Jump to content

80களில் இருந்த தொடர்பு முறை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

80களில் இருந்த தொடர்பு முறை !

 

Mohamed Nizous

80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு

முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள்.

கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன்

ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று

செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம்.

ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை

ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப் பற்றை போஸ்ட்மேனை

தூரத்தில் கண்டதுமே துள்ளி ஓடிச் சென்று எம்புள்ள கடிதம் இருக்காப்பா

எனக் கேட்டு அன்புள்ள தாய்மார்கள் ஆதங்கப் படுவார்கள்

ஊரு விட்டு ஊரு சென்று உழைக்கின்ற வாப்பாமார் சேருகின்ற

பணத்தை செல்லங்களுக்கு அனுப்ப போஸ்ட் ஒபிஸ் சென்று

போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார். மணி ஓடர் கொண்டு வரும் மணி ஓசை

கேட்டு குடும்பத்தில் சந்தோசம் குற்றாலமாய்க் கொட்டும்.

தந்தி ஒன்று கண்டாலே தலை சுற்றும் மனம் பதறும்.

யாரு மெளத்தோ ! என்ன பிரச்சினையோ! அவசரமாய் செய்தியினை அனுப்பி இருக்காங்க.

அண்ண நீங்களே அதப் படிச்சு சொல்லுங்க தபால் கார

அண்ணயிடம் தவிப்போடு கூற ஏம்மா பயப்படுறீங்க.

இண்டவியுக்கு வா என்று பிள்ளைக்கு வந்து இருக்கு பீயோன் பால் வார்ப்பார்.

போணிருக்கும் வீடு என்றால் பொதுவாகப் பெரும் வீடு.

காண்பதற்கே அரிது கதைப்பதென்றால் கனவு.

இருபத்தைந்து வருடங்கள் இருக்கின்றேன் டெலிகொம்மில்.

ஏ. எல். எடுக்கும் வரை இவன் போணைத் தொடவேயில்லை.

பொழுது போகாத பொடியன்களும் பிள்ளைகளும் எழுதுவார் கடிதங்கள்

இதன் பெயர் பேனா நட்பு. பேனா நட்பு

சில நேரம் பே நாய் எனும் ஏச்சில் வீணாய் முடியும்

ஆனாலும் பலர் தொடர்வார்

இருக்கின்ற ரேடியோவில் எப் எம் இயங்காது.

சிற்றலை வரிசையிலே சற்றுத் தெளிவின்றி இலங்கை வானொலி இல்லங்களில் ஒலிக்கும்

தினபதி, கேசரி தினமும் செய்தி தரும்.

சிந்தாமணி, மஞ்சரி சிறப்பிதழ் ஞாயிறில்.

விகடன் , குமுதம் வேண்டிப் படிக்க மாட்டார். வாசிக சாலையில் வாசித்து முடிப்பார்.

தொலைக்காட்சி லேசாக தூறத் தொடங்கியது.

ரூபவாஹினிக் கொக்கை ரொம்ப நேரம் காட்டிய பின் புள்ளிகள் மத்தியில் வெள்ளை கருப்பு செய்தி வரும்.

இப்போது எல்லாமே இமீடியற்றாய் கிடைக்கிறது ஆனாலும்

அன்று ஆவலாய் கவர் உடைத்து வாசித்த வாசித்து வரிகளைப் பாடமிட்டு நேசித்த அந்த சுகம் நெற்றில் கிடைக்கவில்லை…!

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=175885 .

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய கால தொடர்புகளை மீட்டும் அழகான கவிதை....!

எயார் மெயிலில் குருவி முத்திரைகள்

விரல் விட்டு சுழற்றும் சுழற்றும் தொலைபேசி 

குரலைப் பதிவு செய்து அனுப்பும் கேசட் 

விரைந்து வரும் தந்தி 

இரு குமிழிலும் ஐந்து கட்டைகளிலும் உலகை வீட்டுக்குள் இழுத்து வரும் ஏரஸ் ரேடியோ 

எல்லாம் அருமை.....! 

பகிர்வுக்கு நன்றி கொழும்பான்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் இளமைக்கால நினைவுகளை மீட்டு வந்த நல்லதொரு கவிதை. இத்தனை வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துவிடுமென்று அப்பொழுது நாம் கற்பனைகூட செய்யவில்லை. அந்தநாட்களில் தபால்காரனின் வருகைக்காக காத்திருப்பதே சுகம்தான். அந்த றேடியோப்பெட்டி ஒலி ஒளி நாடாக்கள் எல்லாமே வேகமாய் மறைந்து விட்டாலும் எம் நினைவுகளின் அடித்தளத்தில் நிலைத்து நிற்கின்றன. கவிதைப் பகிர்வுக்கு நன்றகள் கொழும்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அருமை.....! 

பகிர்வுக்கு நன்றி கொழும்பான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavallur Kanmani said:

எம் இளமைக்கால நினைவுகளை மீட்டு வந்த நல்லதொரு கவிதை. இத்தனை வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துவிடுமென்று அப்பொழுது நாம் கற்பனைகூட செய்யவில்லை. அந்தநாட்களில் தபால்காரனின் வருகைக்காக காத்திருப்பதே சுகம்தான். அந்த றேடியோப்பெட்டி ஒலி ஒளி நாடாக்கள் எல்லாமே வேகமாய் மறைந்து விட்டாலும் எம் நினைவுகளின் அடித்தளத்தில் நிலைத்து நிற்கின்றன. கவிதைப் பகிர்வுக்கு நன்றகள் கொழும்பான்.

உண்மை கண்மணி அக்கா. இந்த உலகம் தோன்றிய  காலத்தில் இருந்து.... கடந்த 30 - 40 வருடத்தில்,
ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர் பார்க்க முடியாதவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

எல்லாம்...போச்சு.  :)

Kein automatischer Alternativtext verfügbar.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.