Jump to content

புடவை கட்டும் பெண்களுக்காக புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழனின் ஒரு புதிய கண்டுபிடிப்பு!


தமிழ் பொப் அப் - Tamil Pop Up  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

ஐடியாமணி என்ற சொல்லை இப்பத்தான் வாழ்க்கையில் முதன் முதலாகக் கேள்விப்படுறன். இது ஒரு டமிழ் Vocabulary என்று எனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

எல்லாம் நீர் வந்து சேர்ந்த நேரம்தான்!

நீங்கள் பேசும் வார்த்தைகளெல்லாம் Tamil Vocabulary இல் இருக்கின்றாதா.......? :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஏதோவெல்லாம் நடக்குது! நடத்துங்கோ, நடத்துங்கோ! நீங்களே சேலை கட்டிவிடும் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பிக்கலாமே மாப்பிள்ளை..

Link to comment
Share on other sites

மூக்கி அதைக் கொண்டு நடத்துவதற்கு உங்களை மாதிரி ஒரு ஆளைத்தான் தேடிதிரிகின்றேன். பொறுப்பெடுத்து செய்வீங்களா?

எனக்கு பொறுப்பு கூடிவிட்டது. எல்லாவற்றையும் கவனிக்க இப்போது நேரமில்லை.

ஒரு பக்கத்தில் யாழ் கள போர்நிறுத்த கண்காணிப்பு குழு தலைவராக இருந்து வன்னி மாண்மியம் களத்தை கண்காணிக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் செல்வன் சீரியலை கொண்டு நடத்த வேண்டியுள்ளது. மறுபுறத்தில் தமிழ் பொப் அப் வியாபாரத்தை கொண்டு நடத்த வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

ஏதோவெல்லாம் நடக்குது! நடத்துங்கோ, நடத்துங்கோ! நீங்களே சேலை கட்டிவிடும் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பிக்கலாமே மாப்பிள்ளை..

இப்பவும் வீட்டில அததான் பண்ணிட்டு இருக்காரு :P

Link to comment
Share on other sites

ம்ம் நல்ல கண்டு பிடிப்பு ..... ரொம்ப கஸ்டப்பட்டு கண்டு பிடிச்சிருக்குறீங்க .....சினேகிதி சொன்ன மாதிரி இதே மாதிரி ஏற்கனவே வந்திருக்கு எங்கயோ பார்த்த ஞாபகம்.... மற்றது. கொஞ்சம் கலர்கள் சரியில்லாத மாதிரி இருக்கு ... இப்ப உதாரணத்துக்கு தங்கவேட்டை சாரி மாதிரி இருந்தால் நல்லம்.... அதுதான் இப்ப கூட கட்டுறாங்க..... அப்படி இருந்தால் உங்க Tamil Pop Upபை நாங்கள் கட்ட அல்லது சிபாரிசு செய்ய தயார். ;) ;) :blink::)

Link to comment
Share on other sites

  • 5 months later...

ஆகா கலைஞன் இப்பதான் உங்க இந்த புதிய புடவை தயாரிப்பை பார்த்தேன் ஆனால் என்ன ஏற்கனவே இப்படி மொடலிலை சின்னப்பிள்ளையளுக்கு வந்திட்டுது. நீங்கள் புதிய மொடலாகா பெரிய ஆக்களுக்கு செய்யலாம். நல்ல பிஸ்னஸ் போகும் எண்டு நினைக்குறன் என்னைப் போல நல்ல சுறுசுறுப்பான ஆக்கள் இருக்குமட்டும் ;)

Link to comment
Share on other sites

வெண்ணிலா, இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :) :P

ஹீஹீ நான் என்ன சொல்ல வாறன் என்றால் நீங்கள் நல்லாக சிந்திக்கிறியல் இப்ப கொஞ்ச நாட்களாக. அதிலும் இச்சிந்தனை நல்லா இருக்கு. பிரயோசனமாக இருக்கு.

:P

புடவை கட்டும் பெண்களுக்காக புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழனின் ஒரு புதிய கண்டுபிடிப்பு!

சரி புடவைகளின் படத்தை போடுங்கோ பார்ப்பம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல முயற்சி கலைஞன்.

இப்போதெல்லாம் முந்தாணையை பின்புறமிருந்து தோள் வழியாக முன்னால் வழிய விடுவதுதான் பாஷன். அப்படி விடும்போது முன் சுருக்கங்கள்( ப்ளீட்ஸ்) நிறைய மறைந்துவிடும். :P :P

அம்மாதிரி வகையறாக்களும்(மொடல்) தங்களிடம் உள்ளதா? :):)

மேலும் சிறிமா அம்மையார் உடுத்தியதுபோல் முன் கொசுவம் வைத்த வகைகள் போன்றவையும் எதிர் காலத்தில் தயாரிக்கும் சிந்தனை சிந்தனைச் செல்வனிடம் சிதறுகிறதா? :):D

Link to comment
Share on other sites

இல்லை வெண்ணிலா, ஆரம்பத்தில் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டபோது எனக்கு கொஞ்சம் குசியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஆனால் இப்போது வெறுத்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பை வைத்து யாராவது பிழைத்து வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைக்கு வர எனது வாழ்த்துக்கள்! எனக்கு இதை வைத்து ஏதாவது செய்யும் எண்ணம் அல்லது விஸ்தரிக்கும் எண்ணம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.