Jump to content

மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள் (காணொளி)


Recommended Posts

உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி.

BBC

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்?

மார்பக புற்றுநோய்படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

மார்பக புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமானதாக இருந்த போதிலும், 15 ஆண்டுகள் கழித்து அது மீண்டும் வர வாய்ப்புள்ளதாக ஒர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிணநீர்முனைகளுக்கு பரவக்கூடிய புற்றுநோய் மற்றும் பெரிய கட்டிகள் உள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக மீண்டும் 40% அளவுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது.

மார்பக புற்று நோய் சிகிச்சையோடு ஹார்மோன் சிகிச்சையும் செய்யும் பட்சத்தில், மீண்டும் இந்த பாதிப்பு வரும் ஆபத்து குறையக்கூடும் என நியூ இங்கிலாந்து ஆஃப் மெடிசின் மருத்துவ சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளது.

இருபது ஆண்டுகளில் 63 ஆயிரம் பெண்களின் போக்கை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். இதில் மார்பக புற்று நோயானது அனைவருக்கும் பொதுவான வடிவத்திலேயே இருந்தது.

புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் கிளரப்பட்டு வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு பிரியக்கூடும் வகையாகும்.

ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் சிகிச்சையளிக்கப்படும் போது வழங்கப்படும் டேமாக்சிஃபின் அல்லது அரோமடேஸ் தடுப்பான்கள் ஈஸ்ட்ரஜனின் விளைவுகளை தடுக்கும் அல்லது முழுமையாக நிறுத்திவிடும்.

சிகிச்சை பெற்று 5 ஆண்டுகள் ஆன பிறகு அவர்களது புற்றுநோய் மறைந்துவிட்டாலும், அடுத்த 15 ஆண்டுகளில், நிலையான எண்ணிக்கை உடைய பெண்களுக்கு உடம்பில் மீண்டும் புற்றுநோய் படர்ந்திருப்பது கண்டறியப்பட்டது - சிலருக்கு 20 ஆண்டுகள் கழித்தும் கூட கண்டறியப்பட்டது.

முதன்முதலில் ஏற்கனவே இருந்த புற்றுநோயானது நான்கிற்கும் மேற்பட்ட நிணநீர் முனைகளுக்கு பரவியிருந்த பெண்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் அதிகளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

சிறிய அல்லது குறைந்த அளவிலான புற்றுநோய், நிணநீர் முனைகளுக்கு பரவாமல் இருந்த பெண்களுக்கு மீண்டும் நோய் வர 10 சதவீத அபாயம் மட்டுமே இருக்கக்கூடும்.

குறிப்பிடத்தக்க விஷயம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹோங்சோ பான் கூறுகையில்," நீண்ட காலங்கள் இருக்கக்கூடும் மார்பக புற்றுநோய் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரவும் என்ற இந்த குறிப்பிடத்தக்க விஷயமானது, முதலில் இருந்த புற்றுநோயின் அளவு, அது நிணநீர் முனைகளுக்கு பரவி இருந்ததா இல்லையா என்பதை பொருத்தே இருக்கும்" என்றார்.

சிகிச்சை நிறுத்திய பின் ஐந்தாண்டுகளுக்கு டேமாக்சிஃபின் வழங்கப்படும் போது மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு மீண்டும் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதாக மருத்துவர்களால் அறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சை முடிந்து, பத்து ஆண்டுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மீண்டும் இந்த நோய் அல்லது இதனால் மரணம் நிகழ்வதை தவிர்க்க முடியும் என சமீபத்திய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

மார்பக புற்றுநோய்படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image captionபுற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் கிளரப்பட்டு வளர்ந்து பல இடங்களுக்கு பிரியக்கூடும் வகையாகும்.

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு மட்டுமே வேலை செய்யக்கூடும் அரோமடேஸ் தடுப்பான்கள் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனால், ஹார்மோன் சிகிச்சைகளால் உண்டாகக்கூடும் பக்கவிளைவுகளால் நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை நிறுத்த இதுவே காரணமாகிவிடும்.

இதில் மாதவிடாய் அறிகுறிகள், ஆஸ்டியோபாரிசிஸ், மூட்டு வலி மற்றும் கார்பல் டனல் நோய்க்குறி ஆகியவையும் உள்ளடங்கும்.

இந்த ஆய்விற்கு நிதியளித்த பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சியின் மூத்த மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் ஆர்னி புருஷோத்தமன் கூறும் போது, இந்த ஆராய்ச்சி தொடங்கியதில் இருந்து மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும் மற்றும் அவை டேமாக்சிஃபின்னுக்கு வெவ்வேறு வழிகளில் வேலை செய்ததாகவும் கூறினார்.

எந்த வகை புற்றுநோய்கள் திரும்பி வரக்கூடும் என்று கணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு பதிலதாக பத்து ஆண்டுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் எவ்வாறு இது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது என்ற வேறுபாட்டை அறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தங்கள் சிகிச்சையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெண்கள் அவர்கள் மருத்துவர்களிடத்தில் விவாதிக்க வேண்டும் என Breast Cancer Now என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சேலி க்ரீன் புக் கூறினார்.

மேலும், "மார்பக புற்றுநோய் சிகிச்சை பெற்ற அனைத்து பெண்களும் இது குறித்த எச்சரிக்கையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மீண்டும் இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது குறித்து அவர்கள் பொது மருத்துவர்கள் அல்லது அவர்களது மார்பக புற்றுநோய் அணியுடன் பேசுமாறும் வலியுறுத்தப்படுகிறது."

http://www.bbc.com/tamil/science-41940603

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.