Jump to content

சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க:

பழைய திரியான   சென்னை மெட்ரோ ரயில் அதிக படங்களையும், செய்திகளையும் தாங்கியிருப்பதால் கணனியில் உடனடியாக தெரிவதில் தாமதம் ஏற்படுகிறது.. ஆகையால் அதன் தொடர்ச்சி சென்னை மெட்ரோ ரயில் - பாகம் 2 என்ற பெயரில் இங்கே..

************************************************

சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம்...

highcourt2.jpg

high_court_4.jpg

high_court_5.jpg

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சென்ற மாதம் சென்னை சென்றபோது சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது..

மேம்பால பாதையில் கடக்கும் ரயில் நிலையங்களை விட சுரங்கப்பாதை ரயில் நிலையங்களின் குறைகள் சில இருந்தாலும் உள்கட்ட வடிவமைப்பு நன்றாக உள்ளது.. பகல் நேரங்களில் பேரனுடன் பயணம் செய்தபோது கூட்டம் குறைவாக இருந்தது.. ஆனால் மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் கூட்டம் அதிகமாக உள்ளது.. சென்னை சென்ட்ரல் வரை சேவைகள் திறந்தவுடன் கூட்டம் மிக அதிகமாக இருக்குமென தெரிகிறது..

புதிய மேம்பட்ட 'மெட்ரோ ரயில் சேவை', சென்னைக்கு ஒரு வரப்பிரசாதமே! :)

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரு மாதங்களில் துவங்க இருக்கும் சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் ஏ.ஜி-டி.எம்.எஸ் - சின்னமலை மற்றும் நேரு பூங்கா - சென்ட்ரல் மெட்ரோ வழித்தட நீட்சியின் வேலைத் திட்டங்களை தமிழக தொழிற்துறை அமைச்சர் பார்வையிட்டபோது எடுத்த படம்..

இந்த இரண்டு வழித்தட நீட்சிகளும் சுரங்கப் பாதையில் அமைத்துள்ளது.

27336741_1928542637158918_37774862447962

27540688_1928542397158942_23774319467422

27073397_1928542630492252_89332681732512

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

'சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1' ன் விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி..

 

Chennai_Metro.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

'சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1' ன் விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி..

 

Chennai_Metro.jpg

கெதியாக கட்டி முடிக்கச் சொல்லுங்கோ.
அடுத்த தேர்தலில்.. அ .தி.மு.க. வர சந்தர்ப்பம் இல்லை. 
தி.மு.க. வந்தால்... இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டால்... தூண்  எல்லாம் வீணாகி போய் விடும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கெதியாக கட்டி முடிக்கச் சொல்லுங்கோ.
அடுத்த தேர்தலில்.. அ .தி.மு.க. வர சந்தர்ப்பம் இல்லை. 
தி.மு.க. வந்தால்... இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டால்... தூண்  எல்லாம் வீணாகி போய் விடும்.

இந்த மெட்ரோ ரயில் திட்டமும், மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேம்பால சாலை திட்டமும் கடந்த 2007 ம் ஆண்டு திமு.க ஆட்சியில்தான் திட்டமிடப்பட்டு, அங்கீகரிகப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டவை. மறைந்த செயலலிதா அம்மையார்தான் 'ஈகோ'வினால் இத்திட்டங்களை எதிர்த்து, ஒத்தி வைத்தார்..

இரு திட்டங்களும் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முதலீட்டில் 50 - 50 அடிப்படையில் தொடங்கப்பட்டவை.. தற்பொழுது ஓடும் அடிமை அரசு ஒழிந்தாலும், தி.மு.க நிச்சயம் இத்திட்டங்களை செயல்படுத்தும்.. ஏனெனில் இது அவர்களின்  ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களாகும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Update:

தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் வண்ணாரப்பேட்டை சென்னை விமான நிலைய மெட்ரோ வழித் தடத்தை மேலும் நீட்டிக்கும் விதமாக வண்டலூர் அருகே அமையவிருக்கும் மாநகர பேருந்து முனையமான கிளாம்பாக்கம் வரை ரூ.3500 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் வரவிருக்கிறது.

இந்த வழித்தடம் தென் தமிழகத்தை நோக்கி செல்லும் பிரதான சாலையின்(Grand Southern Trunk Road - GST) நடுவே 15 மீ உயர தூண்கள் அமைக்கப்பட்டு, உயர்மட்ட மெட்ரோ வழித்தடமாக இருக்கும்.

 

72250147.jpg

 

டைம்ஸ் ஆஃப் இந்தியா

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கட்டிமுடிவுறும் நிலையிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் தலைமை அலுவலகம்,(Head Quarters) சென்னை அண்ணா சாலையில் நந்தனம் பகுதியில் உள்ளது.

கட்டிட வேலைகள் முடிந்தவுடன், சென்னை கோயம்பேட்டில் இயங்கிவரும் இத்தலைமை அலுவலகம் இங்கே மாற்றப்படும். 😌

FZKLG9yaQAIBn6Y?format=jpg&name=large

FZKLG9-aIAE8wWB?format=jpg&name=large

FZKLG92aAAYKNjC?format=jpg&name=large

 

கோயம்பேட்டில் இயங்கும் தற்காலிக சென்னை மெட்ரோ தலைமை அலுவலகம்.

photo.jpg

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.