் கோபம் வருதுப்பா உங்களுக்கு இளமை ஊஞ்சல் ஆடுகிறது  நான் சொன்னது சரியா சுவி சாமி tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் உங்களுடன் முரண்பட நான் விரும்பவில்லை நான் கருப்பு வெள்ளையுடன் இருந்து கொள்கிறேன்....!   :unsure:  tw_blush:

Résultat de recherche d'images pour "shruti hassan blake & white photos"

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிறைய குழப்பகரமான விடயங்கள் உண்டு 
இது பற்றி ஒரு தீர்க்கதரிசனமான முடிவை எடுக்க முடியாது 
அதனால்தான் இவ்வாறு விளக்கம் குறைந்த கட்டுரைகள் வருகின்றன என்று எண்ணுகிறேன் 
தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
இதை பற்றி எழுதும்போது இவர் குறைந்த பட்ஷம் இதுபற்றி தானாவது கொஞ்சம் அறிய முற்பட்டு இருக்கலாம்.  


பெண்களுக்கு ஸ்ட்ரோஜனும்  ஆண்களுக்கு டெஸ்டரோனும் மிக அவசியமானது 
இது உடலுறவின் போது சுரக்கிறது ஆகவே உடலுறவு இருபாலருக்கும்  உடல் ரீதியா பல 
நண்மைகளை கொடுப்பதோடு ஒரு அன்னிய உன்னிய உறவாக குடும்ப வாழ்வு இருக்கவும் 
உதவுகிறது. மணம்முடித்து பிள்ளைகள் வளர்ந்துவர  பள்ளிக்கு விடுவது வேலைச்சுமை  பொருளாதார நெருக்கடி சமையல் வீட்டு வேலை என்று வீடே தலைகீழாக மாறி இருக்கும்போது. உணர்வின்பால் தூண்டுதலை உணரும் பெண்களுக்கு உடலுறவை மணம்முடித்த காலத்தில் தொடர்வதுபோல  தொடரமுடிவதில்லை. இதற்கு பெண்கள் ஆண்களையும் குற்றம் சுமத்துகிறார்கள்  முன்னைய வீரியம் ஆண்களிடமும்  தாம் காண்பதில்லையாம் .. பெண்கள் உடலுறவு உணர்வை எட்டுவதுக்கு உற்சாகம் சுற்று சூழல்  எல்லாம் காரணமாக அமைகிறது ....... (Quality over Quantity) அதாவது முறையான உடலுறவு இல்லாத பட்ஷத்தில் அது இல்லாமலே  இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் ...... (Quantity over Quality) ஆண்கள் மாறாக அறையோ குறையோ செய்யக்கூடியதை  இன்றைக்கு செய்துவிட வேண்டும் மற்றதை நாளை பார்க்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
பெண்கள் திருப்தி அடையாத காரணத்தால் ஆண்கள் தொடங்கும்போதே ... எதோ வெட்டி புடுங்க போறமாதிரி வெளிக்கிடுகிறார்? என்று ஒரு சலிப்பு தன்மைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ஸ்ட்ரோஜென் மற்றும்  டெஸ்டரோன் உடலில் பல நோய்கள் வருவத்துக்கும் காரணம் ஆகிறது .... சமசீரான உடலுறுவு இல்லாத  பெண்களுக்கும் ஆண்களுக்கும் இதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இதை உடலுறவால் தீர்க்கலாமா? அல்லது  சப்ளிமென்ட் மூலம் தீர்க்கலாமா? என்பதை அது சார்ந்த நிபுணர்கள்தான்  கூறவேண்டும். 

ஸ்ட்ரோஜென் பெண்கள் உடலில் என்ன மாறுதல்களை செய்கிறது? 

Image result for how do estrogen affect women body

இது கூடுவதாலும் பக்க விளைவுகள் உண்டு குறைவதாலும் பக்க விளைவுகள் உண்டு 

Estrogen Levels

இது இயற்கையாகவே ஒரு வயதின் பின்பு குறைந்துகொண்டுதான் போகிறது 
இளமையாக இருப்பதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருப்பதான எண்ணம் இங்கிருந்துதான் வருகிறது 

Image result for how do estrogen affect women body

 

அப்போ இது ஆண்களுக்கு இல்லையா? இருக்கிறது ஆண்களிலும் கூடி குறைவதால் 
பல மாறுதல்களை உண்டுபண்ணுகிறது உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம்போல 

Image result for how do estrogen affect women body

 

டெஸ்டரோன் ஆண்கள் உடலில் என்ன மாறுதல்கள் செய்கிறது? 

Image result for how do testoterone  affect men body

Image result for how do testoterone  affect men body

டெஸ்ட்ரோன் அளவு கூடி குறைவதால் என்ன பாதிப்பு? 

Image result for how do testoterone  affect men body

எல்லா வயதிலும் இது ஒரே மாதிரி இருக்குமா? 

Image result for how do testoterone  affect men body

எளிய முறையில் இதை சீராக்கி உடல் ஆரோக்கியம்  
ஆரோக்கியமான திருப்திகரமான  உடலுறவு 
அழகான ஆரோக்கியமான வாழ்வு வாழ ....... ஆன் பெண் இருபாலருக்கும் ஒரே ஒரு சிறந்த வழிதான் உண்டு.
உடற்பயிற்சி   உடற்பயிற்சி  .... உடற்பயிற்சி  யோகா!
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான்  .. நீங்கள் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் பணம் 
வடிவமைக்கும் குழைந்தைகள்  பல கனவுகளுடன் கஸ்டரபட்டு கட்டும் வீடுகள் 
இறைப்பணிகள் பொதுப்பணிகள் எல்லாவற்றையும் மென்மேலும் வளர்த்தும் அழகாக்கியும் 
அனுபவித்து ஒரு நிறைவான வாழ்வை வாழ முடியும்.

அளவுக்கு அதிகமான சுயஇன்பம்  டெஸ்ட்ரோனை வீணாக்கும் அதேநேரம் 
உடலுறவுதான் டெஸ்ட்ரோன் சுரக்கவும் வழி சமைக்கிறது. அது உடலுக்கு மட்டும் கெடுதல் இல்லை 
உலகு உடன் ஆன உறவிலும் விரிசலை உண்டுபண்ணும் ....... பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகுவீர்கள் 
பார்க்கும் பெண்களை எல்லாம் சதைகுவியலாகவே பார்ப்பீர்கள் ...அது பெண்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கிய உறவை வளர்க்காது. நீங்கள் எவ்வாறு பெண்களை பார்க்கிறீர்கள் என்பதை 
பெண்கள் உங்களை பார்க்கும்போது உணர்ந்து கொள்வார்கள் ... ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து விலகி  சென்றுவிடுவார்கள். இது பெண்களுக்கு மட்டும் அல்ல உலகில் வாழும் பெண் பறவைகள் பெண் மிருகங்களுக்கும்   இந்த உணர்வு உண்டு ... ஒரு ஆரோக்கியமான ஆண்ணுடன் இன விருத்தி செய்து இந்த உலகில்  ஆரோக்கியமான தமது இனத்தை பாதுகாக்கும் திறன் பெண்பாலிடம் இருக்கும் திறனும் கடமையும் ஆகும். மனிதரில் மட்டுமே ஆணாதிக்க சிந்தனை உருவாகி திருமணத்தை ஒரு விபச்சார வடிவுக்கு கொண்டுவந்து  ... திருமணம் ஆன பின்பும் இவன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை என்ற உண்மையை பெண்கள்  தெரிந்துகொண்டாலும் விட்டு ஓட முடியாத மாதிரி .... ஒருவனுக்கு ஒருத்தி ... கல்லானாலும்  கணவன்.... மற்றும் மயிர் மண்ணாங்கட்டி என்று பெண்களை ஏய்த்து பிழைக்க தொடங்கியதால்தான்  மனிதர்களில்  பல குறைபாட்டு மனிதர்கள் தொடர்ந்தும் பிறக்கிறார்கள் ....  வலதுகுறைந்த பிறவிகள்  பறவைகள்  மிருகங்களில் மிக மிக குறைவு ஒரே காரணம் பொறுப்புள்ள பெண்பால்தான். இது எதிர்மறையாக  ஆண்களையும் இன்னும் இன்னும் சோம்பேறிகள் ஆக்குகிறது. எப்படி பியரை குடித்துவிட்டு  வயிற்றை தள்ளிக்கொண்டு  திரிந்தாலும் அம்மா ஊரில் இருந்து ஒரு வடிவான பெட்டையை அனுப்புவா  என்ற போக்கு பின்னாளில்  அவர்களுக்கே அது எதிராக அமைகிறது என்பதை உணர மாட்ட்டார்கள். 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

உடற்பயிற்சிக்கு  வெட்கம் நாணம் தேவை இல்லை 
தம்பதிகளாகவே அருகில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு சென்று சேர்ந்துவிடுங்கள் 
அதில் செலவிடும் ஒருமணிநேரம்  உங்களுக்கு பல வருடங்களை சேமித்து 
தருவதோடு ஆரோக்கியமான  வழமையான உடலுறவுக்கு வழி சமைக்கிறது. 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

Image result for indian men exercising

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 3/12/2020 at 8:18 PM, Maruthankerny said:

தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
 

 

பிரதான கட்டுரையை விட நீங்கள  இணைத்த கட்டுரை சுப்பர். அசத்திடீங்க😀 நன்றி மருதங்கேணி.  👍👍👍👍👍👍👍👍👍👍👍

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.