Jump to content

உவகை (மணமக்கள் இணைப்பு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனுக்கு.....  குசும்பு, கூடிப்  போச்சுது. :grin:
24 / 7 நேரமும் தொலைபேசி அடித்தால்.. வல்வை,  சாரத்துடன்....  வாள்  (கொடுவாக் கத்தி) தூக்கிக் கொண்டு  வந்து விடும். :D:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

விண்ணப்பத்தை நிரப்பி உவகையின் மணமக்கள் தேடலில் இணைவதற்கு 50 கனெடிய டொலர்கள் கட்டவேண்டும். அதன் பின்னர்  திருமணம் முழுமையடையும்போது மேலதிக பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக மணமக்கள் வதியும் நாடுகளை பொருத்தே முழுமையான கட்டணம் அறவிடப்படும்.

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

கேக்கமுன்னம் உருட்டுக்கட்டைகளை ஒழித்துவைத்துவிடவும்..

நீங்க வேறை

அவ எப்படி தன்ரை குறிப்பை இவரிடம் கேட்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறாவோ தெரியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2.11.2017 at 5:00 PM, வல்வை சகாறா said:

ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல திருமணத்திலும் உண்டு தனிக்காட்டு ராஜா. முன்பெல்லாம் நம்மவர்கள் தோற்றத்தை கருத்தில் கொள்வது குறைவு. சம்பாதிக்கும் ஆண்மகனாக குடும்பத்தை கொண்டு நடாத்தக்கூடியவனாக பார்த்தார்கள். அப்போது பெண்கள் சம்பாதிப்பதில்லை பெற்றோரின் செலக்ஷ்சனை ஏற்று வாழ்ந்தார்கள். சுய விருப்புகளை பெண்கள் வெளிப்படுத்துவது அரிதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. தம் காலிலேயே  தாம் நிற்கிறார்கள் சுய விருப்புகளை வாழ்க்கைத்துணை விடயத்தில் ஆணித்தரமாக வைக்கிறார்கள். அதில் தோற்றம் என்பது முன்னணியில் இருக்கிறது. தம்மை விட உயரம் குறைந்தவர்களை பெண்கள் முற்றாக புறக்கணிக்கிறார்கள். அதற்காக அந்த ஆண் எவ்விதத்திலும் குறைந்தவராகமாட்டார் அவருடைய உயரத்தை ஏற்கக்கூடிய பெண்ணும் இருப்பார். அடுத்து புலம் பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் பொதுவாகவே உயரம் கூடியவர்களாக உள்ளனர் அதிலும் நாகரீகம் கருதி குதி உயர்ந்த காலணிகளை அணிவதும் வழக்கமாக உள்ளது. ஆண்கள் பொதுவாக தம் துணையை கீழைத்தேச பண்புகளைக் கொண்டவர்களாக எதிர்பார்க்கின்றனர். தமக்கு சரிசமமாக பெண்களைக் கருத முடியாத நிலையில் இருப்பவர்களே பெரிதும் விரும்புவதில்லை எனக் கொள்ளலாம். 

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

49 minutes ago, ஈழப்பிரியன் said:

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

சரியென்றே நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா சேவை செய்வது எனக்கு புதிய விடயமல்ல. மற்றும் இங்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கம் இதற்காக மட்டுமே பாவனைக்கு உரியதாகும். ஆகவே எந்நேரமும் தேவை ஏற்படும் இடத்து தொடர்பு கொள்ளலாம். நான் வாகனம் செலுத்தும் நேரமும் ,உறங்கும் நேரமும் தவிர மற்றைய நேரம் பேசக்கூடியதாக இருக்கும்.

அண்ணா பொது விடயங்கள் தொடர்பாக எனக்கு பல அநுபவங்கள் உள்ளன. இவ்விடயத்தில் அவை  கைகொடுக்கின்றன. தெளிவான விதிகளைக் கையாள்கிறேன். கவனமெடுத்து தகுந்த புத்திமதிகளை வழங்குவதோடு விட்டுவிடாமல் தொடர்ந்தும் உவகையோடு அதன் செயற்பாடுகளுக்கும் துணையாக நிற்க வேண்டுகிறேன்.

1 hour ago, MEERA said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா,

என்ர குறிப்பு ஆத்துக்காரீட்ட தான் இருக்கு, என்னண்டு கேட்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிறன் ??

நன்றி மீரா. குறிப்பு கேட்டு ஆத்துக்காரியைக் கொண்டு குறி இழுக்க வைத்துவிடவேண்டாம் நல்ல சமர்த்துத் துணைவனாக இருக்கவும்:cool:

42 minutes ago, nochchi said:

மிகவும் சிக்கலானதொரு துறையாகவேபடுகிறது. பெண்பார்ப்பது என்பது அவளவு இலகுவானதல்ல என்பது எனது மகன்விடயத்தில் அனுபவமாக உள்ளது. நேரிலே உறவுகள் பார்த்து  பேச்சுவார்த்தைகள் முடிந்து கிட்டத்தட்ட முற்றாகியபின்னர் மொழிகற்பதற்கான பணத்தை அனுப்பி ஒழுங்கையும் செய்தபின்னர்  தாயார் அங்கிருக்கும் உறவுகளை விட்டு எனது துணைவியாரோடு நேரடியாக உரையாடி உறவுகளைக் குறைசொல்லத் தொடங்கி  இடைநிறுத்தத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்னர் இந்தியாவில் உள்ள ஒரு முகவரூடாக  தாயகத்திலே  பெண்பார்க்க நாடினோம். அவர் இந்தியாவில் பெண்ணைப்பார்த்தார் எனது துணைவியரோ தனது உறவுகள் பார்க்கவேண்டும்  என்று மறுத்துவிட்டார்.அவருமோ எப்படியாவது அந்தப்பெண் நல்லபெண் எனக்குத்தெரிந்தவர் அது இது என்று கூறியபோதும் குறைந்தபட்சம்  சரியான தகவலையாவது பெறவேண்டுமே என்ற எண்ணத்தில்.............!   இப்படித்தான் ஒரு வாழ்க்கையை அமைத்தலென்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவுள்ளது.  சொந்தபந்தமென்று  அதிகமிருந்தால்கூட இலகுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது  பிள்ளைகள்  மச்சாள் மச்சானென்று திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 

உங்கள்சேவை சிறப்போடு பலருக்கு வாழ்வமைக்க உதவிட வாழ்த்துகிறேன். 

 

மிகச் சிக்கல் என்பதை அறிவேன் நொச்சி.

முகவர் குறிப்பு பொருந்துகிறதா, குடும்பங்கள் இணையக்கூடியனவா, நிபந்தனைகள் பொருந்துகின்றனவா என்பதை மட்டுந்தான் பார்க்க முடியும்... இவை சரியாக அமைந்தால் மாத்திரமே மேற்கொண்டு இரு பக்கத்தையும் அறிமுகப்படுத்த முடியும்.

 

நன்றி நொச்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

கொழும்பான் என்னிடம் பலர் இவ்விடயம்பற்றி கேட்டார்கள் நிச்சயமாக.... இளவயதில் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள், மணவிலக்கு பெற்றவர்களும் உவகையில் இணைக்கப்படுவர். அவர்களுக்குப் பொருத்தமானவர்களோடு இணைப்பதற்கான முயற்சிகளையும் உவகை மேற்கொள்ளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

பலர் பயன்பெற வாழ்த்துக்கள். 

மேலும் வாழ்க்கை துணையை இழந்த / விவாகரத்து பெற்றவர்களும் இதில் இணையலாமா? 

விட்டது தொட்டது எல்லோருக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

Link to comment
Share on other sites

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

22 hours ago, நிழலி said:

வாழ்த்துக்கள் சகாறா. எனக்கு தெரிந்து யாராவது மண மகன்/ள் தேடும் முயற்சிகள் செய்வின் உங்களை தொடர்பு கொள்ள சொல்கின்றேன்.

நானும் அதுவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

வாழ்த்துக்கள் அம்மணி..tw_thumbsup:

பெண்களும், தனக்கு வரப்போகும் ஆண்மகன், சூர்யா, விஜய், மாதவன் போல இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம், அஜீத் போலவாவது  எதிர்பார்ப்பார்களே..? :)

வசதி எப்படி? :unsure:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

நேரிலே பார்க்கவிட்டாலும் ...
உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை வந்திருக்கு ?

குளிச்சு முழுகி....
சேவ் எடுத்து தலை இழுத்தா 
அந்த பட்டியலில் ... ஒரு ஓரமா 
என்றாலும் வர மாட்டமா ? 

நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் தான் - த்ரிஷா பேட்டி!

நடிகைகள் போல் அழகை எதிர்பார்க்கும் தங்களுக்கு நடிகையே கிடைத்தால்...? மேலேயுள்ள இந்த செய்தி கண்ணில் பட்டது..

எதற்கும் சகாராவிடம் போட்டு வையுங்கள், உவகை மூலம் தாங்கள் 'உவகை' பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே..! :):grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன் மாப்பிளையளுக்கு ஜேர்மனியிலையே  பொம்புளை எடுக்கும் வசதிகள் ஏதும் இருக்கா?
வயது 35,32
ஊர் தீவுப்பக்கம்
சாதி வெள்ளாளர்
சமயம் சைவம்
தொழில் படித்து பட்டம்  பெற்ற தொழில்
கார் இல்லை
அழகு பரவாயில்லை
சொந்த வீடு இல்லை
சீதனம் தேவையில்லையாம்(அவையளாய் பாத்து குடுத்தால் வாங்குவினம்)
சாதகம்/குறிப்பு கட்டாயம் பாப்பினம்
ஜேர்மன் புறோக்கர்மார் பேச்சுக்காலுக்கு 100ஈரோ எடுப்பினம்...எல்லாம் சரி வந்தால் இரு பகுதியும் தலா 500 ஈரோ குடுக்க வேணும்... நீங்கள் என்ன மாதிரி?:grin:

கு. சா அண்ணா ஜேர்மனிலிருந்தும் மணமகன் பார்ப்பவர்கள் என்னிடத்தில் உள்ளனர். அவர்களும் ஜேர்மனியில் வசிப்பதையே விரும்புகின்றனர். உங்கள் இரண்டு மணமகன்களையும் உவகையோடு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யச் சொல்லுங்கள். இவர்கள் எதிர்பார்ப்பும் அவர்கள் எதிர்பார்ப்பும் ஓரளவுக்கு ஒத்துவரக்கூடியதாக இருந்தால் இணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

14 hours ago, Athavan CH said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நானும் அதுவே

நன்றி ஆதவன் சே

2 hours ago, சுவைப்பிரியன் said:

மென்மேலும் வளர  வாழ்த்துக்கள்  சகாரா.

நன்றி சுவைஞன்

7 minutes ago, அபராஜிதன் said:

7ல் செவ்வாய் ஆரும் இருப்பின் சொல்லவும் :D

அபராஜிதன் 7 இல் செவ்வாய் என்றால் அவர்களுக்கு 7 இல் செவ்வாயுடன், உதயத்து செவ்வாய் மற்றும் 8 இல் செவ்வாய் உள்ளவர்கள் சாதக ரீதியாகப் பொருந்துவார்கள் அப்படிப்பட்ட சாதகங்களும் உள்ளன... தேவையுள்ளளவர்கள் விண்ணப்பிக்கும்போதே ஆவன செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

வாழ்த்துக்கள் சகாறா அக்கா?

நன்றி யாயினி

19 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

இவ்விடயத்தில் நாம் பொய் எதனையும் சொல்ல முடியாது பாஞ்ச்... மணமக்கள் என்னிடம் விண்ணப்பிக்கும்போது தரும் தகவலை மட்டுமே நான் பரிமாறிக் கொள்ள முடியும். தீர விசாரித்து முடிவு பண்ண வேண்டியது அவர்களே. நான் பொருத்தமானவர்களை அறிமுகப்படுத்தி வைப்பேன். தேவைப்படுமிடத்து திருமணம் நடக்கும்வரை இரு வீட்டாரின் சந்திப்புகளுக்கு உதவி செய்வேன். இதில் என்பக்கம் பொய்கள் உருவாக சாத்தியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Paanch said:
உங்கள் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் சகோதரி.!!  இருந்தும்..... பொய்யென்ற சொல்லையே அறியாதவர் நீங்கள்....! ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தைச் செய்துவை என்று சொல்லுவார்களே.!! :unsure:

அந்த வாக்கியத்தின் அர்த்தம் என்பது வேறு தானே பாஞ்ச் அண்ண

ஆயிரம் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று  சொல்வது  என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2017 at 3:24 PM, ஈழப்பிரியன் said:

இந்த சேவை என்றால் பல நாடுகளிலும் இருந்து நேரம் காலம் தெரியாது அழைப்பார்கள்.

எனவே இதற்கென்று ஒரு தொலைபேசி வைத்திருக்க வேண்டும்.தூக்கம் அல்லது வேறு வேலைகளுடன் இருப்பின் தொலைபேசியை நிற்பாட்டிவிடலாம்.பின்னர் அவர்களின் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

சகாரா இதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும்.இப்ப தானே குறைந்த விலையில் போனுகளும் சேவைகளும் வந்துவிட்டன.அத்துடன் இதை பதிவு செய்து ஒரு காப்புறுதியும் எடுத்து வைத்திருக்கவும்.

இதை குசும்பாக எடுக்காமல் அறிவுரையாக எடுக்கவும்.

ஈழப்பிரியன் அண்ணா  இப்போதுதான் தொழில்முறை போட்டி எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். நல்ல காலம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து அரச பதிவை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு எடுத்ததனால் என்னை நோக்கி நிகழ்த்தப்பட்ட மறைமுகத் தாக்குதல்களில் இருந்து தப்பியுள்ளேன். குறைந்த கட்டணத்தில் தொடக்கப்பட்ட உவகை மணமக்கள் இணைப்பை தடை செய்யதரகுத் தொழிலில் ஏற்கனவே விருட்சமாக  வியாபித்தவர்கள் உவகையை முளையிலேயே கிள்ளி எறிய பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். உவகை மீதான நம்பிக்கையினாலே குறுகிய காலத்திற்குள் கணிசமான தொகையினர் உவகையை நோக்கி வந்துள்ளனர். அந்த வகையில் உவகையைப்பற்றி யாழ் கருத்துக்கள நண்பர்களும் தாம் அறிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி என்னிடம் தொடர்பை ஏற்படுத்தியவர்கள் பலர். முகந்தெரியாமல் இணைய வெளியில் உரையாடும் கண்டங்கள் கடந்து வாழும் நண்பர்களே. உவகை பற்றிக் கூறி மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்ததில் உங்களுக்கும் மற்றும் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் பெரும் பங்கு உண்டு. உண்மையிலேயே உங்கள் அனைவருக்குமு; இவ்விடத்தில் நன்றி உரைக்கக் கடமைப்பட்டுள்ளேன் நன்றி உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வல்வை  சகாறா...  புதிய  "புரோஃபில்"   படம் போட்டு இருக்கிறா போல இருக்கு.
இந்திரா காந்தி.... மாதிரி, பக்கத்தில.... நரை,  தலை காட்டுது.
புதிய... சமூக சேவையில்... வந்ததாக இருக்குமோ....... :grin:  :D:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

திருமண இணைப்பாளரென்றால் கொஞ்சம் முதுமை தெரிந்தால்தான் நம்புவினமாம் ச்சா இவ்வளவு காலமும் கட்டிக்காத்த கெட்டப்பை மாத்த வேண்டியதாப்போச்சு இலையான் கில்லர். :cool:

இப்பதான் புதுசு புதுசா கலர் டை வந்திருக்கு வாங்கி அடிச்சு கலற மாத்த வேண்டியதுதானே tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.