Jump to content

கிழக்கில் தோல்வியடைந்த படையணித் தலைவர்களுக்கு பிரபாகரன் தண்டனை


Recommended Posts

கிழக்கில் அரச பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுவிட்ட புலிகள் அமைப்பின் கிழக்குப் பிரதேசப் படையணித் தலைவர்களுக்கு, இயக்கத் தலைவர் பிரபாகரன் தண்டனைகளை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிழக்கில் பிராந்தியத்தின் சில பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் வைத்திருக்கும் நோக்கத்தில் குறித்த சில முகாம்களில் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திரண்டிருந்தார்கள் எனவும் அவர்களும் தற்போது வடக்கு பிரதேசங்களை நோக்கித் தப்பியோடிவிட்டார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் செயற்பட்டுவந்த புலிகள் இயக்க ஆயுதப்படையணிகளின் முக்கிய தலைவர்களும் தற்போது வடக்குக்கு தப்பியோடியுள்ளனர். இயக்கத்தின் பிரதேசப் படையணித் தலைவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பது புலிகள் இயக்கத் தலைமைத்துவத்துக்கே தெரியாதநிலை ஏற்பட்டுள்ளது.

விமானப்படை, கடற்படையினரின் தீவிர தாக்குதல் உதவிகளுடன் இராணுவ கொமாண்டோப் படையணியினரால் அண்மைக் காலங்களில் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் இயக்கத்தினரில் பல்வேறு பிரதான முகாம்களையும் முற்றாக அழித்து வரலாற்று ரீதியான வெற்றிகளை பாதுகாப்புப் படையினர் பெற்றுள்ளனர். இவ்வாறு கிழக்கில் புலிகள் ஆயுதப்படையணியின் டங்கோபேஸ், றொபேட் பேஸ், பாஸ்கரன் பேஸ், ஜெராட் பேஸ், கடுவான பேஸ் போன்ற புலிகளின் பிரதான முகாம்கள், கிழக்கிலுள்ள மிகப்பெரிய பெண்புலிகளின் பயிற்சி முகாம் தொடர்கள், வைத்தியப் பிரிவு முகாம், உணவுக்களஞ்சிய முகாம் உட்பட பல்வேறு புலிகளின் முக்கிய முகாம்களும் நிலையங்களும் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுவிட்டது. மேற்படி கூட்டுப் பகுதியில் அமைந்திருந்த வைத்தியப் பிரிவு முகாம் தொடர்ந்து தாக்கப்பட்ட வேளையில் வாகரையில் காயத்துக்குள்ளான புலிகள் இயக்கத்தினர் பெருந்தொகையில் அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் இராணுவ உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறே புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களங்சிய முகாம்களும் அழிக்கப்பட்டிருப்பதால் எஞ்சியிருக்கும் புலிகள் இயக்கத்தினர் மத்தியில் பெரும் உணவுப் பஞ்சம் நிலவுவதாகவும் படையினர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-திவயின : 06.03.2007-

http://www.thinakkural.com/news/2007/3/9/s...s_page22905.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.