Jump to content

ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர்


Recommended Posts

ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர்

சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார்.

இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மேலதிகமா எவற்றையும் தெரிவிக்கவில்லை.

சிறீலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவினரின் கடத்தல்கள் பணப்பறிப்புக்கள் மற்றும் கொலைகள் பற்றி அவர் எதையும் குறிப்பிடத் தவறியிருந்தார். ஆனால் அவர் பாவித்த சிறீலங்கா ‘இராணுவத்தினர்’ என்ற பதத்தினுள் கருணா ஒட்டுக்குழுவும் அடங்கும் என்ற காரணத்தால் அவர் அதை தனியாக குறிப்பிட தவறியிருக்கக் கூடும்.

அண்மைக்காலத்தில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்த நூற்றுக்கணக்கான ஆட்கடத்தல்கள் வன்முறையின் ஊடான கப்பங்கள் மற்றும் கொடிய படுகொலைகள் பற்றி சிறீலங்கா காவல்துறையினரிடம் அவ் அமைப்புக்கள் வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Link to comment
Share on other sites

ராஜபக்ஷாவை மீறி பொலிஸ் மா அதிபர் இந்த உண்மையை கூறியிருக்க முடியாது.

ஏதாவது ராஜ தந்திரம் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச படைகளுக்கு ஆட்கடத்தலில் பங்குண்டு: சிறீலங்கா காவல்துறை அதிகாரி சொல்கிறார்

சிறீலங்கா அரச படைகளுக்கு, நாட்டில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் மீது முக்கிய பங்குண்டு என்பது அண்மைக்கால கைதுகள் மூலம் தெரியவந்திருப்பதாக, சிறீலங்கா காவற்துறை அதிகாரியான இன்ஸ்பெக்ரர் ஜெனரல் விக்ரர் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆட்களைக் கடத்திச்சென்று, கப்பம் பெறுவது அல்லது துன்புறுத்தி சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் நினைத்த காரியத்தைச் சாதிப்பது போன்றவை தொடர்பாக ஏராளமானவர்கள் கைதாகியிருப்பதாகத் தெரிவித்த காவற்துறை மாஅதிபர், இவர்களில் அரச படையின் பல்வேறு தரப்பினரும், படையிலிருந்து தப்பிச் சென்றவர்களும் கணிசமான அளவு அடங்குவதாகத் தெரிவித்தார்.

கடந்த செப்ரம்பர் மாதத்திலிருந்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 433 சந்தேக நபர்களில், அதிகமானவர்கள் சிறீலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்குப் பின்னிருந்து, துணைப் படைகளும் நிலக்கீழ் கிரிமினல் குழுக்களும் செயற்பட்டு வருவதும் உறுதியாகத் தெரியவந்திருக்கிறது. தமிழர்கள், மலையகத் தமிழர்களில், குறிப்பாக பணக்கார வர்த்தகர்கள் அல்லது வசதிபடைத்தவர்களைக் குறிவைத்து நடாத்தப்படும் இத்தகைய கடத்தல் சம்பவங்களில், பாரிய நிதித்தொகை கப்பமாக அறவிடப்பட்ட பின்னர், அவர்கள் விடுதலை அடைவதும், அல்லது கப்பம் பெற்றதும் காணாமல் போவதும் பரவலாக இடம்பெற்று வருகிறது.

இத்தகைய சம்பவங்களில் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வாகனங்கள், எதுவித சோதனைகளுமின்றி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கடந்து செல்கின்றன.

கடத்தப்படுபவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கடும் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உளவியல் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் உருவாகியிருக்கும் இந்த வன்முறைக் கலாச்சாரமும், இராணுவத் தீர்வு என்ற மகிந்த நிலைப்பாட்டினால் கிரிமினல்களும் இனவாதிகளும் பெற்றிருக்கும் உற்சாகமும் இதற்கான மேலதிகக் காரணங்களாக இருக்கின்றன.

உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச நாட்டின் பிரதிநிதிகளும் தங்களது கவலையை வெளியிட்டு வருகின்ற போதிலும், மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இனவெறி அரசுக்கு, அவை பற்றிய கவலையிருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், நாட்டில் மிகவும் மோசமடைந்து செல்லும் மனித உரிமை மீறல்கள், சிறீலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதையும் பொலிஸ்மா அதிபர் விக்ரர் பெரேரா ஒத்துக் கொண்டார்.

இத்தகைய திட்டமிட்ட கடத்தல் மற்றும் கொலைகளுடன், அரசுக்கு சிக்கல்களை உருவாக்க விளையும் தனிப்பட்ட குழுக்களும் தொடர்புபட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தகையோரைக் கண்டுபிடிப்பதற்கு உதவிசெய்யும் அல்லது தகவல் தரும் பொதுமக்களுக்கு பெருந்தொகைப் பணத்தை பரிசாக வழங்கும் திட்டத்தையும் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என்றார் அவர்.

பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரின் 5 வயது மகள் கடத்தப்பட்டு, அவரை விடுவிப்பதற்கான கப்பப்பணமாக 4 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடத்தல்களில் அரச படைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்ற பொலிஸ்மா அதிபரின் கருத்து வெளியாகியிருக்கிறது.

தெற்கில் பல இடங்களிலும் சூட்டுக் காயங்கள், சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடன் சடலங்கள் மீட்கப்படுகின்றன. அனுராதபுரம், கந்தன போன்ற பகுதிகளில் சிதைவடைந்த நிலையில் உடலங்கள் மீட்கப்பட்டன.

சிறீலங்கா அரசின் மிலேச்சத்தனமான அராஜக இராணுவ முனைப்புக்களும், அரச பயங்கரவாத செயற்பாடுகளும், தமிழினத்தை இல்லாதொழிக்கும் வெறியுடனான போர் முகமும், பொதுமக்களைக் கிலி கொள வைத்துள்ளன.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.