Jump to content

மண்ணிழந்த நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna%20Exodus%203.jpg

 

சிறகு முளைக்கும் முன்னரே...,

இறக்கை விரிக்க வைத்த நாள்!

 

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்...,

பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !

 

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம்  ராசாக்கள் ...!

எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போட வந்து விடுங்கள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

கொஞ்சம் போரடித்தால்....,

ஊர்ப்பக்கம் ஒரு முறை..,

எட்டிப்பார்த்து......,

சோர்ந்து போன ஈகோக்களைக்,

கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,

நீட்டிய வால்களை ...,

மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31.10.2017 at 2:50 AM, புங்கையூரன் said:

பொத்திப் பொத்திப்..,

பிள்ளை வளர்த்தவர்கள்...,

பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் !

 

எங்கு போனாலும் பரவாயில்லை..,

இங்கு மட்டும் வேண்டாம்  ராசாக்கள் ...!

எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் !

 

நாங்கள் உயிரோடு இருந்தால்....

நாளைக்கு எங்களுக்கு...,

கொள்ளி போட வந்து விடுங்கள்!

 

காணியை விற்றார்கள்,

கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்!

கைகளில் கிடந்ததை விற்றார்கள்!

காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்!

 

நாளைய நம்பிக்கைகளை,

எஜன்சிகளிடம் கையளித்தார்கள்!

 

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இன்றோ....,

கோவில்கள், கும்மாளங்கள்,

கும்பாபிஷேகங்கள்,,,,,,

கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள்,

கொண்டாட்டங்கள்....எனக்,

கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

 

இடைக்கிடை....,

சந்திப்புகளின் போது...,

பியருக்குக் சொட்டைத் தீனியாய்..,

பாரைக் கருவாட்டுப் பொரியலாய்,

கருவேப்பிலைக் கொத்தாய்,

கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய்,

யாழ்ப்பாண நினைவுகள்...,

அவர்களுடன் வாழ்கின்றன!

 

கொஞ்சம் போரடித்தால்....,

ஊர்ப்பக்கம் ஒரு முறை..,

எட்டிப்பார்த்து......,

சோர்ந்து போன ஈகோக்களைக்,

கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்..,

நீட்டிய வால்களை ...,

மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்!

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

புங்கையூரான்.... உங்கள் ஒரு கவிதையில்,  
முதல் பாதியில்... பெரும்  சோகத்தையும்,
மறு  பாதியில்... அந்த நிலைமையை மறந்த திமிர்த்தனத்தையும்....
வெளிப்படுத்தியமை... பலரையும் ஓரளவு  சிந்திக்க வைத்திருக்கும்  என்பதில் ஐயமில்லை.
நல்லதொரு  ஆக்கத்திற்கு... நன்றி புங்கை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் படத்தையே காணாதவர்கள்..,

சில நாட்களுக்குள்...,

உலகம் முழுவதையுமே..,

உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்!

 

இது என்னவோ உண்மைதான், ஆனால் இவ்வளவு விலை கொடுத்து இதை பெற்றிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது ....!

மிக நேர்த்தியான கவிதை புங்கை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை உண்மைய பறைசாற்றும் கவிதை. tw_thumbsup:

Link to comment
Share on other sites

On 10/31/2017 at 2:50 AM, புங்கையூரன் said:

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

100 % உண்மை

நன்றி புங்கை அருமையான கவிதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2017 at 9:50 PM, புங்கையூரன் said:

Jaffna%20Exodus%203.jpg

 

பீஜித் தீவில் ...,

மொரிசியஸ் தீவில்...,

தென்னாபிரிக்காவில்...,

மலேசியாவில்...சிங்கப்பூரில்,

தமிழர்கள் வாழ்வது போல...,

அமெரிக்காவில்....கனடாவில்...,

இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும்,

தமிழர்கள் வாழ்வார்கள்!..

 

 

எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணையும் மக்களையும் மறக்காமல் வாழ வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.