Jump to content

அபத்தம்


Recommended Posts

மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள்.
பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்தம் என்றிருந்தது.


ஒரு கதைப்புத்தகம் மண்டபத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்தது. அப்புத்தகத்திற்குப் பொழிப்புரை என பல்வேறு முயற்சிகள் மண்டபததிற்குள் நடந்துகொண்டிருந்தன. புத்கத்தைச் சிலர் கொண்டாடினர், அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களைச் சித்தரிப்பதாகத் தமக்குத் தோன்றிய விடயங்களைச் சித்திரங்களாக்கி, அவற்றை நிரையாக கணனிவழி சுவரில் தெறித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் முடிவு சார்;ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தியதாக அவர்கள் நம்பிய அக புறக் காரணிகள் சார்ந்து அவர்கள் தங்கள் விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டார்கள். ஏதோ ஒரு வகையில் பலரது மனம் புத்தகத்தின் ஏதோ ஒரு அம்சத்தில் குவியப்பட்டிருந்தபோதும், வந்திருந்தவர்களிற் சிலர், புத்தகத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத தமது பிணக்குகளையும் உரசிப்பார்த்தார்கள்.


முட்டை மண்டபம் அமைந்திருந்த காணி விசித்திரமாக இருந்தது. ஒரு உயரமான மரத்தில் ஏறி நின்று கீழ் நோக்கி அந்தக் காணியினைப் பார்க்கின் அது ஒரு அடைக்கோழி போன்று தோற்றமளித்தது. முட்டைக்கு அடைக்கோழி பொருத்தமாகத் தான் இருந்தது. கோழி வாலறுந்ததாக இருந்தது. அது உண்ட இரைகள் விசித்திரமான முறையில் கோழியின் வயிற்றின் ஒரு பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. உணவு செரித்துவிட்டபோதும், தான் உண்ட அனைத்து இரையினையும் கோழி வயிற்றிற்குள் அடையாளப்படுத்தி வைத்திருந்தது. கோழியின் தொண்டைவழி மண்டபத்திற்கு மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த புத்தகம் புதியதோர் உலகம் போன்று ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. எழுத்தாளர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தை வாசித்தவர்கள் அதனை ஒரு புனைவுபோன்றும் சமயத்தில் கொண்டாடியபோதும், புத்தகம் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கதைமாந்தர்களும் அந்த மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தைப் பார்ப்பதும், பின் கதைமாந்தர்களைக் கண்களாற் தேடுவதுமாக வந்திருந்தவர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். கதைமாந்தரைக் கண்டமாத்திரத்தில் வரையறுக்கப்பட்ட வித்தில் தாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வந்திருந்தவர்கள் ஏனோ நம்பினார்கள். ஆனால், விசித்திரமான முறையில், அறையில் இருந்த நிசப்த்தம், வந்திருந்தவர்களின் உணர்வுகளையும் ஓசையற்றதாக்கியிருந்தது. மூளை இவைசார்ந்து இவ்வாறு நீ உணர்வாய் என்று உணர்த்தத் தலைப்பட்டபோதும், மனது வரண்டநிலமாய் உணர்ச்சியற்று நிசப்த்தம் காத்தது. 


மண்டபத்துள் இருந்தவரை, புத்தகத்திற்குள் இடைச்செருகல்களையோ பின்னிணைப்புக்களையோ வாசகர்களால் இணைத்துவிடமுடியவில்லை. நிசப்த்தம் வாசகரை நெறியாழ்கைசெய்தது. நிகழ்வு முடிந்து, வந்திருந்தவர்கள் அடைக்கோழியின் தொண்டைவழி தத்தமது வீடுகளை அடைந்து இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்தபோது...


புத்தகத்தின் கதையின் இரண்டாம் அத்தியாயம் ஒன்று வாசரகருள் ஒரு சிறு விதையாகத் துளிர்க்கத் துடித்தது. இந்த இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு அபத்தம் இருந்தது. அதாவது, கதைமாந்தரின் வாழ்வில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளிநின்றபடி, தாம் எழுதவிளையும் இரண்டாம் அத்தியாயத்தால் தமக்கு எவ்வித பொறுப்போ செலவோ ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டு, தாம் படித்த இலக்கியங்களினதும் தாம் பார்த்த நாடகங்களினதும் தாக்கத்தில், மனக்கிழர்வுடன் அந்த இரண்டாம் அத்தியாயம் துளிர்க்கத்தலைப்பட்டது. அபத்தம். உண்மைச் சம்பவங்களின் தொகுப்பிற்கு இது அபத்தம். 


ஆனால்:


உலகின் அனைத்து அபத்தங்களையும் போன்று, இந்த இரண்டாம் அத்தியாயமும் எழுத முயற்சிக்கப்படும். இலக்கியம் வலியது. அது அழகியலைச் செவ்வனே வாசகருள் பதியம்போட்டுவி;ட்டது. ஆதலால், அபத்தம் என்று தெரிந்தபோதும், அழகியலிற்கு இரைதேடி, அழகியல் கோணத்தில் இந்த இரண்டாம் அத்தியாயத்திற்கான முயற்சி நடக்கப்போவது திண்ணம். 


ஒருவேளை அந்த இரண்டாம் அத்தியாத்தின் தலைப்பும் இப்படி இருக்கும்:


'ஒரு மரணச்சடங்கு மண்டபத்திலிருந்து - சிறு குறிப்பு'


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.