Jump to content

 இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்!


Recommended Posts

 
 
 
 

 இந்த வாரம் தமிழக அமைச்சரவை... மாற்றம்!

 
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 
 இந்த, வாரம், தமிழக ,அமைச்சரவை,மாற்றம்!
 

அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி அணிக்கு கிடைத்ததும், இந்த வாரம், தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது.

ஆட்சியில் உள்ள, 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள், நான்கு பேருக்கு, 'கல்தா' கொடுக்கப்படுவதோடு, சசிகலா ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை, பதவியில் இருந்து நீக்கவும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா அணி,
பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டதும், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கோரி, தேர்தல் கமிஷனில்,
மனு தாக்கல் செய்தனர்.

உடனே முடிவெடுக்க முடியாததால், அ.தி.மு.க., பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை,
தேர்தல் கமிஷன் முடக்கியது.பின், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட, சசிகலா குடும்பத்தினர், தனி அணியாக செயல்படுகின்றனர்.
 

 

வாதாடுகின்றனர்


'இரு அணிகளும் இணைந்ததால், தங்களுக்கு, கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி தரப்பில் வாதாடுகின்றனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி, இரட்டை இலையை முடக்கும் நோக்கத்தில், புது புது மனுக்களை தாக்கல் செய்து, முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில், டில்லி தேர்தல் கமிஷனில், இன்று இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது. இதில், சின்னம்,
தங்களுக்கு கிடைத்து விடும் என, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும், நம்பிக்கையுடன் உள்ளனர். இது, இரு அணிகள் இணைப்பை விட, முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.

சின்னம் கிடைத்ததும், முதற்கட்டமாக, இந்த வாரம் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது. இதில், தினகரனின், 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும், நான்கு அமைச்சர்களை நீக்கவும், 27 மாவட்ட செயலர்களின் பதவியை பறிக்கவும், முதல்வர் பழனிசாமி தரப்பு, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

'சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, 25 பேர், ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர்' என, தினகரன், தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 

 

பதிலடி


'அமைச்சர் செங்கோட்டையன் கூட எங்கள் ஆதரவாளர் தான்' என, செய்தி தொடர்பாளர், புகழேந்தி பேசி வருகிறார். அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கேட்டையன், 'நான் அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி அல்ல' என, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இருப்பினும், சசிகலா அணிக்கு, ஸ்லீப்பர் செல்லாக செயல்படும் அமைச்சர்களில், பெண் அமைச்சர் ஒருவர், கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், தென் மண்டல அமைச்சர்கள் இருவர் என, நான்கு அமைச்சர்கள் களையெடுக்கப்பட உள்ளனர்.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், புதிய
அமைச்சர்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.ஜெ., மறைவுக்கு பின், கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா பொறுப்பேற்ற பின், தன் ஆதரவாளர்கள், 20க்கும் மேற்பட்டோரை, அமைப்பு செயலர்களாக நியமித்தார். அவர்களையும், களையெடுத்து விட்டு, குறைந்த எண்ணிக்கையில், புதிய அமைப்பு செயலர்கள்நியமிக்கப்பட உள்ளனர்.

சசி ஆதரவாளர்களாக கருதப்படும், 27 மாவட்ட செயலர்களை மாற்றி விட்டு, கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் வகையில், புதிய மாவட்ட செயலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். கட்சிக்கு சோதனையான காலத்தில், அணி மாறாமல், ஜெ., விசுவாசியாக செயல்பட்டு வரும், 10 பேருக்கு, வாரியத் தலைவர் பதவிகளை வழங்கவும், முதல்வர் பழனிசாமி தரப்பு வியூகம் வகுத்துள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1885256

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.