Jump to content

வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்!


Recommended Posts

வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்!

 

 
000sujay_sohani

 

2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத்  தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர் தான் மும்பையைச் சேர்ந்த சுஜய் சோஹானி. வேலை இழந்தவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பது இங்கே யாரும் அறியாத ரகசியமில்லை! ஆனால் நிகழ்ந்தவற்றில் அப்படியே தேங்கி மனம் குன்றிப் போனால் மிச்ச வாழ்க்கையை என்ன செய்வது?

இந்த யோசனை வந்த பின் சுஜயின் மனம் தெளிவாகி விட்டது. தெளிவான மனதுடன் சுஜய் தனது கல்லூரிக் கால நண்பருடன் இணைந்து ஒரு சுயதொழிலைத் தொடங்கினார். அதில் அவருக்குக் கிடைத்த வருமானம் அவர் முன்பு லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த பகட்டான வேலையில் கிடைத்த சம்பளத்தைக் காட்டிலும் மிக அதிகம். அப்படியென்ன தொழில் செய்தார் சுஜய்? புதிதாக ஒன்றுமில்லை, எல்லோரும் அறிந்த தொழில் தான். வட பாவ் கேள்விப்பட்டிருப்பீர்களே?! சென்னையில் கூட இன்று வடபாவ் விற்கப்படாத ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட் கடைகளைக் காண்பது அரிது. வட இந்திய சாட் ஐட்டங்களில் ஒன்றான வட பாவ், பானி பூரியை அடுத்து வட இந்தியர்களின் தேசிய உணவுவகைகளில் ஒன்று. தென்னிந்தியர்கள் மசால் வடையை விரும்புவதைப் போலவே வட இந்தியர்கள் வட பாவ்க்காக தங்கள் இன்னுயிரையும் அளிக்கச் சித்தமாக இருப்பார்கள். வடபாவின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அது வட இந்திய, தென்னிந்திய எல்லைகளைக் கடந்து தற்போது சர்வதேச ரசனைக்குரிய ஸ்னாக்ஸ் ஐட்டக்களில் ஒன்றாகி விட்டது.

சுஜய் தன் நண்பர் சுபோத்துடன் இணைந்து தொடங்கியது இந்த வடபாவ் தொழிலைத்தான்.

0000_vada_pav.jpg

முன்னதாக சுஜய் லண்டனில் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இதனோடு தொடர்புடையது தான். லண்டனில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஒன்றில் சுஜய் உணவு மற்றும் பானங்கள் பிரிவில் மேலாளராகப் பணிபுரிந்திருந்தார். 2009 இல் பூதம் போலக் கிளம்பித் தாக்கிய ஆட்குறைப்பு நேரத்தில் சுஜய் தனது வேலையை இழக்க நேரிட்டது. வேலையை இழந்தாரே தவிர வேலை தந்த அனுபவங்களை இழந்தாரில்லை, அந்த அனுபவம் தான் இப்போது சொந்தத்தொழில் தொடங்கிய நிலையில் கை கொடுத்தது.

மும்பை ரிஸ்வி கல்லூரியில் உடன் படித்த மாணவரும், நண்பருமான சுபோத்துடனான நட்பை சுஜய் தனது கல்லூரிக் காலத்தின் பின்னும் தொடர்ந்து பராமரித்து வந்ததால், ஆட்குறைப்பு நேரத்தில், தனக்கேற்பட்ட சிக்கல்களை ஒரு நண்பராக சுபோத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப் பகிர்ந்து கொண்டதால், ஒரு கட்டத்தில் தெளிவு பெற்று உருவானது தான் சுஜயின் வடபாவ் தொழில். வேலையை இழந்தாலும், லண்டனை விட்டு வெளியேற விரும்பாத சுஜயுடன் அவரது நண்பர் சுபோத் கை கொடுத்தார். நண்பருக்காக சுபோத் லண்டன் சென்று அவருடன் கூட்டாகத் தொழில் செய்ய சம்மதம் தெரிவித்தார். 

இந்த இரு நண்பர்களும் லண்டனில், தங்களது சொந்த ஊர் ஸ்பெஷலான வடபாவை வெற்றிகரமாக லண்டனில் விற்று வருமானம் பார்க்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முதன்முதலான வடபாவ் விற்கலாம் என்று முடிவு செய்ததும் அதற்கான இடம் தேடி இந்த நண்பர்கள் இருவரும் லண்டனில் ஒரு தெரு பாக்கியின்றி சுற்றி அலைந்திருக்கின்றனர். ஆனால், இடம் வசதியாகக் கிட்டினால், வாடகை கட்டுப்படியாகாது, வாடகை கட்டுப்படியானால் இடம் விற்பனைக்குத் தோதாக இல்லை எனும் நிலையில் தொடர்ந்து தேடி தங்களுக்கான சிறந்த இடத்தை ஒரு வழியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அங்கேயும் வாடகை சற்று அதிகம் தான். 2010 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் வடபாவ் விற்க அனுமதி கிடைத்த மிகச்சிறிய இடத்திற்கு வாடகை மட்டும் மாதம் 35,000 ரூபாய்கள். வேற் வழியின்றி ஒப்புக் கொண்டு நண்பர்கள் இருவரும் கடையைத் தொடங்கினார்கள். முதலில் தங்களது பொருளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சாலையில் கடக்கும் அனைவருக்குமே இலவசமாக வடபாவ் சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். பண்டத்தின் ருசி வாடிக்கையாளரை ஈர்க்கவே மெது மெதுவாக தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது. 

பிறகு முதலில் கிடைத்த கடையை விட்டு விட்டு இடவசதி நிறைந்த ஹவுன்ஸிலோ ஹை ஸ்ட்ரீட்டில் ஸ்ரீ கிருஷ்ணா வடபாவ் என்ற பெயரில் புதுக் கடையை கடையைத் திறந்தார்கள். 

 

0000_kichchidi.jpg

ஆரம்பத்தில் வடாபாவ் மற்றும் டபேலி எனும் இரண்டே இரண்டு ஸ்னாக்ஸ்களுடன் ஒரு ஐஸ்கிரீம் பார்லரின் முன் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் தொடங்கப்பட்ட இவர்களது கடைக்கு இன்று லண்டனில் இரு இடங்களில் கிளைகள் உண்டு. அதில் தயாராகும் உணவு ஐட்டங்களின் எண்ணிக்கையும் பாவ் பாஜி, வட மிசல், பேல் பூரி, பானி பூரி, ரக்தா பட்டீஸ், கச்சோரி, சமோஸா, எனத் தற்போது 60 ஐத் தாண்டி விட்டது. வார இறுதி நாட்களில் போஹா மற்றும் சாபுதானா கிச்சடி கூட அங்கே கிடைக்கிறது. அது மட்டுமல்ல எல்லாவிதமான பண்டிகைகளுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்து கொடுக்கவும் இன்று அவர்கள் தயார். தங்களது விடாமுயற்சி மற்றும் தொழில் மீதிருந்து பக்தியால் இன்று அந்த நண்பர்கள் தொடங்கிய தொழிலின் ஆண்டு நிகர லாபம் எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் கிட்டத்தட்ட 4.4 கோடி ரூபாய்.

7 வருட தொடர் போராட்டத்தில் விளைந்த வெற்றி இது. ஆட்குறைப்போ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வேலை இழப்போ எதுவானாலும் சரி, எப்போதுமே கடின உழைப்பைத் தந்து வாழ்வில் முன்னோக்கி நகரத் தேவையான சவால்களுடன் புது முயற்சிகளைத் தொடங்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்பது இவர்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை மெப்பிக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வின் இக்கட்டான தருணங்களிலும் மனிதர்களுக்குத் தேவையாக இருப்பது மூன்றே மூன்று தான்.
 

  • தெளிந்த சிந்தனை
  • நல்ல நட்பு
  • விடாமுயற்சி

இந்த மூன்றும் சுஜய்க்கு  கிட்டியதால் மட்டுமே அவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்!

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.