Jump to content

புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில்


Recommended Posts

புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில்

 
காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் காமிக்ஸ் புத்தகத் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த நிலா காமிக்ஸ் என்ற நிறுவனம், வெளியிடத் துவங்கியிருக்கும் இந்த காமிக்ஸ் வரிசையில் முதல் நூல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலில், முதல் பாகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களான ஆடித் திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி ஆகியவை இந்த முதல் காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

அடுத்தடுத்த அத்தியாங்களை, சீரிய இடைவெளிகளில் தொடர்ந்து வெளியிடவிருப்பதாக நிலா காமிக்ஸின் நிறுவனரான சரவணராஜா பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்கள் நிறுவனத்தின் மூலம் பொன்னியின் செல்வனை அனிமேஷன் (அசைவூட்ட) படமாக எடுக்க நினைத்தோம். அந்தப் பணி நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் அந்தப் படங்களை வைத்தே, காமிக்ஸாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் உருவாகியது இந்த காமிக்ஸ் வரிசை" என்கிறார் சரவணராஜா.

பொன்னியின் செல்வன் அனிமேஷன் பட உருவாக்கத்திலும் சரி, காமிக்ஸ் உருவாக்கத்திலும் சரி பெரும் சவால்கள் இருந்தன. முதல் சவால், பொன்னியின் செல்வன் நூலின் நீளம். ஐந்து பாகங்களும் சுமார் 2400 பக்கங்களும் கொண்ட மிகப் பெரிய நாவல் அது.

காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

இந்தக் கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு ஏற்றபடி சுருக்கி, அதனை ஃப்ரேம்களாகப் பிரிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக இந்தத் திட்டத்தின் படைப்பு உருவாக்கத் தலைமையாக இருந்த மு. கார்த்திகேயன் தெரிவித்தார்.

"அது தவிர, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற உடலமைப்பையும் முகபாவத்தையும் முடிவுசெய்வதும் கடினமாக இருந்தது. பொன்னியின் செல்வன் ஏற்கனவே இதழ்களில் படங்களுடன் வெளிவந்த கதை என்பதால், மக்களின் மனதில் ஏற்கனவே உள்ள பிம்பங்களை மாற்றாமல் ஆனால், அதே நேரத்தில் ஏற்கனவே உள்ளது போன்ற உருவங்களை வரையாமல் இந்த முகபாவங்களையும் உடலமைப்பையும் தேர்வுசெய்ய வேண்டியிருந்தது" என்கிறார் கார்த்திகேயன்.

காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

இந்த காமிஸிற்கென புதிதாக ஒரு எழுத்து வடிவத்தையும் நிலா காமிக்ஸ் வடிவமைத்துள்ளது.

"இந்த காமிக்ஸ் மூலம் குழந்தைகளை பொன்னியின் செல்வம் பக்கம் ஈர்க்க வேண்டும். ஏற்கனவே படித்தவர்களையும் இந்த காமிஸை ரசிக்க வைக்க வேண்டும். அதை சரியாகவே செய்திருக்கிறோம்" என்கிறார் சரவணராஜா.

ஏற்கனவே பொன்னியின் செல்வனின் சில பாகங்களை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓவியரான தங்கம் காமிக்ஸாக வரைந்து வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்த முயற்சி தொடரவில்லை.

காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவல், கல்கி இதழில் 29.10.1950ல் இருந்து வெளியாக ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் இந்தத் தொடர் அந்த இதழில் வெளியானது. இதற்குப் பிறகு பல முறை கல்கி இதழில் இந்தத் தொடர் மறுபதிப்புச் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாவல் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், நடிகராக இருந்த காலகட்டத்தில் இந்த நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india-41947249

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.