Jump to content

புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது .

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம

Link to comment
Share on other sites

சுனாமி அனர்த்தத்தின்போது செய்யப்பட்ட ஒப்பந்தம்போல் அல்ல இது. இந்த ஒப்பந்தத்தால் தமிழருக்கு எந்த லாபமும் இல்லை. எனவே இதை இரத்துச் செய்து சர்வதேசத்தின் வெறுப்பைப் பெற்றுக் கொள்ளுள சிங்களவர் முற்பட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கை பிரிப்பதற்க்கு போடப்பட்ட மணுவை ஏற்று வடக்கையும் கிழக்கையும் பிரித்தவங்கள் இப்போது சமாதான ஒப்பந்தத்தை மட்டும் ஏன் நீதி மன்றம் ஏற்க மறுத்தது??????????????????????

காரணம் வடக்கு கிழக்கின் இணைப்பில் தமிழர்க்கு நன்மை இருக்கு என்று நினைத்ததாள்!!!!!!!!!!!! ஆனால் சமாதான ஒப்பந்தத்தில் தமிழர்க்கு ஒருவிதமான நன்மையும் கிடையாது தீமைதான் கடசி மிஞ்சினது அதனால் சமாதான ஒப்பந்தத்தை வைத்தே புலிகளையும் தமிழர்களையும் ஓரம் கட்டலாம் என்ற கபடக் குணத்தில் தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பு பலமாக இருப்பதாக அவர்கள் எண்ணும் வரை உடன்படிக்கை கிழிக்கப்படாது. உடன்படிக்கையை பெயரளவில் வைத்துக் கொண்டு தமிழர்தரப்பை எல்லா வழிகளிலும் பலவீனப்படுத்துவது தான் சிங்கள தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேசச் சக்திகள் திட்டம் ஆரம்பத்தில் இருந்தே.

ரணில் மிகவும் தூரநோக்கு சிந்தனையோடு அமைதியாக கட்சி அரசியல், சுயலாபங்களிற்கு அப்பால் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டிற்காக பொளத்த பேரினவாதத்திற்காக மிகவும் சாதுரியமாக நடக்கக் கூடியவர்;. மகிந்தவிற்கும் இலக்கு விளங்கியிருக்கு ஆனால் போகும் வழியில் கொஞ்சம் அட்டகாசம் பண்ணி ஆரவாரம் பண்ணி வேறு காரியங்களை சாதித்துக் கொண்டு போகலாம் என்று நம்புகிறார் விரும்புகிறார்.

அந்த வகையில் ரணில் வந்து பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளிற்கும் மிகவும் வசதியானவர் பொருத்தமானவர். எது முக்கியமோ அவற்றில் மாத்திரம் முழுக் கவனத்தையும் கொண்டு இயங்குபவர். மகிந்த சங்கடமானவர் ஆனால் முற்றிலும் பயனற்றவர் அல்ல என்று நிரூபித்துக் கொண்டு வாறார். மகிந்த காடைத்தனமாகவும் சர்வதேச நுணுக்கங்களை உள்வாங்காது அவ்வப் போது நடந்து கொண்டாலும் பிழைகளை திருத்திக் கொள்ளும் தன்மை தெரிகிறது. கிட்ட முட்ட பிரேமதாசா மாதிரி வேகமாக வழர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த உடன்பாடு சட்டப்படியானது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

[செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:26 ஈழம்] [க.திருக்குமார்]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு சட்டபூர்வமானது எனவும், அது சிறிலங்காவின் அரசியல் யாப்பை மீறவில்லை எனவும் சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் மீது இடைக்கால தடையை கொண்டுவர வேண்டும் என இரு சிங்கள தேசியக் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் கூட்டுவைத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக கெல உறுமய போன்ற கட்சிகளே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாது என்ற வாதத்தையும் சிறீஸ்கந்தராஜா நிராகரித்துள்ளார்.

ஆனால் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவினால் செய்து கொள்ளப்பட்ட ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு கட்டுமானப் பணிகளுக்கான பொதுக்கட்டமைப்பை உயர் நீதிமன்றம் தடைசெய்திருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளுடன் உடன்பாடுகள் ஏற்படுத்தப்படுவது சட்டபூர்வமற்றது என உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை. ஆகவே போர் நிறுத்த உடன்பாடு சட்டபூர்வமானது எனவும் சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

போர் நிறுத்த உடன்பாடு போன்ற அரசாங்கத்தின் கொள்கைகளில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிபிசியின் றொனால்ட் பூர்க்கிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் போர்நிறுத்த உடன்பாடு ஒரு தவறான நடவடிக்கை என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதியாளர் சிறீஸ்கந்தராஜா அவர்களே, நீங்கள் ஓய்வில் செல்லும் நாளை பிரதம நீதியரசர் எண்ணத் தொடங்கியிருப்பார். போவதற்கு முன் மேலும் நீதியான தீர்ப்புக்களை வழங்கிவிட்டு ஓய்வெடுப்பீர்கள் என நம்புகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.