Jump to content

ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள் தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை


Recommended Posts

ரோஹிங்யா மக்­களை வடக்கில் தங்க வைக்க அனு­மதி தாருங்கள்

sivaji-P27-4ad82dbd8ce8e21c1f8a9ba87842a8ac1ed0db6f.jpg

 

தேவை­யான உத­வி­களை செய்­கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை  

(எம்.நியூட்டன்)

ரோஹிங்யா மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­ வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண  சபை வழங்கும் என்று வடக்­கு­ மா­காணசபையில் நேற்று தெரி­விக்­கப்­பட்­ட­துடன்  அது தொடர்  பில் வேண்­டு­கோளும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

வடக்­கு­ மா­கா­ண­ச­பையின் 106 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத்­த­லைவர் சி.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நேற்று நடை­பெற்­றது.  இதன்­போது வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் எம்.கே சிவா­ஜி­லிங்கம் உரை­யாற்­று­கையில்   மியன்­மா­ரி­லி­ருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் இலங்கைக் கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­த­போது கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு மல்­லாகம் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் கல்­கிசைப் பொலிஸ் பிரிவில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஒரு சில இன­வாத பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் அவர்­களை நாடு கடத்­து­மாறு கோரி துவே­ச­மாக நடந்­து­கொண்­டனர். இந்­நி­லையில் அந்த அக­திகள் தற்­ச­மயம் பூசாவில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  

பாது­காப்­புத்­தேடி வந்த இவர்கள் விட­யத்தில் குறித்த குழு­வினர் நடந்­து­கொண்­ட­விதம் கண்­டிக்கத் தக்­கது. குறித்த மக்கள் மீதான இனப்­ப­டு­கொலை நிறுத்­தப்­பட வேண்டும். அந்த மக்­களை இலங்கை அர­சாங்கம் வடக்கு மாகா­ணத்­திற்கு உட்­பட்ட பகு­தியில் தங்­க­வைப்­ப­தற்­காக அனு­மதி வழங்­கு­மானால் அவர்­க­ளுக்குத் தேவை­யான உத­வி­களை வட­மா­கா­ண­சபை வழங்கும். இம் மக்கள் மீதான இன­வாதம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். அத்துடன் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்தார். இக் கோரிக்கையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-29#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லல் படுத்தியவர்களுக்கு அகதிகளின் அவலம் புரியாது. அல்லல் பட்டவர்களுக்கு அந்த அவலம் புரியும். அவர்களுக்கு தேவை அடைக்கலம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ஆகாசத்தில் ..............................இந்த பழமொழி தான் நினவு வருது அண்ணையின் மச்சான் எனும் ஒரே பிடியை வச்சுக்கொண்டு இந்த ராசா கோமாளி ஆடும் கோமாளி ஆடும் ஆட்டம் கொஞ்ச நல்ல மல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

Link to comment
Share on other sites

தமிழர்களை எப்படி விமர்ச்சனம் செய்தாலும் அவர்களிடம் நல்ல பண்புகள் இருப்பது வெளிப்படை. தான் அழிந்தாலும் பிறரை வாழவைக்கவே கரும்புலிகள் தோன்றினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ஆகாசத்தில் ..............................இந்த பழமொழி தான் நினவு வருது அண்ணையின் மச்சான் எனும் ஒரே பிடியை வச்சுக்கொண்டு இந்த ராசா கோமாளி ஆடும் கோமாளி ஆடும் ஆட்டம் கொஞ்ச நல்ல மல்ல .

 

3 hours ago, vanangaamudi said:

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

அருமையான கருத்துக்கள்.  நன்றி பெருமாள் & வணங்காமுடி. 
சிவாஜிலிங்கம்... தேசியத் தலைவரின் மச்சான் என்று,  இன்றுதான் அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அருமையான கருத்துக்கள்.  நன்றி பெருமாள் & வணங்காமுடி. 
சிவாஜிலிங்கம்... தேசியத் தலைவரின் மச்சான் என்று,  இன்றுதான் அறிந்து கொண்டேன்.

சொந்தம் என்று இந்தாள் தான் பறையடிக்குது .

Link to comment
Share on other sites

இதுவரை  சிவாஜிலிங்கம் மச்சான் என்று சொன்னதில்லை.  ஊரினால் பெருமைப்ப்டுவராக இருக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்தியாவில் தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களிலிருந்து தொழிலுக்காக கொண்டுவரப்பட்டு குடியேறியவர்களும் தாமாக குடிபெயர்ந்தவர்களும் இலங்கையில் இன்றுவரை சொல்லொணா துன்பங்களை அனுபவிப்பதை காண்கிறோம். பூர்வீக குடிமக்கள் காட்டும் காழ்ப்புணர்வு தொழில் வாய்ப்பு உயர் கல்வி பிரஜாவுரிமைக்கான தடை மற்றும் நிரந்தர வாழ்வாதரங்களை அமைத்துக்கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்பவற்றை குறிப்பிடலாம். நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அரசுகள் குடியேற்றவாசிகளை உள்ளுர்வாசிகளுடன் இணைத்து உள்வாங்குவதையே விரும்புகிறார்கள். தனியான கட்டமைப்புகளை உருவாக்கி தமது பட்ஜட்டில் கணிசமான தொகையை இதற்காக செலவிடுகிறார்கள். ஆசிய இனத்தவரின் குறிப்பாக தமிழரின் வாழ்க்கைமுறை இதற்கு முற்றிலும் மாறானது.  எமது சாதிய முறையையும் சமுதாய படிமுறைகளையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.  இவை அனைத்தும் களையப்பட்டாலன்றி மாற்று இனத்தவரை தனக்குள் உள்வாங்குதலை தமிழினம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வேறு சக்திகளின் தூண்டுதலால் அல்லது தான்தோன்றித்தனமாக அரசியல் செய்யும் சில அரசியல் தொழிலாளிகளால்  அல்லது இந்தவிடயத்தில் பணம்பண்ணி செல்வந்தராக எண்ணும் சில நயவஞ்சகர்களால் அகதிகளைக்  குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்படுமானால் ஏற்கனவே பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ்மக்களை பாழும் கிணற்றில் தள்ளுவதற்கு சமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vanangaamudi said:

ரோஹிங்யா அகதிகளின் அவலம் புரிகிறது. ஆயினும் வடக்கில் எத்தனையோ தமிழர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் இந்நிலையில் வடமாகாணசபை அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரபலமற்ற அமைப்பாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிவாஜிலிங்கம் வேண்டுமானால் அவரின் வீட்டில் வைத்து அவரின் விருந்தினர்களை உபசரிக்கலாம். வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். வெளிநாட்டு அகதிகளை பராமரிப்பதற்கு எத்தனையோ செல்வந்த நாடுகள் இருக்கின்றன. உலகளவில் அதற்கான சர்வதேச கட்டமைப்புகளும் உள்ளன. அகதிகளை வடபகுதியில் தங்கவைப்பது என்பதை அவ்வளவு சுருக்கமாக சொல்லி முடித்துவிடமுடியாது. அதற்கான உதவிகளை வடமாகாண சபை செய்யும் என்பது சிரிப்புக்கிடம். அறிவேயில்லாத தமிழ் அரசியல்வாதிகள். சிங்களப் பகுதியில் குடியமர்த்த சிங்களமக்களுக்கு மத்தியில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளதை  வைத்து சிவாஜிலிங்கம் எந்தவித சமிக்ஜையையும் புரிந்து கொள்ளவில்லை போல் உள்ளது.

அதே தான். தான் போக காணேலை மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். எண்டதுபோலதான் இவரின் கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழே ரோஹிங்யா முஸ்லிம்களின் இந்துகளை நோக்கிய கோரமுகம் ஏன் இவர்களால் பாகிஸ்த்தானிலும்,வங்காளமும் ஏற்க்க மறுக்கின்றன ?

https://www.japantimes.co.jp/news/2017/09/26/asia-pacific/myanmar-officials-say-muslim-rohingya-insurgents-killed-least-45-hindu-villagers/#.Wc9pKjPyBXg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுகளுக்கும்  வெளிநாட்டு சக்திகளுக்கும் சோரம்போன  அரசியல்வாதிகளை தமிழினம்  காலங்காலமாக கண்டுதான் வந்துள்ளது. முக்கிய காலகட்டங்களில் தமிழரின் காலை வாரிவிடுவதும் நம்பிக்கைத்துரோகம் செய்வதும் இந்த அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அரசியலில் தூரநோக்கற்ற தன்மை, தான்தோன்றித்தனம், சுயநலம் என்பன இவர்களின் அடையாளம். அரசியல்வாதிகளாக இருந்து மக்களுக்கு சேவையாற்றுவதற்குப்பதிலாக  சம்பளத்துக்கு வேலைசெய்யும் அரசியல்தொழிலாளர்களாக தமது சீவனத்தை ஓட்டுபவர்கள். வெளிநாட்டு அகதிகள் விடயத்தில் அதன் உண்மையான பரிமாணத்தை அதன்தாக்கங்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு உசிதமான நடவடிக்கை எடுப்பதுதான் தமிழினத்திற்கு இவர்கள் செய்யக்கூடிய நன்மையாகும். அதைவிடுத்து வெளிநாட்டு அரசுகளுக்கும் இஸ்தாபனங்களுக்கும் ஒற்றர்வேலை பார்ப்பதும் அல்லது ஊதுகுழலாக வேலை செய்வதும் இவர்களது கடமையல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறி நிற்க கெப்பு இல்லையாம் இறங்கி நில்லு ஏறி  போறன் என்று சொல்லிச்சாம் என்ற  ........... இருக்கிற மக்களை குடியமர்த்த திரணியற்றவர்கள் ரோகாங்கிய மக்களுக்கு பேசுது 

நீங்க தேவையில்லை அவங்களை காத்தான்குடிக்கு கேட்டு இருக்குறார்கள் அசரசாங்கள் கொடுத்தால் அவர்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் இங்கே குடியேற்றுவ்வார்கள்  வடமாகாணத்தில் நீங்கள் பல்டி அடிக்க தேவையில்லை 

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கம் ஒரு விகடகவி அரசியல்வாதி. அவரில் விவேகமும் இல்லாமல் இல்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Rajesh said:

சிவாஜிலிங்கம் ஒரு விகடகவி அரசியல்வாதி. அவரில் விவேகமும் இல்லாமல் இல்லை!

 

விகடகவி இன்றுதான் கேள்விபட்டன் கவி பாடுவாரோ ?

சிதம்பரா கல்லூரியில் சுவர் ஏறி குதித்து இரவு இரவாய் மரம் வெட்டி குழப்பம் விளைவித்தவர் வடமராட்சி வீதி திருத்தல் பணிக்கு வந்த நிதியை இவரும் அன்ந்தராஜாவும் கொள்ளுபட்டு அவ்வளவு நிதியும் திறைசேரிக்கு திரும்பி போக செய்தவர் எனக்கு தெரிய ஒரு விவேகமான செயற்பாட்டை இவரிடம் நான் காணவில்லை அப்படி அவர் செய்து இருந்தால் என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, பெருமாள் said:

விகடகவி இன்றுதான் கேள்விபட்டன் கவி பாடுவாரோ ?

சிதம்பரா கல்லூரியில் சுவர் ஏறி குதித்து இரவு இரவாய் மரம் வெட்டி குழப்பம் விளைவித்தவர் வடமராட்சி வீதி திருத்தல் பணிக்கு வந்த நிதியை இவரும் அன்ந்தராஜாவும் கொள்ளுபட்டு அவ்வளவு நிதியும் திறைசேரிக்கு திரும்பி போக செய்தவர் எனக்கு தெரிய ஒரு விவேகமான செயற்பாட்டை இவரிடம் நான் காணவில்லை அப்படி அவர் செய்து இருந்தால் என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

விகடகவி என்றால் கவிபாடோணும் என்றில்லை என்பது தமிழ்ப் புலவர்களுக்கு விளங்கும்.

விரைவில் முடிவை மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

விகடகவி என்றால் கவிபாடோணும் என்றில்லை என்பது தமிழ்ப் புலவர்களுக்கு விளங்கும்.

விரைவில் முடிவை மாற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்!

அப்ப நீங்கள் புலவரோ ?

முடிவை மாற்றிக்கொள்ள நான் ஒன்றும் ஜால்ரா கூட்டம் அல்ல திரு ராஜேஷ் அவர்களே .

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அப்ப நீங்கள் புலவரோ ?

அதை நீங்கள் தான் முடிவு செய்யோணும்.

3 minutes ago, பெருமாள் said:

முடிவை மாற்றிக்கொள்ள நான் ஒன்றும் ஜால்ரா கூட்டம் அல்ல திரு ராஜேஷ் அவர்களே .

11 minutes ago, பெருமாள் said:

என் முடிவை மாற்றிக்கொள்கிரன்.

சில நிமிடங்களுக்குள் திருவாளர் பெருமாளிடம் இவ்வளவு தள்ளாட்டம் ஏனோ?
திருவாளர் பெருமாள் I'm steady..., I'm steady... என்று இப்பவே சொல்லிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.

Link to comment
Share on other sites

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏறி நிற்க கெப்பு இல்லையாம் இறங்கி நில்லு ஏறி  போறன் என்று சொல்லிச்சாம் என்ற  ........... இருக்கிற மக்களை குடியமர்த்த திரணியற்றவர்கள் ரோகாங்கிய மக்களுக்கு பேசுது 

நீங்க தேவையில்லை அவங்களை காத்தான்குடிக்கு கேட்டு இருக்குறார்கள் அசரசாங்கள் கொடுத்தால் அவர்களை முஸ்லீம் அரசியல் வாதிகள் இங்கே குடியேற்றுவ்வார்கள்  வடமாகாணத்தில் நீங்கள் பல்டி அடிக்க தேவையில்லை 

நீங்கள் வேற நிலைமை தெரியாமல் கதைக்கிறியள், இப்ப இருக்கிற நிலையில் சிவாஜிலிங்கம் அவர்களை வடக்கில் குடியமர்த்த தேவையில்லை, அவர்களாகவே வந்து வடக்கில் குடியேறுவார்கள்.???

Link to comment
Share on other sites

ரோகிங்கியா முஸ்லீம்களை அரவணைத்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் முஸ்லீம்களுக்குத்தான் உண்டு. அவர்கள்தான் தங்களை தமிழராக அடையாளம் காணாது முஸ்லீம் இனமாக அடையாளம் காணுபவர்கள். அவர்களுக்கும், ரோகிங்கிய இன மக்களுக்கும் உள்ள இணைப்பு இரு தரப்பினரும் முஸ்லீம்கள்  என்பது. 

சரி, சகமனிதன் எனும் அடிப்படையில் பார்க்கலாம் என்றால் தமிழர்கள் இறந்தபோது இவர்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனும் கேள்வி எழுகிறது.

சரி, மறப்போம் மன்னிப்போம் என்று போகலாம் என்றால் இப்படியே இளித்தவாயர்களாக இருக்க வைத்துவிடுவார்களோ என்கிற குழப்பம் ஏற்படுகிறது. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Rajesh said:

அதை நீங்கள் தான் முடிவு செய்யோணும்.

சில நிமிடங்களுக்குள் திருவாளர் பெருமாளிடம் இவ்வளவு தள்ளாட்டம் ஏனோ?
திருவாளர் பெருமாள் I'm steady..., I'm steady... என்று இப்பவே சொல்லிடுவார் என்ற நம்பிக்கை உண்டு.

உங்களால் சிவாஜி லிங்கம் செய்த ஒரு நல்ல விடயம் சொல்லமுடியவில்லை என்னை மாற சொல்லி  வாழ்த்து சொல்லுகிறீர்

ஒன்றுமே செய்யாமல் குழப்பம் விளைவிப்பவருக்கு உங்களை போல் நாலு பேர் ஜால்ரா அடிப்பதால் தான் நாங்கள் இன்னும் இந்த நிலையில் இருக்கிறம் புரிந்துகொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

14 minutes ago, பெருமாள் said:

ஒன்றுமே செய்யாமல் குழப்பம் விளைவிப்பவருக்கு உங்களை போல் நாலு பேர் ஜால்ரா அடிப்பதால் தான் நாங்கள் இன்னும் இந்த நிலையில் இருக்கிறம் புரிந்துகொள்ளுங்கள் .

மொத்தத்தில் நீங்கள், உங்களைப் போன்றவர்கள் குழப்பநிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள். இது வளர்ச்சியின் முக்கியபடி.

உங்கள் குழப்பநிலைக்கு வேறொருவர் காரணமாக இருக்கிறார் என்றால் அது உங்கள் பலவீனம் தான்.
உங்கள் பலவீனங்களை திருத்த முயலுங்கள் திருவாளர் பெருமாள் அவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகிங்கா முஸ்லீம்களை பலர் கருணையுடனே கண்ணோக்குகின்றனர். நிச்சய‌மாக இவர்கள் கருணையுடன் நடத்தபட வேண்டும். 

பிரச்சினை என்னவென்றால் பல செல்வந்த முஸ்லீம் நாடுகள் உண்டு அவைகளில் ஒன்றும் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. சிரியாவில் /ஈராக்கில் /யெமானில் பல முஸ்லீகள் கொல்லப்படுகின்றார்கள். இவர்களை பற்றி இலங்கை முஸ்லீம்கள் வாய் திறப்பதில்லை. அவர்களை யஹூதிகள் என கூறி கொல்கின்றனர். 

இலங்கை முஸ்லீம்கள் ஏன் இவர்ககளுக்கா இவ்வளவு பரிதாபப்படுகின்றார்கள்? இவர்களினது மதவெறிதான் இதற்கு காரணம். 20 , 30 வருடங்களுக்கு முன்பு இருந்த முஸ்லீம்கள் போல் அல்ல. இப்போதிருக்கும் முஸ்லீம்கள் மிகவும் அடிப்படைவாதம் மிக்கவர்கள். Happy New Year என்று கூட சொல்ல மாட்டர்கள். (குறிப்பாக கிழக்கு முஸ்லீம்கள்) அல்கா கோவித்து கொள்ளுவானாம். 

இலங்கை முஸ்லீம்கள் மனிதத்திற்காக இரக்கப்படவில்லை, மதவெறியினாலேயே, அவர்களின் முஸ்லீம் உம்மத்திற்காகவே. 

இதற்கு முன் பல ரோகின்யா அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள் பலர் அகதிகளாக‌ பதிந்து அமெரிக்கா / கனடா போன்ற பல நாடுகளுக்கி சென்றுள்ளார்கள். 

இலங்கை முஸ்லீம்களின் மதவெறியினாலேயே இத்தகைய கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

மொத்தத்தில் நீங்கள், உங்களைப் போன்றவர்கள் குழப்பநிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள். இது வளர்ச்சியின் முக்கியபடி.

உங்கள் குழப்பநிலைக்கு வேறொருவர் காரணமாக இருக்கிறார் என்றால் அது உங்கள் பலவீனம் தான்.
உங்கள் பலவீனங்களை திருத்த முயலுங்கள் திருவாளர் பெருமாள் அவர்களே.

கருத்துக்கு கருத்து வைக்க தெரியாமல் ஏதோ எல்லாம் சொல்றீங்க முதலில் கருத்துக்கு பதில் கருத்து எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்க .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.