Jump to content

ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!  smiley

Fatma---Gade.jpg

 

சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில், ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. smiley

மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாதிமா பிரின்சி(42), அவரது மகள் காதா பிரின்சி(21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பிரசவ சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்ற மருத்துவர்கள், இதுவொரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதிமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ராசவன்னியன் said:

ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!  smiley

Fatma---Gade.jpg

 

அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

நல்ல காலம்,  தாய்... மகளை விட சில வினாடிகள் பிந்தி பிள்ளை பெற்றிருந்தால்....
மகளின்  பிள்ளை... தன்னை விட பிந்திப் பிறந்த...  தாயின் பிள்ளையை பார்த்து....
மாமா... என்று, கூப்பிட  கூச்சப்   பட்டிருக்கும்.  சில விடயங்களில்  கடவுளும் உதவி செய்து விடுவார் என்பது உண்மை.

இனியென்ன... மாமனும், மருமகனும்..... ஒரே விளையாட்டு சாமான்களை விளையாடி,  
ஒரே பள்ளிக்கூடத்துக்கு... ஒன்றாக போகலாம்.:)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்,  தாய்... மகளை விட சில வினாடிகள் பிந்தி பிள்ளை பெற்றிருந்தால்....
மகளின்  பிள்ளை... தன்னை விட பிந்திப் பிறந்த...  தாயின் பிள்ளையை பார்த்து....
மாமா... என்று, கூப்பிட  கூச்சப்   பட்டிருக்கும்.  சில விடயங்களில்  கடவுளும் உதவி செய்து விடுவார் என்பது உண்மை.

இனியென்ன... மாமனும், மருமகனும்..... ஒரே விளையாட்டு சாமான்களை விளையாடி,  
ஒரே பள்ளிக்கூடத்துக்கு... ஒன்றாக போகலாம்.:)

vil-bah.gif அட,  நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? 

மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை..

வெட்கக்கேடு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

vil-bah.gif அட,  நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? 

மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை..

வெட்கக்கேடு..!

இஸ்லாமிய முறைப்படி... கடவுள் தாற பிள்ளையை, வேண்டாம்  என்று கருவை கலைப்பது, பெரிய குற்றம்.
அப்படி செய்பவர்களை...  உறவினர்களே, வெறுத்து ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

இங்கு என்னுடன் வேலை செய்த துருக்கியர் ஒருவருக்கு... 32 வயது இருக்கும் போது....
அவருக்கு ஒரு, தம்பி பாப்பா  பிறந்து விட்டது என்று சொல்லி கோப்பி வாங்கித் தந்தார்.

இன்னொருவரின் மனைவிக்கு  கரு உருவாகிய  சமயம்,
வைத்தியரிடம் சென்று காட்டிய போது.... ஐந்து குழந்தைகள் உருவாகி  இருப்பதாகவும்...
அதில் மூன்று மட்டுமே... ஆரோக்கியமாக உள்ளதால், இரண்டை கலைத்து  விட வேண்டும் என்று கூறிய போது...
சம்பந்தப் பட் ட  குடும்பத்தினர் அதனை ஓரளவு  ஏற்றுக் கொண்டாலும்... மதத் தலைவரும், உறவினர்களும்  மறுத்து விட்டார்கள்.

பின் பல ஜேர்மன் சமூக ஆர்வலர்கள்.. பல சுற்று பேச்சு வார்த்தையின் பின் தான் அவர்களை சம்மதிக்க வைக்க முடிந்தது.

மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது...  அப்பாவியான  இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

... மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது...  அப்பாவியான  இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...

அப்பாவிகளா..?

படிப்பறிவும், நாகரீகமும் மேம்பட்டுவரும் தற்போதைய உலகில், கொஞ்சமும் மூளையை பயன்படுத்தி சிந்திக்காமல், அறுபது எழுபது வயதுகளில் குழந்தைகளை இப்படி பெற்றுத் தள்ளினால் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்..?

தாம்பத்தியம் ஆரோக்கியமன இயல்பே, ஆனால் அதை இப்படி அப்பட்ட உருவமாக வெளியேற்றித் தள்ளுவது சமூக பொறுப்பற்ற செயல், கண்டிக்கபட வேண்டியது..

வெட்கம் கெட்ட செயல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தினமணி சிரியாவை எட்டிப்பார்க்குது பக்கத்து நாட்டிலை உள்ள கிராமப்புற சிங்கள குடும்பம் 50 வருடத்துக்கு முதல் இதைவெண்ட விளயாட்டு எல்லாம் நடந்தது இப்ப அவை அடங்கிட்டினம்(பொருளாதார காரனம்கள் ) இப்பவும் முஸ்லிம்கள் உம்மாவும் மகளும் பக்கத்து பக்கத்து கட்டிலில் பிள்ளை பெறுவதுக்கு வெயிட் பண்றது சாதரான நிகழ்வு .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.