Jump to content

பத்தினிப் பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிரவில்,

என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே

நொறுங்கிப்போனது

உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.

ஒவ்வொரு நாள் காலையிலும்,

தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,

பொய்த்துக் கொண்டிருக்கிறது

மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,

உன் முகம் அடையும் பிரகாசத்தை

நம் வீட்டு படுக்கையறையில் கூட

இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,

சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,

தாண்டி

என்னிடம் பேச

விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

'அவரு', 'என் வீட்டுக்காரர்'

உன் உதடுகள்

உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு

என் பெயர்

கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.

"ம்ம்ம்........ வந்து

அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா"

தயங்கி தயங்கி

கேட்கும் ஒவ்வொரு முறையும்

உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

"வாங்க... உட்காருங்க... காஃபி சாப்பிடுங்க..."

இயந்திரத் தனமாய்

இம்மூன்றைத் தவிர வேறெதையும்

என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,

எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,

ஒருவருமே இல்லாமல்

உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே

கணவனும், புகுந்த வீடும் மட்டுமே

என்பதில் நீ வேண்டுமானால்,

பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே

அமர்ந்து பேச மறுக்கும்

ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்

உன் தந்தையின் முன்பு மட்டும்

நீ கால் மீது கால் போட்டமர்ந்து

பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே

பார்த்தோ...

கேட்டோ...

பழகியோ...

நீயும்

'வத்தக் குழம்புக்குள்'

உன் உலகை

தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,

தூணின் பின் நின்று,

நிலம் பார்த்து

பதில் சொல்லும் பழக்கம்

நம் பாட்டிகளோடு

போகட்டும்.

வந்து விடு.

கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்

காவியங்களோடு போகட்டும்.

சரி, தவறுகள் செய்யும்

சாதாரண மனுஷியாய்,

உன் வட்டத்தைத் தாண்டி

வெளியே வந்து விடு.

http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post.html

Link to comment
Share on other sites

தன்னிலும் மேலாய்

தாலியை எண்ணினாள்

கணவன் என்றதை

கண்ணிலே ஒத்தினாள்...

நயவஞ்சம் மறந்தவள்

நட்ப்புடன் நடந்தாள்

உயிரிலும் மேலாய்

உன்னையே எண்ணினாள்...

பாசத் தோடுண்ணை

பந்திக்கழைத்தாள்

இவளையா போய் - நீ

இன்றிங்கு இழித்தாய்....???

திருமணம் நடந்தால்

திருப்பங்கள் நடக்கும்

கணவன் பெயரதை

பெண்ணவள் சொல்லால்...

அத்தான் என்றுன்னை

அன்பாய் அழைப்பாள்

அவளையா போயின்று

சந்தேகப் பட்டாய்...???

''புகுந்த வீட்டுக்கு

புதுமைகள் செய்வாள்

தன்னுறவென்றவள்

தாராளம் செய்வாள்....''

அன்புக்கங்கு

அடிபணிந்திருப்பாள்

பண்பை ஒழுகியே

பக்குவம் காப்பாள்....

''படுக்கையில் வந்தவள்

படுக்கையை இடுவாள்

உனக்கு மட்டுமே

உறவுகள் தருவாள்...''

மனைவி யென்ற

மகத்துவம் செய்வாள்

விடிந்ததும் உன்னில்

விழிகளை திறப்பாள்....

ஏன் என்று கேட்டால்

என்னென்று சொல்வாள்..?

இதுவும் புரியாத

புருசன் நீயா....???

உனக்கெல்லாம் இன்று

திருமணம் எதுக்கு...???

............................................

இதை காவியே வந்த

காவடிக்குதையடா..... :):unsure::unsure: :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்..

உமக்கு வீட்டுக்கும் உமக்கும் ஏவல் செய்ய ஆள் வேணுமெண்டால் காசுக்கு யாரையும் பிடியும்.

கலியாணம் என்ற பெயரில் நாடகம் போட வேணாம்.

நீங்கள் எங்கையோ இருக்கிறியள். நாங்கள் எங்கையோ இருக்கிறம். படு பத்தாம் பசலித் தனத்தோடு இருக்கிற உம்மிடம் விவாதிக்க ஒண்டும் இல்லை. அறிவு அறிவு எண்டு ஒரு விசயமிருக்கு. அதை அறிஞ்சு கொள்ள முயற்சியும். இல்லாவிட்டால் ஏதும் ஆயுதக் கப்பல் அசைந்து வரும். நல்லா மிதந்து கொண்டு அதைப் பற்றிப் பாடும்.

வயசு போனதுகளோடை கதைக்கவே முடியாது. பழசுகளுக்கு எண்டு யாழ் களம் திறந்தால் என்ன..?;)

நான் வாத்சாயனரின் காமசூத்திரத்தையோ வெள்ளை நைற்றியோடை அன்ரியென்றோ ஏதாவவு கவிதை எழுதினால் என்னை கட்டி வைச்சு அடியும்.

- இதுக்குள்ளை கறுப்பி வந்து தன்ர வழமையான கடமையை செய்திட்டும் போறா.. -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தினிப்பெண்களைப்பத்தி கவிதை பாடுறீங்க நான் என்னத்தை ஐயா சொல்லுறது?

Link to comment
Share on other sites

பத்தினிப்பெண்களைப்பத்தி கவிதை பாடுறீங்க நான் என்னத்தை ஐயா சொல்லுறது?

அது என்றால் உண்மை தான் பத்தினிகள் பற்றிய பேசில் கறுப்பி க்கு எனன் வேலை????? :P

Link to comment
Share on other sites

காவடியும், வன்னிமைந்தனும் ஒரு முடிவோடதான் இருக்கிறீர்கள்? எங்க ரெண்டு பேரும் சேட்டை கழற்றிப் போட்டு அடிபடுங்கோ பார்ப்பம்? கோழிச் சண்டை பார்த்து கனகாலம் ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடியும், வன்னிமைந்தனும் ஒரு முடிவோடதான் இருக்கிறீர்கள்? எங்க ரெண்டு பேரும் சேட்டை கழற்றிப் போட்டு அடிபடுங்கோ பார்ப்பம்? கோழிச் சண்டை பார்த்து கனகாலம் ஆகிவிட்டது.

உப்பிடி சொன்னால் எப்பிடி.. ஏதாவது ஒரு பக்கத்துக்கு come on come on எண்டு சொல்லி உற்சாகப்படுத்தினால்த்தானெ சண்டை போடலாம்.

Link to comment
Share on other sites

கூன் விழுந்த கிளட்டுக்கு

குமரிகள் கதை எதுக்கு...??

ஆண்டாயிரம் முன்னாடி

அவைகள் நடந்ததென்று...

தம்பட்டம் மடிக்கின்ற

தம்பையாக்காளே

கொங்சம் நின்று

கொஞ்சம் சிந்தி....

மங்கையவர் எல்லாம்

மந்திகள் அல்ல

கொப்பு தாவிடும்

குரங்கினம் அல்ல....

மூத்தவர் என்றுமக்கு

முன்னாடி ஓர் வணக்கம்

அகந்தையில்லாது

அன்பான பணீ வணக்கம்...

இந்தைய காலமதில்

ஏற்ப்பில்லையென்றால்

முந்தைய காலமதையேன்

முதுகில் சுமக்கிறீர்...???

தொப்பையை காட்டியவள்

தொப்பயாய் போறாள் என்று

பச்சையாய் சொல்லி நீவீர்

பல்லிழிக்கின்றீர்...

பெண்ணா இவள் என்று

பேசி அவளை

ஏசி பட்டமதை

ஏலமாய் கொடுக்கின்றீர்...

நீவீரா வந்திங்கு

கூச்சல் இடுகின்றீர்...??

போதுமய்யத போதும் உங்கள்

போக்கரி தனங்கள்...

காணுமய்யா விட்டு விட்டு

கடப்பைக்கு போங்கள்...!!!

:blink::huh::o :P :P :P :):unsure::unsure:

Link to comment
Share on other sites

காவடி அருமையையாய் காவடி எடுத்திருக்கிறீங்க... ஆனால் இறக்கி வைக்கும் போது தான் கொஞ்சம் நெருடுது.... பத்தினிப் பெண்கள் காவியத்தோடு போகட்டும் என்றால் இனி யாரும் அப்படி இருக்கத் தேவையில்லை என்றா சொல்கிறீர்கள்.... ஆனாலும் கவி நடை நல்லா இருக்கு.... அழகா பலரது உள்ளக் கருத்தை சொல்லியிருக்கிறீங்க.... தொடந்து எடுங்கோ காவடி.... சனம் பார்பினம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ளீஸ் யாராச்சும் என்னை வன்னி மைந்தனின் கவிக் கணையில இருந்து என்னைக் காப்பாற்றுங்கப்பா.. தாங்க முடியல்லை..

Link to comment
Share on other sites

ஆபத்துக்கு பாவமில்லை. கவிக்கணைக்கு எதிர்க்கணை விடமுடியாவிட்டால் உமது மதம் பிடித்த யனைப்படையை களமிறக்கிவிடும். வன்னிமைந்தன் ஓடிவிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் என்று கேட்டால்

என்னென்று சொல்வாள்..?

இதுவும் புரியாத

புருசன் நீயா....???

உனக்கெல்லாம் இன்று

திருமணம் எதுக்கு...???

............................................

இதை காவியே வந்த

காவடிக்குதையடா..... :unsure::lol::lol: :P :P :P

கனவுகளோடு காம கவிதை எழுதும் கவிஞரே

இது அனுபவித்ததில் வந்த கவிதையா இல்லை

ஆசையில் வந்த கவிதையா? :angry: :mellow:

Link to comment
Share on other sites

உள்ளத்தில் அசை

உயிர்த்தே எழுந்தாள்

உறவுகள் ஆடியே

உறவுகள் பிரியும்...

போது மென்றே

பொறுத்தே போனால்

மனதில் நிலையாய்

நின்மதி கிடைக்கும்...

ஆட ..ஆட..

ஆசை துடித்தால்

அதிகமாய் வெறுப்பு

யாருக்கு பிடிக்கும்...??

கட்டி பிடித்து

கலவிகள் ஆடி

முட்டி பிடித்து

மூச்சை விடுவாய்...

எட்டி உதைத்தாள்

ஏளனம் என்பாய்

ஏனிந்த வாழ்வென்று

எடுத்தே எறிவாய்...

கண்ணீரோடு

காலங்கள் கழியும்

பெண்ணுக்கிந்த- இழி

வாழ்வேதற்கு...???

உள்ளம் விட்டந்த

உண்மையை உரைத்தால்

காமம் என்றா

கத்தி கரைவாய்...???.. (தீபா...??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனின் கவிதைக்கு காருத்துச் சொன்னேன்

இருட்டியதும் அண்ணன் என் கன்னித்தன்மையிலே கைவைக்க பார்க்கிறான்.

:angry: :mellow::unsure:

Link to comment
Share on other sites

அட அட ஏன்ன கவிகள் என்ன கவிகள் கவிப்பேரரசு பின்னீஇடார் போங்க காம இச்சைகளுக்கு மொழி கொடுத்து வசனம் கொடுத்து கவிதை எண்டு சொல்லி எழுதும் வரிகள் அருமையிலும் அருமை பாலியல் கல்வியை தமிழீழம் பகுதியில் தன் அனுபவங்களை தன் இச்சைகளை பகிர்ந்த வன்னி மைந்தன் தன் காம இச்சைகளுக்கு வரி கொடுத்த கவிகள் அழகு வளர்க கவியரசே கவித்தாயின் மூத்திர பிள்ளையே சொறி மூத்த பிள்ளையே நீ வழியாவே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.