Jump to content

“நம்பி மோசம் போய்விட்டேன்!” - கொந்தளிக்கும் சசிகலா #VikatanExclusive


Recommended Posts

“நம்பி மோசம் போய்விட்டேன்!” - கொந்தளிக்கும் சசிகலா #VikatanExclusive

 
 

சசிகலா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, சசிகலா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தற்போது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர்மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். சசிகலாவின் பதவி விவகாரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் இருக்கும்நிலையில், அவசரகதியில் சசிகலாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் முக்கியக் காரணமாக இருந்தாலும், அதற்குப் பின்னணியில் கொங்கு மண்டல டீம் உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கொங்கு மண்டலம்தான் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்குக் கைகொடுத்தது. இதனால், கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கொடுத்தார் ஜெயலலிதா. இதனால், அ.தி.மு.க.வில் கொங்கு மண்டலத்தின் பலம் அதிகரித்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சசிகலா விரும்பவில்லை. சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க. இரண்டு அணிகளானது. ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த நெருக்கடிகளைச் சமாளித்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. ஜெயலலிதாவுடனே இருந்ததால், அ.தி.மு.க நிர்வாகிகளின் மறுபக்கங்கள் சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும். மேலும், அவர்மூலம் அமைச்சர்களானவர்கள், கட்சியில் பதவி பெற்றவர்கள் பட்டியலும் அதிகம். இதனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாமீதும் அதே பயம் கட்சியினருக்கு இருந்தது. இதனால்தான், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், சசிகலாவின் விதி, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலா குடும்பத்தினருக்கு விசுவாசமாகவே இருந்தார். இதனால்தான், சசிகலாவால் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் வேட்பாளராக நிறுத்தியதோடு, அவருக்காகத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடும் மோதல் நிலவியது. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார். 'இரட்டை இலை' சின்னத்துக்கு, தினகரனும் மதுசூதனனும் உரிமை கோரியதால், தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. மேலும், அ.தி.மு.க பெயரைப் பயன்படுத்தத் தடை விதித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சி தலைவி அ.தி.மு.க அணி என்றும் சசிகலாவுக்கு அ.தி.மு.க அம்மா அணி என்றும் பெயர் சூட்டியதோடு, மின்கம்பம், தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்த போட்டியால், தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன் மனம் மாறினார். சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து ஓரம் கட்ட தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்திடம் அஃபிடவிட் தாக்கல்செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட  அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் மனம் மாறியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட முடிவெடுத்து, சசிகலாவையும் தினகரனையும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அவர்களுக்கு தினகரன், திவாகரன் பதிலடி கொடுத்தாலும், சிறையிலிருக்கும் சசிகலா அமைதியாகவே இருந்தார். தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்தபோதுகூட சிறையில் அமைதியாகவே இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினகரன்

தற்போது, தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தகவல் சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியபோது, அவர் தினகரன்மீது கோபமடைந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சிப் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, சசிகலாவை நேற்று தினகரன் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் சந்திக்க முடிவுசெய்திருந்தனர். ஆனால், அவர்களைச் சந்திக்க சசிகலா விரும்பவில்லையாம். அந்தளவுக்குத் தினகரன்மீது சசிகலா சீற்றத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் ஆதரவாளர்கள், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க-வின் ஆதரவோடு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார். அந்தச் சமயத்தில், தன்னுடைய அரசியல் சாணக்கியத்தால் ஆட்சியைக் கவிழவிடாமல் காப்பாற்றினார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்ற பிறகு, கட்சிப் பொறுப்பு, தினகரனிடமும் ஆட்சிப் பொறுப்பு, எடப்பாடி பழனிசாமியிடமும் கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தினகரனிடமிருந்து கட்சியைக் கைப்பற்றிவிட்டனர். தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர்.

சின்னத்தையும், கட்சிப் பெயரையும் பயன்படுத்தத் தடை விதிக்கக் காரணமான ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியைக் காப்பாற்றியிருக்கிறார். சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கவும், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கவும் தர்மயுத்தத்தை நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியை, ஊழல் ஆட்சி என்று விமர்சித்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்திடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் டெல்லி மேலிடம் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துவிட்டனர். பேசியபடி ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவியும், கட்சியிலும் அமைச்சரவையிலும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியிலிருந்து மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக நடப்பதாக மேடையில் பேசுகிறார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல டீம், சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம்செய்துவிட்டனர். அவர்களைச் சிக்க வைக்க எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. அதை வெளியிட்டால், இந்த ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும். மேலும், தினகரனால் 18 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளன. இதனால், தினகரன்மீது சசிகலா கோபத்திலிருக்கிறார். இதனால்தான் தினகரனை சசிகலா நேற்று சந்திக்கவில்லை" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/102896-sasikala-accused-ttv-dinakaran-for-betrayal.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.