Jump to content

உயிர் வளர்க்கும் திருமந்திரம்


Recommended Posts

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 24: எவ்வினையை இறைவன் ஒழிப்பான்

 

 
Uyir%20valarkkum%20thirumathiram

ஒரு செயல் நிகழும்போது, அந்தச் செயலில் நான்கு கூறுகள் இணைந்திருக்கின்றன என்கிறது சைவம். அவற்றைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார் சேக்கிழார்:

செய்வினையும், செய்வானும்,

அதன் பயனும், சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும்

விதித்த பொருள்...

(பெரிய புராணம், 7:35:5)

செய்வினையாகிய செயல் முதலாவது கூறு; அந்தச் செயலைச் செய்தவன் இரண்டாவது கூறு; அந்தச் செயலால் விளையும் பயன் மூன்றாவது கூறு; அந்தப் பயனைச் செயல் செய்தவனிடமே கொண்டுவந்து சேர்ப்பவனாக வேறொருவன் இருப்பது நான்காவது கூறு என்று இவற்றை விளங்கிக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவரை அடிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடம் அடிவாங்கியவர் நம்மை உடனடியாகத் திருப்பித் தாக்கும் வலிமை அற்ற எளியவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அவர் சும்மா இருந்துவிடுவாரா? மனத்துக்குள் கறுவிக்கொண்டே சரியான வாய்ப்புக்காகக் காத்திருப்பார். வாய்ப்புக் கிடைக்கும்போது நம்மை எக்குத்தப்பாக எதிலாவது சிக்கவைப்பதில் தானும் ஒரு கருவியாகச் செயல்படுவார். எப்போதோ நாம் செய்த செயலுக்கான தண்டனை, எதிர்பார்த்திராத ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு வந்துசேரும், செய்த செயலுக்கான பயனைச் செய்தவரிடமே கொண்டு வந்து சேர்த்தவர் யார்? கடவுள்.

 

கடவுள் ஆற்றும் பங்கு

இதென்ன வம்பு? அடித்தவன் நான்; சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்து, வாய்ப்பு வந்தபோது எனக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்தவர், என்னிடம் அடி வாங்கியவர். இதில் கடவுள் எங்கிருந்து வந்தார்? அவருக்கு என்ன பங்கு? என்றால், நீங்கள் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பைக் கனியச் செய்ததுதான் கடவுள் ஆற்றிய பங்கு.

நடக்கிற எல்லாவற்றிலும் கடவுளுக்குப் பங்கு வைப்பது பக்தி மரபின் பாங்கு. ஒருவேளை உங்களால் பாதிக்கப்பட்டவர் உங்களைப் பழி வாங்க எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்திருந்தாலும், போனால் போகிறது என்று உங்களை மன்னித்து விட்டிருந்தாலும், உங்களது செயலுக்கான பயன் உங்களை வந்துசேரவே செய்திருக்கும். கடவுள் உங்களிடம் அதைக் கொண்டுவந்து சேர்த்திருப்பார் என்கிறது சைவம். ‘எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்’ என்று சொல்வதில்லையா?

செய்வினையின் பயனைச் செய்தவனிடம் சேர்ப்பது கடவுள்தான் என்ற இந்தச் சைவக் கருத்தைப் பவுத்தம்போன்ற கொள்கைகள் ஒப்புக்கொள்வதில்லை. இதற்கு எதற்கு ஒரு கடவுள்? வினைகளின் பயன்கள் தாமாகவே செய்தவனைச் சென்று சேரும் என்று சொல்லி, ஓர் எடுத்துக்காட்டும் வழங்குகிறது பவுத்தம்: நிறையப் பசு மாடுகளைக் கட்டி வைத்திருக்கிற ஒரு தொழுவம். கன்றுகள் தனியாகப் பிரித்துக் கட்டப்பட்டிருக்கின்றன.

பால் குடிக்கும் நேரம் கன்றுகளை அவிழ்த்துவிட்டால், கன்றுகள் ஒவ்வொன்றும் தத்தம் தாய்ப் பசுக்களைச் சரியாக அடையாளம் கண்டு, மடி சேர்ந்து, முட்டி முட்டிப் பால் குடிப்பதில்லையா? அதைப் போல, வினையின் பயன்களும் தங்களுக்கு உரியவரைச் சரியாக அடையாளம் கண்டு, தாங்களாகவே அவரைச் சேரும்; சேர்த்து வைப்பதற்குக் கடவுள் தேவையில்லை என்கிறது பவுத்தம்.

பவுத்தம் சொல்கிற அமைப்பு யார் துணையும் இன்றித் தானாகவே இயங்குகின்ற அமைப்பு; சைவம் சொல்கிற அமைப்போ கடவுள் துணையால் இயங்குகின்ற அமைப்பு.

 

அதிகாரி இல்லையா?

தானாகவே இயங்கும் அமைப்புகள் எப்போதும் அருளற்றவை. மிகவும் கெடுபிடியாக, விதிமுறைகளின்படித் தடம் புரளாமல் செயல்படுகின்றவை. அவற்றிடம் மன்றாடிப் பயனில்லை. பெற வேண்டியதைப் பெற்றுக்கொண்டும் வழங்க வேண்டியதை வழங்கிக்கொண்டும் தம்போக்கில் இயங்குகிறவை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று மருண்டு கிடக்கிற மனிதர்களை இவை மேலும் மருட்டுகின்றன.

அடித்துக்கொண்டு போகிற ஆற்று வெள்ளத்தில் எதையேனும் பற்றிக்கொண்டு கரையேறிவிட மாட்டோமா, பிடிமானமாக ஒரு துரும்பாவது கிடைத்துவிடாதா என்று பரிதவித்துத் துழாவுகிறார்கள் மனிதர்கள். பிடிகொடுக்க மறுக்கிறது பவுத்தம் பேசுகிற அமைப்பு. ‘மன்றாடுவதை விட்டுவிட்டு உங்கள் நடவடிக்கைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்’ என்று பேசுகிறது. நீங்கள் நல்வினைகள் செய்தால், உங்களுடைய நல்வினைகளின் பயன்களை நீங்கள் அடையவிடாமல் தடுக்கும் ஆற்றல் ஏதும் இல்லை;

அவ்வாறே, நீங்கள் தீவினைகள் செய்தால், உங்களுடைய தீவினைகளின் பயன்களை, அதாவது தண்டனைகளை, உங்களுக்கு வழங்காமல் மன்னித்து அருள வேண்டும் என்று நீங்கள் மன்றாடினாலும், உங்களை மன்னித்து அருளக்கூடிய அதிகாரியும் ஒருவரும் இல்லை என்கிறது பவுத்தம்.

இதில் சைவத்துக்கு ஒப்புதல் இல்லை. கடவுள் என்று ஒருவரை முன்வைத்து, அவர் அளவற்ற அருளாளர் என்று அவருக்கு வரையறையும் செய்துவைத்திருக்கும் நிலையில், ‘செய்தது பிழைதான்; மன்னித்து ஆட்கொள்ளுங்கள்’ என்று மன்றாடுகிறவர்களிடம், பவுத்தத்தைப் போலப் பாராமுகமாக இருக்கச் சைவத்தால் முடியாது.

ஆவியிலே தாழ்மை உள்ளவர்களும், மனம் நைந்து மன்றாடுகிறவர்களும் இறைவனால் மன்னிக்கப் பெறுவார்கள் என்றது சைவம். பவுத்தம், அமைப்பிடம் விட்டுவைத்திருந்த அதிகாரத்தைப் பிடுங்கித் தலைவரிடம் கொடுத்தது சைவம். சைவம் என்றில்லை; எல்லா இறை வழிபாட்டுச் சமயங்களும் இதையே செய்தன.

 

வசப்படக் கூடியவர் கடவுள்

கெடுபிடியாக இருக்கிற அமைப்பை முன்னிலைப்படுத்தாமல், மன்னிக்கும் இயல்புடைய கடவுளை முன்னிலைப்படுத்துவதைக் குற்றம் சொல்ல முடியாது. கெடுபிடியான அமைப்பென்பது அறிவின் வழியாக அறிந்துகொள்ளக்கூடியது. எனவே, விளங்கிக்கொள்ளவும் உள்வாங்கிக்கொள்ளவும் கடினமானது.

எல்லோருக்கும் இயலக்கூடியது என்று சொல்ல முடியாது. விட்டுப் பிடிக்கும் கடவுளோ நம்பிக்கை சார்ந்த உணர்வின் வழியாகப் பொசுக்கென்று உள்ளே வந்துவிடக் கூடியவர். நம்ப முடிகிற எல்லோருக்கும் எளிதாக வசப்படக் கூடியவர்.

‘சுமை சேர்ந்து சோர்ந்து போயிருக்கிறவர்களே! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடைய நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள். என் நுகம் மெலியது; என் சுமை எளியது’ என்று ஏசுவின் கூற்றாக விவிலியம் சொல்கிறது. வழிபாட்டுச் சமயங்களில் கடவுள் ஒரு சுமைதாங்கி. தங்களை அழுத்தும் சுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கடவுளின்மேல் இறக்கி வைத்துவிடலாம். பதிலுக்குக் கடவுளைச் சுமந்துகொள்ளலாம். இரண்டு சுமைகளில் எந்தச் சுமை எளிய சுமை என்பதையும் தங்களுக்குள்ளேயே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.

பவுத்தத்தின் கெடுபிடிகளை வைத்து, அது வாழ்வையே மறுப்பதாகச் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். துன்பத்தை நீக்கும் வகையில் வாழ்வை எளிதாக்கவும் முறைப்படுத்தவுமே முனைகிறது பவுத்தம். ‘நடக்கின்றவற்றைத் திருத்தச் சொல்லாதீர்கள்; உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்’ என்கிறது.

‘இப்போது நீங்கள் அனுபவித்து வருகின்ற துன்பத்தை யாரும் நீக்க முடியாது; ஏனென்றால் இது உங்களது பாவக் காவடி; நீங்கள்தான் சுமந்தாகவேண்டும். துணைக்காவடிகளின் தோளுக்கு அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆனால், இனி நீங்கள் சுமக்க வேண்டியது இன்பமா, துன்பமா என்று தீர்மானிக்கும் உரிமை உங்களிடம் உள்ளது. ஆகவே நல்லறம் புரிக’ என்கிறது பவுத்தம்.

அதற்கு எதிர் பேசுகிறார் திருமூலர்:

தன்னை அறிந்திடும்

தத்துவ ஞானிகள்,

முன்னை வினையின்

முடிச்சை அவிழ்ப்பர்கள்;

பின்னை வினையைப்

பிடித்துப் பிசைவர்கள்,

சென்னியில் வைத்த

சிவன்அருளாலே.

(திருமந்திரம், 2611)

 

 

 

வினைகளில் மூன்று வகை. முந்தைய பிறப்புகளில் செய்து, சேகரித்து வைத்திருக்கிற முன்வினை; இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிற நிகழ்வினை; இப்போது செய்து இனிமேல் அனுபவிக்க இருக்கிற பின்வினை. இவற்றில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிற வினையை ஒன்றும் செய்ய இயலாது; அதை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும். ஆனால், முன்வினையையும் பின்வினையையும் நம் தலையில் சுமந்துகொண்டிருக்கிற இறைவனின் அருளால் ஒழித்துக்கட்டிவிடலாம் என்கிறார் திருமூலர்.

பவுத்தம் சொல்வதும் ஏறத்தாழ இதைத்தான். பவுத்தம் கடவுளை மறுத்துச் சொல்கிறது; திருமூலர் கடவுளை வைத்துச் சொல்கிறார்.

(திருமூலரைத் தொடர்வோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23312029.ece

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 25: ஊழ் வலியது ஆனாலும் முயல்க

 

 
thirumajpg

ரு குறிப்பிட்ட வேலையைச் செய்து கொடுப்பதில் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் வல்லவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலையைத் தனக்காகச் செய்து தரக் கோரி ஒரு நிறுவனம் அவரை வேண்டுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். இப்போது இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். ஒப்பந்தத்தில், நிறுவனத்தார் வழங்க வேண்டிய ஊதியம் எவ்வளவு, செய்து தரவேண்டிய வசதிகள் என்னென்ன என்பன போன்றவையும், தொழில்நுட்பவியலாளர் செய்து தர வேண்டிய வேலை எத்தகையது, வேலையை நிறைவேற்றித் தர வேண்டிய கால அளவு என்ன என்பன போன்றவையும், பிரிவுகளாகக் கண்டு எழுதப்படும்.

ஒப்பந்தத்தை இரு தரப்பினரில் எவர் ஒருவர் மீறினாலும், எழுதிக்கொண்டபடி அதை நிறைவேற்றித் தர வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, வழக்குத் தொடர்ந்து, சட்டப்படியான நீதியைப் பெறலாம். எனவே, ஒப்பந்தம் என்று ஒன்று செய்துகொள்ளப்பட்ட பிறகு, அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.

இந்தக் கட்டாயத்துக்கு ஒரு விதிவிலக்கும் உண்டு. Force Majeure அல்லது Vis Major, அதாவது, ‘Act of God’ அல்லது ‘கடவுளின் செயல்’ என்ற தலைப்பில், ஒப்பந்தத்தின் பொதுப் பிரிவுகளில் ஒன்றாக இந்த விதிவிலக்கைச் சேர்ப்பார்கள். போர், ஆழிப் பேரலை, நிலநடுக்கம், இனக் கலவரம் போன்ற, இரு தரப்பினரின் கையையும் மீறிய, எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும்போது, நிறுவனத்தார் கொடுக்க வேண்டிய ஊதியம் தடைபடலாம்; அல்லது, தொழில்நுட்பவியலாளர் செய்து தர வேண்டிய வேலை தடைப்படலாம். தர வேண்டியதை ஏன் தரவில்லை, செய்ய வேண்டியதை ஏன் செய்யவில்லை என்று இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளவோ வழக்காடி நீதி பெறவோ முடியாது.

தன் கையை மீறிய இத்தகைய செயலைக் கடவுள் நம்பிக்கையற்ற நம்முடைய அரசியல் தலைவர்கள் சிலரின் சொற்களில் குறிப்பிடுவதானால், இது ‘காலத்தின் கட்டாயம்.’ ஒன்றும் செய்வதற்கில்லை. அவர்களைப் போலவே கடவுள் நம்பிக்கையற்ற வேறு சிலர் அதை ‘ஊழ்’ என்றோ ‘விதி’ என்றோ அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

 

திருமூலர் காட்டும் அடையாளம்

திருமூலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அல்லவா? எனவே, இத்தகைய கை மீறிய செயல்களைக் ‘காலத்தின் கட்டாயம்,’ ‘ஊழ்,’ ‘விதி’ ஆகிய சொற்களால் அடையாளப்படுத்தாமல், கடவுளின் செயல் என்று அடையாளப்படுத்துகிறார்:

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்;

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;

துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

(திருமந்திரம் 45)

கடல் சூழ்ந்த இந்தப் பேருலகம் விதியின் வழியில்தான் நடக்கிறது. இன்பதுன்பங்கள் எல்லாமே விதியின் வழியில்தான் வருகின்றன. அப்படியானால் என்னை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி மூச்சடைக்கச் செய்யும் இந்த விதியை நான் வெல்வது எப்படி என்று கேட்பீர்களேயானால், விதியை வகுக்கிறவன் இறைவன். துதி வழியில் அவனைக் காணலாம். ஆகவே, அவனைப் போற்றித் துதியுங்கள். இருட்டில் கண்டுபிடிக்க முடியாதவற்றையெல்லாம் பகலவன் தன் ஒளியால் காட்டித் தருவதுபோல, நீங்கள் அடைய வேண்டியவற்றையும், அதற்காகச் செய்ய வேண்டியவற்றையும் பதியாகிய இறைவன் பளிச்சென்று காட்டித் தருவான்.

மற்றொரு பாட்டின் வழியாகவும் இந்தக் கருத்தை நிலைநிறுத்துகிறார் திருமூலர்:

ஆவன ஆவ; அழிவ அழிவன;

போவன போவ; புகுவ புகுவன;

காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்,

ஏவன செய்யும் இளங்கிளை யோனே. (திருமந்திரம் 504)

ஆக வேண்டியவை ஆகும்; அழிய வேண்டியவை அழியும்; போக வேண்டியவை போகும்; புக வேண்டியவை புகும். எது ஆகும், எது போகும் என்பதெல்லாம் நம்மால் கண்டறிய முடியாத, நமது சிற்றறிவுக்கு எட்டாத செய்திகள். இறைவன் காட்டித் தந்தால் இவற்றை நாம் காணலாம்; இறைவன் அறிவித்தால் நாம் இவற்றை அறியலாம். அவ்வாறு இறைவனால் காட்டப்பட்டு முழு உண்மையையும் கண்டவர்களே பேரறிவாளிகள்.

மேற்படிக் கடவுள் செயலை அல்லது ஊழை, ஔவையும் ஒப்புக்கொள்கிறாள்:

அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா (மூதுரை, 6)

ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்று தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், ஆக வேண்டிய காலம் வந்தால்தான் ஆகும். மரம் உயரமாக வளர்ந்துவிட்டது என்பதற்காக உடனே பழம் பழுக்கத் தொடங்கிவிடுமா? பூப்பூத்துக் காய் காய்த்துப் பழுக்கிற காலத்தில்தான் பழுக்கும் என்று சொல்வதன்மூலம், உங்கள் அவசரத்துக்கும் முயற்சிக்கும் காரியம் நடந்து விடாது; நடக்கிற காலத்தில்தான் நடக்கும் என்று துலக்கப்படுத்துகிறாள் ஔவை.

 

உரிய பயன் உண்டு

தத்துவக்காரர்களே! ஆன்மிகவாதிகளே! நம்புகிறவர்களே! நம்பாதவர்களே! ஊழ், விதி, கடவுள் செயல், காலத்தின் கட்டாயம் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அதை நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்லுங்கள்:

எது நிகழ்ந்தாலும் அதற்குக் காரணம் அதைச் செய்தவர் அல்லர்; கடவுள், அல்லது ஊழ், அல்லது விதி, அல்லது காலத்தின் கட்டாயம் என்று சொல்வது நல்ல சிந்தனையா? அவ்வாறு சொல்வது தனிமனிதச் செயலூக்கத்தை முறித்துப் போட்டுவிடாதா? எல்லாமே விதித்தபடிதான் நடக்கும் என்றால், நான் ஏன் செயலைச் செய்ய வேண்டும் என்று மனம் சோர்ந்து ஒருவன் படுத்துக்கொண்டுவிட மாட்டானா என்றால், சார்புகளைக் கடந்த பேராசான் திருவள்ளுவர் விடை சொல்கிறார்:

ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர் (குறள் 620).

ஊழ் வலியதுதான். நீங்கள் ஆற்றுகிற செயலின் பயனை நீங்கள் அடைய முடியாமல் தடைப்படுத்தும் அளவுக்கு வல்லமை உள்ளதுதான். ஆனாலும், தளர்ச்சியடையாமல் தொடர்ந்து முயல்க. ஒரு முறை, இருமுறை அல்ல, ஓராயிரம் முறையானாலும் முயல்க. அயராமல் செய்கிற முயற்சி உரிய பயனைத் தரும்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்

மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619).

செய்த வேலைக்கான பயனைப் பெற விடாமல் ஊழ் அல்லது தெய்வம் தடுத்தாலும், முயற்சியின் அளவுக்கான கூலியாவது கிடைக்காமல் போகாது.

வள்ளுவரும் ஊழை முன்னிறுத்திப் பேசியவர்தாம். ‘ஊழைவிடப் பெரியது வேறு என்ன இருக்கிறது?’ என்று மலைத்தவர்தாம். ஆனால், அதற்காக முயற்சியை விட்டுக் கொடுக்காதவர்.

‘உடம்பு முழுக்க எண்ணெய்யைத் தடவிக்கொண்டு உருண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்’ என்று இந்தச் சிக்கலான சிந்தனையை மிக எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வார்கள் நம் மக்கள். உருளோ உருளென்று உருண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்பது ஊழ். உருளவே இல்லை என்றால் ஒன்றுமே ஒட்டாது என்பதும் தெளிவு.

கை மீறிய காரியங்களைக் ‘கடவுள் செயல்,’ ‘ஊழ்,’ ‘விதி’ என்று என்ன பெயரில் வேண்டுமானாலும் நியாயப்படுத்திக் கொள்க. ஆனால், அதற்காக மனம் தளர்ந்து தேங்கிவிடாது தொடர்ந்து முயல்க. முயற்சி திருவினை ஆக்கும்.

(திருமூலரைத் தொடரலாம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23374535.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 26: கடலுக்கும் வானுக்கும் நடுவிலேயே பற

 

 
Thirumanthiram%20Image

தனக்கு முன்னிருக்கும் வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கிக்கொள்கிறார் நல்லவனாகிய கதைநாயகன். தீயவனாகிய எதிர்நிலையாளனால் தனக்குப் பிச்சையாக அளிக்கப்பட்ட ஒற்றை ரூபாய் நாணயத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் தோழனிடம், “பூ விழுந்தா பூப் பாதை; தலை விழுந்தா சிங்கப் பாதை. கடவுளோ தற்செயலோ, என் வாழ்க்கையை இது தீர்மானிக்கட்டும்” என்று காசை மேலே சுண்டிவிடுகிறார். பார்த்திருப்பவர்களின் இதயங்கள் படபடக்க, தலை விழுகிறது. “சிங்கப் பாதைடா” என்று தலைகுலுக்கிச் சீறிச் சினந்து எழுந்திருக்கும் கதைநாயகன் சிங்கப் பாதையில் அடியெடுத்து வைப்பதாக ஒரு பெருவெற்றித் திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி.

திரைப்படங்கள், பார்க்கிறவர்களின் சுவையுணர்ச்சியை முதன்மையாகக் கொண்டவை. எனவே, தனக்கு முன்னிருக்கும் வாய்ப்புகளைத் தீர ஆராய்ந்து முடிவெடுக்காமல் காசைச் சுண்டிப்போட்டுப் பூவா, தலையா? என்று தேர்வு செய்கிற மேற்படிக் காட்சியில் குற்றஞ்சொல்ல ஏதுமில்லை.

 

நடுநிலை என்ற நிலை

ஆனால், உண்மையாகவே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஒன்று உருவாகும்போது, இரண்டில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன என்று நம்புவதும், உலகத்தை அது அல்லது இது, அப்படி அல்லது இப்படி என்று இரண்டாக மட்டுமே வகுத்துக்கொண்டு பார்ப்பதும் மிகவும் மோசமான, பழுதுள்ள பார்வை. உலகம் இரண்டால் ஆனதன்று; பலவற்றால் ஆனது. நேர் x எதிர், நீ x நான் என்பன போன்று வெறும் இரண்டு எதிர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு யாரும் உலகத்தை எதிர்கொள்ள முடியாது. எதிர்வுகளுக்கு இடையில் மற்றொரு நிலையும் இருக்கிறது—நடுநிலை.

தமிழ்நாட்டுச் சமூக ஊடகங்களில் மிகவும் பழிக்கப்பட்ட நிலை என்று ஒன்று உண்டென்றால், அது இந்த நடுநிலைதான். ஒரு விவகாரம் வெடிக்கும்போது, அதற்கு ஆதரவு நிலை எடுத்தவர்கள் ஒரு பக்கம் முழங்கிக்கொண்டிருக்க, எதிர்நிலை எடுத்தவர்கள் மற்றொரு பக்கம் முழங்கிக்கொண்டிருக்க, வேறு சிலரோ முழங்குகிற முனைப்பை ஒத்திவைத்துவிட்டு முன்னிருக்கும் விவகாரத்தைத் தீர விசாரித்துக்கொண்டிருப்பார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்கள் இரண்டில் ஒரு தரப்பைத் தேர்வுசெய்யலாம்; அல்லது இரு தரப்புகளும் பொய் என்று கருதி இரண்டையுமே மறுதலித்து, உண்மை எதுவோ அதைப் பேசலாம்;

அல்லது இரு தரப்புகளிலுமே பாதியளவு உண்மை இருப்பதாகக் கருதி இரண்டையும் தழுவிப் புதியது புனையலாம்; அல்லது இரு தரப்புகளுமே அவற்றைத் தாண்டிய, பிற தரப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டன என்று கருதி, விடுபட்ட தரப்புகளை முன்வைத்துப் பேசலாம். இவையெல்லாம், அவர்கள் செய்த விசாரணையையும், அதனால் பெற்ற விளக்கத்தையும், வாய் திறப்பதால் பயனுண்டா என்று எண்ணிப்பார்த்து அவர்கள் எடுக்கும் முடிவையும் பொறுத்தவை.

ஆனால், தங்களுக்கான தரப்புகளைத் தேர்வுசெய்துகொண்டு அவற்றைச் சார்ந்து நின்று பொங்குகிறவர்களோ நடுநிலையாளர்களைப் பழிப்பார்கள். ‘நடுநிலை என்று ஒரு நிலையே கிடையாது; நடுநிலை என்று சொல்கிறவனெல்லாம் தீமையின் பக்கமே நிற்கிறான்’ என்று ஏசுவார்கள். அவ்வாறு ஏசுவதன்மூலம் நடுநிலையாளர்களை ஏதேனும் ஒரு தரப்பின் பக்கம் தள்ள முயல்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஆமென்போர் அல்லது இல்லையென்போர்; அவ்வளவுதான். ‘தராசுக்கோல் ஒன்று இந்தப் பக்கம் சாய வேண்டும் அல்லது அந்தப் பக்கம் சாய வேண்டுமே தவிர, நடுவில் நிற்கக் கூடாது’ என்று முழங்குகிறவர் பொருளின் எடையை எப்படி அறிவார்? வள்ளுவர் நடுநிலை வகிப்பவர்களை ‘சான்றோர்கள்’ என்று வாழ்த்துகிறார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக்

கோட்டுஅழகும்

மஞ்சள் அழகும் அழகுஅல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

(நாலடியார், 131)

சீவிக் கொண்டையிட்ட தலைமுடியின் அழகோ மேலை மறைத்திருக்கும் சேலை முந்தானையின் கரைக்கோட்டு அழகோ மஞ்சளை அரைத்துப் பூசித் தங்கம்போலத் தகதகக்கும் முகத்தின் அழகோ அழகே அல்ல; ஆராயாமல் ஒரு தரப்பை ஆதரிக்கும் பிழையை நான் செய்துவிடாமல் என்னைத் தடுத்தாட்கொண்டு, எதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் நடுநிலை ஆளாக என்னை ஆக்கி வைத்த கல்வியின் அழகே அழகு என்று கல்வியை வாழ்த்துகிறது நாலடியார். கல்வியை வாழ்த்துவதன்மூலம் கல்வியின் சாரமாக இருக்கும் நடுநிலைப்பாட்டையும் ஆராய்ந்து முடிவெடுத்தலையுமே அது வாழ்த்துகிறது.

 

சூரியச்சூடு மெழுகை உருக்கியது

கிரேக்கத்தில், தைதலாசு என் கலைஞனும் அவன் மகன் இக்காரசும் மன்னனால் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில், கலைஞனாகிய தைதலாசு சிறையில் சிதறிக் கிடந்த பறவை இறகுகளைத் தைத்தும் மெழுகுகொண்டு ஒட்டியும் சிறகுகள் தயார் செய்கிறான். அவற்றைக் கட்டிக்கொண்டு தைதலாசும் இக்காரசும் சிறையிலிருந்து பறந்து வெளியேறத் தீர்மானிக்கிறார்கள். அப்போது தைதலாசு தன் மகன் இக்காரசிடம் சொல்கிறான்: “தம்பி, கடலுக்கும் வானத்துக்கும் இடையில் பறக்கும்போது கடலுக்கு அருகில் சென்றுவிட வேண்டாம்;

ஏனென்றால், கடல்நீர் பட்டுச் சிறகுகள் கனத்துவிடும்; பறக்க முடியாது. வானத்துக்கு அருகிலும் சென்றுவிட வேண்டாம்; ஏனென்றால், சூரியச் சூடுபட்டு இறகுகளை ஒட்டியிருக்கும் மெழுகு உருகிச் சிறகுகள் சிதைந்துவிடும்; பறக்க முடியாது. எனவே, கடலுக்கும் வானுக்கும் நடுவிலேயே பற.” இருவரும் பறந்து சிறையைவிட்டு வெளியேறினார்கள். விடுதலை பெற்ற இக்காரசுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாக மிகுதியில் உயரப் பறந்தான். சூரியச் சூடு மெழுகை உருக்க, சிறகுகள் சிதைந்து, கடலில் விழுந்து இறந்தான்.

பல்வேறு மரபுகளும் நடுவுநிலைமையை வாழ்த்திப் பேசுகின்றன. ‘முரட்டுத்தனத்துக்கும் கோழைத்தனத்துக்கும் நடுவில் உள்ளது துணிவு; பல்லிளிப்புக்கும் சிடுமூஞ்சித்தனத்துக்கும் நடுவில் உள்ளது நட்பு’ என்று நடுநிலை போற்றினார் அரிஸ்டாட்டில். அவர் போற்றிய நடுநிலை ‘சிங்கப் பாதை’ என்றல்ல, ‘தங்கப் பாதை’ என்று அழைக்கப்பட்டது.

‘ஆம் என்பாரின் பாதை ஒருபுறம்; இல்லை என்பாரின் பாதை மறுபுறம்; இரண்டுக்கும் இடையில் போகிறது தர்மத்தின் நடுப்பாதை. இன்பத்தைத் தேடுவதே வாழ்வு என்பாரின் பாதை ஒருபுறம்; இன்பத்தை மறுப்பதே வாழ்வு என்பாரின் பாதை மறுபுறம்; இரண்டுக்கும் இடையில் போகிறது தருமத்தின் நடுப்பாதை (மச்சிமாப் படிபதா)’ என்று நடுப்பாதையைத் தேர்ந்துகொள்ளச் சொல்லி அறிவுரைக்கிறார் புத்தர். சீனத்தின் தாவோயியத்திலோ பாதை என்றாலே நடுப்பாதைதான்.

நடுவுநின் றார்க்குஅன்றி ஞானமும் இல்லை;

நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை;

நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்;

நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

(திருமந்திரம் 320)

என்று நடுநிலைமை பாடுகிறார் திருமூலர். எந்த ஒன்றிலும் தோய்ந்து உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை இழந்துவிடாமல், ஒரு சாட்சியைப்போலத் தள்ளி நின்று, நடுநிலையோடு பார்க்கிறவர்களுக்கு மட்டுமே பேரறிவு பிறக்கிறது. நடுநிலையோடு பார்க்கிறவர்கள் விவகாரத்தில் தோய்வதில்லை ஆதலால் அவர்கள் துன்பத்தில் சிக்குவதில்லை. துன்பத்தில் சிக்காமல் இருப்பதே இன்பந்தான் இல்லையா? எனவே, நடுநிலையாளர்களின் வழியையே நானும் தேர்வு செய்துகொண்டேன் என்கிறார்.

‘என் தரப்பைத் தேர்ந்தெடு’ என்று ஊடகங்களில் அதட்டுகிறார்கள் உலகியல்வாதிகள்; ‘ஆராய்ந்து, உண்மையின் தரப்பையே முன்னெடு’ என்று ஏடகங்களில் பரிந்துரைக்கிறார்கள் மெய்யியல்வாதிகள். அதட்டுகிறவர்களுக்கு அஞ்சி இதுவே என் தரப்பு என்று நாடகங்கள் நடிக்காமல், ஆய்ந்து ஆய்ந்து நிலைகொள்க.

(ஆய்வதைத் தொடர்வோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23435309.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 27: மதமும் மதுவும் ஒன்று

 

 
Uyir

திருவருட்பிரகாச வள்ளலார் தனக்காகச் சிலவற்றைக் கடவுளிடம் வேண்டுகிறார்:

... பெருநெறி பிடித்துஒழுக வேண்டும்;

மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்;

(திருவருட்பா, தெய்வமணிமாலை, 8)

‘மதம்’ ஒரு பேய். அது யாரைப் பிடித்துக்கொண்டதோ அவர்களின் அறிவழிக்கும்; ஆட்டிவைக்கும். அவர்களுக்குச் சொந்தமாகவே எண்ணத் தெரிந்திருந்தாலும் எண்ண விடாது; ஒன்றிரண்டாக எண்ணியவற்றைப் பேசத் தெரிந்திருந்தாலும் பேசவிடாது. தன் எண்ணத்தை அவர்கள்மேல் திணிக்கும்; அதை அவர்கள் வாயால், வெறிகொண்டு பேசத் தூண்டும். அவர்களின் தலைவிரித்துத் தான் ஆடும். எனவே மதம் என்கிற பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும்.

மதத்தின் குற்றம் என்னவென்றால், அது தன்னிடம் பிடிபட்டவர்களைக் குறுக்கும்; சிறுமைப்படுத்தும். இந்த உலகத்தை, உலகத்தின் இயக்கத்தைப் பரந்தும் பகுத்தும் எவ்வளவு தூரம் அறிய முடியுமோ அவ்வளவு தூரம் அறிவதுதான் அறிவு என்ற நிலைக்கு மாறாக, தன்னை மட்டுமே அறிந்தால் போதும்—அப்படிக்கூடச் சொல்லக் கூடாது—தன்னை மட்டுமே ‘நம்பினால்’ போதும் என்ற நிலைக்கு மதம் மனிதர்களை ஆட்படுத்தும். ஆகவே, பிற எல்லாவற்றையும் நம் பார்வையிலிருந்து மறைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் காட்டுகிற மதம், ஒரு பேய்; அது உங்களைப் பிடித்து ஆட்ட விட்டுவிடாதீர்கள்; மாறாக, எல்லாவற்றையும் பார்க்க வகை செய்கிற பெருநெறியைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

‘பெருநெறி’ என்பது தொல்காப்பியம் புழங்கிய சொல். ‘வேளாண் பெருநெறி’ என்று உணவிட்டு விருந்தோம்பும் பெருநெறியைக் குறிக்கிறது தொல்காப்பியம்.

தரும தலைவன் தலைமையில் உரைத்த

பெருமைசால் நல்அறம் பெருகாது ஆகி,

இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி

அறுகையும் நெருஞ்சியும்

அடர்ந்துகண் அடைத்துஆங்குச்

செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று

உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது

(மணிமேகலை,

அறவணர்த் தொழுத காதை, 57-62)

தருமத்தின் தலைவனாகிய புத்தன் நல்லறம் சொன்னான்; அது பல்கிப் பெருகவில்லை. விடுதலைக்கு வழிநடத்தும் பெருவழியைக் காட்டினான்; அந்தப் பெருவழியில் அருகம் புல்லும் நெருஞ்சி முள்ளும் படர்ந்து பாதையை மறைத்தன. துன்பத்தை வழங்கும் பாதை ஒன்று மட்டுமே பாதையாகத் தெரிய, உயிர்கள் அதையே பெருநெறியாகக் கொண்டு ஒழுகத் தொடங்கின என்று பெருநெறியை எதிர்மறையாகக் குறிக்கிறது மணிமேகலை.

முந்தை எழுத்தின் வரவுஉணர்ந்து, பிற்பாடு

தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த

ஒழுக்கம், பெருநெறி சேர்தல், இம்மூன்றும்

விழுப்பநெறி தூரா ஆறு

(திரிகடுகம், 56)

கசடு அறக் கற்றல், தந்தை தாய்ப் பேணுதல், கற்றும் கண்டும் உணர்ந்தும் அறிந்த சான்றோர்கள் சென்ற பெருநெறியில் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு உயர்வைத் தரும் என்று ஒழுக்கத்தின் அடிப்படையில் பெருநெறியைப் பற்றிப் பேசுகிறது திரிகடுகம்.

 

முரண்டு பிடிப்பது சிறுநெறி

தமிழ் நெடுகப் பலரும் பலவிதமாய்க் கையாண்ட பெருநெறி என்னும் சொல்லை வள்ளலார் கையாண்ட விதம் புதிது. தமிழை ஆய்ந்து, அதன் தன்மை அறிந்தோர் எல்லோர்க்கும் விரிந்து இடம் கொடுக்கும் சங்கப் பலகை என்ற பழங்கதைபோல, உண்மையை ஆய்ந்து, அதன் இயல்பை உணர்ந்தோர் எல்லோர்க்கும் அகன்று இடம் கொடுக்கும் நெறி பெருநெறி. ‘என் மதம் ஈது, உன் மதம் தீது’ என்பது முரண்டு பிடிப்பது சிறுநெறி. அறிவற்று அயர்வோரை அது பேய் பிடிப்பதுபோலப் பிடித்துக்கொண்டு ஆட்டும். ஆனால், பெருநெறி என்பது பொய்தீர் ஒழுக்க நெறி. மதம் பிடிப்பதைப் போல் பெருநெறி உங்களைப் பிடிக்காது; அறிவோடு அணுகி, நீங்கள்தாம் பெருநெறியைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலாரின் முன்னோடியாகிய திருமூலரும் பெருநெறி பேசுகிறார்; ஆனால் இவர் பேசும் விதம் வேறு:

பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி;

பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன்;

பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு;

பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே

(திருமந்திரம், 132)

‘ஆடுகின்றானடீ தில்லையிலே, அதைக் காண வந்தேன் அவன் எல்லையிலே’ என்று ஆடும் கூத்தனின் ஆட்டம் பார்க்கத் தில்லைக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கையால் பெரும்பான்மையினர் என்றாலும், நெறியால் சிறுநெறியினர்; ஏனென்றால், அவர்கள் தில்லையம்பலத்தைவிட்டு நகர்ந்த அடுத்த நொடியிலேயே கூத்தனை விட்டும் நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், கூத்தன் புறவெளியில் ஆடவில்லை; தனக்குள்ளேயே இருக்கிற அகவெளியில்தான் ஆடுகிறான் என்று கண்டுகொண்டவர்களோ எண்ணிக்கையால் சிறுபான்மையினர் என்றாலும், நெறியால் பெருநெறியினர்; ஏனென்றால் அவர்கள் சிற்றம்பலத்தையும் அதில் ஆடும் கூத்தனையும் எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்கிறவர்கள்; பிரியாத பெருநிலை பெற்றவர்கள். உயிர் விடுதலை என்பது உலகம் உள்ளிட்ட அனைத்தையும் விட்ட பிறகுதான் கிடைக்கும் என்பதற்கு மாறாக, உள்ளத்தால் இறைவனைத் தொட்ட உடனேயே கிடைத்துவிடும் என்று இந்தப் பாட்டில் முன்வைக்கிறார் திருமூலர். இறைவனைப் பிரியாதிருக்கும் நெறி அனைவருக்கும் கிடைத்துவிடக்கூடிய எளிய நெறி அன்று; அரிதிலும் அரிதாய்க் கிடைப்பது. ஆகவே அது பெருநெறி.

 

இருவரும் ஒருவரே

பெருநெறி எது என்பதை விளக்கப்படுத்துவதில் திருமூலரும் வள்ளலாரும் வேறுபடுகிறார்களே ஒழிய, மதம் பிடித்து அலைவதைக் கண்டனம் செய்வதில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

சாதியிலே, மதங்களிலே, சமயநெறி களிலே,

சாத்திரச்சந் தடிகளிலே, கோத்திரச்

சண்டையிலே,

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!

அலைந்துஅலைந்து வீணேநீர்

அழிதல்அழகு அலவே...

(திருவருட்பா VI,

புனிதகுலம் பெறுமாறு புகலல், 1)

சாதிச் சண்டை, மதச் சண்டை, சமயநெறிச் சண்டை, சாத்திரச் சண்டை, கோத்திரச் சண்டை, எல்லாவற்றிற்கும் ஆதியிலே வந்தது எது என்பது குறித்து எள்ளளவு விவரமும் இல்லாமல், ‘கோழிதான் முதல்,’ ‘முட்டைதான் முதல்’ என்று நீங்களே செய்துகொண்ட ஊகங்களுக்காகப் போடுகிற வெட்டிச் சண்டை—எத்தனை எத்தனை சண்டைகள்? சமாதானத்தைக் கட்டி வைப்பதற்கு அல்லாமல் சண்டையிட்டு முட்டி நிற்பதற்கே அலைகிற மனிதர்களே! இது அழகா என்று மதம் முதலியவற்றை அழுத்தந்திருத்தமாகக் கண்டனம் செய்து பாடுகிறார் வள்ளலார்.

மயக்கும் சமய மலம்மன்னும் மூடர்,

மயக்கும் மதுஉண்ணும் மாமூடர், தேரார்;

மயக்குஉறு மாமாயை மாயையின் வீடு

மயக்கில் தெளியின் மயக்குஉறும் அன்றே

(திருமந்திரம், 329)

மதமும் மதுவும் ஒன்று. ஏனென்றால் இரண்டுமே அறிவைக் கெடுப்பவை. உலக வாழ்வில் வரும் துன்பங்களைவிட்டு நீங்க நினைக்கிறவர்களில் சிலர், உலகத்தை மறந்துவிட்டால் தம்முடைய துன்பங்கள் நீங்கிவிடும் என்று நினைக்கிறார்கள். உலகத்தை மறப்பதற்கு மது உதவும் என்று கருதி மதுவெறி கொண்டு மயங்குகிறார்கள். வேறு சிலரோ உலகத்தை மறப்பதற்கு மதம் உதவும் என்று கருதி மதவெறி கொண்டு மயங்குகிறார்கள். ஒரு வகையினர் முட்டாள்கள் என்றால் மற்றொரு வகையினர் அடிமுட்டாள்கள். துன்பத்திலிருந்து நீங்க விரும்புகிறவர்கள் துன்பத்தின் உற்பத்தி எங்கிருந்து தொடங்குகிறது என்று பார்க்க வேண்டும்; அதற்கு அறிவை விழிப்பாகக் கூர் தீட்டி வைத்திருக்க வேண்டுமே அன்றி, அறிவை மதுவாலும் மதத்தாலும் மயக்கக் கூடாது. காலில் முள் ஏறித் துன்பப்படுத்துகிறது என்றால் முள்ளை எடுத்துத் தூர எறிவதுதான் வழியே தவிர, வலியை மறப்பது அன்று. அறிவை மறைப்பது எதுவாக இருந்தாலும் அதைச் சைவம் மலம் என்று அழைக்கும். மதம் அறிவை மறைத்து உங்களை வெறிகொள்ளச் செய்யுமானால் மதத்தை மலம் என்று அழைப்பதற்கும் திருமூலர் தயங்குவதில்லை.

(சூழும் இருள் களைவோம்) கட்டுரையாசிரியர்,

http://tamil.thehindu.com/society/spirituality/article23599959.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 28: ஒன்று அது பேரூர்

 

 
Mois
 

நாய் ஒன்று, குன்றைப் பார்த்துக் குரைக்கிறது. என்ன நோக்கம்? இதற்கென்ன நோக்கம் வேண்டி இருக்கிறது? நாய்க்குக் குன்றைப் பற்றி ஒரு சுக்கும் தெரியாது; ஆகையால் குரைக்கிறது. ‘நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது’ என்று சொல்வழக்குகூட உண்டு. நாய் பசியே இல்லாமலும் கஞ்சி குடிக்கும்; தெரிந்துகொள்ளவே முயலாமலும் குன்றைப் பார்த்துக் குரைக்கும்.

ஒன்றுஅது பேரூர்; வழிஆறு அதற்குஉள;

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது, தீதுஇது என்று உரை யாளர்கள்,

குன்று குரைத்துஎழு நாயைஒத் தார்களே. (திருமந்திரம் 1557)

ஓர் ஊருக்குப் போவதற்கு ஆறு வழிகள் உள்ளன. எந்த வழியில் போனாலும் ஊரை அடையலாம். யார் யாருக்கு எந்தெந்த வழி தோதான வழியோ அந்த வழியாக, அவரவர் வசதிக்கேற்ப ஊரை அடைவார்கள். ‘எனக்குத் தெரிந்த வழி இந்த வழி ஒன்றுதான்; ஆகவே, இதன் வழியாகத்தான் அந்த ஊரை நீங்கள் அடைந்தாக வேண்டும்; வேறு வழிகளில் அடைந்தால் உங்கள் அடைவை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று அடம் பிடிக்கிற மூடரை என்னவென்று சொல்வது? எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளவே முயலாமல், இந்த மதம் நல்லது, அந்த மதம் தீயது என்று கிறுக்குத்தனமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசுகிறவர்களைக் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயோடு ஒப்பிடாமல் வேறென்ன செய்வது?

திருமந்திரக் கருத்தை அப்படியே வழிமொழிகிறது சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான சிவஞான சித்தியார்.

...ஒருபதிக்குப் பலநெறி கள்உள ஆனாற்போல்

பித்தர் குணம்அது போல ஒருகால் உண்டாய்ப்

பின்ஒருகால் அறிவுஇன்றிப் பேதை யோராய்க்

கத்திடும் மாக்கள்உரைக் கட்டில் பட்டோர்

கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.

(சிவஞானசித்தியார், மங்கல வாழ்த்து, 8)

ஓர் ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். எந்த வழியில் போனாலும் ஊரை அடைவதுதான் நோக்கம் என்பது விளங்காத பேதைகள், ‘வழி என்றால் என்ன தெரியுமா? அந்த வழியில் எப்படிப் போக வேண்டும் தெரியுமா?’ என்று எல்லாம் தெரிந்ததுபோல முழங்குகின்ற முட்டாள்களின் பேச்சில் மயங்கி அவர்கள் பின்னால் போவார்கள். இவ்வாறாகப் பொன்மலைக்குப் போகக் கிளம்பியவர்கள் கடைசியில் கடலில் போய் விழுவார்கள்.

 

நம்பினார்கள் நம்பினார்கள்

மதம் என்பது அச்சத்தில் காலூன்றி நிற்பதாக ஒரு பொதுக் கருத்து உண்டு. முன்பின் அறிந்திராத (கடவுள் என்ற) ஒன்றைப் பற்றிய அச்சம், தோல்வியைப் பற்றிய அச்சம், சாவைப் பற்றிய அச்சம் என்று அச்சமே மனிதர்களை ஆட்டுகிறது. இந்த அச்சம்தான் மனிதர்களை மதத்தை நோக்கிச் செலுத்துகிறது. எதைக் கண்டெல்லாம் மனிதர்கள் அஞ்சினார்களோ அதையெல்லாம் வணங்கத் தொடங்கினார்கள். பாம்புக்கு அஞ்சினார்கள்; பாம்பை வணங்கினார்கள். தீயைக் கண்டு அஞ்சினார்கள்; தீயை வணங்கினார்கள். தலைவர்களுக்கு அஞ்சினார்கள்; தலைவர்களையும் தலைவர்களின் வாகனங்களையும்கூட வணங்கினார்கள். கடவுளுக்கு அஞ்சினார்கள்; கடவுளை வணங்கினார்கள். வணங்கியவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் வணங்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நம்பினார்கள்.

அச்சத்தை அடிப்படையாகக் கொண்டே மதங்கள் கட்டமைக்கப்பட்டன. எதை வணங்க வேண்டும், எங்கே வணங்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும், எதைப் படைத்து வணங்க வேண்டும் என்றெல்லாம் சடங்குகள் வரைமுறைப்படுத்தப்பட்டன. இந்தச் சடங்கு வரைமுறைகளை மீறினால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகிவிடாது. என்றாலும், ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் சடங்குகளை நிலைப்படுத்தியது. சடங்குகள் மதத்தைக் கெட்டிப்படுத்தின. கெட்டிப்படுத்தப்பட்ட மதங்கள் நெகிழ மறுத்தன. மக்கள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கினர்.

 

பேரன்பு, பெருவியப்பு, பெருமகிழ்ச்சி

இந்த வகையாக மதங்களை உருவாக்கியதில் அச்சத்துக்கு ஒரு மறுக்க முடியாத பங்கு உண்டு என்றாலும், அச்சம் என்ற ஒற்றை உணர்ச்சி மட்டுமே மதத்தை நிரப்பிவிடவில்லை. அச்சத்துக்கு அப்பால் பேரன்பு, பெருவியப்பு, பெருமகிழ்ச்சி என்று பல்வேறு உணர்ச்சிகளாலும் ஆனது மதம்.

அச்சத்துக்கு மாற்று அன்பு. அச்சத்தை முறிப்பது அன்பு. அன்பைத் தங்கள் மத உணர்ச்சியாகக் கொண்டவர்கள் அச்சத்தையும் ஆணவத்தையும் எதிர்த்துச் சண்டையிடுவார்கள். அச்சத்தைத் தங்கள் மத உணர்ச்சியாகக் கொண்டவர்களோ மாற்று மதத்தவரை எதிர்த்துச் சண்டையிடுவார்கள். அன்பு எல்லா உணர்ச்சிகளையும் ஆதரித்து நெகிழச் செய்கிறது; அச்சமோ எல்லா உணர்ச்சிகளையும் மறுதலித்து இறுகச் செய்கிறது.

‘அச்சம் குரூரத்தை வளர்க்கிறது’ என்கிறார் மேலைநாட்டு மெய்யியல் அறிஞரான பெர்ட்ரண்ட் ரசல். கடும்நெரிசலில் சிக்கிக்கொண்டவர்கள், ‘நெரிசல் நெகிழட்டும், ஒவ்வொருவராகப் போவோம்’ என்று பொறுமை காப்பதில்லை. பதற்றமும் பரபரப்பும் அடைவார்கள். ‘வெளியேற முடியாமல் போய்விடுமோ, நெரிசலில் மூச்சடைத்தோ மிதிபட்டோ செத்துவிடுவோமோ’ என்ற அச்சத்தில் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பக்கத்திலிருப்பவர் பெரியவரா குழந்தையா குட்டியா என்றும் பார்க்காமல் குரூரமாக எக்கித் தள்ளித் தமக்கு வழியை உண்டாக்கிக்கொண்டு வெளியேறவே முயல்வார்கள். வாய்ப்பிருந்தால், தான் மீண்டு வந்த ஆபத்தை வரலாற்றில் பதிவுசெய்வதற்காக, நெரியும் கூட்டத்தைப் பின்னாலும் தன்னை முன்னாலும் வைத்து, தப்பிப் பிழைத்த சாகச உணர்ச்சி முகத்தில் தொனிக்க, ஒரு ‘தற்படம்’ (செல்ஃபி) எடுத்துக்கொள்வார்கள்.

 

அந்த மயக்கம் ஒழிக

அச்சத்தில் வளர்ந்த மதங்கள், அச்சத்தை வளர்க்கும் மதங்கள், நெகிழ்ச்சியின்றிக் கெட்டிப்பட்டு நிறுவனமயமான மதங்கள் பிறரைப் பற்றிக் கருதியும் பார்க்காத குரூரத்தையே விளைபயனாக்கித் தருகின்றன. ‘நான் முன்னால், நீ பின்னால்; இதை மீறி நீ முண்டினால் உனக்கும் எனக்கும் முரண்; உன்னை எக்கிப் பின்னுக்குத் தள்ளுவேன்; நீ நெரிபட்டுச் சாவாய்’ என்று வன்முறைகள் வழியாகப் பிறருக்குப் பாடம் படித்துக் கொடுக்கின்றன.

‘காணாப் பொருளாகிய கடவுளை நாங்கள் கண்டோம் கண்டோம்’ என்று கூத்தாடுகின்றன மதங்கள். ‘கண்ட கடவுளை எங்களுக்கும் காட்டு’ என்று கேட்போருக்குக் கடவுளைச் சொற்களாலும் கற்களாலும் வடிவநிலைப்படுத்திக் காட்ட முயல்கின்றன. அவ்வாறு முயல்கின்ற மதங்களைப் பற்றித் திருமூலர் சொல்கிறார்:

ஆன சமயம் அதுஇது நன்றுஎனும்

மான மனிதர் மயக்க மதுஒழி

கானம் கடந்த கடவுளை நாடுமின்;

ஊனம் கடந்த உருஅது ஆமே

(திருமந்திரம் 1545)

அந்தச் சமயம் நல்லது, இந்தச் சமயம் நல்லது என்று மக்கள் பல திறமாய்ப் பற்று வைத்து மயங்குவார்கள். அந்த மயக்கம் ஒழிக. கடவுள் சொற்களைக் கடந்தவன்; தன் உருவம் எழுதிய கற்களையும் கடந்தவன். அவனை நாடும் வகையில் நாடுக.

நாடும் வகை எது? சொற்களில் ததும்புகிற கானத்தையும் கற்களில் ததும்புகிற ஊனத்தையும் கடந்து நிற்கிற கடவுளை எங்கே கண்டுகொள்வது?

ஆயத்துள் நின்ற அறுசமய யங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா;

மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே (திருமந்திரம் 1530)

கடவுளின் இருப்பிடத்துக்கு உங்களை அழைத்துச் செல்வதாகக் கூறும் மதங்களுக்கு உண்மையிலேயே கடவுளின் இருப்பிடம் தெரியாது. அவற்றிடத்தில் கடவுள் இல்லை. கடவுள் உங்களிடத்தில் இருக்கிறார்; உங்களுக்குள் இருக்கிறார். மனைவி மக்களையே பார்த்துக்கொண்டிருப்பதால் கடவுளைப் பார்க்கத் தெரியாமல் பரிதவிக்கிறவர்களே! அகப்பட்டு நிற்கிற கடவுளுக்கு அகப்படுங்கள்.

(அகம் தேடுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23670718.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 29: சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கிறான்

 

 
shutterstock783779671%20Convertedcol

திருமூலர் மதப்பற்றைக் கண்டனம் செய்கிறார். ‘மதம் மயக்கும் என்றால், மதம் அறிவிழக்கச் செய்யும் என்றால், மதம் வெறி பிடிக்கச் செய்யும் என்றால் அந்த மதம் மதம் அன்று, மலம்’ என்றார். நல்லது. அப்படியானால் திருமூலர் மதச் சார்பின்மை பேசுகிறார் எனலாமா? ‘மதம் பிடித்து அலையாதே’ என்று அன்பொழுக அறிவுரைக்கிற திருமூலரும் சைவம் என்ற மதத்தைப் பிடித்துக்கொண்டு அலையவில்லையா?

சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்

தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு

அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;

தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)

சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள்—என்று திருமூலர் பேசவில்லையா?

இவ்வாறு ஒரு கையால் சைவம் என்ற மதத்தையும் மறுகையால் மதச் சார்பின்மையையும் தழுவிக்கொள்வது முறையான செயலா? உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுகிற கள்ளச் செயல் இல்லையா இது? என்று கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்குத் திருமூலரின் விடை என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், 2018, ஏப்ரல் 15-ம் நாளிட்ட The Hindu (Section 1, p.15), Column Width என்ற பகுதில் இடம்பெற்ற இரண்டு பத்திகளின் சாரத்தை இங்கே வழங்க விருப்பம்.

“A silver lining in an age of religious extremism” (மதத் தீவிரவாதக் காலத்தில் ஒரு வெளிச்சக் கீற்று) என்னும் தலைப்பில் Tabish Khair எழுதியிருந்த பத்தியின் சாரம்:

‘மதம் ஒன்றும் முற்றாகக் கண்டனம் செய்து களையப்பட வேண்டியதன்று. மதம் என்பது மக்களின் தேவை. மதத்தைக் கண்டிப்போர் மார்க்ஸ் எழுதிய சொற்றொடர் ஒன்றைச் சுட்டிக் காட்டுவர்: ‘மதம் மக்களுக்கு ஓப்பியம் போன்றது’. ஆனால் இந்தச் சொற்றொடரைமட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்வது நீதியாகாது. மார்க்ஸ் எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்தால், மார்க்ஸ், மதத்தைத் தவிர்க்க முடியாத ஒரு வலி நீக்கியாகத்தான் பார்க்கிறார் என்பது விளங்கும். எளிய மக்களின் வலிய துன்பங்களைப் போக்குவதற்கு ‘உண்மையான மருந்துகள்’ (உண்மையான மருந்து என்று புரட்சியில் விளையும் பொதுமைச் சமுதாயத்தைக் குறிக்கிறார் மார்க்ஸ்) இன்னும் கிடைக்காத நிலையில், மக்களின் துன்பத்தை ஆற்றும் இடைக்கால வலிநீக்கியே மதம்.

 

சிந்தனையாளர்களிடமிருந்து மூடநம்பிக்கையாளர்களிடம்

இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்கள் மதத்தைக் குறித்து அறிவுபூர்வமாக உரையாடத் தயங்கினார்கள். மதத்தைக் கடுமையாகக் குற்றப்படுத்திப் பேசுவதற்கு மட்டுமே முன்வந்தார்கள். அதன் விளைவாக, மதம்பற்றிய உரையாடல்கள், மதத்தைச் சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிடும் வேலைகள் தேங்கிப் போயின. மதம், சிந்தனையாளர்களிடமிருந்து சிந்திக்கும் திறனற்ற மூட நம்பிக்கையாளர்களுக்குக் கைமாறியது. இசுலாத்தை, இந்து மதத்தை, யூத மதத்தை, கிறித்தவத்தை என்று அறிஞர்களால் கைவிடப்பட்ட எல்லா மதங்களையும் பக்தர்கள் எனப்படும் அடிப்படைவாதிகள் கைப்பற்றிக்கொண்டார்கள். பக்தர்களின் மூடத்தனத்தைச் சகிக்க முடியாதவர்கள் கடவுளைக் கண்டனம் செய்தார்கள். ஆனாலும் கடவுளின் தேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.’

மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கும் மனம் சார்ந்த கடவுள் நம்பிக்கைக்கும் இடையில் ஒரு வெள்ளிக்கோடு வரையப்பட வேண்டியிருக்கிறது என்று முன்னிறுத்தும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக, “Secular Hindu, secular Muslim” (மதச் சார்பற்ற இந்து, மதச் சார்பற்ற முஸ்லிம்) என்னும் தலைப்பில் Rajeev Bhargava எழுதிய பத்தியின் சாரத்தைக் கோக்கலாம்:

‘மதச்சார்பின்மை என்பது என்ன என்ற கேள்வி எழும்போது, மதச் சார்பின்மை என்பது மதத்தை முற்றாக மறுதலிப்பது என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால், இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருக்கிறவர்கள் மதச் சார்பற்றவர்களாக இருக்கவே முடியாது என்று ஆகி விடுகிறது. இந்துவாகவும் முஸ்லிமாகவும் இருந்துகொண்டே மதச் சார்பில்லாமலும் இருக்கிறவர்களை இந்தப் பார்வை கண்டுகொள்ளாமல் விடுகிறது.

மதச்சார்பின்மை என்பது பல்வேறு மதங்களையும் ஒரே தன்மையுடன் ஆதரிப்பது என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால், மதம் என்பது மிகவும் புனிதமானது, எனவே ஆதரிக்கத் தகுந்தது என்று ஆகிவிடுகிறது. மதம் உண்டாக்குகிற சண்டைகள், சுரண்டல்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை இந்தப் பார்வை கண்டுகொள்ளாமல் விடுகிறது.

 

மதம் என்னும் அதிகார அமைப்பு

இரண்டு கருதுகோள்களுமே முழுமையானவையாக இல்லை. மதச்சார்பின்மை என்பதற்கு வேறு ஒரு வரையறை தரவேண்டியிருக்கிறது. அதன்படி, மதச்சார்பின்மை என்பது, நிறுவனமயமாக்கப்பட்ட, கெட்டிப்படுத்தி இறுக்கப்பட்ட மத வகைமைக்கு எதிராக நிற்றல்.

கெட்டிப்படுத்தப்பட்ட மதங்கள் உறுப்பினர்களின்மேல் தங்களுடைய விதிமுறைகளைத் திணிக்கின்றன. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவற்றைச் செய்தே ஆகவேண்டும். செய்ய முடியாது என்று தலை சிலுப்பிப் புரட்சிக் கொடி தூக்கும் சிலருக்கு அதிகார மத அமைப்பு முரட்டுத்தனமான தண்டனைகள் வழங்கும்.

எனவே, மதச்சார்பின்மை என்பது கடவுளுக்கு வழிகாட்டுகிற மதத்தைவிட்டு விலகி நிற்பதோ அதைக் கண்டனம் செய்வதோ அன்று; சடங்குகளாலும் விதிமுறைகளாலும் கெட்டிப்படுத்தப்பட்டு, அதிகாரம் செலுத்தி அனைவரையும் ஆட்படுத்த நினைக்கிற மத அமைப்பைக் கண்டிப்பதும் தட்டிக் கேட்பதும்தான். மதத்தின் பெயரால் அடாவடி செய்கிறவர் தன்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், அவரை, அவருடைய அரக்கத்தனமான அதிகாரத்தைக் கண்டிப்பதும் தட்டிக் கேட்பதும்தான் மதச் சார்பின்மை. திருமூலர் சொல்ல முனைவதும் இதைத்தான்:

கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்

சுத்த சிவன்எங்கும் தோய்வுஉற்று நிற்கின்றான்

குத்தந் தெரியார்; குணம்கொண்டு கோதாட்டார்;

பித்துஏறி நாளும் பிறந்துஇறப் பாரே (திருமந்திரம் 1538)

தங்களுடைய குரலைக் கேட்டு உலகம் கடுப்பாவது கழுதைகளுக்குத் தெரியாது. உலகத்தின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது தம்பாட்டுக்கு இன்பமாகக் கத்திக்கொண்டிருக்கும் அவை. அந்தக் கழுதைகளைப் போலவே காள் காளென்று கத்துகிறார்கள் மூதேவிகள் (கலதிகள்). என்ன இவ்வளவு கடுமையாகச் சொல்கிறார்? வேறு எப்படிச் சொல்வார்? பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருந்திருக்கிறது பரிபூரண ஆனந்தமாகிய சுத்த சிவம். அதனை உணர மாட்டாமல், ‘எங்கள் வழிக்கு வா, எங்கள் விதிகளைப் பின்பற்று, அப்போதுதான் இறையருள் பெறுவாய்’ என்று பாழ்த்த குரல் எடுத்துப் பாடினால், திருமூலர் கடுமையாகச் சொல்லாமல், பின் என்ன கொஞ்சுவாரா? தங்களுடைய குற்றத்தை உணர்கிற அறிவும்கூட இவர்களுக்குக் கிடையாது. இவர்களெல்லாம் பிறப்பார்கள், சாவார்கள், வேறேதும் ஆக மாட்டார்கள், பைத்தியக்காரர்கள்!

(திருமூலரின் சமத்காரம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23757311.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 30: தித்திப்பு என்கிறார் திருமூலர்

 

 
shivacol

ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை, தொண்டிப் பகுதிகளில் ‘துதல்’ என்றோர் இனிப்பு வகை மிகவும் புகழ் பெற்றது. கோதுமை மாவு, தேங்காய்ப் பால், கருப்பட்டி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவது. ‘துதலின் சுவை எப்படி இருக்கும்?’ என்று அதைத் தின்று பார்க்காதவர்கள் கேட்கலாம். ‘தேவ அமுதமாய் இருக்கும்!’ என்று அதைத் தின்று பார்த்தவர்கள் சொல்லலாம். ‘எனில் தேவ அமுதம் என்பது எப்படி இருக்கும்?’ என்று தின்று பார்க்காதவர்கள் அடுத்த கேள்வியைக் கேட்கலாம். யாருக்குத் தெரியும்? தேவ அமுதத்தைச் சுவைத்துப் பார்த்த தேவர்களையும் அசுரர்களையும் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? ஒருவேளை தேடிக் கண்டுபிடித்துக் கேட்டாலுந்தான் அவர்கள் என்ன சொல்வார்கள்? ‘மெய்மறக்க இனிக்கும்’ என்று சொல்வார்களாய் இருக்கும். கேட்கிறவர்களோ ‘மெய்மறக்க இனித்தல் என்றால் என்ன?’ என்று அடுத்த கேள்வி கேட்பார்கள்.

 

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?

மருப்புஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்!ஆழி வெண்சங்கே!

(நாச்சியார் திருமொழி, 64)

‘ஏ வெண்சங்கே! ஆனைக் கொம்பை ஒடித்த மாதவன், உன் வாயில் தன் வாய் வைத்து ஊதுகின்றானே! ஊதுகின்ற அந்தத் திருப் பவளச் செவ்வாய், கருப்பூரம் மணக்குமா? தாமரைப்பூ மணக்குமா? தித்திப்பாய் இருக்குமா? அறியார்வத்தை அடக்கமாட்டாமல் கேட்கிறேன்! சொல்!’ என்று சங்கை விசாரிக்கிறாள் ஆண்டாள்.

சுவையையும் மணத்தையும் சங்கு சொல்லுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். சொன்னாலும் கேட்கிறவரால் அதைத் தன்னுடைய அனுபவமாக ஆக்கிக்கொள்ள முடியுமா? இன்பங்களானாலும் சரி, துன்பங்களானாலும் சரி, தானே பட்டு அனுபவித்துத் தெரிந்துகொள்ளப்பட வேண்டியனவே தவிர, படித்தோ கேட்டோ தெரிந்துகொள்ளத் தக்கன அல்ல.

 

என் பாடு உனக்குத் தெரிந்திருக்கும்

மாணவர்கள் ஒரு தேர்வு எழுத வேண்டும். என்ன காரணம்பற்றியோ, பல நூறு காதங்கள் பயணம் செய்து போய், வேறோர் இடத்தில் அந்தத் தேர்வை எழுதுமாறு விதிக்கின்றன தேர்வுக்குப் பொறுப்பேற்றிருக்கிற அமைப்புகள். தாங்கள் படுகிற பாட்டைப் புலம்புகிறார்கள் மாணவர்களும் பெற்றோரும். வீக்கதூக்கம் பார்க்காமல் எல்லோருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டிய அமைப்புகளோ ‘யாம் அறியோம் பராபரமே’ என்று பொறுப்பு மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. படுகிறவர்களின் துன்பம், படாதவர்களுக்குத் தெரியாது.

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்;

கேடு இலாதாய்! பழி கொண்டாய்!

படுவேன் படுவது எல்லாம்நான்

பட்டால் பின்னைப் பயன்என்னே?

கெடுமா நரகத்து அழுந்தாமே

காத்துஆட் கொள்ளும் குருமணியே!

நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால்

நன்றோ எங்கள் நாயகமே?

(திருவாசகம், ஆனந்தமாலை, 4)

நான் எளியவன்; படுவதெல்லாம் படுகின்றேன்; பட்டுக் கெட்டு நாசமாகிக் கொண்டிருக்கின்றேன். துன்பக் கேணியில் நான் அழுந்தாமல் கைதூக்கிவிட வேண்டிய குருமணியே, நீயோ என்னைக் காப்பாற்றாமல், ‘எனக்கென்ன?’ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன், நல்லதுக்கும் பொல்லதுக்கும் நடுவில் நிற்கின்றவன் என்று உனக்குப் பெயர். ஆனால் நீயோ நடுநிலையில் நில்லாது, விரும்புகிற சிலரைச் சேர்த்துக்கொள்கிறாய்; விரும்பாத சிலரைக் கைவிடுகிறாய். இது நல்லதா? அது சரி. படுவதைப் பற்றியும் கெடுவதைப் பற்றியும் உனக்கு என்ன தெரியும்? நான் படுகின்றவற்றையெல்லாம் நீயும் பட்டிருந்தால், நான் கெடுவது மாதிரி நீயும் கெட்டிருந்தால், என் பாடு உனக்குத் தெரிந்திருக்கும்.

 

பட்டால்தான் தெரியும் பல்லிக்கு

ஆகவே, துதலின் இன்பமாய் இருந்தாலும் சரி, திருப்பவளச் செவ்வாயின் தித்திப்பாய் இருந்தாலும் சரி, பல நூறு காதம் தாண்டிப் போய்த் தேர்வெழுதும் மாணவர்களின் துன்பமானாலும் சரி, அவரவர் பட்டால்தான் தெரியும். ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று நம்முடைய மக்கள் பேசுவதில்லையா? ‘பட்டால்தான் தெரியும் பல்லிக்கு; சுட்டால்தான் தெரியும் நண்டுக்கு’ என்று வழங்குவதில்லையா?

துதலின் சுவையை அறிய விரும்பினால், துதலை வாங்கிச் சுவைத்துப் பார்த்துவிடுவதுதான் வழி. ‘மருப்பு ஒசித்த’ மாதவனின் வாய்ச்சுவையையும் நாற்றத்தையும் அறிய விரும்பினால், மாதவனை வளைத்திழுத்து இதழோடு இதழ் வைத்து முத்தாடிப் பார்த்துவிடுவதுதான் வழி. அல்லாது சுவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பதன்று.

ஒன்றுகண் டீர்உல குக்குஒரு தெய்வமும்

ஒன்றுகண் டீர்உல குக்குஉயிர் ஆவதும்

நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்

தின்றுகண் டேற்குஇது தித்தித்த வாறே (திருமந்திரம் 2962)

பல்வேறு பெயர்களில் தெய்வத்தைக் குறித்தாலும் தெய்வம் என்பது ஒன்றுதான். அது உலகத்துக்கு அப்பாலே நின்று, உலகத்தைத் தன் அதிகாரத்தால் ஏவிக் கொண்டிருக்கவில்லை; மாறாக, உடம்புக்குள் உயிர்போல உலகத்துக்குள்ளேயே நின்று எல்லாவற்றையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அதை நமச்சிவாயப் பழம் என்க. மிக நல்ல சுவை உடையது என்ன சுவை என்பீர்களேயானால், அனுபவித்துத் தின்று பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன்—தித்திப்பு என்கிறார் திருமூலர்.

 

எங்கனம் சொல்வேன்

தித்திப்பு என்பது சரி. என்ன மாதிரியான தித்திப்பு? திகட்டுகின்ற தித்திப்பா அல்லது திகட்டாத தித்திப்பா? விளக்குக என்றால், எவ்வாறு விளக்க?

திருமூலர் தன் இயலாமையைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார்:

முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய

சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (திருமந்திரம் 2944)

மகளுக்குத் திருமணம். நாற்றைப் பிடுங்கி நடுவதைப்போல வேற்றுக் குடும்பத்துக்குள் புகுத்தப் போகிறார்கள் மகளை. புகுந்த வீட்டில் மாமி இருப்பாள்; நாத்தூண் நங்கை இருப்பாள்; வேறொரு சூழல் இருக்கும். தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாவிட்டால் சங்கடப்பட்டுப் போவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து மகளுக்கு வாழ்க்கைப் பாடம் எடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் மணாளனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அனுபவம் தாய்க்குக் கிடையாது என்பது அன்று. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே.

‘கணவனோடு உறவாடி மகளைப் பெற்றவளே! அந்த உறவாட்டத்தில் நீ பெற்ற இன்பத்தை உன் மகளுக்குச் சொல்’ என்றால் தாய் எவ்வாறு சொல்வாள்? கருதிப் பார்க்க விரும்பாமல் எல்லாவற்றையும் கண்ணில் பார்க்க விரும்புகிறவர்களே! தனிநிலை அக அனுபவங்களை வெளிப்படுத்திக் காட்டச் சொல்லாதீர்கள். யாரும் அப்படிக் காட்ட முடியாது. எனவே, உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள்; அதில் தோயுங்கள். கண்டுகொள்வீர்கள் என்று கடவுளைத் தேடுதலைத் தனிநிலை அக அனுபவமாக்குகிறார் திருமூலர்.

துதலின் சுவை அறியும் அனுபவம்கூடத் தனிநிலை அனுபவம் என்ற நிலையில், தட்சிணைகளோடு தக்கவகையில் வழிபட்டால் கடவுள் அனுபவத்தையே கைவசப்படுத்தித் தருவதாகச் சொல்கிற மத நிறுவனங்களையும் மத ஆசிரியர்களையும்பற்றி என்ன சொல்ல?

பார்த்தவர் சொல்லவில்லை; சொன்னவர் பார்க்கவில்லை.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.

(விண்டு சுவைப்போம் திருமந்திரத்தை...)

http://tamil.thehindu.com/society/spirituality/article23826519.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 31: எல்லோர்க்கும் ஒரே குரல்

 

 
Uyir
 
 

‘மதச் சார்பின்மை’ என்ற சொல் கடவுளின்மீது ஈடுபாடு கொண்டவர்களிடத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ‘கடவுள் என்பவர் மதத்தில் குடிகொண்டிருப்பவர்; மதச் சார்பின்மை என்பதோ மதத்தைவிட்டு விலகி நிற்கச் சொல்வது; மதத்தைவிட்டு விலகி நிற்பது என்பது மதம் கையகப்படுத்தி வைத்திருக்கிற கடவுளை விட்டே விலகி நிற்பது; நாத்திகம் பேசுவதை ஒத்தது’ என்று அவர்கள் ஒருவேளை கருதக்கூடும்.

 

மேலைநாட்டுச் சூழலில் உருவாக்கப்பட்ட ‘மதச் சார்பின்மை’ என்பது, அடிப்படையில் ஓர் அரசியல் கருதுகோள். அரசு என்பது மக்களுக்கிடையில் எந்த வகையிலும் ஏற்ற இறக்கம் பாராமல், மதத்தின் பெயரால் பாகுபாடு பாராட்டாமல், அனைவரையும் சமமாகக் கருதிக் கடமைகள் செய்வதற்கான ஒரு பொது அமைப்பு.

எனவே, அரசும் அரசைச் செலுத்துகிறவர்களும், மக்களை ஏதோ ஓர் அடிப்படையில் பாகுபடுத்துகிற மத நிறுவனங்களிடமிருந்தும் மதப் பீடாதிபதிகளிடமிருந்தும் விலகி நிற்க வேண்டும் என்று பேசுவது மதச் சார்பின்மை. தேவாலயம் என்னும் அதிகாரப் பீடம், மதத்தின் பெயரால் மேலைநாட்டு அரசுகளை ஆக்கிரமித்து வைத்திருந்தபோது முன்னிறுத்தப்பட்ட கருதுகோள் இது.

அரசியல் அதிகாரத்தை மதத்திடமிருந்து விலக்கி வைப்பதற்காக முன்வைக்கப்பட்ட இந்த மதச் சார்பின்மைக் கருதுகோள், பின்னாளில், மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய எல்லாவற்றையுமே மதத்திடமிருந்து விலக்கி வைப்பதற்குப் பயன்படத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக, மதச் சார்பற்ற கல்வி, மதச் சார்பற்ற இசை, மதச் சார்பற்ற சமூகம், மதச் சார்பற்ற மானுடம் ஆகியவற்றைக் கருதலாம்.

 

மதச் சார்பற்ற மதம் உண்டா

‘மதச் சார்பற்ற’ என்ற முன்னொட்டு, மேற்சொன்ன பொது நிறுவனங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. அது மதங்களோடும் வந்து ஒட்டிக்கொண்டது. மதச் சார்பற்ற மதம்! அட, என்ன இது? மதச் சார்பற்ற மானுடம் என்பது சரி; மதச் சார்பற்ற மதம் என்பது சரியா? சொல்லிப் பார்க்கவே வேடிக்கையாகவும் முரணாகவும் இல்லையா?

மதம் என்பது என்ன? மதம் என்பது ஒரு நம்பிக்கை மரபு. கட்டமைக்கப்பட்ட ஏதேனும் ஒன்றை அளவிறந்த நம்பிக்கையோடு கட்டித் தழுவிக் கொள்வது. நமக்கான விடுதலையை அது கட்டாயம் வழங்கும் என்ற நம்பிக்கையில், விசாரணையே இல்லாமலுங்கூட, எல்லா நிலைகளிலும் தன்னை அதனோடு பிணைத்துக்கொள்வது. அந்த வகையில் கடவுளை நீக்கிய நம்பிக்கை மரபுகளையும் மதம் என்று அழைக்கலாம். முதலாளித்துவம், பொதுவுடைமைத்துவம், வல்லாண்மைத்துவம், தேசியம், நாத்திகம் என்பனவும்கூட மதங்கள்தாம்.

பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் பிரான்சில் கத்தோலிக்க மதத்தை எதிர்த்துப் பகுத்தறிவு மரபு (Cult of Reason) என்றொரு கடவுளற்ற மதம் உருவாக்கப்பட்டு அரசால் ஆதரிக்கவும் பட்டது. இவை எல்லாமே மதச் சார்பற்ற மதங்கள்; அதாவது கடவுளை நீக்கிய நம்பிக்கை மரபுகள். ஆனால், கடவுளை நம்புகிற மதங்களைப் போலவே இவற்றுக்கும் தனியான புனித நூல்கள், வழிபாட்டு நிலைகள், சடங்குகள், சண்டைகள், திருவிழாக்கள், ஊக்குவிப்புகள், தடைகள் என்று எல்லாமே இருக்கும்.

 

வைணவத்துக்கு நம்மாழ்வார் சைவத்துக்குத் திருமூலர்

கடவுளை நம்பாத மதங்களை விடுங்கள்; கடவுளை நம்புகிற மதங்களுக்குள்ளும் மதச் சார்பின்மை ஊடாடியிருக்கிறது. கத்தோலிக்க மரபில் ‘மதச் சார்பற்ற குருத்துவம்’ (secular clergy) என்ற வகைமை ஒன்று உண்டு. மதத்தோடு பிணைந்தவர்கள், மதத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் என்று கருதப்படுகிற யூதர்களிடையே மதச் சார்பற்ற யூதத்துவம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்; மதத்தின் அடிப்படையில் அல்லாமல் பண்பாட்டின் அடிப்படையில் தங்களை யூதர்களாக அடையாளம் காண்கிறவர்கள் இவர்கள்.

இசுலாமியர்களிலும் மத நம்பிக்கைகளை முன்மொழியாமல் பண்பாட்டு நடைமுறைகளை மட்டுமே முன்மொழிந்து, பண்பாட்டு முஸ்லிம்களாகத் தங்களை முன்னிறுத்துகிறவர்கள் இருக்கிறார்கள். இதே அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிற பண்பாட்டு இந்துக்களும் உண்டு. மதத்தை ஆதிக்க நிறுவனமாக அல்லாமல் கடவுள் நெறியாக மட்டுமே பார்க்கிறவர்களுக்கு மதச் சார்பற்ற மதம் வாய்க்கக் கூடியதுதான்.

தமிழ்நாட்டுக் கடவுள் நெறியில் சைவத்திலும் சரி, வைணவத்திலும் சரி, மதச் சார்பற்ற மதம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. வைணவத்துக்காக நம்மாழ்வாரும் சைவத்துக்காகத் திருமூலரும் அந்த முயற்சியை முன்னின்று செலுத்தியிருக்கிறார்கள்.

நம்மாழ்வார் பாடுகிறார்:

உளன் எனில் உளன்

அவன் உருவம் இவ்உருவுகள்;

உளன் அலன் எனில்

அவன் அருவம் இவ்அருவுகள்;

உளன் என இலன் என

இவை குணம் உடைமையில்

உளன் இரு தகைமையொடு

ஒழிவு இலன் பரந்தே.

(திவ்வியப் பிரபந்தம், 2907)

இறைவன் உண்டென்று சொன்னால், நீங்கள் காண்கின்ற எல்லாமே அவன்தான்; இறைவன் இல்லையென்று சொன்னால், நீங்கள் காணாத எல்லாமே அவன்தான். உண்மை, இன்மை ஆகிய இவ்விரண்டு தன்மைகளோடு எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் இறைவன்.

திருமூலர் பாடுகிறார்:

உள்ளத்தும் உள்ளன், புறத்துஉள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன், புறத்துஉள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை, புறத்துஇல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்துஇல்லை தானே.

(திருமந்திரம் 1532)

இறைவன் நம் உள்ளத்தில் இருக்கிறான் என்றால் உள்ளத்தில் இருக்கிறான்; புறத்தில் இருக்கிறான் என்றால் புறத்தில் இருக்கிறான்; அவன் உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பவர்க்கு இறைவன் எங்கும் இல்லை.

ஆகவே இறைவன் இருக்கிறானா, இல்லையா, எவ்வாறு இருக்கிறான், எங்கே இருக்கிறான், என்ன வடிவம், எது வழிபாடு என்பனவெல்லாம் அவரவருடைய தனி விவகாரங்கள். இவற்றை மதம் ஆக்கி, பின் மதத்தை அரசியல் ஆக்கி, பின் அதற்கு அதிகாரம் கோரி அரசுக்குள் மதத்தை இழுக்கிற வேலைகள் வேண்டாதவை. அருளாளர்களைப் பொறுத்தவரையில் அரசியல் மட்டுமல்ல; மதமுமே மதச் சார்பற்றதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது அதிகாரச் சார்பற்றதாக, ஆதிக்கச் சார்பற்றதாக இருக்க வேண்டும்.

 

ஏசு கலகக்காரரா?

அதிகாரச் சார்புள்ள மத நிறுவனத்துக்கு மாறாகப் பல இடங்களிலும் பேசுகிறார் ஏசுநாதர். மதப் பழைமைவாதிகளுக்குப் பொறுக்க முடியவில்லை. ஏசுவை இடக்குமுடக்காகச் சிக்க வைத்துக் கதையை முடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். ஏசுவிடம் போய் ‘யூதர்கள், அவர்களுடைய நாட்டை ஆக்கிரமித்திருக்கிற உரோமாபுரிப் பேரரசுக்கு வரி செலுத்த வேண்டுமா? தேவையில்லையா?’ என்று கேட்கிறார்கள்.

 ‘வரி செலுத்தத்தான் வேண்டும்’ என்று விடை சொன்னால், ‘ஏசு யூதர்களுக்கு எதிரானவர், ஆதிக்கப் பேரரசின் ஏவல் அடிமை, யூதத் தேசியத்துக்கு எதிரான இனத் துரோகி’ என்று தூற்றி, யூதர்களை அவருக்கு எதிராகத் தூண்டிவிடலாம். ‘வரி செலுத்தத் தேவையில்லை’ என்று சொன்னாலோ, ‘ஏசு யூத தேசியம் பேசுகிறவர், கலகக்காரர், பேரரசுக்கு எதிரான தேசத் துரோகி’ என்று ஏற்றி, ரோமாபுரிப் பேரரசிடம் அவரைக் காட்டிக்கொடுக்கலாம் என்பது மதப் பழைமைவாதிகளின் திட்டம்.

அவர்களது திட்டத்தை விளங்கிக்கொள்ளும் ஏசு, ‘வரி செலுத்த நீங்கள் பயன்படுத்தும் காசைக் காட்டுங்கள்’ என்றார். அவர்கள் வெள்ளிக் காசு ஒன்றைக் காட்டினார்கள். ‘இதில் யாருடைய உருவம் பதிக்கப்பட்டிருக்கிறது? யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது?’ என்றார். ‘இது சீசருடைய படம்; இதில் சீசரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது’ என்று விடை சொன்னார்கள். ஏசு சொன்னார்: ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுங்கள்; தேவனுக்கு உரியதை தேவனுக்குக் கொடுங்கள்!’ (மாற்கு 12:13-17)

‘சீசருக்கு இசைய நினைக்கிறவர்கள் சீசருக்கு இசையுங்கள்! தேவனுக்கு இசைய நினைக்கிறவர்கள் தேவனுக்கு இசையுங்கள்! யாருடைய குடியாக உங்களைக் கருதுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.’

‘நாம் ஆர்க்கும் குடி அல்லோம்’ என்கிறார் அப்பர். கடவுளை மறுக்காமல், கடவுளின் பெயராலான ஆதிக்கத்தை மறுக்கிறார்கள் இவர்கள். எல்லோர்க்கும் ஒரே குரல்.

(திருமந்திரத்தை விசாரிப்போம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article23903348.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 32: மலை, மரம், உடம்பு

 

 
shutterstock669901198%20Convertedcol
 
 

உலகம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு மாந்தர்கள் விடை சிந்தித்திருக்கிறார்கள். அறிவியல் கூரோடு சிந்தித்த ஆசீவகவாதி இப்படியாகச் சொல்கிறான்.

 

அவ்அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்

பெய்வகை கூடிப் பிரியவும் செய்யும்;

நிலம்நீர் தீக்காற்று எனநால் வகையின

மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்;

வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்.

(மணிமேகலை, சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, 114-118)

நிலம், நீர், தீ, காற்று என்று நால்வகை அணுக்கள். புலன்களால் நேரடியாக அறிய முடியாத அளவுக்கு நுணுக்கமாக இருக்கும் இந்த நால்வகை அணுக்கள், நாம் தொட்டும் கண்டும் உணர்ந்துகொள்ளும் வகையில், ஒன்றோடு ஒன்று கலக்கும் வீதத்தில் கலந்து, மலை, மரம், உடம்பு என்று பல்வேறு பொருள்களாக ஆகித் திரளவும் செய்கின்றன; தங்களுக்குள்ளாகவே பகுப்படைந்து, பிரிந்து, பல்வேறாகிப் பெருகவும் செய்கின்றன.

மதங்கள் உருவான கதையும் இதுதான். கடவுள், உயிர், இவ்வுலகம், அவ்வுலகம் என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வீதத்தில் கலந்து பெருமதங்களாகித் திரளவும் செய்கின்றன; தங்களுக்குள்ளாகவே பகுப்படைந்து, பிரிந்து, பல்வேறாகிப் பெருகவும் செய்கின்றன. கடவுள் உட்பட ஒன்றுமே இல்லை என்று ஒரு மதம்; கடவுளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்று ஒரு மதம்; உலகம் மட்டுமே உண்டு என்று ஒரு மதம்; உலகமும் உயிரும் மட்டுமே உள்ளன என்று ஒரு மதம்;

கடவுள், உயிர், இவ்வுலகம், அவ்வுலகம் என்று எல்லாமே உண்டு என்று ஒரு மதம்; கடவுள் இருக்கிறார் என்பது சரி, ஆனால் யார் கடவுள் என்று வரும்போது கடவுளை வெவ்வேறாக அடையாளம் காட்டும் பல மதங்கள்; ஒரே கடவுளை அடையாளம் காட்டினாலும் அவரை வழிபடும் முறையால் தனித்தனியாக வேறுபட்டு நிற்கும் சில மதங்கள்; கடவுள் உயிரை எவ்வாறு ஆட்கொள்வார் என்று வகைவகையாக விளக்கப்படுத்தும் பல மதங்கள்—என்று இவ்வாறாகத் திரண்டும் பெருகியும் நிற்கின்றன மதங்கள்.

பிரிந்து பெருகிக் கிடக்கிற மதங்கள் ஒருங்கிணைந்து ஒன்று திரள்வது நல்லதா, திரண்டு கிடக்கிற மதங்கள் பிரிந்து பெருகுவது நல்லதா? அது காலத்தின் தேவையைப் பொறுத்தது. பானை செய்கிற குயவரின் விரல்கள் எந்தப் போக்கில் வளைகின்றனவோ அந்தப் போக்கிலேயே வளைந்து பானை உருப்பெறுவதைப் போல, காலம் வகிர்ந்துவிட்டால் ஒன்றிக் கிடப்பவை பிளந்துபடுகின்றன; காலம் குழைத்துவிட்டால் பிளந்து கிடப்பவை ஒருங்கிணைகின்றன.

 

சைவத்தில் இத்தனை திறங்களா

திருமூலர் காலத்தில் சைவம் ஒற்றை மதமாக இல்லை. வாமம், வயிரவம், பாசுபதம், மாவிரதம் என்ற காபாலிகம், காளாமுகம், ஐக்கியவாத சைவம் என்று ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தது. இவை தவிரத் தமிழ்நாட்டில் வழங்கும் சித்தாந்த சைவம், காசுமீரத்தில் வழங்கும் காசுமீர சைவம், லிங்காயத்தை உடன்வைத்துக் கருநாடகத்தில் வழங்கும் வீரசைவம்.

இவையும் போகப் பேதவாத சைவம், பாடாணவாத சைவம், சிவசங்கிராந்த சைவம், ஈசுவர அவிகார சைவம், சிவாத்துவைத சைவம், ஊர்த்துவ சைவம், அனாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம், நிர்க்குண சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம் என்று எண்ணற்றுப் பெருகிக் கிடந்த சைவக் குறும்பிரிவுகள். ‘சைவத்தில் இத்தனை திறங்களா!’ என்று மலைப்பாக இருக்கிறதல்லவா? வழிபடும் கடவுள் ஒன்று; அந்தக் கடவுளைப் பற்றிய கருத்து நிலைகள், வழிபடும் முறைகள் வேறு வேறு.

‘இருப்பது ஒன்றே ஒன்று; ஆகவே கையைக் கட்டு, வாயைப் பொத்து’ என்று இறுக்கிப் பிடிப்பதைக் காட்டிலும், ‘இருப்பது எதுவோ அதை நீ எண்ணிய வண்ணம் கருதிக்கொள்ளலாம்; ஆகவே வசதிபோலக் கையைக் காலை நீட்டு; கிடக்க விரும்பினால் கிட; இருக்க விரும்பினால் இரு; நிற்க விரும்பினால் நில்; இயல்பாக இரு’ என்று விட்டுப் பிடிப்பதுதானே நல்லது? குட்டையும் நெட்டையுமாய், கனமும் மெலிவுமாய், கரவும் செறிவுமாய், கறுப்பும் வெளுப்புமாய் மனிதர்கள் பல சாயல்கள் உடையவர்கள் இல்லையா? அவர்களுடைய கருத்து நிலைகளும் அப்படித்தானே?

அங்கையுள் அனலும் வைத்தார்;

அறுவகைச் சமயம் வைத்தார்;

தம்கையில் வீணை வைத்தார்;

தம்அடி பரவ வைத்தார்;

திங்களைக் கங்கை யோடு

திகழ்தரு சடையுள் வைத்தார்;

மங்கையைப் பாகம் வைத்தார்

மாமறைக் காட னாரே

(தேவாரம் 4:33:6)

-என்று பாடுகிறார் அப்பர். திங்களையும் கங்கையையும் தலையில் வைத்துக்கொண்ட இறையனார், மங்கையைத் தன்னில் ஒரு பாகமாகவே வைத்துக்கொண்டார்; ஒரு கையில் வீணை வைத்துக்கொண்டார்; ஒரு கையில் அனலை வைத்துக்கொண்டார். எதையும் தள்ளவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இடம். இவற்றையெல்லாம் தனக்காக வைத்துக்கொண்டவர், மனிதர்களுக்காக ஆறு வகைச் சமயம் வைத்தார். ‘எவ்வண்ணம் கருத விரும்புகிறாயோ அவ்வண்ணமே என்னைக் கருது; எவ்வண்ணம் என்னைப் பரவ விரும்புகிறாயோ அவ்வண்ணமே என்னைப் பரவு’ என்று, கைகட்டி வாய்பொத்தச் சொல்லாமல், தன்னையும் தந்து என்னையும் விடுதலையாக்கினார் வான்கருணை வள்ளல்.

 

ஒருமை பாடும் திருமூலர்

சனங்களுக்காகச் சிவனார் வைத்த நெறி ஆறு என்று அப்பர் பன்மை பாட, சிவ நெறி ஒன்றே ஒன்று என்று ஒருமை பாடுகிறார் திருமூலர்:

சைவ சமயத் தனிநா யகன்நந்தி

உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;

தெய்வச் சிவநெறி, சன்மார்க்கம், சேர்ந்துஉய்ய

வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே. (திருமந்திரம் 1567)

சைவ சமயத்தின் தனித் தலைவனாகிய இறையனார் சனங்கள் உய்வதற்காகத் தானே வகுத்து வைத்த அறிவு நெறி ஒன்று உண்டு. அது உண்மை நெறியாகிய சிவநெறி. உய்வடைய நினைப்பவர்களுக்கு அதுவே வழி.

ஒரே சமயத்தைத் தழுவி, ஒரே இறைவனைப் பாடிய இருவர் பார்வையிலும் எவ்வளவு வேறுபாடு! உண்மையில் அது வேறுபாடுதானா? தோண்டிப் பார்க்கலாம்.

மெய்யியலில் கடைப்பிடித்தே ஆக வேண்டிய மரபு ஒன்று உண்டு. பேசுவது எதைப் பற்றியானாலும் முதலில் தான் அதைக் கருதிய விதம் எவ்வாறு என்பதை வரையறை செய்துவிட்டுப் பிறகு பேச வேண்டும்; பயன்படுத்தும் பதங்கள் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டுப் பிறகு பேச வேண்டும். பொருள் குழப்பம் இல்லாமல் இருக்க இந்த வழிமுறை.

சைவம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறை செய்தவர் திருமூலர்.

சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல்;

சைவம் தனைஅறிந் தேசிவம் சாருதல்;

சைவம் சிவம்அன்றிச் சாராமல் நீவுதல்;

சைவம் சிவானந்தம்; சாயுச் சியமே. (திருமந்திரம் 1512)

இதற்கென்ன வரையறை? சிவனைக் கும்பிட்டால் சைவம். இதைப் போய் வரையறை செய்ய வேண்டுமா என்றால், சிவனைக் கும்பிட்டால் மட்டுமே சைவம் கிடையாது; சிவனோடு சம்பந்தம் ஆனால்தான் சைவம். தான் யார் என்று அறிந்து, சிவம் யார் என்று உணர்ந்து, சிவத்தையே சார்ந்து கொள்ளுதல் சைவம். சிவத்தைச் சார்ந்துகொண்டபின் வேறெதையும் சாராமல் விலகி நிற்றல் சைவம். சிவ இன்பத்தில் தோய்ந்திருத்தல் சைவம். சிவத்துக்குள் ஒன்றிப்போதலே சைவம். முரட்டுச் சைவம் பேசுகிறாரோ திருமூலர்?

(தொடர்வோம் திருமூலரை...)

http://tamil.thehindu.com/society/spirituality/article23969946.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 33: ஊர் புகுவோர் ஊர் புகுக

 

 

 
Shivam

மிழை மையமாக வைத்துக்கொண்டு யார் தமிழர் என்று பல தினுசுகளில் வரையறுக்கப்படுவதுபோல, சிவத்தை மையமாக வைத்துக்கொண்டு யார் சைவர் என்பதும் பல தினுசுகளில் வரையறுக்கப்பட்டிருந்தது.

 

திருநீறு, உருத்திராக்கம் ஆகிய சிவச் சின்னங்கள் பூண்டு சிவவேடம் தரித்தவர்கள்தாம் சைவர்கள் என்றால், சிவவேடம் இவற்றுடன் நின்றுவிடுகிறதா? கையில் கபாலம் ஏந்துதல், மண்டையோட்டு மாலை புனைதல் போன்றவை சிவ வேடம் ஆகாதா? பிட்சாடனக் கோலத்தில் உடையேதும் இன்றிக் ‘கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்’ நக்கனாகத் திரிந்த சிவனைப்போலத் திரிவது சிவ வேடம் ஆகாதா?

சிவத் தீட்சை பெற்றவர்தாம் சைவர் என்றால் நாயன்மார்களில் பாதிப் பேர் சிவத்தீட்சைப் பெறவில்லையே, அவர்களைத் தள்ளிவிடலாமா? குலப் பிறப்பாளர்தாம் சைவர் என்றால் நந்தனாரைக் கொளுத்திவிடலாமா? புலால் உண்ணாதவர் சைவர் என்றால் தானும் புலால் உண்டு அதையே தன் தலைவனுக்கும் படைத்த ஒப்பிலா அன்புடைய கண்ணப்பனைக் கைகழுவி விடலாமா? சைவத் திருமுறைகளை நாளும் ஓதுகிறவர்கள், சைவச் சடங்குகளை நாள் தவறாமல் செய்கிறவர்கள்தாம் சைவர்கள் என்றால் சாக்கிய நாயனார் சைவ நீக்கம் செய்யப்பட்டுவிட மாட்டாரா?

 

காந்தியம் கதர் மட்டுமா

இவையெல்லாம் புற அடையாளங்கள். இவையா ஒரு சைவனை அடையாளம் காட்டும்? ஆம் என்றால், ‘காந்தியர் என்பவர் யாரெனில் நாளும் கதர் அணிபவர்தாம்’ என்று சொல்வதற்கு நிகர் இல்லையா அது? காந்தியம் என்பது கதர் மட்டுந்தானா?

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு. (குறள் 79)

மனித உடம்பு கன்ம இந்திரியங்கள் என்று சொல்லப்படுகிற ஐந்து தொழிற் கருவிகள் உடையது. கருத்துப் பரிமாறப் பேச்சுத் தொழில் செய்வதற்கு வாய், கொடுத்து அறத் தொழில் செய்வதற்குக் கைகள், நடந்து இடம் பெயரும் தொழில் செய்வதற்குக் கால்கள், கழிவை வெளியேற்றும் தொழில் செய்வதற்கு எருவாய், இனப் பெருக்கும் தொழில் செய்வதற்குக் கருவாய். அறத் தொழில் செய்யவே புறத்து உறுப்புகள். ஆனாலும் அகத்து உறுப்பாகிய அன்பு தூண்டாவிட்டால், புறத்து உறுப்புகள் என்ன செய்யும்? அவற்றால் என்ன பயன்?

‘ஆஜானுபாகு’ என்று வடமொழியில் ஒரு சொல்வழக்கு. முழங்கால்வரை நீண்ட கைகள் என்று பொருள். நீண்ட அகன்ற கைகள் இருந்தால் நிறைய அள்ளிக் கொடுக்கலாந்தான்; பெருவீச்சாக வாள் வீசலாந்தான். ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கும் பெருவீச்சாய் வீசுவதற்கும் அகம் துணியாவிட்டால், புறம் ஆஜானுபாகுவாக இருந்து என்ன பயன்?

 

கண்டது வேறென்ன

கொடைக்கு அடையாளம் நீளமான கைதான் என்றால் உலகின் மிகப்பெரிய கொடையாளியாக யானைதான் இருக்கும். எவ்வளவு நீளத் தும்பிக்கை அதற்கு? அவ்வளவு நீளத் தும்பிக்கையை வைத்து அது வாங்கும் தொழில்மட்டும் செய்கிறதே ஒழியக் கொடுக்கும் தொழில் செய்வதில்லை.

இருகை யானையை ஒத்திருந்து என்உளக்

கருவை யான்கண்டி லேன்; கண்டது எவ்வமே!

வருக என்றுப ணித்தனை; வான்உளோர்க்கு

ஒருவ னே!கிற்றிலேன்! கிற்பன் உண்ணவே!

(திருவாசகம், திருச்சதகம், 41)

-என்று தன்னை இருகை யானையாக உருவகித்துப் பாடுகிறார் மாணிக்கவாசகர். யானைக்கு ஒரு கை; தன் ஒற்றைக் கையால் எடுத்துத் தின்கிறது; நெற்றியில் கையிட்டு வணக்கம் வைக்கிறது. எனக்கோ இரு கைகள். என் இரு கைகளாலும் எடுத்துத் தின்றேன்; கும்பிட்டு வணக்கம் வைத்தேன். என் இறைவா! ‘உனக்குள்ளே இருக்கிறேன் வா, வா’ என்று என் மனத்துக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்! வந்தேனா? இல்லையே? அள்ளி அள்ளித் தின்றேன்! அடங்காது துன்புற்றேன்! கண்டது வேறென்ன?

ஓர் ஆளின் சாரத்தை அவனுக்குப் புறத்தில் இருப்பனவா தீர்மானிக்கின்றன? அகத்தில் இருப்பதல்லவா? வேடமும் சடங்குகளுமா ஒருவரை அடையாளம் காட்டுகின்றன? நெஞ்சு எங்கே நெக்குருகும், உள்ளம் எதனோடு இசைந்தோடும், அன்பு எப்போது கரை புரளும், இருதயம் யாருக்கு இதழ் மலரும் என்பன அல்லவா எவரையும் அடையாளம் காட்டுகின்றன?

திருமூலருக்கும் அதுதான் கருத்து. புற வேடங்களின் வழியாகச் சைவரை அடையாளம் காட்டிச் சண்டையிட்டுக் கொண்டிருந்த அனைவரையும் மறுதலித்து அக அடையாளத்தை முன்னிறுத்துகிறார் திருமூலர்:

பிறைஉள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்;

நிறைஅறி வோம்என்பர், நெஞ்சிலர் தாமே.

(திருமந்திரம் 2512)

கண்டம் கறுத்த இறைவனைக் காணும் வகை தெரியாதவர்களே! எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல, ‘என் வழி தனி வழி’ என்று பிதற்றித் திரிகிற, நெஞ்சிலா மூடர்களே! ‘நிலாவிடத்தில் ஒரு கறை இருக்கிறது. அந்தக் கறை முயல்போல இருக்கிறது. பிறைக்குள் கறையாக இருக்கும் அந்த முயலை இங்கிருந்தே வெட்டுகிறேன் பார்’ என்று வாளை எடுத்து ஒருவன் வீசினால் அவன் மடையன் இல்லையா? இறைவனைச் சார்ந்து நிற்கும் வழி எது என்று தெரியாமல், ‘இதுதான் வழி; அதுதான் வரையறை’ என்று சொல்லித் திரிகிற நீங்களும் அவனையே போன்றவர்கள் இல்லையா?

இத்தவம் அத்தவம் என்றுஇரு பேர்இடும்

பித்தரைக் காணில் நகும்எங்கள் பேர்நந்தி;

எத்தவம் ஆகில்என்? எங்குப் பிறக்கில்என்?

ஒத்துஉணர் வார்க்குஒல்லை ஊர்புகல் ஆமே.

(திருமந்திரம் 1568)

இந்த நெறி, அந்த நெறி என்று வெவ்வேறு பெயரிட்டு இரண்டுபட்டு நின்று அடித்துக்கொள்கிறவர்களைக் கண்டால் எங்கள் இறைவன் சிரிப்பான். எந்த வழி வந்திருந்தால் என்ன? எங்குப் பிறந்திருந்தால் என்ன? உள்ளத்தில் ஒத்துணர்ந்தால் ஊருக்குள் புகலாம். ஊர் புகுவார் ஊர் புகுக; பேர் புகுவார் பேர் புகுக.

(மெய் காண்போம்...)

http://tamil.thehindu.com/society/spirituality/article24037036.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 34: கடவுள் கோப்பையாகவே இருக்கிறார்

 

 

 
shutterstock408651511

மால்அறியா நான்முகனும்

காணா மலையினைநாம்

 

போல்அறிவாம் என்றுஉள்ள

பொக்கங்களே பேசும்

பால்ஊறு தேன்வாய்ப்

படிறீ கடை திறவாய்...

(திருவாசகம், திருவெம்பாவை, 5)

என்று ஒரு மணிவாசகப் பாட்டு. தெரிந்த கதைதான். திருமாலுக்கும் நான்முகனுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வந்தது. ‘நான்’, ‘நான்’ என்றார்கள் இருவரும். யார் என்று இறுதி செய்துகொள்வதற்காகச் சிவனாரிடம் போனார்கள். அண்ணாமலையாய் எழுந்து நின்ற சிவனார், ‘ஒருவர் அடியைத் தேடுக; மற்றவர் முடியைத் தேடுக; முதலில் கண்டு வந்தவர் முதல்வர்’ என்றார். முதல்வராகும் தகுதியை இருவருமே பெறவில்லை என்று கதை.

நிலவரம் அப்படியிருக்க, ‘திருமாலும் நான்முகனும் கண்டறிய முடியாத அண்ணாமலையினை நான் அறிவேன்’ என்று சொன்னாளாம் ஒருத்தி. ‘அடி வஞ்சகீ! எவ்வளவு பெரிய பொய்? உப்புச்சப்பில்லாத பச்சரிசி மாவுக் கொழுக்கட்டையை, வெல்லப்பாகும் தேங்காய்ப்பாலும் ஊற்றிப் பால் கொழுக்கட்டை ஆக்கிச் சுவையுணவாக ஆக்குவதைப்போல, உன்னுடைய பச்சைப் பொய்யைப் பாலும் தேனும் கலந்த இனித்த சொற்களில் ஊறப் போட்டுப் மெய்போலத் தோற்றுவிக்கிறாயேடீ, புளுகுணி மட்டை! வெள்ளென எழுந்திருந்து மார்கழி நீராடிச் ‘சிவனே சிவனே’ என்று நினைந்து வழிபடத் துப்பில்லாதவள், எட்டு ஊருக்குப் பேசும் பேச்சைப் பார்த்தாயா, வெண்கலக் கட்டை, கதவைத் திறடீ!’ என்று சினந்தார்களாம் தோழிமார்கள்.

‘பொக்கம்’—அழகாக இருக்கிறது இல்லையா இந்தச் சொல்? பொக்கம் என்றால் பொந்து. மரத்திலும் கல்லிலும் உள்ள பொந்து. உள்ளீடாக ஒன்றுமே இல்லாமல் வெற்றுக் குடைவாக இருப்பது. பல் என்கிற உள்ளீடு இல்லாமல் வெறும் பொந்தாக இருக்கும் வாய் பொக்கை வாய்; உள்ளீடு இல்லாத வெற்றுக் கடலைக்குப் பெயர் பொக்குக் கடலை; உள்ளீடு இல்லாத சிறிய கொப்புளத்துக்குப் பெயர் பொக்குளம்; கருதத்தக்க உள்ளீடாக ஒன்றுமில்லாமல் எதையோ நிரப்பி வைத்திருக்கும் பிச்சைக்காரனின் பைக்குப் பெயர் பொக்கணம்; உள்ளீடற்றுச் செய்யப்படும் சம்புடத்துக்குப் பெயரும் பொக்கணம்; உள்ளீடற்ற பொக்கணங்களில் அரும்பெரும் பொருள்களைப் பதுக்கி வைத்தால் அது பொக்கிஷம்.

 

சாம்பல்தானே பொக்கம்தானே?

சம்புடம்போலவே உள்ளீடு இல்லாமல் உட்குழிந்திருக்கும் மண்டையோடும் பொக்கணந்தான். இந்தப் பொக்கணத்தைச் சம்புடமாகப் பாவித்துத் திருநீறு வைத்துக்கொள்வார்கள் சில சைவர்கள். திருநீறும் உள்ளீடற்று, வெறும் அடையாளமாக, வெண்ணிலையாக இருக்கிற, சாம்பல்தானே? பொக்கம்தானே?

நக்கன்காண்; நக்கரவம்

அரையில் ஆர்த்த

நாதன்காண்; பூதகணம் ஆடஆடும்

சொக்கன்காண்; கொக்குஇறகு

சூடி னான்காண்;

துடிஇடையாள் துணைமுலைக்குச்

சேர்வதுஆகும்

பொக்கன்காண்; பொக்கணத்த

வெண்நீற் றான்காண்...

(தேவாரம், 6:87:2)

உடுத்த உடை இல்லாத நக்கன்; அரைஞாணாகக் கட்டிக்கொள்ள வெள்ளிக் கொடியோ பட்டுக் கயிறோ இல்லாது நச்சுப் பாம்பெடுத்து இடையில் சுற்றிக்கொண்ட நாதன்; குற்றேவல் பூதங்களை ஆட்டத் தானே நின்றாடும் சொக்கன்; சூடிக்கொள்ள மயிலிறகும் கிடைக்காமல் கொக்கின் இறகைச் சூடிய திக்கன். ஆகமொத்தம் ஆண்டி. போகட்டும். இவ்வளவு சொன்ன திருநாவுக்கரசர் மேலும் சொல்கிறார்: அவன் உள்ளீடே இல்லாத பொக்கன். ‘இதென்ன கதை? இறைவனாக இருக்கிறவன் உள்ளீடே இல்லாத பொக்கனாக எப்படி இருக்க முடியும்?’ என்றால், அவன் மங்கை பாகன் இல்லையா? துடி இடையாளின் துணை முலைக்குத் தன்னில் ஒரு பாதி இடம் கொடுத்த பங்கன் இல்லையா? இடம் கொடுப்பது எப்போது நிகழமுடியும்? ஓர் இடத்தில் வேறு ஏதும் இல்லாமல், அந்த இடம் பொக்கமாக இருந்தால்தானே ஒரு பொருளுக்கு இடம் கொடுக்க முடியும், அந்தப் பொருள் அந்த இடத்தை நிரப்ப முடியும்? இறைவி இறைவனை நிரப்புகிறாள் என்றால் அவன் உள்ளீடற்ற பொக்கன்தானே? பொக்கனாகிய அவன் பொக்கணமாகிய மண்டையோட்டுச் சம்புடத்தில் பணமதிப்பற்ற பொக்கமாகிய திருநீற்றை வைத்திருக்கிறான் என்று பேசுகிறார் திருநாவுக்கரசர்.

பொக்கம் என்றால் பொய் அல்லவா? வஞ்சகம் அல்லவா? இறைவன் பொக்கன் என்றால் அவன் பொய்யனா? வஞ்சகனா என்றொரு கேள்வி எழக்கூடும். உள்ளீடற்ற ஒன்று உள்ளீடு உள்ளதாகத் தன்னைக் காட்டிக்கொண்டால் அது பொய்; வஞ்சகம். எம்பாவைப் பெண் அதனால்தான் ‘பொக்கம் பேசும் வஞ்சகீ’ என்று தோழிகளால் செல்லம் கொஞ்சப்படுகிறாள். ஆனால் உள்ளீடற்ற ஒன்று உள்ளீடற்றதாகவே தன்னை முன்வைத்தால் அது எப்படிப் பொய்? எப்படி வஞ்சகம்? அதுதானே மெய்? தான் உள்ளீடற்ற பொக்கன் என்பதைக்கூட வெளிப்படக் காட்டும் இந்த இறைவன் பொய்சொல்லா மெய்யன் இல்லையா?

 

தனக்குள் இருத்திக்கொள்கிற இறைவன்

உள்ளீடற்ற கடவுள் என்கிற கருதுகோள் எவ்வளவு பெரிய வரம்! கோப்பை உள்ளீடற்றதாக இருந்தால் அதில் நம் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் ஊற்றி நிரப்பிக்கொள்ளலாம் அல்லவா? தேநீர் ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் தேநீரை ஊற்றிவிட்டு, இது தேநீர்க் கோப்பை எனலாம்; மது ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் மதுவை ஊற்றிவிட்டு, இது மதுக்கோப்பை எனலாம்; தண்ணீர் ஊற்றி நிரப்ப விரும்புகிறவர் தண்ணீரை ஊற்றிவிட்டு, இது தண்ணீர்க் கோப்பை எனலாம். ஆனால் கோப்பையோ இவற்றில் எந்தக் கோப்பையும் அன்று; அது உள்ளீடற்ற காலிக் கோப்பை; எதை வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளுமாறு எல்லாவற்றுக்கும் இடம்தந்து நிற்கிற பொக்கணம்.

ஆதாரம், ஆதேயம் என்று திருமந்திரத்தில் பேசப்படும். ஆதாரம் என்பது எல்லாவற்றையும் தாங்குவது. ஆதேயம் என்பது அதில் தங்குவது. இறைவன் ஆதாரம். ஏனைய எல்லாம் ஆதேயங்கள். இறைவன் ஆதாரமாக இருந்து, அதாவது உள்ளீடற்றவனாக இருந்து எல்லாவற்றையும் தாங்குகின்றான்; தனக்குள் இருத்திக்கொள்கின்றான்.

இறைவன் ஒன்றுமற்றவன். பொக்கன். எல்லாவற்றுக்கும் இடம் தருகிறவன் எனில் அப்படித்தானே இறைவனைப் பார்க்க வேண்டும்? நம் விருப்பத்தின்பேரில் அவனுக்குள் எது எதையோ ஊற்றி நிரப்பிவிட்டு, ‘இவன்தான் இறைவன்; இனிதே காண்க’ என்றால் அது சரியா? வண்ணங்களற்ற இறைவனுக்குச் சமயங்கள் தத்தமக்குத் தோன்றிய வகையில் ‘மஞ்சள் போடு, சிவப்புப் போடு, நீலம் போடு’ என்று வண்ணம் பூசி விடுகின்றன. ஆறு சமயங்கள்; ஆறு வண்ணங்கள்; ஆறு இறைவர்கள் என்றால் அது முறையா? ஆறாகவும் பத்தாகவும் பிரிந்து நிற்க, இறைவன் என்ன ஐபிஎல் கிரிக்கெட்டின் வண்ணத் தூதுவனா அல்லது அணி முதலாளியா?

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு

சமையங்கள் பெற்றனர்; சாத்திரம் ஓதி,

அமைஅறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்

கமைஅறிந் தார்உள் கலந்துநின் றானே.

(திருமந்திரம் 1550)

மலைகளைப்போல வணங்காமல் நிற்கிற தேவர்கள் அவரவர் சார்புகளுக்கு ஏற்ப ஆறு சமயங்களின் வழியாகக் கடவுளைத் தேடினர். அந்தந்தச் சமயங்களின் சாத்திரங்களைக் கற்றனர்; ஓதினர். ஓதிவிட்டதாலேயே கடவுளை அறிந்துவிட்டோம் என்று கூவினர். ஆனால் கடவுளோ அவர்களுக்குத் தோன்றாமல், யார் என்ன சொல்லிக் கூவினாலும் பொறுத்துக்கொண்டு வண்ணத்தை அல்லாமல் சாரத்தை நாடுகிறவர்களின் உள்ளத்தில் தோன்றி நின்றான். அப்படியென்றால் அந்த ஆறு சமயங்கள்?

நூறு சமயம் உளவா நுவலுங்கால்;

ஆறு சமயம்அவ் வாறுஉள் படுவன;

கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா

ஈறு பரநெறி இல்லா நெறிஅன்றே.

(திருமந்திரம் 1537)

ஆறென்ன ஆறு? பார்க்கப் போனால் நூறு சமயங்கள் இருக்கின்றன; அதற்கு மேலும்கூட இருக்கலாம். எல்லாமே ஆளுக்கொரு கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டு, அதில் எதையோ ஊற்றி நிரப்பிக்கொண்டு, கடவுள் எங்கள் கோப்பைக்குள் இருக்கிறார் என்கின்றன. ஆனால் கடவுள் கோப்பைக்குள் இல்லை; கோப்பையாகவே இருக்கிறார் என்று அவற்றுக்குப் புரியவே இல்லை. இவற்றின் நெறிகள் எதுவும் இறைவனுக்கு இட்டுச் செல்லும் நெறிகள் இல்லை.

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்,

பொக்கம் மிக்கவர் பூவும்நீ ரும்கண்டு

நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே

(தேவாரம், 5:90:9)

-என்கிறார் திருநாவுக்கரசர். எந்தப் பாவனையும் இல்லாமல் நெகிழ்ந்து நிற்பவர்களின் நெஞ்சுக்குள் தானாகவே நுழைந்துவிடுகின்ற இறைவன், நெஞ்சில் பொய்யோடும் கையில் பூவோடும் நிற்பவர்களைக் கண்டு கேலியாகச் சிரிப்பானாம்.

பொக்கம் விட்டால் பக்கம் வருவான் பொக்கன்.

(வஞ்சம் விடுவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article24096438.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 35: ஏல நினைப்பவருக்கு இன்பம் செய்தானே

 

 
shutterstock742417849

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களை நால்வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். இயற்சொல் என்பது இயல்பான வழக்குச் சொல்; கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் விளங்கும் சொல். நீர், மலை என்பதைப் போல. திரிசொல் என்பது பொருள் திரிந்த சொல். ஒரு சொல் பல பொருள்களைச் சுட்டலாம்; அல்லது பல சொற்கள் ஒரு பொருளைச் சுட்டலாம்; வெற்பு (மலை), கிள்ளை (கிளி) என்பதைப் போல. கல்லாதவர்கள் பொருள் உணர்வது கடினம். படித்தவர்கள் யாராவது பொருள் சொல்ல வேண்டும். திசைச்சொல் என்பது செந்தமிழ் நிலத்தின் பக்கத்து நிலங்களில் வழங்கும் சொற்கள்.

தாயைத் தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றும் வழங்குவதைப் போல. வடசொல் என்பது வடமொழிகளில் வழங்கும் சொல். அந்தச் சொல்லில் வட எழுத்து இருந்தால் அந்த எழுத்தை நீக்கித் தமிழ் ஒலிப்பு முறைக்குப் பொருந்துமாறு அதை மாற்றி வழங்குதல். பங்கஜத்தைப் பங்கயம் என்றும் பக்ஷி என்பதைப் பட்சி என்றும் வருஷத்தை வருடம் என்றும் வழங்குதைப் போல.

 

சில திரிசொற்களை நம் ஆட்கள் தமிழ் என்றே நம்ப மாட்டார்கள். அவை தமிழ் ஒலிப்பு முறைக்கு மாற்றப்பட்டுவிட்ட வடசொற்கள் என்று உறுதியாக நம்புவார்கள். ‘சலம்’ என்பது அவற்றில் ஒன்று. ‘சலம்’ என்றால் நீர். வடமொழிச் சொல்லான ‘ஜலம்’ என்பதைத்தான் ஒலி பெயர்த்துச் ‘சலம்’ என்று தமிழில் எழுதுவதாகப் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால், சலம் என்பது ஒலிபெயர்ப்புச் சொல் அன்று; அது தமிழ்ச் சொல்லே.

‘சலசல’ என்னும் ஓசையுடன் ஓடியது ‘சலம்’ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதெப்படிப் பொருந்தும் என்றால், ‘காகா’ என்று ஒலி எழுப்பும் பறவையைக் காக்கை என்று வழங்கவில்லையா? ‘குர்குர்’ என்று ஒலி எழுப்பும் விலங்கைக் ‘குரங்கு’ என்று வழங்கவில்லையா? அப்படித்தான் ‘சலசல’ என்று ஒலியெழுப்பி ஓடிய நீரைச் ‘சலம்’ என்று வழங்கினோம்.

தண்அம்துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்...

(பரிபாடல், 10:90)

சிலுசிலுவென்று தண்மையாக இருக்கிற செந்நிறப் பொடிகளைப் பூசிக்கொண்டும், கலகலவென்று சிரித்துக்கொண்டும், சலசலவென்று ஓடுகிற வைகைச் சலத்தில் குடைந்து குடைந்து ஆடுகிறார்கள் மதுரைக் குமரிகள் என்று குறிக்கிறது பரிபாடல்.

 

அசைவது சலம்

சலம் வருகிற வழிக்குப் பெயர் சலவாய். ‘சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்’ என்பதைச் ‘சின்னச் சலவாய்க்குப் போய்வருகிறேன்’ என்று ஒரு காலத்தில் இடக்கரடக்கிப் பேசியிருக்கிறார்கள். நீர்க்கடுப்பைச் சலக்கடுப்பு என்றும் நீரிழிவைச் சலக்கழிச்சல் என்றும் குறித்திருக்கிறார்கள். சிரங்கிலிருந்து வரும் நீர்ப்பொருளுக்குச் சலம் என்று பெயர். சலக்கோவைப் பிடித்தால் சளி வரும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கொண்ட இராசத் திராவகம் என்ற அமிலக் கலவை தங்கத்தை நீரைப் போலக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. இந்த அமிலக் கலவைக்குத் ‘தங்கம் சலமாக்கி’ என்று தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சலசலத்துக்கொண்டும் அசைந்துகொண்டும் இருப்பது ‘சலம்’ என்றால், சலசலக்காமலும் அசையாமலும் இருப்பது ‘அசலம்,’ அதாவது மலை. அருணாசலம் அண்ணாமலை; விருத்தாசலம் பழமலை; தணிகாசலம் தணிகைமலை; வேங்கடாசலம் வேங்கடமலை.

ஓடுகின்ற நீருக்கு, சலசலக்கிற ஓசை பற்றி வந்த ‘சலம்’ என்கிற பெயர், நீரின் அசைவு பற்றி, அதாவது நிலையில்லாமல் ஓடுகின்ற தன்மைபற்றி வேறு புதிய பொருள்களைப் பெறுகிறது. அசைவு என்பது மாற்றத்தை, நிலையில்லாத தன்மையைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் நிலையாமைக் கருதுகோளைச் சித்திரிப்பதற்கான பின்புலமாகக் கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலைத்தான் முன்வைக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சலம் என்பது நிலையின்றி அசைகிற, மாற்றத்துக்கு உள்ளாகிற எல்லாவற்றையும் குறிக்கிற சொல் ஆகிறது. இவ்வாறாகச் சலம் என்பது நீரை மட்டும் குறிக்கிற இயற்சொல்லாக இல்லாமல், அசைவு, சுழற்சி, நடுக்கம், பொய், வஞ்சகம், கோபம் ஆகியவற்றையும் குறிக்கிற திரிசொல்லாக உருவெடுக்கிறது.

சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி...

(சிலம்பு, புகார்க் காண்டம், கனாத்திறம் உரைத்த காதை, 69)

‘மாதவி நிலையான உள்ளம் கொண்டவள் அல்லள்; நேற்றொரு கொள்கை, இன்றொரு கொள்கை என்று தேவைக்குத் தகுந்தாற்போலக் கொள்கைகளை மாற்றி அலைபாயும் உள்ளம் கொண்ட வஞ்சகி’ என்று மாதவியைக் கண்ணகியிடம் பழிக்கிறான் ‘சலம்புணர் கொள்கைச் சலவன்’ கோவலன்.

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ அற்று.

(குறள் 660)

அரசைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சன், களவாணித்தனம் செய்து, வஞ்சனையான தீய வழிகளில் பொருள் சேர்த்து, கறை படிந்த அந்தக் காசைக் கொண்டு அரசைப் பாதுகாப்பேன் என்பது, இன்னும் சூளையில் சுட்டு இறுக்கப்படாத பச்சை மண் பாண்டத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதைப் போன்றது. பானையும் கரைந்து போகும்; தண்ணீரும் வீணாய்ப் போகும்.

 

இறைவன் சலமயன்

கோவலன் மாதவியைச் ‘சலதி’ என்றான். வள்ளுவர் திருட்டு வழியில் பணம் சேர்க்கும் அமைச்சனைச் ‘சலவன்’ என்றார். திருமூலரோ இறைவனையே ‘சலமயன்,’ ‘சலவியன்’ என்கிறார்.

தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை;

வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்;

கோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தான்ஒரு கூறு சலமயன் ஆமே.

(திருமந்திரம் 112)

கடவுள் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண்ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே’ என்று, விடை சொல்ல முடியாமல் கைவிரித்த தருணங்களும் உண்டு. திருமூலரைப் போல முரட்டுத் துணிச்சலுடன் சுட்டிக்காட்ட முயன்ற தருணங்களும் உண்டு. இறைவன் எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று கேட்பவர்களே! நீங்கள் பார்க்கின்ற எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான். நீங்கள் பார்க்காதவற்றிலும் அவன் இருக்கிறான். உங்களுக்கு உள்ளே நின்று இயக்குகின்றவனாகவும் அவன் இருக்கிறான். அவனே இயக்கமாகவும் இருக்கிறான். இறைவன் அசைவில்லாமல் நிலைகுத்தி நிற்கிறவன் அல்லன். அசையாமல் இருந்த இடத்தில் இருக்க அவன் என்ன ஜவுளிக் கடைப் பொம்மையா? அவன் இயக்கமயமாக இருக்கிற சலமயன். ஆடிக்கொண்டே இருக்கிறவன். கூத்தன். சிவமயம் என்பது சலமயம். அறிக.

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்

மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்

சாலும்அவ் ஈசன் சலவியன் ஆகிலும்

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே

(திருமந்திரம் 182)

காலையில் எழுகிறோம்; உண்கிறோம்; உடுத்துகிறோம்; திரிகிறோம்; மாலையில் விழுகிறோம்; உறங்குகிறோம். வாழ்நாள் கழிகிறது. வீழ்நாள் வருவதற்குள் அவனைத் தேடிக்கொள்ளுங்கள் என்றால், அவன் சுடுகாட்டையே அரங்கமாக்கி ஆடிக்கொண்டிருக்கிற சலவியன். எந்தச் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கிறானோ? எங்கே தேடுவது என்கிறவர்களே! நினையுங்கள்! உங்கள் உள்ளக் காட்டிலும் ஆட அவன் வருவான்.

தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்...

(கம்ப ராமாயணம், பாலகாண்டம், மிகை. 85)

தமிழ் என்ற அளவிட முடியாத சலதியைத் தந்தவன் அகத்தியன் என்று பெருமை பேசுகிறது கம்ப ராமாயணத்தின் மிகைப் பாடல் ஒன்று. சலதி என்றால் அசைந்துகொண்டே இருக்கிறவள்.

எது அசைகிறதோ அதுதான் உயிர்ப்போடு இருக்கிறது; எது அசையவில்லையோ அது பிணம். தமிழ் சலதி; சிவன் சலவியன். தமிழும் சரி, சிவமும் சரி, வெள்ளத்துக்குத் தகுந்தாற்போல மலர் தன்னை நீட்டிக்கொள்வதைப் போல, மக்களின் உள்ளங்களுக்கும் உயரங்களுக்கும் தகுந்தாற்போலத் தங்களை நிலைமாற்றி நீட்டிக்கொள்கின்றன.

(தமிழ் அசையும்...)

http://tamil.thehindu.com/society/spirituality/article24152995.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 36: உள்ளமும் உயிரும் ஒன்றானால்

 

 
Lingam

‘ஓகம்’ என்றொரு தமிழ்ச் சொல். யோகம் என்றும் அறியப்படும். ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் இணைதல்; கலத்தல்; ஒன்றுதல். இணைதல், கலத்தல், ஒன்றுதல் என்ற பொருள் மாறாமல். இடக்கான சொல்லாகப் பதிவில் ஏறிவிட்டதாலோ என்னவோ அந்தச் சொல்லின்மேல் கவனம் செலுத்தாமல் விலக்கிக்கொண்டுவிட்டோம்.

 

இரண்டாகப் பிரிந்து கிடப்பவை ஒன்றாக இணைவது ‘ஓகம்’ என்று பொதுவில் வரையறுக்கப்படும். நம்முடைய உள்ளமும் உடலும் இரண்டாக இருக்கின்றன. அவை ஒருங்கிணைந்து இயங்காமல், தத்தம் போக்கில் தனித்தனியாக இயங்கினால், எண்ணிய செயலை எண்ணியவாறு செய்ய முடியாமல் போகும். “மாடு ரெண்டு; பாதை ரெண்டு; வண்டி எங்கே சேரும்?” என்று ஒரு திரைப்பாட்டு வரி உண்டல்லவா? இரட்டை மாட்டு வண்டியில் மாடுகளுக்கிடையே ஒருங்கிணைவு இல்லாவிட்டால் வண்டி குடை சாய்ந்துவிடாதா?

விசைஉறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

-என்று உள-உடல் ஒருங்கிணைவைச்

சிவசத்தியிடம் வேண்டுகிறான் பாரதி.

வாய்ஒன்று சொல்லி, மனம்ஒன்று சிந்தித்து,

நீஒன்று செய்யல்! உறுதி, நெடுந்தகாய்!

தீஎன்றுஇங்கு உன்னைத் தெளிவன்!

தெளிந்தபின் பேய்என்றுஇங்கு என்னைப்

பிறர்தெளி யாரே.

(திருமந்திரம் 1683)

உன்னுடைய சொல்லுக்கும் மனத்துக்கும் செயலுக்கும் ஒருங்கிணைவு இல்லை என்றால், உன்னை மிகமோசமான ஆளுமை என்றே கருத்தில் வைப்பேன்; அவ்வாறு வைப்பதற்காக என்னை யாரும் இகழப்போவதில்லை என்று ஒருங்கிணைவை முதன்மைப்படுத்துகிறார் திருமூலர்.

 

ஓகம் செய்தவர் ஓகி

உள்ளமும் உடலும் ஒருங்கிணைவது மட்டுந்தான் ஓகம் என்று கருத வேண்டாம்; உயிரும் உயிரும் ஒருங்கிணைவதும் ஓகந்தான் (உயிர்-இறை). உடலும் உடலும் ஒருங்கிணைவதுங்கூட ஓகந்தான் (ஆண்-பெண்). உடலைக் கருவியாக்கி அதன்வழியாக உள்ளத்தை / உயிரைக் கட்டியாள்கிற எல்லா முயற்சிகளுமே ஓகந்தான். அவ்வாறு கட்டியாண்டு ஓகம் செய்தவர்கள் ஓகிகள். அவ்வண்ணம் ஓகுதலைப் பேசும் நூல் ஓக நூல்.

தமிழ்நாட்டுக்கு ஓகமும் புதிதன்று; ஓகிகளும் புதியவர்கள் அல்லர். ஓகம் பழகிய ஓகிகள் சங்க காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார் எடுத்துக்காட்டுகிறார்: ஓரம்போகியார் என்று ஒரு சங்கப் புலவர். இவரது பெயரை விளக்குகையில் ‘ஓரம் போகியார்’ என்று பிரித்துதெழுதிப் ‘பாதையில் போகும்போது ஓரமாகப் போகிறவர்’ என்று பொருள் சொல்லிவிட்டார்கள். அது அவ்வாறல்ல. அவரது பெயரைச் சரியாகப் பிரித்தெழுத வேண்டுமானால் ‘ஓர்+அம்பு+ஓகியார்’ என்று எழுத வேண்டும்.

பட்டினத்தார் தம் கையில் ஒற்றைக் கரும்பை வைத்துக்கொண்டு சுற்றியதைப் போல, இவர் தம் கையில் ஒற்றை அம்பை வைத்துக்கொண்டு சுற்றியிருப்பார்போலத் தெரிகிறது. ஆகவே ‘ஓர் அம்பு ஓகியார்’ என்று வழங்கப்பெற்றிருக்கலாம்.

‘ஓர் அம்பு’ என்பது ஏதேனும் கொள்கையைக் குறிக்கும் அடையாளச் சின்னமாக இருந்திருக்கலாம்—அத்துவைதக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற துறவிகள் ‘நாங்கள் ஒற்றை உண்மையை நம்புகிறவர்கள்’ என்று காட்டுவதற்காக ஒற்றைக் குச்சியையும் விசிட்டாத்துவைதக் கொள்கையைக் கடைப்பிடிக்கிற துறவிகள் ‘நாங்கள் மூன்று உண்மைகளை நம்புகிறவர்கள்’ என்று காட்டுவதற்காக முக்குச்சிகளை ஒருங்கிணைத்தும் கையில் வைத்திருப்பதைப் போல.

அல்லது அம்பைப் போலத் தன் உடம்பை இருத்திக்கொண்டவராக இருக்கலாம். அதனால் ஓர் அம்பு ஓகியார் என்று அழைக்கப்பெற்றிருக்கலாம்.

ஓரம்பு ஓகியாரைப் போலவே கொக்கோகர் என்று ஒரு ஓகியார் இருந்திருக்கிறார். கொக்கோகர் என்றால் கொக்கு+ஓகர், அதாவது, கொக்கைப் போல ஓகம் செய்தவர். அதென்ன கொக்கு ஓகம் என்றால், கொக்கைப் போலத் தன் உடம்பை இருத்திக்கொள்வது கொக்கு ஓகம்.

 

ஓகத்தின் உட்கிடை

உடம்பு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருப்பது ஓகம். அவ்வாறு இருக்க முடிந்தால், ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ நமக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்து கொள்ளலாம்.

நம்மை எவ்வாறு இருத்திக்கொண்டால் உடம்பு என்ற ஒன்று இருப்பது தெரியாமல் இருக்கலாம் என்று தேடுகிற முயற்சியில், மனிதர்கள் தங்களைப் பல்வேறு வகைகளில் இருத்திப் பார்த்துக்கொண்டார்கள்—கொக்கைப் போல, மீனைப் போல, முதலையைப் போல, விட்டிலைப் போல, பாம்பைப் போல, தேளைப் போல, பருந்தைப் போல, மயிலைப் போல. உயிர்களைப் போல மட்டுமல்லாது, கலப்பையைப் போல, வில்லைப் போல, அம்பைப் போல, சக்கரத்தைப் போல, படகைப் போல, தாமரையைப் போல, மரத்தைப் போல, பிணத்தைப் போல என்று பலவற்றைப் போலவும் இருத்திப் பார்த்திருக்கிறார்கள்.

இவற்றில் எந்த இருக்கை முறை உடம்பு என்ற ஒன்று இருப்பதே தெரியாமல், உடம்பைச் சுகமாக இருக்க வைத்ததோ அதைத் தனக்கான இருக்கை முறையாகத் தேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஓர் அம்பு ஓகியும் கொக்கு ஓகியும் அப்படித் தேர்ந்துகொண்டவர்களாகவே இருக்க வேண்டும். உடம்பை ஒரு நிலையில் இருத்திவிட்டால் உள்ளத்தை இருத்துவது எளிதாகிவிடுகிறது. உடம்பும் உள்ளமும் வசப்பட்டுவிட்டால், எண்ணியதை எண்ணியாங்கு எய்தலாம் என்பதுதான் ஓகத்தின் உட்கிடை.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்

(குறள் 540)

நெஞ்சுறுதியோடும் ஊக்கத்தோடும் ஒருவன் தான் எண்ணியதையே எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைவது எளிதல்லவா என்று முன்வைக்கிற திருக்குறளும் சிற்சில இடங்களில் ஓகம் பேசுகிற நூல்தான் என்றாலும், ஓகத்தைச் செறிவாகப் பேசிய நூல் திருமந்திரம்தான்.

நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றித்

தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் துண்என்று உணராக் குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே

(திருமந்திரம் 1457)

உடலும் உள்ளமும் யானையைப் போல அசைந்துகொண்டே இருக்கின்றன. நிலைகுத்தி நிற்பது என்பது அவற்றுக்கு ஏறத்தாழ இயலாததாக இருக்கிறது. உடலும் உள்ளமும் ஒருங்கிணைய வேண்டும்; நிலைகுத்த வேண்டும். எதைப் போல என்றால் யானையைக் கட்டி வைக்கிறார்களே தூண், அதைப் போல. யானை உரசினாலும் முட்டினாலும் இழுத்தாலும் அதிராமல், அசையாமல் நிற்கும் அந்தத் தூண். யானையையும் கட்டுப்படுத்தும். அவ்வாறு நிலைகுத்தி நிற்கத் தெரிந்தவர்கள் எதைக் குறித்து எண்ணினார்களோ, அதை எண்ணியவாறே எய்துவார்கள்.

 

அடிமையாக ஏன் இருக்க வேண்டும்

எனவே, உள்ளத்தில் உடம்பைக் கட்டுவீர்களோ அல்லது உடம்பில் உள்ளத்தைக் கட்டுவீர்களோ, அது உங்கள் பாடு. கட்டுத்தறி உறுதியாக நின்றால் அதில் கட்டப்பட்டது அலைபாயாமல் நிற்கும். அலைபாய்ச்சல் அடங்கினால் கவனம் மிகும். கவனம் மிகுந்தால் எண்ணியது ஈடேறும். எண்ணியது ஈடேறுதல் ஓகம்; குறி அறிவதும் அதைக் கூடுவதும் ஓகம்.

எழுத்தொடு பாடலும் எண்எண் கலையும்

பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா;

அழித்தலைச் சோமனோடு அங்கி அருக்கன்

வழித்தலைச் செய்யும் வகை

உணர்ந் தேனனே

(திருமந்திரம் 1461)

நூற்கல்வி, மந்திரங்களை ஓதுதல், அறுபத்து நான்கு கலைகளை அறிதல், இவையெல்லாம் உங்களுக்கு விடுதலை வழங்காது. மாறாக, அவை உங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதுதான் என் நூல்; இதுதான் என் மந்திரம், இதுதான் என் கலை, இதுதான் என் கொள்கை என்று ஏதேனும் ஒரு சட்டகத்துக்குள் உங்களை அடைபடச் செய்கின்றன. அடைபட வைக்கிற அமைப்புகள் எப்படி விடுதலைப்படுத்தும்? ஓகம்தான் உங்களை விடுதலைப்படுத்தும். ஓகம் பயில்வதற்கு யாரும் எதற்குள்ளும் அடைபட வேண்டிய கட்டாயமில்லை. இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று ஏறியும் இறங்கியும் சுழித்தும் ஓடுகிற மூச்சை ஆளத் தெரிந்தால் போதும். உங்கள் தளைகளை அழித்து விடுதலை பெறலாம். ஆள்கிறவராக இருக்க வாய்ப்பிருக்கும்போது, அடிமையாக ஏன் இருக்க வேண்டும்?

(ஓகம் பயில்வோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article24211247.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 37: காண்பது சக்தி இந்தக் காட்சி நித்யம்

 

 
Shiva%20Kingam

சடங்குகளை முன்னிறுத்துகிற சமய நெறிகளுக்குள் மக்களை அடைத்து வைப்பதைக் காட்டிலும், ஓகம் போன்ற கட்டற்ற விடுதலை நெறிகளின் வழியாக ஆற்றுப்படுத்துவதில்தான் திருமூலருக்குப் பெருவிருப்பம் இருந்திருக்க வேண்டும்.

அந்நெறி, இந்நெறி என்னாது அட்டாங்கத்

 

தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்;

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்;

புன்னெறி ஆகத்தில் போக்கில்லை ஆகுமே

(திருமந்திரம் 551)

-என்று ஓகத்தைச் சிறப்பித்துப் பேசுகிறார் திருமூலர். ‘இந்த நெறி புது நெறி; இங்கே வா; வேண்டியவற்றைப் பெறுவாய்’ என்று ஒரு பக்கம் அழைக்கிறார்கள். ‘அந்த நெறி சக்கை; எங்கள் நெறியில்தான் இருக்கிறது சாரம்’ என்று மற்றொரு பக்கம் அழைக்கிறார்கள். அந்த நெறியில் போவதா, இந்த நெறியில் போவதா, எந்த நெறி நல்ல நெறி என்று நமக்குத் தடுமாற்றம் வருகிறது. ‘தடுமாறவே வேண்டாம்; அவை அவர்களுடைய நெறிகள்; அவற்றில் அவர்கள் செல்வார்கள்; நீங்கள் ஏன் செல்ல வேண்டும்? நீங்கள் செல்வதற்கு உங்கள் நெறியே இருக்கிறதே? பிறகென்ன? உங்கள் நெறி வழியே நீங்கள் செல்லுங்கள்!

அவரவர்க்கு அவரவர் நெறி!’ என்று திருமூலர் சொல்லும்போது நமக்குக் குழப்பம் வருகிறது: ‘எனக்கென்று ஒரு நெறி இருக்கிறதா? அது என்ன நெறி?’ என்றால், ‘தன் நெறி என்பது ஒருவருக்கு அட்டாங்க நெறியே ஆகும்’ என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். அட்டாங்க நெறி என்பது எட்டு உறுப்புகளால் ஆகிய நெறி. அந்த நெறியில் செல்கிறவர்கள் புலன்களின் வழியில் சிக்கித் தடுமாறாமல் தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.

புலன்களின் வழிச் செல்வது அவ்வளவு பெரிய குற்றமா? அப்படித்தான் சொல்கின்றன பல்வேறு இந்திய மெய்யியல் கருதுகோள்கள். புலன்கள் பொய்யாக வழிநடத்தும்; எனவே, புலன்கள் வழியாக வருகிற எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஒரு பொதுக் கருத்து.

கண்ணை நம்பாதே;

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்;

உண்மை இல்லாதது!

-என்று மருதகாசி எழுதிய திரைப்படப் பாட்டில் இந்தப் பொதுக்கருத்தின் செல்வாக்கு வெளிப்படவில்லையா?

புலன்களின்மீது ஏன் இவ்வளவு பெரிய கண்டனம் என்றால், உயிர் வளர்க்கும் தொழிலில் ஆதாரமாகக் கருதப்படுபவை எல்லாமே காட்சிக்கு அப்பாற்பட்டவை—உயிர், கடவுள், அவ்வுலகம் என்று எல்லாம். காண்பதுதான் மெய் என்றால் கடவுளைக் காட்டு என்று கேட்க மாட்டார்களா? காட்டுவதற்குக் கடவுள் என்ன காட்சிப் பொருளா? கருத்துப் பொருள் இல்லையா? எனவே, புலன்களின்மீதான சார்புணர்ச்சி, புலன்களின் வழியாக வருவதே உண்மை என்று நம்புகிற எண்ணம் அடித்து நொறுக்கப்பட வேண்டியிருக்கிறது. அப்போதுதான் கருத்துப் பொருட்களை நிலைநிறுத்த முடியும்.

 

பாரதி செய்த விசாரணை

இந்த மரபில், புலன்களின் வழி வருவன எல்லாம் மாயை என்று எல்லை கடந்து பேசுகிறது அத்துவைதம். உலகே மாயம்; வாழ்வே மாயம். இவை எல்லாம் உண்மைபோலத் தோன்றுகின்றனவே தவிர, உண்மையில்லை, வெறும் சொப்பனம் என்று அந்தக் கொள்கை அழுத்திச் சொல்கிறது. அதனை முற்கோளாக எடுத்துக்கொண்டு விசாரணை செய்கிறான் பாரதி:

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!

நீங்கள்எல்லாம்

சொற்பனம்தானோ? – பல

தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே! கேட்பதுவே! கருதுவதே!

நீங்கள்எல்லாம்

அற்பமாயைகளோ – உம்முள்

ஆழ்ந்த பொருள்இல்லையோ?

(உலகத்தை நோக்கி வினவுதல்)

-என்று கேட்டுக்கொண்டே போனவன், இறுதியில் இவையெல்லாம் சொப்பனமாக, தோற்ற மயக்கங்களாக, அற்ப மாயைகளாக இருக்க முடியாது என்ற முடிவுக்கும் வருகிறான். அந்த முடிவுக்கு வருவதற்கு அவன் ஒரு நியாயம் வழங்குகிறான்:

காண்பஎல்லாம் மறையும்என்றால்

மறைந்ததுஎல்லாம் காண்பம்அன்றோ?

(மேற்படி)

காண்பன எல்லாம் அழியக்கூடியவை; ஆகவே அவை நிலையில்லாதவை; எனவே மாயை என்கிறீர்களே, அழியக்கூடியவை எல்லாம் மீண்டும் உருவாகாவா? அப்போது அவற்றை மீண்டும் பார்க்க மாட்டோமா? மீண்டும் அவை நம் காட்சிக்குக் கூடி வரும் என்ற நிலையில் அவை எப்படிப் பொய்யாகும்? எந்த அடிப்படையில் அவற்றை மாயை—முழுப் பொய் என்கிறீர்கள்?

வீட்டுத் தோட்டத்தில் மாமரம் ஒன்று இருந்தது; காலஞ் சென்று அழிந்தது; அதன் கொட்டை ஒன்று விழுந்து முளைத்து மரமானது; என்றால் மாமரத்தை முழுப் பொய் என்று முற்றாகத் தள்ளிவிட முடியுமா? உண்மையின் சாரம் கொஞ்சம்கூட இல்லாமலா ஒன்று மீண்டும் மீண்டும் முளைத்து வரும்?

அத்துவைதம் சொல்கிறது: இருப்பது ஒன்றே ஒன்றுதான்; மற்ற எல்லாம் அதனுடைய நிழல்கள்; ஆகவே பொய்கள். பாரதி சொல்கிறான்:

சோலையிலே மரங்கள்எல்லாம்

தோன்றுவதுஓர் விதையில்என்றால்

சோலை பொய்யாமோ?-இதைச்

சொல்லொடு சேர்ப்பாரோ?

மரங்கள் எல்லாம் விதையில் இருந்து தோன்றின. இவற்றில் விதை மெய்; விதையில் இருந்து வந்த மரங்கள் பொய் என்றால், இது என்ன அநியாயம்? விதை மெய்யென்று கொண்டால், விளைவையும் மெய்யென்று கொள்ளத்தானே வேண்டும்? விளைவைப் பொய்யென்று கொண்டால், விதையையும் பொய்யென்று தள்ளத்தானே வேண்டும்? ஒன்று மெய், மற்றொன்று பொய் என்றால், இதை ஒரு பேச்சென்று யாரேனும் மதிப்பார்களா? எனவே,

காண்பதுவே உறுதிகண்டோம்

காண்பதுஅல்லால் உறுதிஇல்லை

காண்பது சக்தியாம் – இந்தக்

காட்சி நித்தியமாம்!

- என்று விசாரணையை முடித்துக்கொள்கிறான். அத்துவைதத்தில் தொடங்கிய பாரதியின் விசாரணை சைவ சித்தாந்தத்தில் வந்து முடிகிறது.

நல்லது. திருமூலர் என்ன சொல்கிறார்? அத்துவைதத்தைப் போலப் புலன்களின் வழியாக வரும் அறிவைத் தள்ளுபடி செய்யச் சொல்கிறாரா என்றால், இல்லை. அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்:

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவுஇலார்;

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇலை;

அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு

அஞ்சும் அடக்காது அறிவுஅறிந் தேனே.

(திருமந்திரம் 2033)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கருவிகள்தாம் உங்களை அலைக்கழிக்கின்றன; இவற்றால் வருகிற இன்பங்களுக்காகத்தான் நீங்கள் அலைபாய்கிறீர்கள்; நீங்கள் நிலைகுத்த வேண்டுமானால் இவற்றை அடக்குங்கள் என்பார்கள். ஆனால் நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: இந்த ஐந்தையும் அடக்கியாண்ட விண்ணாதி விண்ணன் எவனுமே இல்லை என்பதற்கு அகலிகையைத் தேடி வந்த விண்ணவனாகிய இந்திரனே போதுமான சாட்சி.

கடினந்தான் என்றாலும் ஐந்தையும் அடக்கித்தான் ஆக வேண்டும் என்பவர்களுக்கு வேறொன்று சொல்கிறேன்: ஐந்தையும் அடக்கினால் அடிமுட்டாள் ஆவீர்கள்; அறிவிலி ஆவீர்கள்; சடப்பொருள் ஆவீர்கள். நாற்காலி நீங்கள் அதன்மேல் உட்கார்ந்திருப்பதை அறிவதில்லை; எனவே அது ஐம்புலன்களையும் அடக்கிப் பிரம்மத்தை அறிந்துவிட்டதாக அறிவித்துவிடலாமா? சமையல் பாத்திரம் தனக்குள் சமைக்கப்படும் உணவின் சுவையை அறிவதில்லை; எனவே அதை முற்றும் துறந்த ஞானி என்று பாராட்டுப் பத்திரம் வழங்கலாமா? அறிக நண்பர்களே: புலன்கள் இயங்காத நிலை என்பது உயிரற்ற சடப்பொருள்களுக்கு மட்டுந்தான் வாய்க்கும். உயிர்களோ அறிவுப் பொருட்கள்.

அவை எதை அறிந்தாலும் தங்கள் புலன்களின் வழியாகவே அறிகின்றன. புலன்கள்தாம் நமக்குள் அறிவு வருவதற்கான வாயில்கள். அவற்றை அடைத்துவிட்டால், அறிவு வராது. எனவே புலன்களைத் திறந்து வையுங்கள்; அறிவு வரட்டும் என்கிறார் திருமூலர்.

திருமூலர் மட்டுந்தான் இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கவேண்டாம். திருவள்ளுவரும் சொல்கிறார்:

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

(குறள் 27)

ஐந்து புலன்களின் வகை தெரிந்தவனுக்குத்தான் உலகத்தின் வகை தெரியும்.

(வகை வகையாய் அறிவோம்)

http://tamil.thehindu.com/society/spirituality/article24271800.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 38: மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

 

 
Lingam

புலன்களின்வழி போவது குற்றம் என்றும், புலன்களின் போக்கை மறுப்பதும் மறிப்பதுமே விடுதலைக்கான வழிமுறை என்றும்தான் துறவு நெறிகள் பேசுகின்றன. புலன்களின்வழி போகும் உள்ளத்தை மறித்து இழுப்பது மிகவும் கடினம். பள்ளத்தை நோக்கிப் பாய்வது நீரின் இயல்பாவதுபோல, எப்போதும் இன்பத்தை நோக்கிப் பாய்வதே உயிரின் இயல்பு.

 

புலன்கள் தங்கள் செய்திகளை மனத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றன. ஒரு குளத்தைப் போல இருக்கும் மனத்தில் புலன்கள் கற்களை வீசி அலை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அலை பாய்கிற மனக்குளம் யாரையும் நிலைகொள்ள விடாமல் செய்கிறது. மனம் அடங்காமல் ஏதொன்றும் இயலாது.

தான்என்ற ஆணவத்தை நீக்க மாட்டார்;

சண்டாளக் கோபத்தைத் தள்ள மாட்டார்;

ஊன்என்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார்;

உற்றுநின்ற சையோகம் விடுக்க மாட்டார்;

பான்என்ற ஞானவெள்ளம் உண்ண மாட்டார்;

பதறாமல் மவுனத்தே இருக்க மாட்டார்;

வான்என்ற பொருள்என்ன எளிதோ மைந்தா?

மகத்தான மனம்அடங்க எய்யும் காணே!

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 32)

- என்கிறார் சட்டைமுனிச் சித்தர். ஆணவம், கோபம், சுகபோகம், பெண் இன்பம் எதையும் கைவிடுவதில்லை; குறைந்தபட்சம் அமைதி காக்கவும் முடிவதில்லை; விடுதலையைத் தேடுகிற முயற்சியும் இல்லை; அதற்கான விருப்பமும் இல்லை; எதுவுமே இல்லாமல் விடுதலை எப்படிக் கிடைக்கும்? அது என்ன அவ்வளவு எளியதா? அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்? மனம் அடங்க வேண்டும்; அடங்கினால் விடுதலை கைகூடும் என்கிறார்.

ஆனாலும்,

தெளிவதுதான் எளிதல்ல வாய்ப்பேச்சல்ல

சிங்காரப் பெண் கண்டால் ஞானம் போச்சே!

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 89)

என்ற சிக்கலையும் சொல்கிறார்.

மாறுஆன பெண்ஆசை விட்டேன் என்பார்;

மருவிஅவள் தனிப்பட்டால் சரணம் செய்வார்!

தாறுஆன சயனத்தில் பெண்தான் சொல்லில்,

சதாசிவனால் முடியாது; மற்றோர் ஏது?

(சட்டைமுனி முன்ஞானம் நூறு, 87)

‘மருவு பெண் ஆசையை விட்டேன்’ என்று சொல்கிறவர்களெல்லாம், தனியாக ஒரு பெண் எதிர்ப்பட்டு விருப்பமும் தெரிவித்தால், மண்டியிட்டுக் கும்பிட மாட்டார்களா? ‘வேண்டாம்’ என்று சொல்வதற்குச் சதாசிவனாலேயே முடியாதே, இவர்கள் என்ன?

 

போகத்தை ஓகமாக்கிய திருமூலர்

இங்கேயும் தலைகீழ்ப் புரட்டொன்றைச் செய்கிறார் திருமூலர். பெண்ணாசையின்மீது கண்டனங்களே நிறைந்திருக்கிற உயிர்த் தொழிற்களத்தில், பரியங்க யோகம் என்ற பெயரில் அதை அனுமதித்துக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள யோசனை சொல்கிறார். பரியங்கம் என்றால் கட்டில். பரியங்க யோகம் என்பது கட்டில்மேல் செய்கிற ஓகம். போகத்தை ஓகமாகவும் சிற்றின்பத்தைப் பேரின்பமாகவும் ஆக்குகிற முயற்சி.

பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்ற வரும்பரிசு உந்தீபற...

பேரின்பம் ஆன பிரமக் கிழத்தியொடு

ஓர்இன்பத்து உள்ளான்என்று உந்தீபற...

(திருவுந்தியார், 33 மற்றும் 34)

-என்று பாடுகிறது சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான திருவுந்தியார். பேரின்பத்தின் தொடக்கம் சிற்றின்பம்; சிற்றின்பம் முற்றினால் பேரின்பம். கடவுளே தனக்குரிய பெண்ணோடு கலந்து பேரின்பம் பெறுகிறான் என்று பேசுகிறது.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம்; வைகலும்

எண்ணில்நல் லகதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை;

கண்ணில்நல் அஃதுஉறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

(தேவாரம், 3:24:1)

என்று சம்பந்தர் பாடும்போது தொனிப்பதும் அதுதான். விடுதலை வேண்டுமானால் புலன்களை ஒறுக்க வேண்டும், பெண்ணை மறுக்க வேண்டும் என்று சிலரால் உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: இந்த மண்ணுக்கு உரிய விதத்தில் நலமான இன்ப வாழ்வை நீங்கள் வாழலாம்; அடைய விரும்புகிற விடுதலையும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கடவுளைப் பாருங்கள்; அவரே பெண்ணோடுதான் இருக்கிறார்.

நாவுக்கரசர் இன்னும் பேசுகிறார்:

ஒருத்திதன் தலைச்சென் றாளைக்

கரந்திட்டான்; உலகம் ஏத்த

ஒருத்திக்கு நல்லன் ஆகி

மறுப்படுத்து ஒளித்து மீண்டே

ஒருத்தியைப் பாகம் வைத்தான்;

உணர்வினால், ஐயம் உண்ணி,

ஒருத்திக்கும் நல்லன் அல்லன்,

ஒற்றியூர் உடைய கோவே!

(தேவாரம், 4:45:6)

தன் தலையில் உட்கார்ந்த கங்கையிடம் அவள் ஒருத்திக்கு மட்டுமே நல்லவன்போல நாடகம் நடித்து, உமையாளுக்குத் தெரியாமல் கங்கையைச் சடையால் மூடி மறைத்தான்; மற்றொருத்தியாகிய உமையாளைக் கங்கைக்குத் தெரியாமல் தன் உடம்பின் ஒரு பாகத்திலேயே ஒளித்து வைத்தான். பிச்சை எடுத்துத் தின்கிறவன் செய்கிற சேட்டையைப் பார்த்தீர்களா? அவளுக்கு நல்லவன் என்று அவளிடமும் இவளுக்கு நல்லவன் என்று இவளிடமும் வேடம் போடுகிற இவன் எவளுக்குமே நல்லவன் இல்லை.

 

புலன்களை மறுதலிக்காமல் உடன்படுவது

எனவே புலன்களை, மாற்றுப் பாலினத்தை மறுதலிக்காமல் உடன்படுவதும், அவற்றில் தோய்ந்து கடப்பதும் சைவ மரபின் பொதுவான முன்வைப்பு. அதனை மிகவும் ஊக்கமாக, போகமும் ஒருவகை ஓகமே என்றும் போகத்தின் வழி ஓகம் என்றும் அயராமல் முன்னெடுக்கிறவர் திருமூலர்.

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய

வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்

காசக் குழலி கலவி யொடும்கலந்து

ஊசித் துளைஉறத் தூங்காது

போகமே

(திருமந்திரம் 825)

ஒப்பனைக்கான உருப்படிகளைப் பூசி, தலைமுடியில் வாசனை நெய்கள் தடவி, சீவிச் சிங்காரித்து, நறுமணமுள்ள பூவையும் சூடி வரும் பெண்ணோடு கலக்கலாம்; கலக்கும்போது அவளிடத்தில் கவனம் வைக்காமல், உங்கள் மூச்சு மடங்கித் திரும்புகிற ஊசித் துளையில் கவனம் வைத்தால், உங்கள் போகம் ஓகமாக மடைமாறும்.

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்து

ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப்

போகம் சிவபோகம் போகிநல் போகமாம்

மோகம் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே.

(திருமந்திரம் 1960)

ஆண், பெண் இருவரின் தேகமும் கலந்து தழுவினாலும் அறிவு கலங்கி அழியாதிருக்க வேண்டும். மோகத்தோடு தழுவுவது கோளாறு. மோகம் அறிவைக் கலக்கி அழிக்கும். மோகம் கொள்ளாது தழுவினால் அங்கே விளைகிற போகம் சம்போகமில்லை; சிவபோகம். இவ்வாறு அறிவு அழியாமல் கலப்பதே ஓகம்.

பார்இல்லை நீர்இல்லை பங்கயம் ஒன்றுஉண்டு

தார்இல்லை வேர்இல்லை தாமரை பூத்தது

ஊரில்லை காணும் ஒளிஅது ஒன்றுஉண்டு

கீழ்இல்லை மேல்இல்லை கேள்வியில் பூவே

(திருமந்திரம் 844)

ஒரு தாமரைப் பூக்க வேண்டுமானால் மண் வேண்டும்; நீர் வேண்டும்; வேர் வேண்டும்; தண்டு வேண்டும்; பூப்பதைக் காண்பதற்கு ஊர் வேண்டும்; காட்டும் ஒளி வேண்டும்; இவற்றில் ஒளியைத் தவிர எதுவுமே இல்லாத நிலையில் ஒரு பூப்பூத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? அதென்ன பூ அது, விண்ணிலும் மண்ணிலும் கேள்விப்படாத பூ என்பீர்கள். அது காட்சியில் விளைந்த பூ அன்று; கருத்தில் விளைந்த பூ. பரியங்க ஓகமும் அந்தப் பூவைப் போலத்தான். ஓகம் என்றால் ஆசனங்கள் செய்ய வேண்டும்; காடு, மலை போன்ற இடங்களில் தனித்திருக்க வேண்டும் என்பனவெல்லாம் இல்லாமல், கட்டிலில் துணையாளுடன் அறிவு சிதையாமல் கூடிக் கிடப்பதும் ஓகந்தான் என்று பேசுகிறார் திருமூலர்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24330176.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 39: மங்கையோடு இருந்தே யோகம் செய்வானை

 

 
shutterstock178480739

யிர் வளர்க்க முனைபவர்கள் எப்போதும் பெண்ணைப் புறந்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்

 

பிடித்திட்டு, என்னைக்

கண்ணால் வெருட்டி, முலையால்

மயக்கிக் கடிதடத்துப்

புண்ணாம் குழியிடைத் தள்ளி, என்

போதப்பொருள் பறிக்க,

எண்ணாது உனைமறந் தேன்இறைவா!

கச்சி ஏகம்பனே!

(பட்டினத்தார், திருஏகம்ப மாலை, 23)

பெண், ஒரு மாயப் பிசாசு. அது என்னைக் கண்ணால் மிரட்டுகிறது; மார்பால் மயக்குகிறது; தன்னால் என்னைப் புதைத்துக்கொள்கிறது; நான் தேடித் திரட்டி வைத்திருந்த அறிவெனும் பெரும்பொருளை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடித்துச் செல்கிறது. அறிவு மொத்தமும் களவு போய்விட்டதால், ஐயோ, என் இறைவா, கச்சி ஏகம்பநாதனே! உன்னை எண்ணாமல் மறந்துவிட்டேனே கடவுளே! என்று புலம்புகிறார் பட்டினத்தார். புலம்புவது பட்டினத்தார் ஒருவர் மட்டுமல்லர். பலரும்.

மாணிக்கவாசகர் பாடுகிறார்:

பஞ்சாய அடிமடவார்

கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

நெஞ்சாய துயர்கூர

நிற்பேன்உன் அருள்பெற்றேன்

உய்ஞ்சேன்நான் உடையானே

அடியேனை வருகஎன்று

அஞ்சேல்என்று அருளியவாறு

ஆர்பெறுவார் அச்சோவே.

(திருவாசகம், அச்சோப் பதிகம், 5)

முதிய பெண்கள் பாடுபடுகிறவர்கள். ஏதேனும் ஒன்றின் பொருட்டு எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறவர்கள். நடந்து நடந்து பாதங்கள் தேய்ந்து போனவர்கள். காய்த்துப் போன கட்டைப் பாதங்கள் அவர்களுடையவை. ஆனால், இளம்பெண்களின் பாதங்களோ அப்படியல்ல. இன்னும் உலகியலில் நடந்து பழகாததால் தேய்ந்து போகாத, காய்த்துப் போகாத பஞ்சுப் பாதங்கள். அத்தகைய பஞ்சுப் பாதங்களை உடைய இளம்பெண்கள் தங்கள் கடைக்கண்களை என்மேல் வீசினார்கள்; மனது பொறாமல் அவர்களின் பின்னே ஓடினேன்; அதுவரை நான் தேடியிருந்த முதல் அனைத்தும் அவர்களிடம் சேர வழங்கினேன். பின் ஒன்றும் அற்றவனாய் நிலைகுலைந்து கலங்கி நின்றேன். அந்தவேளையில் ஐயா, உன்னுடைய அருட்கண்களை என்மேல் வீசினாய். ஆடிய ஆட்டம் போதும், என்னிடம் வா என்றாய். அஞ்ச வேண்டாம் என்றாய். அருள் தந்தாய். நல்லவேளை, தப்பித்துப் பிழைத்தேன். நீ எனக்குத் தந்ததைப் போல யார் தருவார்கள் அப்பாவே?

 

காமம் பேயா, நோயா?

தன்னுடைய உயிர் வளர்ப்புக்கு இன்னோர் உயிரைத் தள்ளலாம் என்றால், இது தகுமோ? இது முறையோ? இது தருமம்தானோ என்று நமக்குத் தோன்றுகிறது. காமம் என்ன அவ்வளவு கடையழிந்ததா? காமம் என்ன பேயா, இல்லை நோயா?

காமம் காமம் என்ப; காமம்,

அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை,

குளகு மென்று ஆள்மதம் போலப்

பாணியும் உடைத்துஅது காணுநர்ப் பெறினே

(குறுந்தொகை, 136)

ஐயோ காமம், ஐயையோ காமம் என்கிறவர்களே! காமம் பேயும் அன்று, நோயும் அன்று. திடீரென்று பெருகுவதும் இல்லை; திடீரென்று தணிவதும் இல்லை. யானை எல்லாக் காலத்திலும் மதம் பிடித்துத் திரிவதில்லை; குளகு என்கிற தழையைத் தின்று திரிகிறபோது அதற்கு மதம் பிடிக்கிறது. அதைப் போலவே பார்க்க வேண்டியவர்களைப் பார்க்கும்போது காமம் ததும்பும்.

இந்தக் காமம் போதம் கெடுக்குமா? உயிரைச் சிதைக்குமா? என்றால், நிலை கொள்ளாமல் அங்குமிங்குமாக ஐந்து திசைவழிகளில் அலைந்து திரிகிற உயிரை ஒருங்கு திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்துவதில்லையா அது?

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (குறள், 1101)

கண் ஒன்றைக் காட்ட, காது ஒன்றைக் கேட்க, நாக்கு ஒன்றைச் சுவைக்க, மூக்கு ஒன்றை முகர, மெய் ஒன்றை உணர ஐந்து புலன்களும் அவையவற்றின் போக்கில் எது எதிலோ ஈடுபட்டு எங்கெங்கோ சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் நிலையில், ஐந்து புலன்களையும் ஒருங்கிணைத்து ஒன்றில் மட்டுமே திளைக்க வைக்கிற வல்லமை உள்ளதில்லையா காமம்? உயிர்கள் எல்லாவற்றுக்கும் இதுதானே பொது ஞாயம்?

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்

(தொல்காப்பியம், பொருளியல், 219)

- என்கிறது தொல்காப்பியம். உள்ளமும் உடலும் ஒன்றாய்த் தோய்வதில் வரும் இன்பமே எல்லா உயிர்க்கும் இன்பம். உடலும் உள்ளமும் ஒன்றாய்த் தோயும் இன்பம் எது? மனிதர்களுக்குக் கல்வியில் தோயும்; தவத்தில் தோயும்; தானத்தில் தோயும்; மற்ற உயிர்களுக்கோ? காமத்தில் மட்டுமே தோயும். எனவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான தோயும் இன்பம் காமமே.

 

பெண்ணையும் போற்றிய சமயம்

கடவுளில் பெறுகிற இன்பம் பேரின்பம்; காமத்தில் பெறுகிற இன்பம் சிற்றின்பம்; என்றால், காமம் கடவுளுக்காகக் காட்டப்படுகிற முன்னோட்டம் இல்லையா? நம்மைக் கொஞ்ச நேரத்துக்கேனும் ஒருங்கு திரட்டி வைக்கிற சிற்றின்பந்தானே நம்மை எவ்வெப்போதும் ஒருங்கு திரட்டி வைக்கிற பேரின்பத்துக்கு வழிகாட்டி? ஒரு புட்டித் தேனை வாங்கத் தூண்டுவது ஒரு துளித் தேனின் இன்பமே அல்லவா?

சைவம் பெண்ணைத் தள்ளிவைத்து வளர்ந்த சமயம் அல்ல. அது பெண்ணையும் தழுவி வளர்ந்த இயற்கைச் சமயம். இயற்கைக்கு முரணான எதையும் அது ஒழுக்கத்தின் பெயராலோ சமயத்தின் பெயராலோ வலிந்து திணிப்பதில்லை. காமத்தைச் சைவம் கண்டனம் செய்வதில்லை. காமம் பழகிப் பின் கடவுள் பழகவே அது தூண்டுகிறது. பெண்ணை இழிவு செய்வது சைவத்துக்கு உகந்ததன்று. இறைவனுக்குச் செய்த உருவத்தின் ஒரு பாகத்தில் பெண்ணை வைத்து, ‘மாது ஒரு கூறு உடைய பிரான்’ என்று பக்தர்களைப் பழக்குகிற சமயம் பெண்ணைப் புறந்தள்ளுமா?

மாதர்ப் பிறைக் கண்ணியானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்து ஏத்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்;

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது,

காதல் மடப் பிடியொடும்

களிறு வருவன கண்டேன்;

கண்டேன் அவர் திருப்பாதம்

கண்டு அறியாதன கண்டேன்

(தேவாரம், 4:3:1)

பெண்கள் தலைச் சடையில் பூச்சரத்தின் கண்ணி ஒன்றைச் சூடிக்கொள்வதுபோலப் பிறைநிலாவைத் தன் சடையில் சூடிக்கொண்டவன். ஐயாறப்பன் கோவிலில் அவனைக் கண்டு வழிபாடு செய்வதற்காகப் பூவையும் நீரையும் எடுத்துக்கொண்டு, அவனையும் அவனில் ஒரு பாகமாகிய மலைமகளையும் வாழ்த்திப் பாடிக்கொண்டு போகிறார்கள் அடியார்கள். அவர்கள் பின்னால் நானும் பேசாமல் போகிறேன். அட, இதென்ன, தன் காதல் துணையோடு வருகிறதே இந்தக் களிற்று யானை? இவை என்ன அம்மையும் அப்பனுமா? இல்லாமல் வேறென்ன? காதல் கொண்டு கலந்து நிற்கிற உயிர்கள் எல்லாமே அம்மையும் அப்பனுந்தான். கடவுளைக் கண்டுகொள்வதற்காகக் கயிலைவரை சென்றேனே! அடக் கடவுளே! காதலைக் கண்டுகொண்ட போதல்லவா கடவுள் தெரிகிறார்? என்று சமணத்திலிருந்து சைவத்துக்கு வந்த துறவியான அப்பர் பாடுகிறார்.

தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்;

தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்;

தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே;

தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.

(திருமந்திரம் 829)

என்று காமத்தின் செவ்வி தலைப்படுகிறவனுக்குத் தலைமை தருகிறார் திருமூலர். பெண்ணோடு இருந்து போகம் செய்ய எண்ணாமல் பெண்ணோடு இருந்து யோகம் செய்யத் தலைப்பட்டால், அவன் தன் வழியில் தானே உருவாக்கிக்கொண்ட ஞானத்துக்குத் தலைவன்; தன் வழியில் தானே உருவாக்கிக்கொண்ட போகத்துக்குத் தலைவன்; தன்வழியில் தனக்குள்ளே போகும் தலைவன்; தன்வழியில் தன் பொறிகள் ஐந்தையும் ஆளும் தலைவன்.

‘மங்கையோடு இருந்தே யோகு செய்வானை’ என்று பாடுகிறார் திருமாளிகைத் தேவர் (9:13:11). பெண்ணை வேறாக்கிச் செய்கிற எதுவும் நிறைவுறாது. பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணும் தனதாக்க வேண்டும்; தானாக்க வேண்டும். மாதொருபாகன் என்பவன் கும்பிடும் கடவுளாக அல்ல, குறிக்கோளைக் காட்டும் கடவுளாக முன்னிறுத்தப்பட்டவன்.

(பேதமற்ற ஞானம் தொடரும்)

http://tamil.thehindu.com/society/spirituality/article24389183.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை’ என்று பாடுகிறார் திருமாளிகைத் தேவர் (9:13:11). பெண்ணை வேறாக்கிச் செய்கிற எதுவும் நிறைவுறாது. பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணும் தனதாக்க வேண்டும்; தானாக்க வேண்டும். மாதொருபாகன் என்பவன் கும்பிடும் கடவுளாக அல்ல, குறிக்கோளைக் காட்டும் கடவுளா முன்னிறுத்தப்பட்டவன்.

மிக அருமையான வரிகள். சிறு தெய்வம் பெருந்தெய்வம் எனும் பெயர்களில் உள்ள ஆரிய நுண்ணரசியலைப் போல, சிற்றின்பம் பேரின்பம் எனப் பகுப்பதில் ஆணாதிக்க நுண்ணரசியல் உண்டு. முன்னோர் சொன்ன அனைத்தும் பொன்னே என்றில்லை. போகம் யோகத்தின் பகுதியே, 'சிற்றின்பம்' 'பேரின்பத்தின்' பகுதியே எனும் திருமூலரின் வாக்கே அறிவின் திறம். மானிடரில் ஒரு சிலரே இதனை உணரவல்லார் என்பதை வள்ளுவமும் 

மலரினும் மெல்லியது காமம் சிலர்

அதன் செவ்வி தலைப்படுவார்

எனக் கூறும்.

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 40: அடியேன் நடுவில் இருவரும்

 

 
thirumandhiramjpg

இனிப்பு என்பது ஒரு சுவையுணர்ச்சி. அதைக் கடலை மிட்டாயின் வாயிலாகவும் பெறலாம்; கருப்பட்டியின் வாயிலாகவும் பெறலாம்; பலாப்பழப் பாயசத்தின் வாயிலாகவும் பெறலாம்; பாதாம் கீரின் வாயிலாகவும் பெறலாம். அவ்வாறு பெறும் முயற்சியில் அனுபவித்தது கடலை மிட்டாயை, கருப்பட்டியை, பலாப்பழப் பாயசத்தை, பாதாம் கீரை. சுவைத்து உணர்ந்ததோ இனிப்பை. அனுபவப் பொருட்கள் மாறும்; அனுபவங்கள் மாறும்; ஆனால், இந்த அனுபவங்களின் வழியாகச் சென்றடையும் ஆதாரச் சுவை உணர்ச்சி மாறுவதில்லை.

ராமகிஷ்ண பரமஹம்சர் பல்வேறு அனுபவங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டவர். கடவுளைப் பல தினுசாகச் சொல்கிறார்கள் அடைவதற்குப் பல வழிமுறைகளைக் காட்டுகிறார்கள். என்றால் ஒவ்வோர் அனுபவத்திலும் கிடைக்கப்பெறும் கடவுள் ஒன்றுதானா இல்லை வேறு வேறா என்று கண்டுகொள்ள விரும்பியவர்.

 

கிறித்துவை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது, ஒரு தீவிரக் கிறித்தவனைப் போலக் கிறித்தவத்தில் தோய்ந்து மாதாவையும் மைந்தனையும் கண்டுகொண்டார். இஸ்லாத்தை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது ஒரு தீவிர இஸ்லாமியனைப் போல இஸ்லாத்தில் தோய்ந்து ஒரு சூஃபி மெய்யுணர்வாளரைப் போல இறைமையைச் சுவைத்துணர்ந்தார்.

நல்லது. இறைமையை ஆணும் பெண்ணும் என்று சொல்கிறார்கள். அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டுமென்றால் என்னவாக இருந்து சுவைக்க வேண்டும்? ஆணாக இருந்தா? அல்லது பெண்ணாகியா?

இறைவன் என்பவன் ஆண்மட்டுமே; ஆண் என்பவன் இறைவன்மட்டுமே என்று கொண்டது வைணவம். இறைவனை, ‘மாலாய்ப் பிறந்த நம்பி; மாலே செய்யும் மணாளன்’—‘கருப்பாய்ப் பிறந்தவன்; மயக்கம் செய்யும் மணாளன்’ என்கிறாள் ஆண்டாள் (நாலாயிரம் 639); ஆணாக இருக்கிற இறைவனைப் பெண்ணாக இருந்து பார்க்கிற ஆண்டாளுக்குச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், ஆணாக இருக்கிற இறைவனை ஆணாகவே இருக்கிறவர்கள் பார்த்தால் எப்படிப் பார்ப்பது என்ற அடையாளச் சிக்கல் வருகிறது. ஆண்கள் தங்களைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பார்க்கலாம் என்று தீர்வு சொன்னது பக்தி மரபு.

தன்னைக் கண்ணன்மேல் மையல் கொண்ட ஒரு பெண்ணாக, பராங்குச நாயகியாகப் பாவித்துக்கொள்கிறார் நம்மாழ்வார். காம மயக்கத்தால் பித்தேறித் திரியும் பராங்குச நாயகியின் சேட்டைகளை அவளுடைய தாய் பாடுவதுபோலத் தானே பாடுகிறார்:

கோமள வான்கன்றைப் புல்கிக்

கோவிந்தன் மேய்த்தன என்னும்;

போம்இள நாகத்தின் பின்போய்,

அவன்கிடக் கைஈது என்னும்;

ஆம்அளவு ஒன்றும் அறியேன்;

அருவினை யாட்டியேன் பெற்ற

கோமள வல்லியை மாயோன்

மால்செய்து செய்கின்ற கூத்தே.

(நாலா.தி.பிரபந்தம், 3268)

கொழுகொழுத்த இளம் பசுங்கன்று ஒன்றைப் பிடித்து, ‘இது என் கோவிந்தன் மேய்த்த கன்று’ என்று அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்; கால்மேல் ஏறி நெளிந்து ஓடிய ஓர் இளநாகப் பாம்பைப் பிடித்து வருடி, ‘இது என் கோவிந்தன் படுத்த படுக்கை’ என்று செல்லங் கொஞ்சினாள். ஐயோ என் செல்ல மகள் அந்தக் கோவிந்தக் களவாணி மேல் கிறுக்குப் பிடித்து அலைகிறாளே, என்ன செய்வேன்? கிறுக்குக்கும் ஓர் அளவில்லையா?

இறைவனை ஆண்மட்டுமே என்று வைணவம் வைத்திருக்க, இறைவனை ‘ஆணாகிப் பெண்ணாகி அலியாகி’ எல்லாமாகவும் நிற்பவன் என்று வைக்கிறது சைவம். ஆனாலும் கூட இறைவனை ஆணாகவே இருந்து உணராமல் பெண்ணாகி உணரத் தலைப்படுகிறார் அப்பர்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை;

தன்னை மறந்தாள்; தன்நாமம் கெட்டாள்;

தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே.

(தேவாரம், 6:25:7)

முதலில் அவனுடைய பெயரைத் தான் கேட்டாள். பிறகு அவன் எப்படி இருப்பான் என்று கேட்டாள். மெல்ல எந்த ஊர் என்று கேட்டாள். அப்பனையும் அம்மையையும் கைவிட்டாள். அவனைச் சேரக் கிளம்பிவிட்டாள். ‘ஐயோ, கடல் போன்று காமம் கலக்கினாலும் ஆணைப் பெண்ணே தேடிப்போய்ப் பெறுவது மரபில்லையே’ என்றார்கள். ‘அது நீங்கள் கற்பித்துக்கொண்ட உலக ஆச்சாரம்; நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்; என்னை அது கட்டுப்படுத்தாது’ என்று போய்விட்டாள் நங்கை. தன்னை மறந்தாள்; தன் பெயரை மறந்தாள். கிறுக்கச்சிக்குத் தலைவனின் திருவடிகளைத் தவிர வேறு நினைவே இப்போது இல்லை. வைணவத்துக்காக நம்மாழ்வார் பாடிய அதே பாவனையில் சைவத்துக்காகப் பாடுகிறார் அப்பர்.

இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்துப் பார்க்கும் இந்தப் பாவனைக்கு நாயக-நாயகி பாவனை, மதுர பாவனை என்றெல்லாம் பக்தி மரபில் பெயர். 

உண்மையில் உயிருக்குப் பாலின அடையாளம் கிடையாது. உயிர் என்பது ஆணும் அன்று; பெண்ணும் அன்று. உடல்தான் ஆணாகவும், பெண்ணாகவும், அதுவாகவும், பால் பிரிந்து மூன்றாக வகைப்படுகிறது. ‘அவன், அவள், அது எனும் அவை’ என்று சிவஞானபோதம் சுட்டும். உலகமாகிய இந்தச் சபை, அவன் என்ற ஆண்பால், அவள் என்கிற பெண்பால் ஆகிய உயர்திணைகளாலும், அது என்ற அஃறிணையாலும் கூட்டப்பட்டது.

பாலினம் என்பது உடம்பில் மட்டுமே உயிர்த்திருப்பது. உயிரை அறிய விரும்புகிறவர்கள் பாலின அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. தக்க வைத்துக்கொண்டால் அது முரண். எனவே, ஆணாகப் பிறந்துவிட்ட நிலையில் ஆண் உணர்வைத் தூக்கி எறிய வேண்டும். ஆண் உணர்வைத் தூக்கி எறிய வேண்டுமானால் முதலில் எதிர் உணர்வைப் பெற்று, ஆணாக இருக்கிற அடையாளங்கள் அனைத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அதைச் செய்யும் முயற்சியில் தன்னைப் பெண்ணாகவே உருவகித்துக் கொண்டார். பெண்ணைப் போல உடுத்தினார்; பெண்ணைப் போலப் பேசினார்; பெண்ணைப் போலவே வாழ்ந்தார். தான் ஓர் ஆண் என்ற உணர்வை உள்ளம் விடும்வரையில், பாலின அடையாளங்களைத் தன் உயிர் முற்றாகத் துறக்கிறவரையில் அந்தப் பாவனையைப் பயின்றார்.

பெண்தான் ஆதாரம்

சரி, ஆண் தன்னுடைய பாலின உணர்ச்சியைத் தாண்டத் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொள்ளலாம்; பெண் தன்னுடைய பாலின உணர்ச்சியைத் தாண்டத் தன்னை ஆணாகப் பாவித்துக்கொள்ள வேண்டுமா? தேவையில்லை. ஏனென்றால் உண்மையில் பெண்தான் எல்லாவற் றுக்கும் ஆதாரம் என்கிறார் திருமூலர். 

ஆதாரம், ஆதேயம் என்று இரண்டு பேசுகிறார் திருமூலர். ஆதாரம் என்பது தாங்குவது; ஆதேயம் என்பது ஆதாரத்தால் தாங்கப்படுவது. பெண்தான் ஆதாரம்; எல்லாவற்றையும் தாங்குகிறவள். ஆண் சும்மா அவளில் தங்குகிறவன். அவளிலிருந்தே வெளிப்படுகிறவன்.

பெண்ஒரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை;

பெண்இடை ஆணும் பிறந்து கிடந்தது;

பெண்இடை ஆண்என் பிறப்புஅறிந்து ஈர்க்கின்ற

பெண்ணுடை ஆண்இடைப் பேச்சுஅற்ற வாறே. (திருமந்திரம், 1159)

ஆதியிலே பெண் இருந்தாள்; பெண் மட்டு்ந்தான் இருந்தாள்; எல்லாவற்றையும் பிறப்பித்த பெண். அவளுக்குள்ளிருந்துதான் ஆண் பிறந்தான். ஆணுக்கு உரிய அடையாளங்களோடு பிறந்தாலும், ஆண் கலவாமல் பிறந்ததனால் அவனும் பெண்ணே அல்லவா—பிராய்லர் கோழி முட்டைபோல? ஆண் பெண்ணைக் கலக்கிறான் என்கிறார்கள்; இதென்ன பேதைமை? ஆணும் பெண்ணின் கூறுதான் என்றால், பெண்ணேயல்லவா பெண்ணைக் கலக்கிறாள்? எண்ணிப் பார்த்தால், பெண்ணுக்கு நடுவில் ஆண்; அவள் ஈர்க்கும்போது ராணித் தேனீயால் ஈர்க்கப்பட்ட வேலைக்காரத் தேனீபோலப் பெண்ணுக்கு உரியவன் ஆண். முற்றிவிட்டபிறகு இனிப் பேச்சென்ன வேண்டியிருக்கிறது?

மாணிக்கவாசகர், ‘உடையாள் உன்தன் நடு இருக்கும்; உடையாள் நடுவுள் நீ இருத்தி. அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பீர்கள்’ என்று திருவாசகம் பாடுகிறார்.

(தொடரும்)

https://tamil.thehindu.com/society/spirituality/article24469601.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 41: அவளைத் துணை கொள்ளுங்கள்

 

 
thirumandhiramjpg

ஈன்றாள், மகள், தம் உடன்பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க – ஐம்புலனும்

 
 

தாங்கற்கு அரிதுஆக லான்

(ஆசாரக்கோவை, 65)

என்கிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை. தன்னைப் பெற்றவள், தான் பெற்றவள், தன்னோடு பிறந்தவள் என்றாலும் அவர்களோடு சான்றோர் தனித்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால், ஐம்புலன்களையும் அடக்கி அமைதியாக இருப்பது சான்றோருக்குமேகூடக் கடினமான வேலைதான்.

சான்றோரின் நிலையே இது என்றால், சாதாரணர்களின் நிலை? பெயர்த்தியின் வயதுள்ள சிறு பெண்ணொருத்தியைப் பெயரன் பெயர்த்தி எடுத்துக் கிழண்டுபோன சில காமுகர்கள் சிதைத்துவிட்டார்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று பெண்ணை எந்தப் பருவத்தில் பார்த்தாலும் துய்க்கும் பொருள் என்றே பார்ப்பார்கள்போலும். அலுத்துப் போவார்கள் பெண்கள். அவ்வாறு அலுத்துப்போன ஒருத்தி, கிழவியாக மாறும் வரம் கேட்டு ஔவை ஆனாள் என்று ஒரு தமிழ்த் தொன்மம்.

அவ்வாறு கேட்டுப் பெற்றுக்கொண்டவள் ஔவை ஒருத்தி மட்டுமே அல்லள். காரைக்கால் அம்மையும் இருக்கிறாள். அவள் ஔவையைக் காட்டிலும் இன்னும் ஒரு படி கூடுதல். நரை திரை வந்து கிழவியாகிப் போனாலும்கூட, பேய் உருவத்தை வேண்டிப் பெற்றுக்கொண்டாள். அவள் பாடுகிறாள்:

கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து,

குண்டுகண், வெண்பல், குழிவ யிற்றுப்

பங்கி சிவந்து, இரு பற்கள் நீண்டு,

பரடுஉயர் நீள்கணைக் கால்ஓர் வெண்பேய்,

தங்கி, அலறி, உலறு காட்டில்,

தாழ்சடை எட்டுத் திக்கும் வீசி,

அங்கம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்

அப்பன் இடம்திரு ஆலங் காடே.

(காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம், 11:02:1)

திரக்குதல் என்றால் வற்றிச் சுருங்கச் செய்தல். சமைப்பதற்காகக் கத்தரிக்காயைத் திரக்குவார்கள். யாரேனும் சமைந்து திரண்டிருக்கும் கொங்கைகளைத் திரக்குவார்களோ? திரக்குவார்கள். திரக்கியிருந்தது ஒரு சுடுகாட்டுப் பேய். பேயின் தோற்றத்தைக் கேளுங்கள்:

திரங்கிய கொங்கைகள்; புடைத்து எழுந்த நரம்புகள்; குழிக்கண்கள்; சாணை பிடித்ததுபோலப் பளிச்சிடும் கூரிய பற்கள்; அதில் கோரைப் பற்கள் இரண்டு கடைவாயில் நீண்டு தெரிந்து அச்சுறுத்துகின்றன; குழி விழுந்த வயிறு; சிவந்திருக்கிற மயிர்; புடைத்துக்கொண்டு தெரிகிற புறங்கால்; இந்தத் தோற்றத்தில், ரத்தம் சுண்டி வெளுத்துப்போன ஒரு வெள்ளைப் பேய். மற்ற பேய்கள் பசிக்குப் பிணம் மேயப் போயிருக்க, அந்த ஆலமரச் சுடுகாட்டில் இந்த ஒற்றைப் பேய் மட்டும் ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மொட்டைச் சுடுகாட்டில் யார் ஆடுகிறார்கள்? அப்பன் சடையன்.

வெண்சாம்பல் புழுதி பறக்க அனலில் ஆடினாலும் அங்கம் குளிர்ந்து ஆடுகிறான். எட்டுத் திக்கும் சடைவீசி ஆடுகிறான். பார்த்துக்கொண்டிருக்கும் காரைக்கால் பேயோ ஆனந்தத்தில் பாடுவதாக நினைத்துக்கொண்டு அலறுகிறது.

எது பேய்?

பேய்மை என்பது இயல்பை மீறியது. இயல்புக்குப் பகையாய் இருப்பதெல்லாம் பேய். பேய்ச் சுரைக்காய், பேய் முருங்கை, பேய்ப் புடலை, பேய்ச் சுண்டை, பேய்க் கரும்பு என்று இவை எல்லாம் இயல்பு மீறியவை; இயல்பான சுவை கூட்டாமல் கசப்புச் சுவை கூட்டுபவை.

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்துஎன்ன?

குட்டநோய் கொண்டும் என்ன?...

உணவுஅற்ற பேய்ச்சுரை
படர்ந்துஎன்ன படராது

உலர்ந்துதான் போகில் என்ன?...

(அறப்பளீசுர சதகம், 22)

மனித உணவுக்குப் பயன்படாத பேய் முருங்கையும் பேய்ச் சுரையும் தழைத்தால் என்ன? வெம்பிச் செத்தால்தான் என்ன? என்று வம்பு பேசுகிறது அறப்பளீசுர சதகம். ‘உலகம் பிறந்தது எனக்காக! எனக்குப் பயன்படாத உலகம் எதற்காக?’ என்ற தன்-மையப் பார்வை அதற்கு. போகட்டும். ‘ஏழு மணிக்கு மேலே இன்பலட்சுமிகளாக’ இருக்கவென்று கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள், விடுதலை விரும்பிகளாகி, சிற்றின்ப உலகுக்கு அப்பாலே சென்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் இயல்பு மீறியவர்கள்தாமே? பேய்ப்பெண்கள்தாமே?

சிவனுக்கு வரித்துக்கொண்ட அக்கமாதேவி

சிற்றின்பம் விட்டு மற்றின்பம் விரும்புகிற பெண் கொங்கை திரங்கிப் பேயாகித்தான் அதைப் பெற்றுக்கொள்ள முடியுமா? கொங்கை திரங்கிப் பேயாகாமல், நரைகூடிக் கிழப்பருவம் எய்தாமல், இருக்கும்நிலையில் இருந்தே அதைப் பெற்றுக்கொள்ள முடியாதா? முடியும். அவ்வண்ணம் பெற்றுக்கொண்டவர் அக்கமாதேவி.

ஆண்டாள் பெருமாளுக்குத் தன்னை வரித்துக்கொண்டதைப் போல சிவனுக்குத் தன்னை வரித்துக்கொண்டவர் அக்கமாதேவி. ஓர் ஆண் சிவனுக்கு அடியான் ஆனால், அவனைச் சிவனடியான் என்று அழைத்துப் பெருமைப்படுத்தும் உலகம், ஒரு பெண் சிவனுக்கு அடியாள் ஆனால், அவளைத் தேவரடியாள் என்று அழைத்துத் தன் தேவைகளுக்குப் பயன்படுத்த நினைக்கிறது. ஆனால், அக்கமாதேவி என்ற மாதேவி அக்காவோ ஆண்கள் அனைவருக்கும் அக்கா ஆனவர்.

வயிற்றுக்குப் பிச்சை;
  தவிப்புக்குத் தண்ணீர்;

தூங்கிக் கிடக்க இடிந்த கோவில்; 
  உயிருக்காக வாங்கிக் கிடக்க,
  சென்ன மல்லிகார்ச்சுனா! நீ!

ஏது குறை எனக்கு?

- என்று அக்கா இறைவனைக் கேட்கும்போது ‘உடைக் கோவணம் உண்டு; உறங்கப் புறந் திண்ணை உண்டு’ என்று பாடிய பட்டினத்தார் நினைவில் வருகிறார். ஆணாகிய பட்டினத்தார்கூட உடையாகக் கோவணம் கேட்கிறார்; பெண்ணாகிய அக்காவோ தன் தலைமயிர்க் கற்றைகளையே உடையாக்கிப் போனாள். பேய்ப் பெண்தானோ?

அறிவுப் பெருவெளியை அடையும் மார்க்கம்

இறைவனை ஆண் என்று கற்பித்து, தம்மையும் ஆணாக வைத்துக்கொண்டவர்கள், தம்மை அடையாள மாற்று செய்து, பெண்ணாகப் பாவித்துக்கொண்டு, இறைவனோடு தங்களைச் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால், பெண்களோ இந்த அற்ப அடையாளச் சிக்கலுக்கு ஆட்படாமல் பெண்களாக இருந்தே இறைவனைத் தங்களுக்குள் சேர்த்துக்கொள்கிறார்கள். தன்னோடு சேர்ந்துகொண்டாலும் சரி, தங்களோடு சேர்த்துக்கொண்டாலும் சரி, இறைமைக்கு உடன்பாடுதான். இந்த அடையாளச் சிக்கலைப் பாடுகிறார் திருமூலர்:

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்

பாதிநல் லாளும் பகவனும் ஆனது;

சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்,

வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே.

(திருமந்திரம், 1157)

மாது நல்லாளும் மணாளனும் ஒரே உருவத்தில் பாதிப் பாதியாக இருக்கிறார்கள். மாதுநல்லாள் இடங் கொடுத்ததால் மணாளன் வந்து ஏறிக்கொண்டானா? அல்லது மணாளன் இடங் கொடுத்ததால் மாதுநல்லாள் வந்து அடைந்துகொண்டாளா? ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையுமா? மாது கொடுத்ததால் பாதி பெற்றவன் பகவன். கொடுத்ததைக்கூடப் பேசிக்காட்டாத சோதி நல்லாள் அவள். நீங்களும் அவனைப்போலவே அவளைத் துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள். அறிவுப் பெருவெளியை அடைவீர்கள்.

வெள்அடை யான்இரு மாமிகு மாமலர்க்

கள்அடை யார்அக் கமழ்குழ லார்மன

அள்ளடை யான்ஆம் வகைத்திறம் ஆய்நின்ற

பெண்ஒரு பாகம் பிறவிபெண் ஆமே.

(திருமந்திரம், 1158)

அறிவுப் பெருவெளியாய் விரிந்து கிடப்பவன், கள் உடைய மலர்களைச் சூடி மணக்கும் கூந்தல் உடைய பிராட்டியின் மனத்தில் அடைபட்டுக் கிடக்கிறான். அவன் இருக்கும் வகை என்ன என்று பார்த்தால், ஆணாகவும் இருக்கிறான்; பாதிப் பெண்ணாகவும் இருக்கிறான்; பெண்ணாகவும் இருக்கிறான்.

அன்னே அனேஎனும்

சிலசமயம்; நின்னையே

ஐயாஐயா என்னவே

அலறிடும் சிலசமயம்...

என்னே எனேகருணை

விளையாட்டு இருந்தவாறு...

(தாயுமானவர், எங்கும் நிறைகின்ற பொருள், 1)

என்று பாடுகிறார் தாயுமானவர். அம்மா, அம்மா என்று அழைத்திருக்கிறேன் சில நேரம்; ஐயா, அப்பா என்று அலறியிருக்கிறேன் சில நேரம். நீ அம்மையா இல்லை அப்பனா? நான் எவ்வண்ணம் பார்க்கத் துணிகிறேனோ அவ்வண்ணம் காட்டுகிறாயே அருளனே!

மதங்களைக் கடந்து நிற்பதைப் போலவே ஆண்மையையும் பெண்மையையும் ஆண்மைப் பெண்மையையும் கடந்து நிற்கிறது இறைமை.

(தொடரும்)

https://tamil.thehindu.com/society/spirituality/article24518269.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 42: மனத்தில் எழுந்தது மாயக் கண்ணாடி

uyirjpg

யோகம் சித்த விருத்தி நிரோதம்’ என்று யோகத்தை வரையறுத்துக் கொள்கிறது பதஞ்சலியின் யோக சூத்திரம். யோகம் என்பது சித்த விருத்திகளைத் தடை செய்தல். சித்தம் என்பது என்ன? மனிதர்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்கள் வழியாகவே எதையும் அறிகிறார்கள். இந்த ஐம்புலன்களும் புறக் கருவிகள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த ஐம்புலன்களும் கொண்டு வந்து சேர்க்கும் செய்திகளை வாங்கி, வந்த செய்தி இன்னதென்று துணிந்து, அதை வகை பிரித்து, பதிவுசெய்து, பொதிந்து வைத்துக்கொள்வன அகக் கருவிகள் என்று சொல்லப்படுகின்றன. புறக் கருவிகள் ஐந்து என்பதுபோல அகக் கருவிகள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியன.

 

இவற்றில் மனம் என்பது ஒரு பாத்திரம்போல. அது புறக்கருவிகள் கொண்டு வந்து கொட்டும் செய்திகளை வாங்கிக்கொள்ளும். மனம் வாங்கி வைத்த செய்திகளை ஒருங்கிணைத்து ஒற்றைப்படுத்திப் புத்தி அதனை வகை பிரிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களது புலன்கள் அந்தப் பாம்பைப் பற்றித் தனித்தனியாகச் செய்திகள் கொண்டு தரும்.

கண், அதன் உருவம் பற்றிய செய்தியைக் கொண்டு தரும்; காது, அதன் சீற்ற ஒலியைக் கொண்டு தரும்; மூக்கு, அதற்கு மணம் ஏதேனும் இருந்தால் அதனைக் கொண்டு தரும்; அது நம் காலின்மீது ஏறி ஓடியிருந்தால் அதன் வழவழப்பை நம்முடைய மெய் கொண்டு வரும். இவ்வாறு பாம்பைப் பற்றி வெவ்வேறு புலன்கள், தனித்தனியாகக் கொண்டு தரும் நான்கு செய்திகளை மனம் வாங்கிப் போட்டுக்கொள்ள, புத்தி அவை நான்கும் பாம்பைப் பற்றி செய்திகள் என்று ஒன்றாக்கித் தொகுக்கும்.

பிறகு அது என்ன பாம்பு, அதன் குணம் என்ன, அது என்ன செய்யும் என்பதைப் பதிவெடுக்கும். ஒருவேளை புலன்கள் கொண்டு வந்த செய்திகளில் தோற்றப்பிழைகள் ஏதேனும் இருந்து குழப்பம் ஏற்பட்டால், அகங்காரம் சரியாகவோ தவறாகவோ, அது இன்னதென்று முடிவு செய்யும். எடுத்துக்காட்டாக, பார்த்த நேரம் பார்வை மயங்கும் அரை இருள் நேரம். பார்த்த பொருள் பாம்பா கயிறா என்று குழப்பம்.

அப்போது அகங்காரம் முன்கை எடுத்து அதைப் பாம்பென்றோ, அல்லது கயிறென்றோ முடிவு செய்யும். இவ்வாறு மனத்தால் வாங்கப்பட்டு, புத்தியால் வகை பிரிக்கப்பட்டு, அகங்காரத்தால் தீர்மானிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட செய்திகளையெல்லாம் சித்தம் தன்னுடைய அடுக்குகளுக்குள் பொதிந்து வைத்துக்கொள்ளும்.

சித்தத்தின் செயலறுப்பது யோகம்

பணம், காசு, நகைகளை வகை பிரித்து அடுக்கடுக்காகச் சேகரித்து வைத்துக்கொள்வது தன பண்டாரம் என்றால், செய்திகளை வகைபிரித்து அடுக்கடுக்காகச் சேகரித்து வைத்துக்கொள்ளும் இது, மன பண்டாரம். மனிதர்கள் ஆற்றுகின்ற வினைகளும் மறிவினைகளும் எதிர்வினைகளும் சித்தத்தின் சேகரத்தை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பெறுகின்றன.

நல்ல பாம்பைப் பார்த்தால் பயந்து ஓடுவது அல்லது அதைத் தடியால் அடிப்பது, தண்ணீர்ப் பாம்பைப் பார்த்தால் அஞ்சாமல் அதைக் கையிலெடுத்துச் சுழற்றுவது அல்லது அதை லட்சியமே செய்யாமல் இருப்பது என்று நாம் ஆற்றுகிற எதிர்வினைகள் எல்லாமே பாம்புகளைப் பற்றி நம் சித்தத்தில் சேகரிக்கப்பட்டிருக்கிற தகவல்களின் அடிப்படையில், சித்தத்தின் தூண்டுதலால் செய்யப்படுபவை.

பிறக்கும்போது எந்தச் சேகரமும் இல்லாமல் வெண்ணிலையாக இருக்கிற சித்தம் போகப்போக எது கிடைத்தாலும் வாங்கிச் சேகரித்து விரிந்துகொண்டே போகிறது. தன்னுடைய சேகரத்தின் தன்மைக்கு ஏற்ப, நம்மை ஆசைப்படச் செய்கிறது; வருத்தப்படச் செய்கிறது; கோபப்படச் செய்கிறது; வெறி கொள்ளச் செய்கிறது. நம்மை நாமாக இல்லாமல் செய்கிறது.

நம்மிலிருந்து விரிகிற சித்தம், நம்மைக் காட்டிலும் பெரிதாக விரிந்து, கடைசியில் நம்மையே விழுங்கிச் செரித்துச் சக்கையாக்கி விடுகிறது. அதன்பிறகு நாம் என்ற ஒன்று இல்லை; சித்தம் என்கிற மனப்பண்டாரம் உருவாக்கிக் காட்டுகிற மாயப் பிம்பம் மட்டுமே இருக்கிறது. நம்மை நாம் சித்தத்தில் தொலைத்துவிட்டோம். நம்மை மீளவும் கண்டுகொண்டு, மீள் உருவாக்கம் செய்துகொண்டு, சித்தத்தின் சக்கையாக இல்லாமல், நம்முடைய சாரமாகவே நாம் ஆகவேண்டுமானால், சித்தத்தின் அளப்பற்ற விரிவை, அது செய்கிற அலைக்கழிப்பை, அதன் மாயத்தை நாம் அறியவேண்டும்.

அறிந்தால் நம்மைத் தின்று செரிக்க முயலும் சித்தத்தின் செயல்பாடு நின்று போகும். சித்தத்தின் மாயப் பிம்பமாக ஆகிவிடாமல், சித்தத்தால் தின்று செரிக்கப்பட்டுவிடாமல், சலனமின்றி, நாம் நாமாகவே இருப்பது யோகம். சித்தத்தின் செயலறுப்பது யோகம்.

எதையேனும் ஒன்றை அறுக்க வேண்டும் என்று நினைத்தால் அதன் வேரைத் தேடிப் போங்கள் என்கிறது பௌத்தம். காரியத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை ஒழிக்க வேண்டும். துக்கத்தை அறுப்பதற்காகத் துக்கத்தின் வேரைத் தேடிப் போகிறது அது.

சித்தத்தின் வேர் தேடிப்போ

சித்தத்தை அறுக்க வேண்டும் என்றால் சித்தத்தின் வேர் தேடியாகவேண்டும். ஆனால் வேர் காட்டாமல் மயக்குகிறது சித்தம்; நம்மைப் பேதைமைப்படுத்துகிறது. திருமூலர் சொல்கிறார்:

மனத்தில் எழுந்ததுஓர் மாயக் கண்ணாடி;

நினைப்பின் அதனின் நிழலையும் காணார்;

வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்;

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே (திருமந்திரம், 1681)

தன்னை அறியக் கிளம்பியவர்கள் தன்னுடைய மூலை முடுக்குகளிலெல்லாம் தன்னைத் தேடினார்கள்; மன பண்டாரம் எதிர்ப்பட்டது; அங்கும் தேடினார்கள்; அது ஒரு மாயப் பிம்பத்தை எழுப்பிக் காட்டியது. அடிமுடி தேடிய படலத்தில், முடி தேடிப் போன பிரம்மன், முடியைக் காணாமல் அன்னப் பறவையைக் கண்டு திரும்பிவிட்டதைப்போல, தன்னையே தேடிப் போனவர்கள், தன்னைக் காணாமல் ஏதோ ஒரு மாயப் பிம்பத்தைக் கண்டு அதுவே தான் என்று எண்ணித் திரும்பி விட்டார்கள்.

விளங்காதவர்கள்; விளக்கிச் சொன்னாலும் விளங்கிக் கொள்ளத் தெரியாதவர்கள். தலைவாயில் அடைத்திருப்பதாக எண்ணி ஏமாந்து பின்னால் சென்று புறக்கடை வாசலைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தன்னை அல்ல, தன்னுடைய நிழலைக்கூட இவர்களால் கண்டுகொள்ள முடியாது.

மனமாயை மாயை;இம் மாயை மயக்க;

மனமாயை தான்மாய, மற்றொன்றும் இல்லை;

பினைமாய்வது இல்லை; பிதற்றவும் வேண்டா;

தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.

(திருமந்திரம், 2956)

உங்களைப் பேதைமைப்படுத்துவதும் மயக்குவதும் நீங்களே உருவாக்கிச் செல்லங் கொஞ்சிப் பேணி வளர்த்து வைத்திருக்கிற மனம்தான். மனம் உங்களை மயக்குவதை நிறுத்துங்கள்; மனத்தை நீங்கள் மயக்குங்கள். மனம் என்கிற மாயை ஒழிந்துவிட்டால், பிறகு உங்களை மயக்கத்தக்கது வேறு ஒன்றும் இல்லை. ஒழித்துக்கட்ட வேண்டியதும் வேறு ஒன்றும் இல்லை. மனத்தின் தூண்டுதலுக்கு ஆட்பட்டுத் தாறுமாறாக நடந்துகொள்ளவும் தேவையில்லை. தன்னையே தான் ஆராய்ந்து, தானே தானாக இருப்பதுதான் யோகம்.

தன்னையே தான் ஆராய்தல் எப்படி? மாணிக்கவாசகர் சொல்கிறார்:

நான்ஆர்?என் உள்ளம்ஆர்? ஞானங்கள்

ஆர்?என்னை யார்அறிவார்?

வானோர் பிரான்என்னை

ஆண்டுஇலனேல் மதிமயங்கி

ஊனார் உடைதலையில்

உண்பலிதேர் அம்பலவன்

தேன்ஆர் கமலமே

சென்றுஊதாய் கோத்தும்பீ

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 2)

நான் யார், என் உள்ளம் எது, ஞானங்கள் எவை என்று அறிய வேண்டும்; என்னை அறிகிறவர் யார் என்றும் பார்க்க வேண்டும். எல்லாமே வானோர் பிரானாகிய சிவன்தான் என்று தன்னை அறிவிக்கும் பொறுப்பையும் அறியும் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைக்கிறார் பக்தியின் வழிவந்த மாணிக்கவாசகர். யோகத்தின் வழிவந்த திருமூலரோ அந்தப் பொறுப்பைத் தன் வசமே வைத்துக்கொள்கிறார்.

(யாரென்று தேடுவோம்)

https://tamil.thehindu.com/society/spirituality/article24579500.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 43: உழவை மறந்தான் உலகத்தில் விழுந்தான்

 

 
uyirjpg

கொடுப்பதைத் தமிழ் அறநெறி மரபு முதன்மைப் படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் நிறையக் கொடைஞர்கள் இருந்திருக்கிறார்கள். கணக்குப் பார்க்காமல் கொடுத்திருக்கிறார்கள். இன்னார், இனியார் என்று பார்க்காமல் கொடுத்திருக்கிறார்கள். சில நேரத்தில் மடத்தனமாகக்கூடக் கொடுத்திருக்கிறார்கள். மடத்தனமாகக் கொடுப்பதைத் தமிழ் மரபு ‘கொடை மடம்’ எனும். கொடுப்பதில் உண்டாகும் மடம்.

மடம் என்பது, ஒருவர் தன்னுடைய அறிகருவிகளால் ஆராய்ந்து, தனக்கான கருத்தாக, கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒன்றை, எத்தனை இடையூறுகள் வந்தாலும், எவ்வளவு சங்கடங்கள் நேர்ந்தாலும், சாவே வந்து அணைந்தாலும், கொண்டதைக் கைவிடாமல் கடைசிவரை இறுகப் பற்றிக்கொள்ளுதல்.

 

சாவே வந்தாலும் கைவிடாமல் பற்றிக்கொள்வது என்பதென்ன எளிதான செயலா? அரிதான செயல் இல்லையா? அரிதான செயல்தான். ஆனால், அறிவான செயலா? இல்லைதான். ஆகவேதான் அது மடம் எனப்பட்டது. ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட கொள்கைதான் என்றாலும், தேவையான இடத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுந்தானே? மடம் என்பது பெண்ணின் குணம் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஆணின் குணமும்தான். சில கட்சிகளில் தங்களைப் பூட்டிக்கொண்டவர்கள், அந்தக் கட்சி எத்தனை கோளாறுகள் செய்தாலும் சீர்தூக்கிப் பார்க்காமல், திசை மாற்றிக்கொள்ளாமல், நிலை மாறாமல் மடம் கொண்டு நிற்பார்கள்.

கடைமடையனாக இருக்கலாம்

இந்த மடமையும்கூட ஒரு புகழைக் கொடுக்கும். மயிலுக்குப் போர்வை கொடுத்த கொடைஞன் அப்படித்தான் புகழ்பெற்றான். அவன் பெயர் பேகன். தமிழ் மரபு கொண்டாடுகிற வள்ளல்களில் ஒருவன். பொதினி மலைக்குத் தலைவன். ஒரு குளிர்காலத்தின் அதிகாலையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு நடை பழகிக்கொண்டிருந்தான்.

மயில் ஒன்று உடல் சிலிர்த்து அகவியது. குளிரில் நடுங்கித்தான் மயில் அகவுகிறது என்று எண்ணித் தான் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டானாம் பேகன். அவன் செயலைக் கேட்டவர்கள், ‘அட அறிவுக் களஞ்சியமே! இப்படியா இருப்பான் ஒருவன்? இவ்வளவு மடையனாகவா? தலைவனாக இருக்கத் தகுந்தவன்தானா இவன்?’ என்று பகடி பேசினார்கள். மறுதலையாகப் பரணர் பாடுகிறார்:

அறுகுளத்து உகுத்தும்

அகல்வயல் பொழிந்தும்

உறும்இடத்து உதவாது

உவர்நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி போலக்

கடாஅ யானைக்

கழல்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது

படைமடம் படான்பிறர்

படைமயக்கு உறினே. (புறநானூறு 142)

மழை இருக்கிறதே, அது காய்ந்துபோன குளத்திலும் பெய்யும்; வறண்டு வெடித்துக் கிடக்கிற வயலிலும் பெய்யும்; சில சமயங்களில் தேவைப்படும் இடங்களில் பெய்யாமல், உழவுக்குப் பயன்படாத உவர்நிலத்தில் பெய்து வீணாகியும் போகும். மழையின் போக்குக்கு வரைமுறை கிடையாது; இன்னார் இனியார் என்ற கணக்குக் கிடையாது. அதைப் போலத்தான் இந்தப் பேகன். வேண்டியவர்களுக்கும் கொடுப்பான்; வேண்டாதவர்களுக்கும் கொடுப்பான்; பயன்படுமா என்று பார்த்தும் கொடுப்பான்; மயிலுக்குக் கொடுத்ததுபோல வீணாகவும் கொடுப்பான். அதனால் அவனைக் கொடை மடையன் என்று சொல்லலாம்.

அவன் கொடை மடையனே தவிரப் படை மடையன் அல்லன். போர் என்று வரும்போது, இன்னாரையும் இனியாரையும் அவனால் வேறுபடுத்தி அறிய முடியும். எதிர்த்து நின்றவர்களை வெட்டுவான்; தஞ்சமென்று வந்தவர்களைத் தழுவுவான். தகுதி தெரிந்து சண்டை இட வேண்டும் என்ற அறம் தெரிந்தவன் அவன்.

புகழைப் புகழும் வள்ளுவர்

போர்வை கொடுத்த பேகன் ஒருவன்தான் கொடைமடையன் என்றில்லை. அவனுக்குப் போட்டியாகத் தேர் கொடுத்த பாரி, தலை கொடுத்த குமணன், சதை கொடுத்த சிபி ஆகியோரும் இருக்கிறார்கள்.

போர்வை கொடுத்ததும் தேரைக் கொடுத்ததுமே மடத்தனம் என்றால் தன்னையே கொடுக்கத் துணிவது முழு மூடத்தனம் இல்லையா? இல்லை; ‘புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்’ என்கிறது புறநானூறு (182). புகழைப் புகழ்கிற வள்ளுவர்,

நத்தம்போல் கேடும் உளதுஆகும்; சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது. (குறள் 235)

நத்தை இருக்கிறதே, அது தன்னைச் சுற்றிச் சங்கு என்னும் உறையை உருவாக்கிக்கொள்கிறது. பிறகு அதைப் பிறர் கொள்ளக் கொடுத்துவிட்டுத் தான் சாகிறது. கொடுக்கிறவர்கள், செத்தாலும் புகழ் விளங்குமாறு சாகிறார்கள். நிலையில்லாத பூத உடலைக் கொடுத்து, அழியாத புகழ் உடலைப் பெற்றுவிடுகிறார்களே, இவர்கள் வித்தகர்கள் இல்லையா?

திருவள்ளுவரே சொல்கிறார்தான்; என்றாலும் ஒரு கேள்வி வருகிறது. செத்துப்போன பிறகு வருகிற இந்தப் புகழை வைத்துக்கொண்டு என்ன செய்ய? ஏதும் செய்வதற்காக அல்ல புகழ். எந்தப் பயனும் இல்லாத நம்முடைய நிழல்போலப் புகழ் சில சமயம் தானாகவே நம்மோடு வருகிறது; பின் தானாகவே காணாமல் போகிறது. புகழைக் கருதி யார் செய்தார்கள்? ‘நல்லன செய்தால் நல்லன விளையும்; ஆகவே நல்லது செய்க’ என்று மெய்ம்மை பயிற்றும் மரபுகளைப் புறத்தமிழ் மரபு புறந்தள்ளுகிறது. நல்லனவே விளையாவிட்டாலும் நல்லன செய்க. விளைவுக்காக அல்ல, அறத்துக்காகவே அறம்.

...எத்துணை ஆயினும்

ஈத்தல் நன்றுஎன

மறுமை நோக்கின்றோ? அன்றே!

பிறர் வறுமை நோக்கின்று

அவன்கை வண்மையே! (புறநானூறு 141)

அடுத்த பிறப்பில் யாராகப் பிறப்பேன்? செத்துப்போன பிறகு அவ்வுலகில் எனக்கு என்ன கிடைக்கும்? என்று மறுமை பார்த்தா கொடுத்தான் பேகன்? பிறர் வறுமை பார்த்தல்லவா கொடுத்தான்? ‘மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று இதை வள்ளுவரும் ஆமோதித்து விடுகிறார். திருமூலர் சும்மா இருப்பாரா?

தன்னது சாயை தனக்குஉத வாதுகண்டு

என்னது மாடுஎன்று இருப்பர்கள் ஏழைகள்;

உன்உயிர் போம்;உடல் ஒக்கப் பிறந்தது;

கண்அது காண்ஒளி கண்டுகொ ளீரே (திருமந்திரம் 170)

வெயிலில் போகும்போது ஒதுங்குவதற்கு நிழல் தேடுகிறீர்கள்; அதுவோ ஒன்றுமில்லாத மொட்டைவெளி; உங்கள் காலடியிலோ உங்களுக்கென்றே அளவெடுத்துச் செய்ததுபோலக் கச்சிதமாய் உங்கள் நிழல். அதில் ஒதுங்க முடியுமா? உங்களது நிழல் உங்களுக்கு என்றைக்காவது உதவியிருக்கிறதா?

அவ்வாறே உங்களுடைய செல்வமும் உங்களுக்கு உதவாது என்று நிழற்பாடம் படித்த பிறகுமா உங்களுக்குப் புரியவில்லை? என்னுடைய செல்வம் என்னுடைய துன்பத்தைப் போக்கும் என்று சுவிஸ் வங்கிகளில் வைத்துப்பூட்டிச் செல்வத்தைக் காக்கும் ஏழைகளே! உங்கள் உடம்போடு கூடவே வந்த உயிரே உடம்பைக் காக்காமல் கைவிட்டுப் போகும் நிலையில், இடையில் வந்த செல்வமா உங்களைக் காக்கப் போகிறது? உங்களுக்கெல்லாம் காட்டுவதற்குக் கண்ணும் இருக்கிறது. காண்பதற்கு அறிவும் இருக்கிறது. காணக்கூடாதா?

அறிவைத் தொகுத்தலே இன்பம்

மனிதருக்குத் துன்பம் எது? செல்வ வறுமையா? புகழ் வறுமையா? அறியாமையே துன்பம். நிலையானது எது, நிலையில்லாதது எது என்று வேறுபடுத்தி அறியத் தெரியாத மெய்ம்மடமே துன்பம். செல்வத்தைத் தொகுத்தலும் புகழைத் தொகுத்தலும் அல்ல, அறியாமை நீங்க அறிவைத் தொகுத்தலே இன்பம். அறிவைத் தொகுக்கவிடாமல் உலகியல் கவ்வி இழுக்கிறது.

உழவன் உழவுஉழ, வானம் வழங்க,

உழவன் உழவில் பூத்த குவளை,

உழவன் உழத்தியர் கண்ஒக்கும் என்றிட்டு

உழவன் அதனை உழவுஒழிந் தானே. (திருமந்திரம் 1619)

உழவன் உழுதான். மழையும் பெய்தது. உழுத நிலத்தில் குவளைப்பூப் பூத்தது. உழவு நிலத்தில் குவளை களை இல்லையோ? களைவதற்காகக் கிட்டத்தில் வந்தபோது, உழத்தியின் கண்போலத் தோன்றியது குவளை. அதன்பின் களைவானா? உழவை மறந்தான்; உலகத்தில் விழுந்தான்.

உலகியல் தன்னுடைய கற்பிதங்களால் தொடர்ந்து மடமைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. களைத்துப் போகாமல் அறிவைத் தொகுத்துக்கொண்டே இருக்க வேண்டும்—பாரஞ் சுமக்கிற காளைகள் முக்கி மேடேறுவதைப் போல.

(அறிவைக் காதலிப்போம்) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24631173.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 44: ஞான விளக்கைத் தேடிப்போவோம்

 

 
thirumandhiramjpg

அறிவூட்டுகிற பேச்சுகளையும் அவற்றைப் பேசும் ஆட்களையும் எப்போதும் அரசாங்கங்கள் விரும்புவதில்லை. முன் ஆடு போன தடத்திலேயே போகும் பிற ஆடுகளைப் போலவும், வானத்தை நோக்கிச் சுட்டால்கூடத் தன்னைத்தான் சுட்டுவிட்டதாகவும் தான் செத்துவிட்டதாகவும் நினைத்து நெஞ்சடைத்து விழுந்துவிடுகிற வாத்துக்களைப் போலவும் மக்கள் இருப்பதுதான் ஆள்வதற்கு வசதியானது என்று அவை கருதுகின்றன. ஆகவே, அறிவூட்டும் வேலையை அரசாங்கங்கள் செய்வதில்லை என்பதோடு அந்த வேலையைச் செய்கிறவர்களைத் தடைப்படுத்தியும் தளைப்படுத்தியும் தேவைப்பட்டால் இல்லாமலே செய்தும் வந்திருக்கின்றன. சான்று கிரேக்க மெய்யியல் அறிஞன் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ் சில கேள்விகள் கேட்டான்:

 

‘உங்களுடைய செருப்பைச் செப்பனிட வேண்டுமென்றால் யாரிடம் போவீர்கள்?’ ‘இதென்ன கேள்வி? ஒரு தொழிலில் எவர் தேர்ச்சியுடையவரோ அவரிடந்தான் போவோம்; செருப்பைச் செப்பனிடுவதில் தேர்ச்சியுடையவர் செருப்புத் தைக்கிறவர்; அவரிடந்தான் போக வேண்டும்.’

‘உங்களுடைய மர நாற்காலி பழுதடைந்துவிட்டதென்றால், யாரிடம் போவீர்கள்?’

‘தச்சரிடந்தான். அவர்தானே மர வேலைகளில் தேர்ச்சி மிக்கவர்?’

‘உங்களுடைய பொன்நகை இற்றுப் போய்விட்டதென்றால் பற்ற வைத்துக்கொள்வதற்கு யாரிடம் போவீர்கள்?’

‘ஐயமென்ன? பொற்கொல்லரிடம்!’

‘நல்லது. உங்களுடைய அரசாங்கம் பாழ்பட்டுப் போய்விட்டதென்றால், அதைச் சீர்செய்ய யாரிடம் போவீர்கள்?’

எளிய காரியங்களுக்கெல்லாம் அவற்றில் தேர்ச்சியுள்ளவர்களிடம் தெளிவாகப் போகிறவர்கள், வலிய காரியமாகிய அரசு நடத்துதலுக்கும் அதேபோலத் தேர்ச்சியுள்ளவர்களிடம், அறிவுள்ளவர்களிடம் போக வேண்டாமா? ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்பது அரசியற் சமூகத்தில் வாழ்கிற ஒரு மனிதனின் கருத்தாக இருக்கலாமா?

மக்களுக்கு அறிவுகொடுக்க முயன்ற இந்தக் கேள்விதான் சாக்ரடீஸுக்கு நஞ்சைக் கொடுத்தது: சாக்ரடீஸ் ஒரு தேசத் துரோகி; தீமையின் கனியைச் சுவைக்கும் சாத்தான்; வேண்டாதவற்றை வேண்டுகிறவன்; பூமிக்கு அடியிலேயும் வானத்துக்கு அப்பாலேயும் இருப்பவற்றை ஆராய்கிற அறிவீனன்; சிறந்ததையெல்லாம் மோசமான தாகவும், மோசமானதை யெல்லாம் சிறந்ததாகவும் ஆக்கிக்காட்ட முனைகிறவன்;

அவற்றையெல்லாம் மற்றவர்களுக்கும் போதித்து அவர்களையும் பேதைப் படுத்துகிறவன்; அரசாங்கம் கும்பிடச் சொல்கிற தெய்வங்களைக் கும்பிடாமல் புதிய கருத்துநிலைத் தெய்வங்களைக் கற்பிக்கிறவன்; அவ்வாறு கற்பிப்பதன்மூலம் இளைஞர்களின் மூளைகளைக் குற்றப்படுத்துகிறவன்—என்றெல்லாம் சாக்ரடீஸைக் குற்றம் சாட்டினார்கள். சாக்ரடீஸ் மன்னிப்புக் கேட்டால் எளிய தண்டனையோடு விட்டுவிடுவதாகச் சொன்னார்கள்.

பிளேட்டோவின் குகை

மரணத்துக்கு அஞ்சி மன்னிப்புக் கேட்பது அறிவுடைமை ஆகாது; மரணத்தைப் பார்த்து ஏன் அஞ்ச வேண்டும்? மரணம் நல்லதாகக்கூட இருக்கலாம்; அது கனவுகளற்ற உறக்கம் ஆகலாம்; நல்லதுதானே? பரவலாக நம்பப்படுவதைப் போல என்னை அது மறுஉலகுக்குக் கொண்டு போகலாம்; ஏற்கெனவே மரணமடைந்து, மறு உலகில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிற ஆர்பியசையும் எசியோதையும் ஓமரையும் கண்டு அளவளாவும் வாய்ப்பை உண்டாக்கித் தரலாம்; நல்லதுதானே? எ

னவே மன்னிப்புக் கேட்டு, என்மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு மறைமுக ஒப்புதல் வழங்கி வாழ்வைப் பெறுவதைவிட, மரணத்தையே அடைந்துகொள்கிறேன் என்றான் சாக்ரடீஸ். நஞ்சைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தான்; செத்தான்.

சாக்ரட்டீஸின் மாணவன் பிளேட்டோ. அறிவுக் கனியைப் பறித்துத் தின்னச் சொன்னவனுக்கு சாவா பரிசு என நொந்தான். உருவகக் கதை ஒன்று செய்தான். பிளேட்டோவின் குகை உருவகக் கதை என்று அது புகழ் பெற்றது.

ஓர் இருட்குகை. குகையின் வாயிலுக்கும் உட்சுவருக்கும் நடுவில் ஒரு கட்டைச் சுவர். அந்தக் கட்டைச் சுவரில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சில மனிதர்கள். பிறந்த நாள் முதலே அவர்கள் அந்த இருட்குகையின் கட்டைச் சுவரில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் குகையின் வாயிலை, புற உலக நிகழ்வுகளைப் பார்க்க முடியாது. பக்கத்தில் கட்டப்பட்டி ருக்கிற மனிதரைக்கூடப் பார்க்க முடியாது. தங்களைத் தாங்களேகூடப் பார்த்துக்கொள்ள முடியாது. அவர்களால் பார்க்க முடிந்ததெல்லாம் தங்களுக்கு எதிரில் தெரிகிற குகையின் உட்சுவரை மட்டுமே.

இந்த மனிதர்களைக் கட்டி வைத்திருக்கிற கட்டைச் சுவருக்குப் பின்னால் வெளிச்சத்துக்காக ஒரு தீக்குண்டம். அந்தத் தீக்குண்டத்துக்கும் கட்டைச் சுவருக்கும் நடுவில் ஒரு நடைபாதை. அந்த நடைபாதையில் சில மனிதர்கள் போகிறார்கள், வருகிறார்கள். சில நேரத்தில் கழுதைகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றில் பொம்மைகளை உயரத் தூக்கிப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். இவர்களுடைய நிழல்கள் குகையின் உட்சுவரில் பூதாகரமாக விழுகின்றன. கட்டுண்ட மனிதர்கள் அவற்றைப் பார்க்கிறார்கள். இந்தப் பூதாகரமான நிழல்களையே உண்மை என்று அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் பிறந்தது முதல் அவர்கள் நிழல்களைத் தவிர வேறு எதையும் கண்டறிந்தவர்கள் இல்லை.

பின்னால் தலை திருப்பிப் பார்க்கிற வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. பார்ப்பதற்கு நிழலன்றி ஏதும் அற்றவர்கள் அவர்கள். பாதையில் மனிதர்கள் பேசிக்கொண்டே நடக்கும்போது ஒலிகள் எழுகின்றன. அந்த ஒலிகள் குகையில் எதிரொலித்துத் தெளிவற்ற கூவொலியாகக் கேட்கின்றன. அந்தக் கூவொலிகள் எல்லாம் பூதாகரமான நிழல்கள் எழுப்புகிற ஓசைகள் என்று கட்டுண்ட மனிதர்கள் நம்புகிறார்கள்.

விடுதலை வெளிச்சம்

இந்த நிலையில் கட்டுண்டு கிடந்த மனிதர்களில் ஒருவன் எப்படியோ தப்பித்து விடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன நிகழும்? விடுவித்துக்கொண்டவன் அங்குமிங்கும் அலைவான். கட்டைச் சுவரின் பின்னால் உள்ள குண்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயைப் பார்ப்பான். வெளிச்சத்தை நேராகப் பார்த்துப் பழக்கமில்லாததால் அவனுடைய கண்கள் கூசும். மெல்லப் பார்வையைச் சரி செய்வான். தீயை நேராகப் பார்க்கும் திறன் பெறுவான். தீயின் வெளிச்சத்தில் குகையின் பரிமாணங்களை அளந்து அறிவான். குகையின் வாயிலைக் காண்பான். வெளியேறுவான்.

வெளியில் சூரியன் தகித்துக்கொண்டிருக்கும். அவ்வளவு வெளிச்சத்துக்கு அவன் கண்கள் பழகியதேயில்லை. தடுமாறிக் கண்களைச் சுருக்கிக்கொள்வான். மேலே பார்க்காமல் கீழே பார்ப்பான். புறப் பொருட்களின் நிழல்கள் தெரியும். பின் மெல்லத் தலைநிமிர்த்தி புறப்பொருள்களையே நேரடியாகப் பார்ப்பான். பிறகு இன்னும் தலை நிமிர்த்தி இவற்றையெல்லாம் காட்டுகின்ற ஒளி எது என்று பார்ப்பான். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று கூத்தாடிப் போய்விடுவானா? பொறுப்புள்ளவன் போக மாட்டான்.

மீண்டும் குகைக்குத் திரும்புவான். வெளிச்சத்திலிருந்து இருளுக்கு வந்ததால் கண் தெரியாமல் தடுமாறுவான். கட்டப்பட்டிருப்பவர்களோ, கடவுளின் கட்டளையை மீறி வெளியே போனதால் அவன் கண்களை இழந்துவிட்டதாக இகழ்வார்கள். நிழல்களையே பார்த்துப் புத்தி பேதலித்துக் கிடக்கும் அவர்களுக்கு இவன் உண்மையைச் சொல்வான். அவர்களை விடுவிக்க முயல்வான். அவர்களோ இவனைப் பைத்தியம் என்று சொல்லி அடித்துக் கொல்வார்கள். அம்மணர்களின் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

வேண்டாத உண்மையறிவு

அறிவைப் பெறுவதும் அதை அடையாளம் காட்டுவதும் முயல்கிறவர்களுக்கு அரியதாகவும் அரசாங்கத்துக்கும் மற்றவர்களுக்கும் வேண்டாததாகவும் இருக்கிறது. திருமூலர் சொல்கிறார்:

மாய விளக்குஅது நின்று மறைந்திடும்;

தூய விளக்குஅது நின்று சுடர்விடும்;

காய விளக்குஅது நின்று கனன்றிடும்;

சேய விளக்கினைத் தேடுகின் றேனே. (திருமந்திரம் 2367)

அறியாமை என்ற இருட்குகையில் அகப்பட்டவர்களுக்கு நிழல்களைக் காட்டி மறைகின்றன சில விளக்குகள். நின்றெரியும் தூங்காமணி விளக்குகளோ நிலையாகக் காட்டினாலும்கூட, நிழல்களையே காட்டுகின்றன. உடம்பு அகலுக்குள் அறிவு விளக்கு ஏற்றினால் அது மெய் காட்டும். அதற்குத் தீயைத் தூண்டிவிடும் ஞான விளக்கைத் தேடிப் போங்கள். அறிவைத் தேடுவது ஏன் அவ்வளவு முதன்மையானது என்றால்,

அறிவுஉடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது;

அறிவுஉடை யார்நெஞ்சு அருமருந்து ஆவது;

அறிவுஉடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்

அறிவுஉடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே. (திருமந்திரம் 2364)

பொருளா சொல்லவேண்டும்?

(அறிவைப் பற்றுவோம்)

https://tamil.thehindu.com/society/spirituality/article24701693.ece

Link to comment
Share on other sites

தமிழரின் தொன்மமும் சயச் சார்பற்ற ஆன்மீகச் சிறப்பும்பற்றிய குறிப்புகள். யாழ்கழ சமூகத்தினர்
பொறுமையாக வாசித்தும்m விவாதித்தும்  பயன்பெற வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 45: உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான்

 

 
uyirjpg

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது;

ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்;

 

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்,

ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.

(திருமந்திரம், 188)

உடையவன் ஒருவன், தன்னுடைய நிலம் ஒன்றை, ஐவருக்குக் குத்தகை உரிமையாக வழங்கினான். ஐவரும் தங்கள் திறனால் அதை நன்றாகப் பேணி வந்தார்கள். நிலமும் பொன்னாக விளைந்து கொடுத்தது. ஒருகட்டத்தில் நிலத்துக்கு உடையவன் குத்தகையை மாற்றக் கருதி அவர்கள் ஐவரையும் நிலப் பொறுப்பிலிருந்து விலகுமாறு ஓலை விட்டான். ஐவரும் அந்த நிலத்தைக் கைவிட்டு விலகினார்கள்.

இங்கே ஐவர் என்றது ஐம்புலன்களை; நிலம் என்றது உயிரை; விளைதல் என்பது, அறிந்தும் உணர்ந்தும் உயிர் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் தொழிற்பாட்டை; நாயகன் என்றது இறைவனை; ஓலை என்றது சாவின் அழைப்பை; காவல் விடுதல் என்றது சாவை.

உயிர் ஓர் அறிவுப் பொருள். மேசை, நாற்காலிபோல எதையும் அறியவொண்ணாத சடமாக இல்லாமல், எல்லாவற்றையும் அறிகின்ற இயல்புடையது. ஆனால், எதையும் அது தானாக அறியாது. அறிவிக்க அறியும். அழுந்தி அறியும். அதாவது, எதையும் தோய்ந்து அனுபவித்தே அறியும். உயிரை, உலகப் பொருள்களில் தோயச் செய்து, அதற்கு உண்மை பொய்ம்மைகளை அறிவிப்பதற்குப் புலன்கள் தேவை. புலன்கள் இல்லாமல் உயிரின் அறிவு நிகழ்வதில்லை. உழுநிலத்துக்கு உழுவான் தேவை என்பதைப் போல; உழுகிறவன் கைவிட்ட நிலம் கரம்பையாய்ப் போவதைப் போல.

பொறிஇன்றி ஒன்றும் புணராத புந்திக்கு

அறிவுஎன்ற பெயர்நன்று அற.

(திருவருட்பயன், 15)

- என்று உயிரின் நிலை சொல்கிறது, உமாபதி சிவம் எழுதிய சித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றான திருவருட்பயன். உயிரின் இயல்பு அறிவதுதான் என்கிறீர்கள்; உயிருக்குப் பெயரே அறிவுதான் (சித்து) என்கிறீர்கள்; ஐந்து பொறிகளின் துணை இல்லாமல் எந்த ஒன்றையும் அறிய முடியாமல் தடுமாறுகிற உயிருக்கு அறிவு என்ற பெயரா? நன்றாகத்தான் இருக்கிறது.

புலன் சார்பற்ற அறிவு?

எனவே, உயிர் அறிய வேண்டுமானால், அறிவிப்பதற்குப் புலன்கள் வேண்டும். புலன்கள் எல்லாவற்றையுமே அறிவிக்குமா? உலகியலுக்கு அப்பால் உள்ள பாதாள, பரலோகங்களை அறிவிக்குமா என்றால், வாய்ப்பில்லை. அவை கருத்தால் மட்டுமே சென்றடையக்கூடிய இடங்கள்; புலன்களால் அவற்றுக்கு வழிநடத்த முடியாது. ஆனால், உலகியலுக்கு அப்பால் ஏதேனும் இருக்கின்றனவா என்ற கருத்துலக ஆய்வுக்குள் நுழைய வேண்டுமானால், முதலில் பருவுலகில் இருப்பவற்றை அறிய வேண்டாமா?

புலன்சார்பற்ற அறிவு (a priori) என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது புலன்களைப் பயன்படுத்தாமல், வெறும் சிந்தனையின் வழியாகவே நாம் சிலவற்றை அறிய முடியும் என்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாகக் கணக்கியலைக் காட்டுகிறார்கள். நாம் எப்படிக் கணக்கிடுகிறோம்? என்னிடம் இரண்டு மாம்பழங்கள் இருக்கின்றன; நண்பர் மூன்று மாம்பழங்கள் கொண்டு வந்தார். எடுத்துவைத்து எண்ணினால், என்னிடம் கையில் இருப்பவை மொத்தம் ஐந்து. ஐந்துமே புலன்களால் கண்டவை. இது எளிய கணக்கிடும் முறை.

இதைக் கொஞ்சம் மாற்றிக் கருதிப் பார்க்கலாம்: என்னிடம் இரண்டு மாம்பழங்கள் இருக்கின்றன; இன்னும் மூன்று மாம்பழங்களைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவற்றையும் சேர்த்தால் என்னிடம் இருக்கக்கூடிய மாம்பழங்கள் மொத்தம் ஐந்து. இந்த முறை, கையில் இருப்பவை இரண்டு; கருத்தில் இருப்பவை மூன்று. அதாவது புலன்களால் கண்டவை இரண்டு; காணாதவை மூன்று.

இன்னும் கொஞ்சம் மாற்றிக் கருதிப் பார்க்கலாம்: என்னிடம் எதுவுமே இல்லை. உடன் பணியாற்றுகிறவர்களில் ஒருவர், மாம்பழம் வாங்கினேன்; நாளை வரும்போது இரண்டு கொண்டு வருகிறேன் என்கிறார்.  மற்றொருவர், நானும் வாங்கினேன்; மூன்று கொண்டு வருகிறேன் என்கிறார். இரண்டும் மூன்றும் ஐந்து என்று கணக்கிடுகிறேன் நான். இந்த முறை, கையில் எதுவுமே இல்லை; ஐந்தும் கருத்தில். அதாவது, புலன்களால் கண்டவை ஒன்றுமில்லை; காணாதவை ஐந்து.

எனவே, கணக்கியலுக்குப் புலன்களால் காண வேண்டும் என்ற அவசியமில்லை; கணக்கியல் புலன் சார்பற்றது என்று சொல்லப்படுகிறது. இரண்டும் மூன்றும் ஐந்து என்று கண்களால் பார்க்காமல் கருத்தாலேயே கணக்கிட்டீர்கள்; சரி. ஆனால் இரண்டையும் மூன்றையும் எப்படி அறிந்தீர்கள்? இரண்டு மாம்பழம், மூன்று நெல்லிக் காய்கள் என்று கண்டும் கையால் தொட்டு எடுத்து வைத்து எண்ணியும்தானே அறிந்தீர்கள்?

புலன்களால் அறியப்படக்கூடிய எதுவுமே இல்லாமல், இது ஒன்று, இவை இரண்டு, மூன்று என்று எப்படி எண்ணுவீர்கள்? எண்ணி அறிந்த பிறகு அவை கருத்துருவம் ஆகிவிட்ட எண்கள் என்பது சரி; ஆனால், எண்ணிக் கருத்துருவம் ஆகும்வரை அவை பருண்மையான பொருட்கள்தாமே? பொருட்களே இல்லாமல் எண்கள் எப்படி உங்கள் மண்டைக்குள் வந்தன? பொருட்களே இல்லாமல் நம்முடைய எண்ணத்துக்குள் எண்கள் வரலாம் என்றால், எதுவும் வரலாந்தானே? பிறகு ஏன் நாம் பார்க்க வேண்டும்? கேட்க வேண்டும்? சுவைக்க வேண்டும்?

எல்லாம் மனக்கணக்கு தான்

எண்ணிப் பார்த்தால், கருத்துருவங்களை உருவாக்குவதும் காட்சி உருவங்களே அல்லவா? கருத்துருவமான கடவுளுக்கு நாம் வடிவம் கொடுத்ததுங்கூடக் காட்சி உருவங்களைப் பார்த்தே அல்லவா? மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வந்து, மருமகள் மகாலட்சுமியைப்போல் இருக்கிறாள் என்னும் தாய்மார்களில் எவர் மகாலட்சுமியைப் பார்த்திருக்கிறார்கள்? மண்ணில் கண்டவளின் வடிவந்தான் விண்ணில் வாழ்பவளுக்கும் என்றொரு மனக்கணக்குதான்.

ஆக, ஐந்து புலன்கள் உருவாக்கித் தரும் அடிப்படை இல்லாமல் அறிவு இயல்வதில்லை; புலன்களோ உடம்பின் வழியில் வருபவை. எனவே, அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாக இருப்பது உடம்பு. அதை இழிவென்றும் பொய்யென்றும்  கருத வேண்டாம்; ஊத்தைச் சடலம் என்றும் உப்பிருந்த பாண்டம் என்றும் இகழ வேண்டாம் என்று துந்துபி முழங்குகிறார் திருமூலர்:

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே.

(திருமந்திரம் 724)

உடம்பு இருந்தால்தானே அதில் குடியிருக்கும் உயிர் அறிவைச் சேகரிக்க முடியும்? உடம்பு அழிந்தால், அறிவைச் சேகரிக்கும் உயிரின் பணி பாதியிலேயே தொங்கிப் போய்விடாதோ? அது முற்றுப் பெற வேண்டாமோ? ஆகவே உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்.

உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்;

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று

உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.

(திருமந்திரம் 725)

சில மரபுகள் சொல்வதைப் போல உடம்பு அழுக்கும் இழுக்கும் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன்; ஆனால், இறைவனையே அறிவதென்றால்கூட, உடம்பில்லாமல் எப்படி அறிய? உடம்பில்லாமல் இறைவனை அறிய முடியாதென்றால், இறைவன் இருப்பிடமும் உடம்பே அல்லவா? ஆகவே, உடம்பையே கோவிலாகக் கருதிக் காக்கும் வகையெல்லாம் காக்கின்றேன்.

ஊழிப் பெருவெள்ளம் சூழ்கிறது. ஓடிப் பிழைக்க வேண்டுமென்றால் ஓடம் வேண்டாமா? திருமூலரின் பெயரன் சிவவாக்கியர் சொல்கிறார்:

ஓடம் உள்ளபோதலோ ஓடியே உலாவலாம்?

ஓடம் உள்ளபோதலோ உறுதிபண்ணிக் கொள்ளலாம்?

ஊழிப் பெருவெள்ளத்தால் சூழப்பட்டவர்களே! ஓடத்தை உறுதி செய்துகொள்க!

(உடலைப் போற்றுவோம்) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24758291.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 46: திருமூலர் காட்டும் கடவுள்

 

 
thirumandhiramjpg

பெரியவற்றை வாழ்த்துதல் என்பது ஒரு மரபு. இப்போதெல்லாம் எல்லாவற்றையும் வாழ்த்துகிறார்கள். ஏனென்றால், வாழ்த்துகிறவர்கள் மட்டும்தான் வாழ்வு பெறமுடியும் என்று சரியாகவோ பிழையாகவோ ஒரு மனப்பதிவு உருவாகியிருக்கிறது. ஆகையால், வாழ்வு பெற நினைக்கிறவர்கள்,

அதை வழங்குகிற இடத்தில் இருக்கிற எல்லோரையும் வரிசைமுறை பார்த்து வாழ்த்துகிறார்கள்.

 

எளிய மனிதர்களை வாழ்த்துவதற்கே என்ன சொல்லி வாழ்த்துவது என்ற நெருக்கடி ஏற்படும் என்றால், இறைவனை வாழ்த்துகிறவர்கள் என்ன சொல்லி வாழ்த்துவார்கள்? ‘நான் செய்தேன், நான் செய்தேன்’ என்று பட்டயம் கட்டிக்கொண்டு மனிதர்கள் செய்த எல்லாமே இறைவன் செய்தவை என்று நம்புகிறது பக்தி மார்க்கம்.

வாழ்த்துகிறவன், வாழ்த்து உட்பட எல்லாமே இறைவன் செயல் என்றால், அவனை என்ன சொல்லி வாழ்த்த? மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனாலுங்கூட இறைவனை வாழ்த்தியவர்கள் யாரும் ‘வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்’ என்று கும்பிட்டுக் கதையை முடித்துக்கொள்வதே இல்லை. எதையாவது சொல்லி வாழ்த்தவே விழைகிறார்கள்.

அரியானை, அந்தணர்தம்

சிந்தை யானை,

அருமறையின் அகத்தானை,

அணுவை, யார்க்கும்

தெரியாத தத்துவனைத்

தேனைப் பாலைத்

திகழ்ஒளியைத் தேவர்கள்தம்

கோனை, மற்றைக்

கரியானை, நான்முகனைக்

கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக்

கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப்

புலியூ ரானைப்

பேசாத நாள்எல்லாம்

பிறவா நாளே (தேவாரம், 6:1:1)

- என்று வாழ்த்துகிறார் அப்பர். அவன் அரியவன், ஏனென்றால், அவனைப் போல அவன் ஒருவன்தான் உண்டு; உயிர்கள் அனைத்துக்கும் அந்தண்மை பூண்டு ஒழுகும் சீலர்களின் உள்ளங்களில் குடியிருப்பவன்; மறைகளின் மடிப்புகளால் மறைத்து வைக்கப்பட்டிருப்பவன்; அணுப்போல நுண்ணியவன்;

யாருக்கும் தெரியாத உண்மை அவன்; கேட்டால் தேன்; சுவைத்தால் பால்; பார்த்தால் ஒளி; தேவர்களின் அரசன்; கரியனாகிய திருமால், நான்முகனாகிய பிரம்மன், கனல், காற்று, கடல், மலை என்று எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் பெரியான்; பெரும்பற்றப்புலியூர்க்காரன்; அவன் புகழைப் பேசவில்லை என்றால் அந்த நாள் வாழாத நாளே.

மாணிக்கவாசகரும் வாழ்த்துகிறார்:

வான்ஆகி, மண்ஆகி,

வளிஆகி, ஒளிஆகி,

ஊன்ஆகி, உயிர்ஆகி,

உண்மையும்ஆய், இன்மையும்ஆய்க்

கோன்ஆகி, யான்எனதுஎன்று

அவரவரைக் கூத்தாட்டு

வான்ஆகி நின்றாயை

என்சொல்லி வாழ்த்துவனே

(திருவாசகம், திருச்சதகம், 15)

வான் ஆனான்; மண் ஆனான்; வளி ஆனான்; ஒளி ஆனான்; கோன் ஆனான்; ஊன் ஆனான்; உயிர் ஆனான்; உண்மை ஆனான்; இன்மை ஆனான்; அவரவரைக் கூத்தாட்டுவானும் ஆனான். அவனை என்னவென்று சொல்லி வாழ்த்த என்று மறுகி நிற்கிறார் மாணிக்கவாசகர்.

விடுதலை பெற வாழ்த்து

வாழ்த்துகிறவர்கள் எல்லாரும் தங்கள் வாழ்வுயரவே வாழ்த்துகிறார்கள். பார்க்கிறவர்கள், தான் வாழ்த்துவதையும் அப்படி நினைத்துவிடக் கூடாதே என்று கருதும் மாணிக்கவாசகர் தன் வாழ்த்துக்கு நியாயம் கற்பிக்கிறார்:

வாழ்த்துவதும் வானவர்கள்

தாம்வாழ்வான் மனம்நின்பால்

தாழ்த்துவதும் தாம்உயர்ந்து

தம்மைஎல்லாம் தொழவேண்டிச்

சூழ்த்துமது கரம்முரலும்

தாரோயை நாய்அடியேன்

பாழ்த்தபிறப்பு அறுத்திடுவான்

யானும்உன்னைப் பரவுவனே.

(திருவாசகம், திருச்சதகம், 16)

வானவர்களுந்தான் உன்னை வாழ்த்துகிறார்கள். எதற்காக என்றால், தங்களுடைய நிலை மேலும் உயர வேண்டி. அது எதற்காக என்றால், தாம் உயர்நிலை பெற்றால்தான் மற்றவர்கள் எல்லோரும் தம்மைத் தொழுவார்கள் என்பதற்காக. நாய்ப் பயலாகிய நானும்தான் உன்னை வாழ்த்துகிறேன். எதற்காக என்றால், இந்த அற்பப் பெருமிதங்களில் என்னைப் பற்றுவித்து என்னை உழட்டும் பிறப்பை அறுத்து விடுதலை பெறுவதற்காக.

நல்லது. இறைவனை வாழ்த்துகிறவர்கள் எதற்காக வாழ்த்துகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். எதைச் சொல்லி வாழ்த்துகிறார்கள் என்று பார்த்தால், இறைவனின் இயல்பைச் சொல்லி வாழ்த்துவதைக் காட்டிலும், இறைவனின் இருப்பைச் சொல்லியும் இருப்பிடத்தைச் சொல்லியுமே வாழ்த்துகிறார்கள். ஏனென்றால், இறைவனை விசாரிக்கிறவர்கள் அவனது இயல்பை விசாரிப்பதைக் காட்டிலும் இருப்பையே விசாரிக்கிறார்கள்; இருக்கிறான் என்றாலோ இருப்பிடம் விசாரிக்கிறார்கள்.

திருமூலர் அளிக்கும் பதில்

அங்கிருக்கிறான், இங்கிருக்கிறான் என்று சுட்டிக்கொண்டே வந்த பக்திப் பதில்சொல்லிகள் ஒரு கட்டத்தில் ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம்’ கடவுள் என்று கைதூக்கிவிடுகிறார்கள்.

திருமூலர் பதில் சொல்ல வேண்டிய முறை வருகிறது. மலக் குதத்துக்கும் பால் காட்டும் குறிக்கும் பக்கத்தில் கூடாரம் அடித்துக் குடியிருக்கிறான் இறைவன் என்று இறைவனின் இருப்பிடத்தை அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இதென்ன கருமம்? தொடர்வண்டிகளின் இரண்டாம் வகுப்பில் ஒரு நாளிரவு பயணம் போகிற மனிதர்கள்கூடக் கழிவறைக்குப் பக்கத்துப் படுக்கையை வேண்டாம் என்று தள்ளுகிற நிலையில், உடம்புக்குள் குடியிருக்கவே வந்த இறைவனார் மலக்குதத்துக்கும் பாற் குறிக்கும் பக்கத்திலா கூடாரம் அடித்துக் குடியிருப்பார்? அப்படித்தான் சொல்கிறார் திருமூலர்:

மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்

கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்;

ஆறா உடம்புஇடை அண்ணலும் அங்குஉளன்;

கூறா உபதேசம் கொண்டுஅது காணுமே (திருமந்திரம் 733)

மாறாமல் எப்போதும் மலம் கழிப்பதை மட்டுமே தன் வேலையாகக் கொண்டிருக்கிற குதத்துக்கு இரண்டு விரற்கடை மேலேயும், நேரடியாகக் குறித்துச் சொல்லக் கூசி இடக்கரடக்கிச் சொல்கிற ‘இலிங்கம்’ என்கிற பால் அடையாளக் குறிக்கு இரு விரற்கடை கீழேயும் கவனத்தை நிறுத்துங்கள். ஏனென்றால், சூடு ஆறாமல் உயிர் தங்கியிருக்கும் நம் உடம்பில் இறைவன் தங்கியிருக்கும் இடம் அது. உபதேசிகள் உபதேசிக்காத உபதேசம் இது. கண்டுகொள்க.

‘இதய அம்புயனே’—இதயமாகிய தாமரையில் வீற்றிருப்பவனே—என்று இறைவனின் இருப்பிடமாக இதயத்தைத்தானே வள்ளலார் சுட்டுகிறார்? (திருவருட்பா, VI:35:6). திருமூலர்மட்டும் ஏன் இப்படிச் சொல்கிறார்? ஒருவேளை பிழையாகச் சொல்லிவிட்டாரா? இல்லை. வேறு பாட்டாலும் தெளிவுபடுத்துகிறார்:

எருஇடும் வாசற்கு இருவிரல் மேலே

கருஇடும் வாசற்கு இருவிரல் கீழே

உருஇடும் சோதியை உள்கவல் லார்க்குக்

கருஇடும் சோதி கலந்துநின் றானே. (திருமந்திரம் 584)

எரு இடும் வாசல் என்பது மலக் குதம். கருவிடும் வாசல் என்பது பிறப்பிக்கும் குறி. முன்னதற்கு இருவிரல் மேலே, பின்னதற்கு இருவிரல் கீழே இருக்கிறது சோதி. கண்டுகொள்க.

இவை இரண்டால் மட்டும் அல்லாது இன்னும் சில பாடல்கள்வழியும் செய்தியைச் செறிவாக அழுத்துகிறார். என்ன கருத்து திருமூலருக்கு? இறைவனை வெளியில் சுட்டிக்காட்டி மாளாது. ஆகவே உடம்புக்குள்ளேயே சுட்டிவிடுவோம் என்பதா? உடம்புக்குள் என்றாலும் ஏன் இந்த இடம்? எதற்காக எல்லாவற்றையும் மடக்கி மடக்கி உடம்புக்குள்ளேயே கொண்டு வருகிறார் திருமூலர்? விசாரிக்கத்தான் வேண்டும்.

(தொடர்ந்து விசாரிக்கலாம்) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24810711.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.