Jump to content

அமெரிக்கா- இலங்கை இராணுவ உடன்படிக்கை


Recommended Posts

06 - March - 2007

அமெரிக்காவும் இலங்கையும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை 10 ஆண்டு காலப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற இந்த உடன்படிக்கையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளாக்கும்

நேற்று கைச்சாத்திட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விநியோகம், ஆதரவு, எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பரம் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைத்திருப்பதாகவும் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரணம் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகள் என்பவற்றுக்கு ஒவ்வொரு நாட்டினதும் படைகளும் மற்றைய நாட்டுக்கு உதவ வேண்டிய தேவைகளை இந்த உடன்படிக்கை குறைக்கும். ஏனெனில், பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலம் இருதரப்பினரதும் குறிப்பிடப்பட்ட தேவைகளை குறைத்துக் கொள்ள முடியும்.

இதேவேளை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த ஒப்பந்தமானது நேற்றே செய்யப்பட்டுள்ளது. தாமதத்துக்கான காரணம் தெரியவில்லையெனினும் தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் புலிகளை அக்டோபர் 1997 முதல் நாடுகடத்துவதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை கொழும்பு மேற்கொள்ளுமாறு வாஷிங்டன் தற்போது வலியுறுத்துகின்றது.

http://www.thinakkural.com/news/2007/3/6/i...s_page22752.htm

Link to comment
Share on other sites

பொருட்கள் சேவைகள் மற்றும் படைக்கல விநியோகம்தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கிடையில் ஒப்பந்தம்

இலங்கையும் அமெரிக்காவும் பொருட்கள் சேவைகள் மற்றும் படைக்கல விநியோகம் தொடர்பான ஒப்பந்தமொன்றினை செய்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் பிளேக்கும் நேற்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தின்மூலம் இருநாடுகளும் அமைதிகாக்கும் பணி மனிதாபிமான நடவடிக்கைகள் கூட்டுப்பயிற்சிகள் போன்றவற்றின்போது பொருட்கள் சேவைகள் படைக்கலங்கள் போன்றவற்றை பரஸ்பரம் பரிமாற்றிக்கொள்ள முடிவதோடு மீள் எரிபொருள் நிரப்பு சேவைகளையும் இருதரப்பும் பரிமாற்றிக்கொள்ளலாம்.,

அமெரிக்கா இதேபோன்ற ஒப்பந்தத்தை உலகின் 89 நாடுகளுடன் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,

இவ்வொப்பந்தமானது உணவு பெற்றோலியம் போன்ற பொருட்களையும் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளையுமே பரிமாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றது. அதேவேளை ஆயுதங்களையும் வெடிபொருடகளையும் பரிமாற்றிக்கொள்வதற்கு இவ்வொப்பந்தம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,

மேலும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப்பணிகள் அமைதிகாக்கும் பணி போன்ற வேளைகளில் படையினரின் உதவிகளை வழங்குவதற்கும் தேவையான விநியோகங்ளை மேற்கொள்வதற்கும் இவ்வொப்பந்தம் வழிசெய்கின்றது. ,

பத்து வருடங்களுக்கு வலிதான இவ்வொப்பந்தத்தின் கீழ் விநியோகத்தை பெற்ற தரப்பு வழங்கிய தரப்பின் அனுமதியின்றி அவற்றை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்த முடியாது. அத்தோடு இவ்வொப்பந்தத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் செய்யப்படுவதற்கு முன்னர் இருதரப்பும் அதுதொடர்பான இணக்கப்பாட்டை கண்டிருக்கவேண்டும். ஒப்பந்தம் குறித்து கருத்துத்தெரிவித்த அமெரிக்க தூதுவர் றொபட் பிளேக் இவ் ஒப்பந்தத்தின் மூலம் இலகு ரக உபகரணங்களை பரிமாற்றிக் கொள்வதற்கு முடிவதோடு இருநாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதும் அதிகரிக்கும். உதாரணமாக பாகிஸ்தானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் ஈடுபட இலங்கை இராணுவத்தை அனுப்புகிறது. அங்கு கடும் பனிகாலம் நிலவுகிறது.எனவே இலங்கை துருப்புகளுக்கான குளிருக்கான உடையை அமெரிக்கா விநிகோகிக்கும். அதற்கு பதிலாக கொழும்பு துறைமுகத்தக்கு செல்லும் அமெரிக்க கப்பலுக்கான எரிபொருளை இலங்கை வழங்கும். இவ்வொப்பந்தமானது இருநாடுகளுக்ககும் நன்மை பயக்கும் என தெரிவித்தார்.,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.