Jump to content

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?


Recommended Posts

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?- விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்

மிழகத்தில் டெங்குவின் தாக்கமும், அதுபற்றிய பீதியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காய்ச்சல் வந்தாலே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அரசு ஒருபுறம் பிரசாரம் செய்ய, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவங்களில் டெங்குவுக்கு மருந்துகள் உள்ளன என்று இன்னொரு பக்கம் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. மேலும், டெங்கு வராமல் தடுக்க நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த தீர்வு என்று அரசும், இந்திய மருத்துவமுறை மருத்துவர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நிலவேம்புக் குடிநீரால் எந்தப் பயனும் இல்லை என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் பரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துமா நிலவேம்புக் குடிநீர்

 

டெங்கு காய்ச்சலைவிட, அதுகுறித்த பீதியும், வதந்திகளும், சர்ச்சைகளும் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவர் அலுவலர் சங்கம் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 

சித்த மருத்துவர் கு.சிவராமன்,  மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் பிச்சையாகுமார், இம்ப்காப்ஸ் தலைவர் டாக்டர் கண்ணன், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துக் கல்லூரி குழந்தைகள் நல உதவி பேராசிரியரும் டாக்டருமான ஶ்ரீராம், தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலர் டாக்டர் தமிழ்க்கனி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். 

டெங்கு காய்ச்சல் பற்றியும், நிலவேம்புக் குடிநீர் பற்றியும் பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

"நவீன மருத்துவம் தோன்றாத காலத்தில் பாரம்பர்ய மருத்துவத்தால்தான்  பல உயிர்க்கொல்லி  நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சூரணம், லேகியம், கஷாயம் போன்ற வடிவில் பல அபூர்வ மருந்துகள் நம்மிடம் இருக்கின்றன. இன்று நவீன மருத்துவம், சிக்குன்குன்யா, டெங்கு என்றெல்லாம் காய்ச்சல்களுக்குப் பெயர் சூட்டி வைத்துள்ளது. அந்தக் காலத்திலும் காய்ச்சல்கள் இருந்தன. ஆனால், அப்படியான பெயர்கள் இல்லை. அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்த அக்காலத்தில் பயன்படுத்திய மருந்துதான் 'நிலவேம்புக் குடிநீர்'. 

சித்த மருத்துவத்தில் 64 வகை ஜுரங்களைப் பற்றியும் அதன் தன்மைகள் குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சில காய்ச்சல்களின் தன்மையுடன் தற்போதைய டெங்கு போன்ற வைரஸ் கிருமிகளால் பரவக் கூடிய காய்ச்சல்கள் ஒத்துப்போகின்றன.  அந்த அடிப்படையில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் சிறந்த மருந்தாக உள்ளது. 

டெங்கு காய்ச்சல்

குறிப்பாக 2006-ம் ஆண்டில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கு, தமிழக அரசு நிலவேம்பு குடிநீரைத் தான் மருந்தாக வழங்கியது. அதன்மூலம் அந்தக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அறிவோம்.  அதன்பின் மாநில அரசின் கீழ் இயங்கும், கிங் ஆய்வகம் மேற்கொண்ட ஆய்வில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை நிலவேம்புக் குடிநீருக்கு உண்டு என்று உறுதி செய்யப்பட்டது. 

எனவே, டெங்கு மட்டுமல்லாது எந்தக் காய்ச்சலுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது நல்ல தீர்வைத் தரும். அதே நேரத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் நிலவேம்பு குடிநீர் அருமருந்தாக உள்ளது. எனவே,  காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமல்லாது, அனைவருமே நிலவேம்பு குடிநீரை குடிக்கலாம். மற்ற நோய்கள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என அனைவரும் நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கலாம். 

நிலவேம்புக் குடிநீரை, சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் கிரகித்துக் கொள்ளும். 

'நிலவேம்புக் குடிநீர்' என்பது வெறும் நிலவேம்பு இலையை மட்டும் பயன்படுத்தித் தயாரிப்பதில்லை. அது உண்மையில்லை.  நிலவேம்போடு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு),  விலாமிச்சை வேர், சந்தனத்தூள், பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ),  பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர்.

கசாயம்

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். 

நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம். இதில் குழந்தைகள் (3 - 12 வயதுக்குட்பட்டோர்) 15-30 மி.லி, பெரியவர்கள் 15 -50 மி.லி வரைக் குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப் படி மட்டுமே நிலவேம்புக் குடிநீரைக் குடிக்க வேண்டும். 

எப்போது ஆங்கில மருத்துவம் அவசியம்?

டெங்குவால் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை  குறையும் என்பதால் ஆடாதொடைச் சாறு 15 முதல் 30 மி.லி.யும், பப்பாளி இலைச்சாறு 10 -30 மி.லி. வரையும் குடிக்கலாம்.  இது ஆரம்ப நிலையில் அதாவது, ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறையாமல் இருக்கும்போது நல்ல பலன் அளிக்கும். அதுவே, மிகக் கடுமையாக குறைந்துவிட்டால், உடனடியாக நவீன மருத்துவத்தின் துணையைத் தான் நாடவேண்டும். ரத்தம் மூலம் ரத்த தட்டணுக்களை ஏற்றியாக வேண்டும். 

உடலின் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை  ஒன்றரை லட்சம் முதல் நான்கரை லட்சம் வரை இருக்க வேண்டும். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைவிட குறையும்போது, கண்டிப்பாக  நவீன மருத்துவத்தின் வழிகாட்டுதல் தேவை. 

டெங்கு பாதித்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்!

* காய்ச்சல் கண்ட காலங்களில் இனிப்பு சுவையுள்ள உணவுகளை குறைத்து, பாகற்காய் உள்ளிட்ட கசப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். காரம் அதிகமாக சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்குப்பதிலாக மிளகை சேர்த்துக்கொள்ளலாம்.

* அரிசிக் கஞ்சி, தானியக் கஞ்சி இரண்டு வேளை கொடுக்கவேண்டும்.

* தினசரி இரண்டரை முதல்  மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மேலும், பழச்சாறுகள், இளநீர், சீரகத் தண்ணீர் போன்றவற்றையும் அவ்வப்போது குடிக்கலாம்.

* அன்னாசிப்பூவை தேநீர் அல்லது உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். துளசி, இலவங்கப்பட்டை சேர்த்த டீ, திரிகடுகம் காபி ஆகியவற்றையும் குடிக்கலாம். கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும்.

* மீனைத்தவிர பிற அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..." என்றார், சிவராமன். 

நிலவேம்புக் குடிநீர்

 

"நிலவேம்புக் குடிநீர்,  கஷாயமாகவும் பொடியாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.  இம்ப்காப்ஸ் நிறுவனமும் , சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களுக்கான கூட்டமைப்பும் இணைந்து நிலவேம்புக் கஷாயத்தை தமிழகமெங்கும் 50 சதவிகித தள்ளுபடி விலையில் விநியோகித்து வருகின்றன.  மேலும், 9710105678, 9710205678 ஆகிய எண்களுக்கு கால் செய்தால், இம்ப்காப்ஸ் மூலம் உங்கள் பகுதிக்கே வந்து நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகளில் வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..." என்றார் இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன்.

http://www.vikatan.com/news/health/104713-nilavembu-kudineer-is-ayurvedic-cure-for-dengue-fever.html

Link to comment
Share on other sites

டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட காரணம் என்ன?- ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

 
08CHDASDENGUE4

டெங்கு காய்ச்சலால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து பலியாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலக்கட்டத்தில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவற்றின் மூலமாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களும் வேகமாக பரவும். இதை முன்கூட்டியே அறிந்து, கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

டெங்கு காய்ச்சல் குறித்து டாக்டர் சைலஜா கூறியதாவது:

“டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுகளில் டைப்-1, டைப்-2, டைப்-3, டைப்-4 என 4 வகைகள் உள்ளன. இதில் டைப்-2 வகை கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. டைப்-2 வகை கொசு கடித்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரை, டைப்-4 வகை கொசு கடிக்கும்போது, உடலில் உள்ள டெங்கு வைரஸின் வீரியம் மேலும் அதிகமாகி விடுகிறது.

இதனால் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. ஜெர்மனியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியபோது, அந்நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழப்பை தடுக்கலாம்

மேலும், ஜெர்மனில் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து உள்ளது. அவர்கள் இதை இப்போதும் பயன்படுத்துகின்றனர். மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுத்தால், அந்த மருந்தை வாங்கி நம் நாட்டில் பயன்படுத்தலாம். டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும்” என்றார்.

 

வேப்ப எண்ணெய் விளக்கு

சித்த மருத்துவர் தினகர், டெங்கு காய்ச்சல் குறித்து கூறியதாவது:

“வீட்டில் தினமும் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால், அதன் வாசனைக்கு கொசு வீட்டுக்குள் வராது. மேலும், வேப்ப எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் தடவிக் கொண்டால் கொசு கடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் வேப்ப எண்ணெய் கிடைக்கும்” என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19843790.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.