Jump to content

எனது சிறு பயணமொன்று..... லிடோ டி ஜேசலோ(இத்தாலி)


Athavan CH

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 24.10.2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump இரண்டாவது மனைவி (துணைவியார்) சிறியர்

அது சரி ரம்புக்கு எத்தனை மனைவியர்?  :grin:
(எதுக்கும் கேட்டு வைப்பம் பிறகு பிரயோசனப்படும்)

Link to comment
Share on other sites

பதிவு நன்றக உள்ளது. நல்ல எழுத்து நடையும் அழகிய படங்களும் சிறப்பு. நீங்கள் பயணப்பட்ட இடங்களுக்கு போக வேண்டும் போல் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2017 at 4:24 AM, Athavan CH said:

 

Toskana

Tuscany-landscape.jpg

 

மிக ரம்யமான இடங்கள்..! tw_thumbsup:

On 10/24/2017 at 4:34 AM, Athavan CH said:

7-day-trips.jpg

 

பகிர்விற்கு நன்றி!

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 5:14 AM, தமிழ் சிறி said:

கட்டுரையாளர் தனது பயணத்தை விபரிக்க விதம்.....  கட்டுரையை  சோர்வு இல்லாமல் வாசிக்கத்  தூண்டுகின்றது.
பகிர்விற்கு... நன்றி ஆதவன்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தமிழ் சிறி, இறுதியில் ஒருவாறு என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்.

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 6:02 AM, nunavilan said:

ஐரோப்பாவின் அழகை சில வேளைகளில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.ஆதவன் முயற்சி செய்துள்ளார். தொடருங்கள். வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

Link to comment
Share on other sites

On 9/25/2017 at 11:30 PM, suvy said:

பயணக் கட்டுரையின் ஆரம்பமே அசத்தலாக இருக்கு ஆதவன், படங்களும் பிரமாதம் தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/7/2017 at 8:34 PM, suvy said:

வாவ்.....நல்ல நகைச்சுவையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் இயல்பு மாறாமல்.தொடருங்கள்......!  tw_blush:

 

On 10/25/2017 at 6:36 PM, suvy said:

உங்களின் பயண அனுபவங்களுடன் மேலும் சிலரின் குறிப்புகளையும் சேர்த்து தந்தது பயனுள்ளதாக இருந்தது, பகிர்வுக்கு நன்றி ஆதவன்......!  tw_blush:

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவி அண்ணா, நான் ஒவ்வொரு பகுதி எழுதியதும் , அதற்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தினைத் தந்தன.

நான் எனது பயணத்தினை முடித்து வந்த பின்னர் எனது நண்பர் ஒருவர் தனது பயணத்தினைப் பற்றி கூறினார் , அவர் சுவிசிலிருந்து இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவா (Genoa) (அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சொந்த ஊர்) சென்று பின்னர் மொனாக்கோ(Monaco), நைஸ் (Nice /Nizza) , கான்ஸ் (Cannes) எல்லாம் சென்று வந்தார் , மிகவும் நல்ல பயணம் எனக் கூறினார் , மொனாக்கோவில்  நல்லதொரு யாழ் உணவகம் ஒன்று தாயகம் எனும் பெயருடன் இயங்குவதாக குறிப்பிட்டார் , (உணவகத்தினுள் பெரிய தேசியத் தலைவரின் படம் ஒன்று இருந்ததாகவும் குறிபிட்டிருந்தார்) அடுத்த வருடம் வேறு பயணங்கள் எதுவும் போகாவிடில், நண்பனின் பயணப்பாதையில் பயணிப்பதாக  உத்தேசம் , நீங்கள் பாரிசிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாக  எங்கோ குறிப்பிட்ட நினைவு, நீங்கள் நான் வரும் பக்கம் இருந்தால் தயாராக இருங்கள் ஒரு கோப்பியாவது சேர்ந்து குடிப்போம் .

தாயகம் உணவகத்தினைப் பற்றி இணையத்தில் தேடினேன் , நல்லா எழுதியிருக்கிறார்கள்

https://www.tripadvisor.com/ShowUserReviews-g1096027-d2261098-r179509236-Thayagam-Beausoleil_French_Riviera_Cote_d_Azur_Provence_Alpes_Cote_d_Azur.html

 

On 9/26/2017 at 1:24 AM, யாயினி said:

பகிர்வுக்கு நன்றி ..தொடருங்கள்.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

On 9/26/2017 at 3:09 PM, தனிக்காட்டு ராஜா said:

தொடரட்டும் ஆதவன் அட சின்ன வயசுக்காரராயா நீங்கள்  ஹாஹா:unsure:

 

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தனிக்காட்டு ராஜா  பெரிதாக ஒன்றும் சின்ன வயதில்லை எனது profile இல் சரியான வயதினேயே குறிப்பிட்டுள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

 

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யாயினி ( ஒருவாறு பகலவனை எடிட் செய்து ஆதவன் என மாற்றி விட்டீர்கள்)

 

ம்ம்ம்..??sorry.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதவன் 
மிகவும் ரசிக்கக்கூடிய உரை நடையில் சின்ன சின்ன விடயங்களையும் அழகுற எழுதியிருக்கிறீர்கள்!!
படங்கள் மிகவும் அருமை. படங்களோடு படங்களாக அப்படியே உங்கள் உங்கள் குடும்ப Selfi இணைத்துவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கட்டுரையின் முதல் பகுதி மட்டுமே வாசித்துவிட்டு மேலே இருந்த குறிப்பை எழுதியிருந்தேன்.
மொத்த கட்டுரையும் பிரம்மாதம் ஆதவன். 
நிறைய பயனுள்ள தகவல்களோடு கட்டாயம் போய்  பார்க்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிட்கின்றது.
உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து ..உங்கள் பக்கத்துக்கு சீட்டில் இருந்து பயணம் செய்த அனுபவம் எனக்கு!! 

ஜெசெலோ , மிலான் , லுபியானா என 
வாயிட்குள் புகாத பெயர் கொண்ட ஊர்களில்
உயிருக்குள் புகும் எங்கள் இசைஞானி இசை.

பயணக்கட்டுரை எழுதாவிட்டாலும் உங்கள் வாராந்த "குரோசரி" மளிகைக்கடை அனுபவங்களையாவது எழுதுங்கள்.
உங்கள் அடுத்தவருட பயணக்கட்டுரை வரும் வரை பொறுத்திருப்பது கடினம்.

சிறு குறிப்பு : படத்தில் இருந்த அழகிய பெண் 
Ivanka Trump "இவான்கா" ட்ரம்பின் மகள். 
முதல் மனைவியின் பெயர் Ivana "இவானா".  Ivana + Trump = Ivanka Trump (ட்ரம்பின் 'விதை' நெல்லில் வளர்ந்த நல்லதொரு அறுவடை ) tw_wink:

Link to comment
Share on other sites

On 10/24/2017 at 10:39 AM, Athavan CH said:

ivanka16-49567.jpg

  Ivanka Trump

தவறான தகவலுக்கு மன்னிக்கவும்  Ivanka Trump  அமெரிக்க அதிபரின் முதல் மனைவியின் மகளாவார், தவறைச் சுட்டிக்காட்டிய சசிவர்ணத்திற்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

On 9/26/2017 at 11:27 PM, Kavallur Kanmani said:

ஆதவனின் பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. படங்களும் மிக அழகு. தொடருங்கள்

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கண்மனி அக்கா.

 

On 9/28/2017 at 2:41 PM, ஈழப்பிரியன் said:

ஆதவன் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் உங:களுடன் சேர்ந்து பயணம் செய்த மாதிரியே இருக்கிறது.

அது சரி வாகனத்தை ஓட்டிக் கொண்டு எப்படி படங்கள் எடுத்தீர்கள்?

உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஈழப்பிரியன்,படமெல்லாம் இணையத்தில் பெறப்பட்டவை, படமெடுப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை ஈழப்பிரியன்.

 

On 9/29/2017 at 4:32 AM, ராசவன்னியன் said:

 

இயற்கைக்கு சவாலான உயரமான மலைகளைக் குடைந்து, இந்தக் குகை அமைந்தவிதம் பற்றி சில தடவை யூ டுயூபில் பார்த்து ரசித்துள்ளேன்..

பல தொழிற்நுட்ப பணியாளர்களின் கடின உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு பாராட்டுக்கள்.. !

you-did-it-congratulations.png?w=820&h=3

மிக ரம்மியமான, மனதை கொள்ளை கொள்ளும் அழகு..! படங்களுக்கு நன்றி..!!

ஒரு திரைப்படத்தின் சுவாரசியத்தை முதல் பத்து நிமிடங்களிலேயே கணித்து விடலாம்.. நமது மனதிலும் முத்திரை பதித்துவிடும்..

படங்களின் அழகிற்கு இணையாக ஆதவனின் திறமையான எழுத்து நடையும் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க எதிர்பார்ப்பை தூண்டுகிறது..

 

உங்கள் பின்னூட்டத்திற்கும்  ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ராசவன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 11:35 PM, Athavan CH said:

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நுணா , உண்மை தான் நுணா ஐரோப்பா மிகவும் அழகானது , ஐரோப்பா கண்டம் வட அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகச் சிறிய கண்டம் , பல் நாட்டு பல மொழி கலாச்சாரத்தினைக் கொண்டது.பல நாடுகள் , சிறிய சிறிய நாடுகள் , பல சிறிய , நடுத்தர , பெரிய நகரங்கள் ...., இயற்கை எழில் என ஒரு பூலோக சொர்க்கம் . உலகிலேயே அதிகளவு சுற்றுலா பிரயாணிகள் செல்லும் நாடான பிரான்ஸை தன்னகத்தே கொண்டது , எனக்கு ஐரோப்பாவில் மிகவும் பிடித்த விடயங்களிலொன்று  அதன் நகரங்கள் தான் , ஒவ்வொரு long weekend க்கும் ஒவ்வொரு நகரங்களுக்கு போய் வரலாம்  மிகக் குறைந்த விலையில் இப்போது விமான பயணங்களும் சாத்தியம்,  மிகச்சிறந்த புகையிரத இணைப்புச் சேவைகளும் உள்ளன , இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கார் . booking.கொம் இல் ஒரு குறைந்த விலை hotel  ஐ புக் பண்ணிவிட்டு வெளிக்கிட வேண்டியது தான்.எனது வேலைத்தள நண்பர்கள் தமது அனுபவத்தில் கட்டாயம் போக வேண்டிய நகரங்கள் என எனக்கு சிபார்சு செய்த நகரங்களே ஒரு இருபைந்தைத் தாண்டும் அவற்றில் சில....

London ,Paris, Amsterdam, Barcelona, Rome, Vienna, Madrid, Seville, Berlin, Valencia, Munich, Nürnberg, Prag, Budapest, Dresden , stockholm, Venice, Florence, Naples,  Bordeaux, Nice, Monaco , Edinburgh ,  Innsbruck , Salzburg , st petersburg.....

 

 

 

நல்லதொரு அருமையான ஆக்கம் உங்களுடனே நாங்களும் பயணிப்பது போன்ற எழுத்துக்கள் .

உங்கள் பயண லிஸ்ட்டில்  லண்டன் :14_relaxed: இங்கு வரும் நம்ம நண்பர்கள் எல்லோரும் சொல்வது கொழும்பு கோட்டை பகுதி தெருக்கள் போன்று இருக்கிறது எண்டு அதுவும் சமர் வெயில் கொளுத்தும் காலம்களில் சொல்லவே வேண்டாம் ரியல் கொட்டேனா என்பார்கள் (சாக்கடைகள் சில இடங்களில் மணக்க தொடங்கும் ) ஆனாலும் எங்களுக்கு புகுந்த வீடு சொர்க்கம்தான் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 10/24/2017 at 2:37 AM, நிழலி said:

நான் ஒவ்வொரு தடவையும் இந்த திரியின் தலைப்பை வாசித்து வீட்டு இது இன்னொரு தளத்தில் இருந்து வெட்டி எடுத்த கட்டுரை என நினைத்து வாசிக்காமல் கடந்து சென்று இருந்தேன். இப்ப தான் ஆதவன் எழுதும் பயண கட்டுரை என கண்டு கொண்டேன்

புதிதாக எழுதும் ஒருவரின் கட்டுரை மாதிரி தெரியவில்லை. தொடருங்கள் ஆதவன்

மற்றது, போன வருசம் சிங்கன் தனக்கு ஒரு தேவதை பிறந்தது பற்றி மூச்சே காட்டாமல் இருந்து இருக்கின்றார். பெண் பிள்ளைகள் இயற்கை அப்பாக்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்கள்  ஆதவன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நிழலி ,  சும்மா எழுத வெளிக்கிட்டது தலைப்பைப் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை நிழலி. தேவதை பிறந்தது மிகப் பெரிய சந்தோசம். அதை யாழில் பகிர்ந்திருக்கக் கூடிய நிலமை அப்போதிருக்கவில்லை, நெருங்கிய நண்பர்களோ , உறவினர்களோ இங்கு எனக்கு இல்லை...., மனைவி வைத்தியசாலையில், மூத்த மகள் பாடசாலை என தனியே சுற்றிச் சுழல்வதிலேயே நேரம் போய்விட்டது.  இப்ப மட்டும் என்னவாம்  கொஞ்ச நேரம் வீட்டில் சும்மா இருந்தா காணும், மனைவி குட்டி தேவதையையும் சாப்பாட்டையும்  தந்து , சாப்பாட்டை தீத்துங்கோ என விட்டு விடுவா.....,  அம்மாவிடம் எனறால் கமுக்கமா சாப்பிடுவினம் , அப்பாவிடம் என்றால் ஒரே விளையாட்டுத்தான் , எவ்வளவு தான் முகத்தை இறுக்கமாக வைத்து உறுக்கினாலும் அவர்களைப் பொறுத்தவரையில் அப்பா என்பவர் காமெடி பீஸ் தான் ஒரு பயமும் இல்லை , ஒருவாறு யூடியுப்பில் குழந்தைப் பாடல்களைப் போட்டு கஸ்ட்டப்பட்டு சாப்பாடு தீத்திக் கொண்டு இருந்தால் , மனைவி வந்து பார்த்து விட்டு  " உங்கள்ட்ட பிள்ளைக்கு சாப்பாடு தீத்த தந்தனானோ பிள்ளையிண்ட முகத்தில பெயின்ற் அடிக்க தந்தனானோ என" ஒரு நக்கல்ஸ் ஒன்று விடுவா பாருங்கோ....., ஒருவாறு கூத்தாடி , கும்மியடிச்சு சாப்பாட்டை தீத்தி முடிக்க , 7 வயது கிழவி தனது பிளேட்டை கொண்டுவருவா அப்பா எனக்கும் தீத்தி விடுங்கோ  என .....
ஏதோ நிழலி  வெண்கலக் கடையினுள் யானை புகுந்தது போல ஒரே கலகலவாக வீடும் வாழ்க்கையும் போகுது....tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.