Jump to content

கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு


Recommended Posts

கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு

வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர்.

முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர்.

பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர்.

கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதன் போது குண்டுகள் மற்றும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு துறைமுகமும் அதனை அண்டிய அனைத்து பகுதிகளும் அதிர்ந்தன.

இந்த ஒத்திகை நடவடிக்கை துறைமுக உட்பகுதி , துறைமுக கடற் பரப்பு ஆகியவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டே மேற்கொள்ளப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி வருது, புலி வருது கதையாகத்தான் இது இருக்கப்போகுது. ஒரு நாளைக்கு உண்மையாகவே தாக்குதல் நடக்கத்தான் இருக்கு. அப்ப ஒத்திகை என எண்ணி சிங்களம் வாங்கத்தான் போகுது.

வன்னில நடக்கிற ஒத்திகை கதை கேள்விப்பட்டிருப்பினம் போல.

கானமயில் ஆடலாம். - கண்டிருந்த

வான்கோழி ஏன் காணும் ஆடோணுமென்றன். - என்ன நான் சொல்றது????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.