Jump to content

தலைவியை இழந்த வானம்


Recommended Posts

தலைவியை இழந்த வானம்

போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென
எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி

பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு
கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை
இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு
தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி

வீரக் கதைகளில் சீருடைகளுடன்
இன்னும் உலவும் தலைவியின்
மௌனத்திலும்
இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது
மாபெரும் நெருப்பு

வாதையின் பிணியே சூழ்ச்சியாய்
தன் புதல்வியை தின்றதென
புலம்புகிறாள் தாயொருத்தி
நெஞ்சில் மூண்ட காலத் தீயே
தன் தலைவியை உருக்கியதென
துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி

மௌனமாகவும்
சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த
தலைவியையும் இழந்தோம்

பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை
தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம்
ஊழித் தாண்டவத்தில் அழித்தனர் லட்சம்பேரை
எஞ்சியோரை மாண்டுபோகும்படி செய்தனர்

இனி?

ஊழியின் ஈற்றில் சரணடையும் தன் சேனைக்கு
தலைவி கூறியது இப்படித்தான்
'இத்துடன், எதுவும் முடிந்துவிடவில்லை'

தீபச்செல்வன்

https://deebam.blogspot.com/2015/10/blog-post_19.html?m=0

Image may contain: 1 person, standing and outdoor
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை தாகத்தில் வீழ்ந்த எங்கள் சகோதரிகளுக்கு என்றும்  வீர வணக்கங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.