Jump to content

எனது சிறு பயணமொன்று..... லிடோ டி ஜேசலோ(இத்தாலி)


Athavan CH

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 24.10.2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump இரண்டாவது மனைவி (துணைவியார்) சிறியர்

அது சரி ரம்புக்கு எத்தனை மனைவியர்?  :grin:
(எதுக்கும் கேட்டு வைப்பம் பிறகு பிரயோசனப்படும்)

Link to comment
Share on other sites

பதிவு நன்றக உள்ளது. நல்ல எழுத்து நடையும் அழகிய படங்களும் சிறப்பு. நீங்கள் பயணப்பட்ட இடங்களுக்கு போக வேண்டும் போல் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2017 at 4:24 AM, Athavan CH said:

 

Toskana

Tuscany-landscape.jpg

 

மிக ரம்யமான இடங்கள்..! tw_thumbsup:

On 10/24/2017 at 4:34 AM, Athavan CH said:

7-day-trips.jpg

 

பகிர்விற்கு நன்றி!

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 5:14 AM, தமிழ் சிறி said:

கட்டுரையாளர் தனது பயணத்தை விபரிக்க விதம்.....  கட்டுரையை  சோர்வு இல்லாமல் வாசிக்கத்  தூண்டுகின்றது.
பகிர்விற்கு... நன்றி ஆதவன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் சிறி, இறுதியில் ஒருவாறு என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்.

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 6:02 AM, nunavilan said:

ஐரோப்பாவின் அழகை சில வேளைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.ஆதவன் முயற்சி செய்துள்ளார். தொடருங்கள். வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 11:30 PM, suvy said:

பயணக் கட்டுரையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கு ஆதவன், படங்களும் பிரமாதம் தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/7/2017 at 8:34 PM, suvy said:

வாவ்.....நல்ல நகைச்சுவையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் இயல்பு மாறாமல்.தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/25/2017 at 6:36 PM, suvy said:

உங்களின் பயண அனுபவங்களுடன் மேலும் சிலரின் குறிப்புகளையும் சேர்த்து தந்தது பயனுள்ளதாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி ஆதவன்......!  tw_blush:

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி அண்ணா, நான் ஒவ்வொரு பகுதி எழுதியதும் , அதற்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தினைத் தந்தன.

நான் எனது பயணத்தினை முடித்து வந்த பின்னர் எனது நண்பர் ஒருவர் தனது பயணத்தினைப் பற்றி கூறினார் , அவர் சுவிசிலிருந்து இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவா (Genoa) (அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சொந்த ஊர்) சென்று பின்னர் மொனாக்கோ(Monaco), நைஸ் (Nice /Nizza) , கான்ஸ் (Cannes) எல்லாம் சென்று வந்தார் , மிகவும் நல்ல பயணம் எனக் கூறினார் , மொனாக்கோவில்  நல்லதொரு யாழ் உணவகம் ஒன்று தாயகம் எனும் பெயருடன் இயங்குவதாக குறிப்பிட்டார் , (உணவகத்தினுள் பெரிய தேசியத் தலைவரின் படம் ஒன்று இருந்ததாகவும் குறிபிட்டிருந்தார்) அடுத்த வருடம் வேறு பயணங்கள் எதுவும் போகாவிடில், நண்பனின் பயணப்பாதையில் பயணிப்பதாக  உத்தேசம் , நீங்கள் பாரிசிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக  எங்கோ குறிப்பிட்ட நினைவு, நீங்கள் நான் வரும் பக்கம் இருந்தால் தயாராக இருங்கள் ஒரு கோப்பியாவது சேர்ந்து குடிப்போம் .

தாயகம் உணவகத்தினைப் பற்றி இணையத்தில் தேடினேன் , நல்லா எழுதியிருக்கிறார்கள்

https://www.tripadvisor.com/ShowUserReviews-g1096027-d2261098-r179509236-Thayagam-Beausoleil_French_Riviera_Cote_d_Azur_Provence_Alpes_Cote_d_Azur.html

 

On 9/26/2017 at 1:24 AM, யாயினி said:

பகிர்வுக்கு நன்றி ..தொடருங்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

On 9/26/2017 at 3:09 PM, தனிக்காட்டு ராஜா said:

தொடரட்டும் ஆதவன் அட சின்ன வயசுக்காரராயா நீங்கள்  ஹாஹா:unsure:

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா  பெரிதாக ஒன்றும் சின்ன வயதில்லை எனது profile இல் சரியான வயதினேயே குறிப்பிட்டுள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

 

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

 

ம்ம்ம்..??sorry.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதவன் 
மிகவும் ரசிக்கக்கூடிய உரை நடையில் சின்ன சின்ன விடயங்களையும் அழகுற எழுதியிருக்கிறீர்கள்!!
படங்கள் மிகவும் அருமை. படங்களோடு படங்களாக அப்படியே உங்கள் உங்கள் குடும்ப Selfi இணைத்துவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையின் முதல் பகுதி மட்டுமே வாசித்துவிட்டு மேலே இருந்த குறிப்பை எழுதியிருந்தேன்.
மொத்த கட்டுரையும் பிரம்மாதம் ஆதவன். 
நிறைய பயனுள்ள தகவல்களோடு கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிட்கின்றது.
உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து ..உங்கள் பக்கத்துக்கு சீட்டில் இருந்து பயணம் செய்த அனுபவம் எனக்கு!! 

ஜெசெலோ , மிலான் , லுபியானா என 
வாயிட்குள் புகாத பெயர் கொண்ட ஊர்களில்
உயிருக்குள் புகும் எங்கள் இசைஞானி இசை.

பயணக்கட்டுரை எழுதாவிட்டாலும் உங்கள் வாராந்த "குரோசரி" மளிகைக்கடை அனுபவங்களையாவது எழுதுங்கள்.
உங்கள் அடுத்தவருட பயணக்கட்டுரை வரும் வரை பொறுத்திருப்பது கடினம்.

சிறு குறிப்பு : படத்தில் இருந்த அழகிய பெண் 
Ivanka Trump "இவான்கா" ட்ரம்பின் மகள். 
முதல் மனைவியின் பெயர் Ivana "இவானா".  Ivana + Trump = Ivanka Trump (ட்ரம்பின் 'விதை' நெல்லில் வளர்ந்த நல்லதொரு அறுவடை ) tw_wink:

Link to comment
Share on other sites

On 10/24/2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump

தவறான தகவலுக்கு மன்னிக்கவும்  Ivanka Trump  அமெரிக்க அதிபரின் முதல் மனைவியின் மகளாவார், தவறைச் சுட்டிக்காட்டிய சசிவர்ணத்திற்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

On 9/26/2017 at 11:27 PM, Kavallur Kanmani said:

ஆதவனின் பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. படங்களும் மிக அழகு. தொடருங்கள்

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கண்மனி அக்கா.

 

On 9/28/2017 at 2:41 PM, ஈழப்பிரியன் said:

ஆதவன் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங:களுடன் சேர்ந்து பயணம் செய்த மாதிரியே இருக்கிறது.

அது சரி வாகனத்தை ஓட்டிக் கொண்டு எப்படி படங்கள் எடுத்தீர்கள்?

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஈழப்பிரியன்,படமெல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை, படமெடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஈழப்பிரியன்.

 

On 9/29/2017 at 4:32 AM, ராசவன்னியன் said:

 

இயற்கைக்கு சவாலான உயரமான மலைகளைக் குடைந்து, இந்தக் குகை அமைந்தவிதம் பற்றி சில தடவை யூ டுயூபில் பார்த்து ரசித்துள்ளேன்..

பல தொழிற்நுட்ப பணியாளர்களின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.. !

you-did-it-congratulations.png?w=820&h=3

மிக ரம்மியமான, மனதை கொள்ளை கொள்ளும் அழகு..! படங்களுக்கு நன்றி..!!

ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தை முதல் பத்து நிமிடங்களிலேயே கணித்து விடலாம்.. நமது மனதிலும் முத்திரை பதித்துவிடும்..

படங்களின் அழகிற்கு இணையாக ஆதவனின் திறமையான எழுத்து நடையும் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க எதிர்பார்ப்பை தூண்டுகிறது..

 

உங்கள் பின்னூட்டத்திற்கும்  ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ராசவன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 11:35 PM, Athavan CH said:

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

நல்லதொரு அருமையான ஆக்கம் உங்களுடனே நாங்களும் பயணிப்பது போன்ற எழுத்துக்கள் .

உங்கள் பயண லிஸ்ட்டில்  லண்டன் :14_relaxed: இங்கு வரும் நம்ம நண்பர்கள் எல்லோரும் சொல்வது கொழும்பு கோட்டை பகுதி தெருக்கள் போன்று இருக்கிறது எண்டு அதுவும் சமர் வெயில் கொளுத்தும் காலம்களில் சொல்லவே வேண்டாம் ரியல் கொட்டேனா என்பார்கள் (சாக்கடைகள் சில இடங்களில் மணக்க தொடங்கும் ) ஆனாலும் எங்களுக்கு புகுந்த வீடு சொர்க்கம்தான் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 10/24/2017 at 2:37 AM, நிழலி said:

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி ,  சும்மா எழுத வெளிக்கிட்டது தலைப்பைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை நிழலி. தேவதை பிறந்தது மிகப் பெரிய சந்தோசம். அதை யாழில் பகிர்ந்திருக்கக் கூடிய நிலமை அப்போதிருக்கவில்லை, நெருங்கிய நண்பர்களோ , உறவினர்களோ இங்கு எனக்கு இல்லை...., மனைவி வைத்தியசாலையில், மூத்த மகள் பாடசாலை என தனியே சுற்றிச் சுழல்வதிலேயே நேரம் போய்விட்டது.  இப்ப மட்டும் என்னவாம்  கொஞ்ச நேரம் வீட்டில் சும்மா இருந்தா காணும், மனைவி குட்டி தேவதையையும் சாப்பாட்டையும்  தந்து , சாப்பாட்டை தீத்துங்கோ என விட்டு விடுவா.....,  அம்மாவிடம் எனறால் கமுக்கமா சாப்பிடுவினம் , அப்பாவிடம் என்றால் ஒரே விளையாட்டுத்தான் , எவ்வளவு தான் முகத்தை இறுக்கமாக வைத்து உறுக்கினாலும் அவர்களைப் பொறுத்தவரையில் அப்பா என்பவர் காமெடி பீஸ் தான் ஒரு பயமும் இல்லை , ஒருவாறு யூடியுப்பில் குழந்தைப் பாடல்களைப் போட்டு கஸ்ட்டப்பட்டு சாப்பாடு தீத்திக் கொண்டு இருந்தால் , மனைவி வந்து பார்த்து விட்டு  " உங்கள்ட்ட பிள்ளைக்கு சாப்பாடு தீத்த தந்தனானோ பிள்ளையிண்ட முகத்தில பெயின்ற் அடிக்க தந்தனானோ என" ஒரு நக்கல்ஸ் ஒன்று விடுவா பாருங்கோ....., ஒருவாறு கூத்தாடி , கும்மியடிச்சு சாப்பாட்டை தீத்தி முடிக்க , 7 வயது கிழவி தனது பிளேட்டை கொண்டுவருவா அப்பா எனக்கும் தீத்தி விடுங்கோ  என .....
ஏதோ நிழலி  வெண்கலக் கடையினுள் யானை புகுந்தது போல ஒரே கலகலவாக வீடும் வாழ்க்கையும் போகுது....tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.