Jump to content

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம்

உவகை பற்றி பேச வந்துள்ளேன்.

"உவகை"

மணமக்கள் இணைப்பு

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

இந்த விடயம் பற்றி யாழ் இணையத்தின் எப்பகுதியில் பதிவிடலாம் என்ற தேடலில் எனக்கு சிந்தனைக் களத்தில் உள்ள சமூகச் சாளரமே சிறந்த இடமாக தென்பட்டது ஆதலால் இவ்விடத்தில் "உவகை " பற்றி மனம் திறந்து பேசலாம் என்று நினைக்கிறேன்.

இன்று உலகளாவிய ரீதியில் எமது இனம் பரந்துபட்டு தொழில் நுட்பத்தால் பற்பல விடயங்களை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு விடயம் தேவைதானா என்று பலர் சிந்தையில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இணைய யுகம் வலைப்பதிவில் மணமக்கள் தெரிவு அவநம்பிக்கைகளுக்கூடாக திருமணம் என்ற நிலையில் பல தோல்விகளும், உவப்பில்லா வாழ்வியலுமாக ஒரு புறம் , தமக்கான சரியான தெரிவுகளைச் செய்ய முடியாமல் தெளிவான முடிவை எடுக்கமுடியாமல் திணறும் இளைய சமூகம் ஒரு புறம், புலம் பெயர்ந்து குடும்பங்கள் பிரிந்து சிதறிய நிலையில் திருமண முன்னெடுப்புகளை இளையவர்களுக்கு மேற்கொள்ளமுடியாத ஆதரவற்ற நிலை ஒரு புறம், திருமணம் செய்யும் வயதை கடந்து தனிமரமாக விரக்தியுற்ற நிலையும் ஒரு புறம் இப்படியாக எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

காதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமன்று. எல்லா காதலும் திருமணத்தை அடைவதில்லை. பல தோல்விகளைச் சந்தித்து வெறுத்து திருமணமே வேண்டாம் என்பவர்களையும் அதிகம் காணக்ககூடியதாக இருக்கிறது. அப்படி தனித்து வாழ முடிவெடுத்த இளையவர்கள் 35ஐ கடக்க முன்னரே வெறுமையையும், தனிமையையும் சந்தித்து அதன் பின்னர் தமக்கான வாழ்வை தேடும் கணத்தில் உறவுகளும் சரி , சமூகமும் சரி அதனைக் கணக்கில் எடுப்பதில்லை. இப்படிப்பட்ட பலரை சந்தித்ததன் விளைவே இன்று இந்த "உவகை"யின் பிறப்பு. எங்களின் அடுத்த சந்ததி..... புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்னும் விடுபடமுடியாத எமது பாரம்பரியங்களுடன் எதிர்காலத்தில் தனித்தவர்களாக, மன அழுத்தம் நிறைந்தவர்களாக, போதைக்கு அடிமையுற்றவர்களாக மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். வாழ ஆசைப்படுபவர்களுக்கு வழிகளைத்  திறக்கவேண்டும். கணனி முன் தோன்றும் பிம்பங்களை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வது எத்தனை பேருக்கு சாத்தியம்? 

ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. உறவுகள் பலப்படுகின்றன. தேடல்கள் மூலமே இப்படியான உறவுகள் வலுப்படுகின்றன. ஆரோக்கியமான சமூகம் உறுதியாகும். பல பெற்றோர் தம் பிள்ளைக்கு சரியான துணை கிடைக்கவில்லையே என்று கவலையுறுவதையும், தமக்கான வாழ்க்கைத்துணையை எப்படி எங்கே தேடுவது என்று பிள்ளைகள் தவிப்பதையும் நான் வாழும் சூழலில் நிறையவே சந்தித்துக் கொண்டிருக்கிறேன். சரியான இணைப்பாளர் இல்லாத பெரும் குறையை காணக்கூடியதாக இருக்கிறது. இணைப்பாளரிடம் நேர்மையும் உற்சாகமும் வாழும் சூழல் சார்ந்து புரிதலும் இருக்கவேண்டும். நான் அறிந்த வரை இங்கு அத்தகைய இடம் அதிக வெற்றிடத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரவும் முயற்சிதான் "உவகை"யின் உதயம்.

 

நண்பர்களே, இது கனடா என்ற நாட்டுக்குள் மட்டுப்பட்டதல்ல தமிழர் வாழும் அனைத்து நாட்டிலும் "உவகை" கரங்கள் விரிந்துள்ளது. கண்டங்கள் கடந்தும் இதன் செயற்பாடுகள் இருக்கும். எமது உறவுக் கொடிகள் எங்கிருந்தும் தமது தொடர்புகளை மேற்கொள்ளலாம். தொலைபேசி இலக்கமும், மின்னஞ்சல் முகவரியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தொடர்புகளை மேற்கொள்ளும்போது விண்ணப்படிவங்களை நிரப்பி அனுப்புவதற்கான லிங் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

 

உறவுகளே, உங்கள் உறவுகளுக்கும் "உவகை"யின் தேவை இருக்கலாம். அவர்களுக்கும் "உவகை"யை அறிமுகப்படுத்த மறக்காதீர்கள்.

uvakai_side.jpg.6c3beadcab6f981929e83ebc

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் மற்றவர்களை நம்ப வேண்டும் அதை இணையம் எப்படி செய்யும் என்பதே கேள்வி வெளி உலகை கண்டே பல ர் காதல் புரிகின்றனர் ஆனால் உள்ள இருக்கும் மனதை யாரும் கண்டுகொள்ள வாய்ப்பில்லை  அண்மையில் எனக்கும் ஒரு சம்பந்தம் வந்தது ஜேர்மனியில் இருந்து ஆனால்  எனக்கு இங்கிருந்து போகவும் விருப்பம் இல்லை ஆகையால் விட்டு விட்டேன் அவங்களும் எனது தோற்றம் வெறும் 5 அடி மூன்று உயரம்   அவர்கள் அத விட எதிர்பார்த்தார்கள் இதுவரைக்கும் அவர்களை எனக்கு தெரியாது ஊரில் நல்ல மாப்பிள்ளை தேவை என வினவிய போது யாரோ என்ற தம்பி எனக்கு தெரியாமல் இந்த  வேலையை பார்க்க கடைசியில் நடக்கவில்லை சந்தோஷம் இருந்தாலும் அங்குள்ள பெண்பிள்ளைகளை ஏன் அங்குள்ள ஆண்கள் விரும்புவதில்லை அவர்கள் அந்த வாழ்க்கைக்கு ஒத்து போக மாட்டார்களா  என்ற கேள்வி கண் முன்னே நிற்கிறது சகாறா அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் மற்றவர்களை நம்ப வேண்டும் அதை இணையம் எப்படி செய்யும் என்பதே கேள்வி வெளி உலகை கண்டே பல ர் காதல் புரிகின்றனர் ஆனால் உள்ள இருக்கும் மனதை யாரும் கண்டுகொள்ள வாய்ப்பில்லை  அண்மையில் எனக்கும் ஒரு சம்பந்தம் வந்தது ஜேர்மனியில் இருந்து ஆனால்  எனக்கு இங்கிருந்து போகவும் விருப்பம் இல்லை ஆகையால் விட்டு விட்டேன் அவங்களும் எனது தோற்றம் வெறும் 5 அடி மூன்று உயரம்   அவர்கள் அத விட எதிர்பார்த்தார்கள் இதுவரைக்கும் அவர்களை எனக்கு தெரியாது ஊரில் நல்ல மாப்பிள்ளை தேவை என வினவிய போது யாரோ என்ற தம்பி எனக்கு தெரியாமல் இந்த  வேலையை பார்க்க கடைசியில் நடக்கவில்லை சந்தோஷம் இருந்தாலும் அங்குள்ள பெண்பிள்ளைகளை ஏன் அங்குள்ள ஆண்கள் விரும்புவதில்லை அவர்கள் அந்த வாழ்க்கைக்கு ஒத்து போக மாட்டார்களா  என்ற கேள்வி கண் முன்னே நிற்கிறது சகாறா அக்கா

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வல்வை சகாறா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

பதிலுக்கு நன்றி அக்கா இங்குள்ள பல பெண்கள் குறிப்பா ஐரோப்பிய நாடுகள் என்றதும் பாய்ந்து செல்கிறார்கள் அங்கே வீட்டில் அடைபட்டு இருக்கிறார்கள் அது இரண்டாம் கட்டம் ஆக ஒரு ஆணுக்கு அடங்கிய அடக்கம் உள்ள பெண்ணாக தேடுகிறார்கள்  அங்கே போனதும் சில பெண்கள் மீண்டும் இங்கே வந்த கதைகளும் உண்டு 

நான் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தொடர விரும்பவில்லை   வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு பலர் பலன் பெறட்டும் 

 

Quote

அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள்

இத்தனைக்கு அவள் என்னை விட உயரம் குறைவே அக்கா .எது நட்ந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்க இருக்கிறதோ அவை நன்றாக நடக்கும் ஹாஹாஹாtw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

1 hour ago, Maruthankerny said:

....

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

...

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். நானும் முடிந்தவரை எனது நண்பர்கள்,உறவினர்கள்,தெரிந்தவர்களிடம் பரிந்துரைக்கின்றேன் சகோதரி......!  tw_blush:

நன்றி சுவி அண்ணா. பலருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாலேயே இம்முயற்சி.

21 hours ago, தமிழினி said:

வாழ்த்துக்கள் சகாறாக்கா!!!

நன்றி தமிழினி உங்கள் நண்பர்களுக்கும் உவகையை அறிமுகப்படுத்தி வையுங்கள்

21 hours ago, தமிழரசு said:

நல்ல சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

நல்ல படியாகவே தொடரட்டும் வாழ்த்துக்கள். 

நன்றி தமிழரசு

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஓகோ என்று எல்லோரும் போற்ற வேண்டுகிறேன்.

ஆகா ஓகோ என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆத்மார்த்தமாக ஆசீர்வதித்தாலே போதும்.

19 hours ago, தமிழ் சிறி said:

காலத்திற்கு தேவையான பணியை,   தொடங்கிய.. வல்வை  சகாறாவிற்கு பாராட்டுக்கள். :)

அதனை உணர்ந்ததினாலத்தான்  சர்ச்சைகள் நிறைந்தபணி என்று தெரிந்தும் பொருட்படுத்தாமல் குதித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

உவகை திருமண சேவை தனித்துவத்துடன் வளர்ச்சியடைந்து பலரை இல்வாழ்வில் இணைக்க வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தனித்துவம் பேணும் கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavallur Kanmani said:
பல பெற்றவரின் கவலை களையப்பட்டு
பல பிள்ளைகளின் கனவு மெய்ப்பட்டு
பல மணமக்கள் ஒரு மனப்பட்டு
மனதார உவகையுடன் வாழ்த்த
எம் இனிய வாழ்த்துக்கள்

வழெஃத்துகளுக்கு நன்றி தோழி

16 hours ago, குமாரசாமி said:

இன்றைய எமது புலம்பெயர் சமூகத்திற்கான நற்பணி. சர்ச்சைகள் வரக்கூடிய பணி. 
திடத்துடன் செயல்பட வாழ்த்துக்கள். tw_thumbsup:

சமூகத்தை மனதிற்கொண்டுதான் இதனை கையிலெடுத்தேன் கு.சா அண்ணா

15 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நன்றி நிழலி எல்லோரும் இணைந்திருப்போம். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம் 

10 hours ago, Maruthankerny said:

அப்பாடா எப்படி கரை சேருவது என்ற ஏக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது ...
குறிப்பு.....பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரம்.... பாஸ்ப்போர்ட் கொப்பி.
எல்லாம் எடுத்து சகாரா அக்காவிட்க்கு அனுப்பி இருக்கு 

ஐஸ்வர்யா ராய் அளவுக்கு எல்லாம்  தேவை இல்லை 
சுமாரா காஜல் ...திரிஷா மாதிரி இருந்தாலே போதும் என்றேன்.

ஈழத்தில் யார் ஆகியோ ? அவளையே சரிப்படுத்தி தாராதா அக்கா சொல்லி இருக்கிறா.

பொறுத்தார் பூமி ஆழ்வார் ...
முந்துவோன் பிந்துவான் ... பிந்துவோன் முந்துவான்
என்று பைபிள் வேறு சொல்லியிருக்கு 

சேவையை பார்த்ததும் ஒரே சந்தோசம்.
வாழ்த்துக்கள் அக்கா !

"இதுவரை (ஈழ)மண்ணில் பிறந்த பெண்ணில் ... நீதான் நீதான் அழகியடி"
என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 

மருது உங்கள் குறிப்பும் ,பிறப்பு அத்தாட்சிப்பத்திரமும் பாஸ்போர்ட்டும் கிடைத்தது ஆனால் நீங்கள் விண்ணப்பச் சந்தாவை அனுப்பவில்லையே  உவகையின் செயற்குழுமம் விண்ணப்ப நிதி செலுத்தாதவர்களை பரிசீலிக்கமாட்டார்கள்.... :cool:

9 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நன்றி ராசவன்னியன்

1 hour ago, ஈழப்பிரியன் said:

சகாரா வேறு வேறு நாடுகளில் சப்ஏஜன்ட் தேவை என்றால் கள உறவுகளையே நேர் முக பரீட்சை வைத்து எடுக்கலாம்.

இந்த விடயத்தில் கள உறவுகளும் என்னோடு கை கோர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நான் எல்லோரும் இணைந்தால் எல்லோருக்கும் நன்மைதானே.

15 minutes ago, மியாவ் said:

இதில் பதிவு செய்து கொள்ள எவ்வளவு செலவு பிடிக்கும்...

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற கிழமை...  இரண்டு பேர், மூன்று  விதமான பொருத்தங்களுக்கு விசாரித்தவர்கள்...
அவர்களிடம்... உங்கள்,  மின் அஞ்சல் முகவரியை,  கொடுத்து விடுகின்றேன்.

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

நல்லது இலையான் கில்லர்.

தொலைபேசி இலக்கதொடர்பு கொள்வதென்றால் ஐரோப்பிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பின்பாக அழைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

 

தொலை  பேசி இலக்கத்தில்,  தொடர்பு கொள்வதென்றால்....  
ஐரோப்பிய நேரப்படி, எத்தனை மணிக்கு எடுக்கலாம் என்பதையும்... குறிப்பிட்டால்  நல்லது. 

24/7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

24/7

அண்ணா............................................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.