Jump to content

வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம்


Recommended Posts

வட,கிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும் : ஹக்கீம்

 

 

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை. இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக முடி­வெ­டுக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

rauff-hakeem.jpg

வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது. நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள், விட்டுக் கொடுப்­புகள் இடம்­பெற வேண்­டு­மென்­பதே எமது நிலைப்­பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண் டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். 

அது தொடர்பில் கலந்­து­ரை­யாட முஸ்லிம் சகோ­தர்­க­ளுக்கு அழைப்பு விடு­கின்றோம். அதே­வே­ளையில் இணைந்த வடக்கு கிழக்­கிற்கு படித்த பக்­கு­வ­மான முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக்­கு­வதை எதிர்க்­கப்­போ­வ­தில்லை என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மன்­னாரில் தெரி­வித்திருந்தார்.

அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தலை­வர்­களுள் ஒரு­வரும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்தார். குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யான  ஒளிக்­கீற்கு என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக பேச­ப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இது இரண்டு சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இந்த விட­யத்தில் எமது கட்சி நீண்­ட­கா­ல­மாக ஒரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு அலகு அமை­ய­வேண்டும் என்று கொள்­கை­ய­ள­வி­லான முடி­வொன்றை எடுத்­தி­ருந்தார்.

இந்த தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வரையில் வில­க­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் தமிழ் சகோ­தர்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். நடத்­திக்­கொண்டும் இருக்­கின்றோம். மேலும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­சி­ய­மா­கின்­றன.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் ஒரு வகை மெத்­தனப் போக்­கையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக பதி­ல­ளித்து விட­மு­டி­யாது. இதற்கு கார­ணங்கள் உள்­ளன. 1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவர் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு மாகாண சபை முறை­மைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. 

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டன. ஒரு­வ­ரு­டத்­திற்குள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு நீடிப்­பதா? இல்­லையா? என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­து­வதன் ஊடாக இரண்டு சகோ­தர சமு­கங்­க­ளுக்கு இடையில் விப­ரீதம் ஏற்­ப­டுத்த அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான அர­சாங்கம் முயன்­றது. ஆனால் அத்­த­கைய நிலை­மைகள் எல்லாம் தெய்­வா­தீ­ன­மாக கடந்து போயின. 

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன. 

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது. அது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு இவ்­வாறு ஒரே நிரையில் பதி­ல­ளிப்­பது அவர்­களின் நிகழ்ச்­சிக்கு தூப­மி­டு­வ­தா­கவே அமையும்.தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையில் எந்­த­வி­த­மான நல்­லு­றவும் பேணப்­படக் கூடாது என்ற போக்­கையே இத்­த­கையோர் கொண்­டுள்­ளனர். இது பிழை­யான அணு­கு­மு­றை­யாகும். 

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டா­கவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க இரு மாகா­ணங்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னாலும் அது சாத்­தி­ய­மா­காது. இவ்­வா­றான சில காப்­பீ­டு­களும்  இருக்கும் நிலை­யிலே இந்த விட­யங்­களை சில தரப்­பினர் பெரி­து­ப­டுத்தி ஊதிப்­பெ­ரி­தாக்கி ஏதோ விப­ரீதம் நடந்­துது போல காட்டி  அர­சியல் பிழைப்பு நடத்­து­கின்­றனர். 

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு பேசு­வது அர­சியல் பிழைப்­பு­வாத பேச்­சுக்கள் மட்­டுமேயாகும். ஒரே இரவில் அல்­லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்­து­வி­டு­வ­தைப்­போன்று பேசு­கின்­றனர். முஸ்­லிங்­களின் உடன்­பா­டின்றி இதனை செய்ய முடி­யாது. செய்­யவும் மாட்டோம் என சம்­பந்­தனே கூறி­யி­ருக்­கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும். 

பிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து

அவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன்  சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.

http://www.virakesari.lk/article/25321

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன.

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு அவசியம்.
வரலாற்றுத் தவறுகளை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் மக்கள் இதை வரவேற்க வேண்டியது அவர்களது கடமை

Link to comment
Share on other sites

விட்டுக்கொடுப்புடன் பேச்சு நடத்த மு.கா தயார்

 
 
Untitled-1.jpg6987.jpg

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல.இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போன்று காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவாக குற்றஞ்சாட்டிய அவர், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விடயத்தின் போது முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்கு தமது தரப்பு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் கருத்தை வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் ஒரு வகை மெத்தனப் போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தொடர்பில்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத விபரீதம் ஏற்படுத்த ஜே.ஆர் அரசு முயன்றது.

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகள், முன்னெடுப்புகள் மற்றும் விட்டுக் கொடுப்புகள் இடம் பெற வேண்டும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. சிக்கலை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு இது மேலும் தூபமிடுவதாகவே அமையும்.

தமிழ், முஸ்லிம் மக்களிடையில் எந்தவிதமான நல்லுறவும் பேணப்படக்கூடாது என்ற போக்கையே இத்த கையோர் கொண்டுள்ளனர். இது பிழையான அணுகுமுறையாகும் என்றும் அவர் கூறினார்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாகவும் கல்முனையை தனி மாவட்டமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறியிருப்பது பற்றி வினவியதற்கு பதிலளித்த அவர்,

அது அவரின் சொந்தக் கருத்து .கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாக அமைந்து விடும்.இவற்றை தவிர்த்துக் கொள்வது உகந்தது என்றார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரம் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தினூடாகவே அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரு மாகாணங்களும் அங்கீகாரம் வழங்கினாலும் அது சாத்தியமாகாது. இவ்வாறான சில காப்பீடுகளும் இருக்கும் நிலையிலே இந்த விடயங்களை சில தரப்பினர் பெரிதுபடுத்தி ஊதிப்பெரிதாக்கி ஏதோ விபரீதம் நடந்தது போல காட்டி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவசரப்பட்டு பேசுவது அரசியல் பிழைப்புவாத பேச்சுக்கள் மட்டுமே. நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்துவிடுவதைப்போன்று பேசுகின்றனர்.

முஸ்லிம்களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் என சம்பந்தன் கூறியிருக்கிறார். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்வுக்கு வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அடுத்து இதனை பற்றி ஆராயலாம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 

http://www.thinakaran.lk/2017/10/05/உள்நாடு/20320

Link to comment
Share on other sites

2 hours ago, வாத்தியார் said:

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான தனி அலகு அவசியம்.
வரலாற்றுத் தவறுகளை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் மக்கள் இதை வரவேற்க வேண்டியது அவர்களது கடமை

நானும் இதை வரவேற்கிறேன். ஆனால் இதன் எல்லை 1981இல் எப்படி இருந்ததோ அதன் படி தான் நிர்ணயிக்க வேண்டும், அதை தனி நிர்வாக அலகாக இல்லாமல் ஒரு தனி மாகாணமாக கூட பிரிக்கலாம், ஆனால் அதன் எல்லை விடயத்தில் எந்தவிதமான விட்டு கொடுப்பும் இருக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இப்பிடிச் சொல்லும் ஹக்கீம் நாளைக்கு வேறொன்றைச் சொல்லிக் குழப்புவார். அவர்களுக்கு உறுதியான நிலைப்பாடு ஒன்றுமில்லை. ஒவ்வொன்றயும் தங்களுக்கு சாதகமாக்க மாத்தி  மாத்திப் பேசுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத பாகிஸ்தானை காந்தி தனி அலகாக உருவாக்கி விட்டிட்டு அப்புறம்.. அதோட காந்தி தேசம் போர் செய்ய வேண்டி வந்து போல... காத்தான்குடியில் குடியமர விட்ட குற்றத்துக்காக.. இன்று வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தை இணைக்க இவைக்கு தனி அலகு இணாமாக கொடுக்க வேண்டும் என்பது... எந்த வகையில் நியாயம்.

இதே தனி அலகை தென்பகுதிகளில் உருவாக்கக் கேட்கலாமே..??!

கொழும்பில்.... அல்லது மலையகத்தில் தனி அலகு தமிழர்கள் கேட்டால் கிடைக்குமா..??!

இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு.. அதாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில் இணைக்கப்பட்டிருந்தது போல்.. வடக்கும் கிழக்கும் இயல்பாக இணையும். அதையிட்டு யாருக்கும் இணாம் வழங்கனுன்னு அவசியமில்லை.

வேண்டும் என்றால்.. முஸ்லீம் கோட்டங்கள் அல்லது வலயங்கள் உருவாக்கலாம்.  அதேபோல் வடக்குக் கிழக்கில் வாழும் சிங்கள பெளத்த மக்களுக்கும் கோட்டங்கள்.. வலயங்கள் உருவாக்கிக் கொடுக்கலாம். 

தனி அலகு என்ற அஷ்ரப்பின் மத அடிப்படைவாத பயங்கரவாதக் கொள்கைக்கு வடக்குக் கிழக்கு தான் கிடைச்சுதா.. அமுலாக்க. இதையே.. மத்திய மாகாணத்தில்...  மேற்குத் தெற்கில் கேக்கலாமே..?!

மதப்பரம்பலின் படி.. வடக்குக் கிழக்குக்கு வெளியில் தான் அதிகம் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள்.  :rolleyes:tw_angry:

இவைக்கு வடக்குக் கிழக்கில் தனி அலகு கேட்க உரிமை இருக்கோ இல்லையோ.. சொறீலங்காவின் பொருண்மிய முதுகெலும்பாக உள்ள மலைய மக்களுக்கு தனி அலகுக்குரிய அத்தனை தகுதியும் இருக்குது. இவைக்கு தனி அலகு என்றால்.. மலையகத்திற்கும் அது அமையனும். அந்த மக்கள் மறக்கப்பட முடியாது. வடக்குக் கிழக்கு மக்களோடு சேர்ந்து துன்பப்பட்ட மக்கள் அவர்கள். அவர்களுக்கு தனி அலகு கேட்க யாருமில்லை.. சம்பந்தனும்.. மாவையும் தங்கட வீட்டுக் கோடிக்குள்.. தனி அலகு கொடுப்பது போல..வடக்குக் கிழக்கில் தனி அலகு கொடுப்பம் என்று சூளுரைக்க.. இவைக்கு ஒன்றும் தமிழ் மக்களை ஆணை வழங்கவில்லை. 

Link to comment
Share on other sites

இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தனியலகை அமைத்துக்கொள்ளலாம்.

வடக்கு-கிழக்கில் இவர்கள் ஆக்கிரமித்துள்ள கள்ளக்காணிகளை மீட்டால் இவர்கள் 5% கூட தேறமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

தனி அலகை  கொடுத்து அப்படியே  விட வேண்டியதுதான்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.