Jump to content

இலங்கை முஸ்லிம்களுக்கு அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவும் என்று நினைப்பது மடமைத்தனம் ரோஹிங்யா நல்ல படிப்பினை என்கிறார் – அமைச்சர் ரிஷாத்


Recommended Posts

இலங்கை முஸ்லிம்களுக்கு அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவும் என்று நினைப்பது மடமைத்தனம் ரோஹிங்யா நல்ல படிப்பினை என்கிறார் – அமைச்சர் ரிஷாத்

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இன்­னல்­களும் பிரச்­சி­னை­களும் ஏற்­படும் போது அர­பு­லகும் முஸ்லிம் நாடு­களும் கைகொ­டுத்து உத­வு­மென்று நாம் நம்­பிக்கை கொண்­டி­ருப்­பது மட­மைத்­த­ன­மா­ன­தெ­னவும் ரோஹி­ங்யா முஸ்­லிம்­களின் அவ­லங்கள் நமக்கு நல்ல படிப்­பி­னை­யாக அமைந்­துள்­ள­தெ­னவும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் வர்த்­தக கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

risad.jpg

திஹா­ரிய ஈமா­னிய அர­புக்­கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழா ஞாயிற்­றுக்­ கி­­ழமை திஹா­ரியில் நடை பெற்ற போது பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட அமைச்­சர், பட்டம் பெறும் மாண­வர்­க­ளுக்கு சான்­றி­தழ்­க­ளையும் நினை­வுச்­சின்­னங்­க­ளையும் வழங்­கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் உரை­யாற்றும் போது கூறி­ய­தா­வது, முஸ்லிம் நாடுகள் வள­மா­கவும் பல­மா­கவும் இருக்­கின்ற அதே­வேளை, உலக நாடு­களில் சிறு­பான்­மை­யாக வாழும் நமது சமூ­கத்­த­வர்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் ஏற்­படும் போது அவர்கள் தட்­டிக்­கேட்­பார்கள் என்று எவரும் எதிர்­பார்க்க வேண்டாம். அவ்­வா­றான ஆளு­மையும் துணிவும் இந்த நாடு­க­ளுக்கு இருந்­தி­ருந்தால் ரோஹிங்யாவில் முஸ்­லிம்­க­ளுக்கு என்றோ விடிவு கிடைத்­தி­ருக்கும்.

அமெ­ரிக்கா, இஸ்ரேல் போன்ற சதி­கா­ரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் இன்று உல­க­மெல்லாம் அழி­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் நாடு­க­ளுக்­கி­டையே திட்­ட­மிட்டு பிள­வு­க­ளும், பிரி­வி­னை­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதே­போன்று ஒரே நாட்­டுக்­குள்ளே பிரச்­சி­னைகள் உரு­வாக்­கப்­பட்டு சமூ­கங்­களை மோத­விடும் மிகப்­பெ­ரிய கைங்­க­ரியம் இன்று இடம்­பெற்று வரு­கின்­றது.

இந்­த­வ­கையில் இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் மிகவும் கவ­ன­மா­கவும் நிதா­ன­மா­கவும் நடந்து கொள்­ள­வேண்டும். மார்க்க ரீதி­யிலோ கொள்கை ரீதி­யிலோ பிள­வுண்டு நமது ஒற்­று­மைக்கு நாமே வேட்­டு­வைத்து நமக்­கி­டையே மோதிக்­கொள்­வதைத் தவிர்த்­துக்­கொள்ள­ வேண்டும். சமுதாய ஒற்­று­மையை குலைக்க எவரும் துணை­போகக் கூடாது.

இதே­வேளை, இரண்டு வரு­ட­கா­ல­மாக ஆட்­சி­யா­ளர்­களின் நட­வ­டிக்­கையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு குறிப்­பி­டத்­தக்க நன்­மைகள் கிடைக்­காமை வேத­னை­ய­ளிக்­கின்­றது.

இருந்­த­போதும் நாம் அனை­வரும் இணைந்து இத்­தனை கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்­டு­வந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டுமெனவும் ஆட்சியிலிருந்து நாம் வெளியேறவேண்டுமென்றும் நம்மில் சிலர் குரல் எழுப்புவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்தக்கோரிக்கை சமூகத் துக்கு எத்தகைய பயனை அளிக்கும் என்பதை நாம் சிந்திப்பதற்கும் கடமைப் பட்டிருக்கின்றோம் என்றார்.

http://metronews.lk/?p=15748

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை இப்பவாவது தாங்கள் காக்கா கூட்டம் என்று ஒருத்தர் தன்னும் ஒத்துகொண்டதுக்கு இவ்வளவுகாலமும் தாங்கள் சொன்னால் சொரிலன்காவுக்கு எண்ணெய் கூட கிடைக்காது என்று பீலா விட்ட கூட்டம் ரோஹிங்யாவில் முஸ்லிம்களை உலகில்ஒருத்தனுமே கண்டுகொள்ளாதயிட்டு யதார்ர்த்தம் பயத்தை குடுக்க தொடன்கிவிட்டுது முக்கியமா இனவாத சிங்களம் கொடுப்புக்குள் சிரித்தவாறு பார்த்துகொண்டு இருக்கிறது அவங்களிடம் வேண்டிகட்டினால்தான் ஒரு வழிக்கு வருவினம் கிட்டடியில் பால்சோறு கிடைக்க அல்லா துணை புரியட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு விளங்கினால் சரி..........இப்பவாகிலும் அரபு மொழி ..கூலிவேலைக்கு மட்டும் ஓமென்றாகிவிட்டுது....

Link to comment
Share on other sites

ரோகிங்யா பௌத்த சிங்களப்பேரினவதத்திற்கு அடுத்து எங்கு கைவைப்பது என்ற சமிஞ்சையை காட்டியுள்ளது. முஸ்லீம் மக்களுக்கு அவர்கள் மத இறுக்கம் அவர்கள் அரசியலுக்கு எதிர்காலத்தில் பலம் இல்லை என்று இரண்டு செய்திகளை ஒரே நேரத்தில் சொல்லியுள்ளது. 

Link to comment
Share on other sites

இலங்கை மக்கள், முஸ்லிம்களை நம்பகத் தன்மை அற்றவர்களாகப் பார்ப்ப்தற்கு இந்த ரிஷாத் திருட்டுக் கூட்டம் முக்கிய காரணம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.