Jump to content

கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது!

 

Katalonia.jpg-2.jpg
கத்தலோனியர்களே!
———————————
கத்தலோனியர்களே
உங்கள் விடுதலைப்பாடல்
கத்தலோனியாவிலிருந்து
உலகெங்கும் கேட்கிறது!
சனனாயகத்தினை
நம்பும் அயலவர்கள்
உங்கள் அயலிலே!
அரசுகள் எப்போதும்
விடுதலையை ஏற்பதில்லை
அது அவர்களின்
மரபுமல்ல
ஆனாலும்
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கிறது!
உலகின் சில சக்திகள்
இன்று உறுமாலாம் – ஆனால்
நாளை கைகோர்ப்பர்
ஒன்றிணைவர்
வளங்களின் வழியே
தமது நலன்களைக் காண்பர்
ஆனாலும் என்ன
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கும்!
தானாகக்
கிடைப்பதல்லவே
விடுதலை
தொடர் முயற்சியே
சுதந்திரக் காற்றினை
உங்கள் தேசவெளியில்
வீசச் செய்திருக்கிறது!
வீச்சின் விடுதலை
உறுதியாகும்
அப்போது
உங்கள் விடுதலைப்பாடல்
உலகெங்கும் கேட்கும்!
உங்களைப்போல்
எங்கள் விடுதலைப்பாடலும்
ஒருநாள் கேட்கும்
உலகில் இன்னும்
நீதியின் சுவடுகள்
முற்றாக அழியவில்லையென்ற
எம் தலைவனின்
நம்பிக்கை பொய்க்காது
அதனால்
எங்கள் விடுதலைப்பாடலும்
ஒருநாள் கேட்கும்!

குறியீடு இணையத்துக்காக
மா.பாஸ்கரன்
லண்டவ் யேர்மனி

https://www.kuriyeedu.com/?p=98119

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Katalonia.jpg-2.jpg

ஒரு இனத்தின் சுய நிர்ணயம்...இனவிடுதலை  கத்தலோனியா மாதிரி எட்டுத்திக்கும் பரவட்டும்.
ஸ்பானியாவின் கத்தலோனியா இனத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பங்கு இங்கே  அளப்பெரியது.

தமிழினத்தில் உலகளாவிய ரீதியில் பெரிய பதவிகளில் அங்கம்  வகிப்பவர்கள் பலர் இருந்தும் தமிழனுக்குக்கென்று ஒரு பிடி நிலம் கூட இல்லை என்பது கேவலம் என்று சொல்வதா? இல்லை வருந்தத்தக்கது என்று சொல்வதா?
ஆனால் ஒரு பெரிய இடத்தில்  தமிழ் பெயரைக்கண்டவுடன் எம்மவரின் வாழ்த்துக்கள்,பெருமைகளுக்கு பஞ்சமேயிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

Katalonia.jpg-2.jpg

ஒரு இனத்தின் சுய நிர்ணயம்...இனவிடுதலை  கத்தலோனியா மாதிரி எட்டுத்திக்கும் பரவட்டும்.
ஸ்பானியாவின் கத்தலோனியா இனத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பங்கு இங்கே  அளப்பெரியது.

தமிழினத்தில் உலகளாவிய ரீதியில் பெரிய பதவிகளில் அங்கம்  வகிப்பவர்கள் பலர் இருந்தும் தமிழனுக்குக்கென்று ஒரு பிடி நிலம் கூட இல்லை என்பது கேவலம் என்று சொல்வதா? இல்லை வருந்தத்தக்கது என்று சொல்வதா?
ஆனால் ஒரு பெரிய இடத்தில்  தமிழ் பெயரைக்கண்டவுடன் எம்மவரின் வாழ்த்துக்கள்,பெருமைகளுக்கு பஞ்சமேயிருக்காது.

படித்தவர்களென்போரால் பயனடையாதவொரு இனமென்றால் அது தமிழினமாகத்தானிருக்கும். இது குறித்துப் பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஏதோவவொன்றில் மழைபெய்வது போன்றே..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.