Jump to content

புகைப்பழக்கத்தால்,  உண்டான பற்களின் கறையை போக்க... இது மட்டும் போதும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிறம் :

புகைப்பழக்கத்தால்,  உண்டான பற்களின் கறையை போக்க... இது மட்டும் போதும்!

இன்றைக்கு புகைப்பிடிப்பது என்பது மிகவும் ஃபேஷனாகி விட்டது. திரையில் பார்ப்பதையும், இன்னொருவர் புகைப்பிடிக்கிறார் என்பதை பார்த்து ஏதோ ஒரு குறுகுறுப்பில் ஆரம்பித்து பின் அதை விட முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

விளையாட்டாய் ஆரம்பித்த விஷயம் உயிரையே பறித்து விடும் என்பதற்கு இந்த புகைப்பழக்கம் மிகச்சிறந்த உதராணமாய் அமைந்திடும். ஆம், புகைப்பிடிப்பதால் உங்களுக்கும் உங்களை சுற்றியிருப்போருக்கோம் பெரும் தீங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக புகைப்பிடிப்பதால் அந்த நோய் வரும் அவ்வளவு பாதிப்புகள் இருக்கிறது தெரியுமா? என்று உங்களை எச்சரிக்கும் கட்டுரையல்ல இது.

பற்கள்:  நீண்ட நாட்களாக புகைப்புடிப்பவர்களின் பற்களில் பிரவுன் நிறத்தில் கரை படியும். நம் ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு ‘எனா மல்' என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது ‘டென்டின்' (Dentin). ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம்.
 
நிறம் :  எல்லாருக்கும் ஒரே மாதிரியாக வெள்ளையாக இருப்பது கிடையாது தான். இயற்கையாகவே பற்களுக்கு வெள்ளையை தவிர்த்து சில நிறங்கள் இருக்கிறது. தொடர்ந்து புகைப்படிப்பவர்களுக்கு அதிலிருக்கும் சில வகை கெமிக்கல்களால் பற்களின் நிறமே மாறி கரை படிந்திடும்.

ஏன் நிறமாறுகிறது? :  பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறுவது பற்களின் நிறமாற்றத்துக்கு முக்கியக் காரணம். எனாமலில் பற்காரை படிவதால் பல்லின் நிறம் மாறுகிறது. புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை போடுவது, பான்மசாலா/குட்காவைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பற்களின் நிறம் காவி நிறத்துக்கு மாறும்.

காரணம், புகையிலையில் உள்ள நிகோடின் ரசாயனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக டென்டின் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். நாளடைவில் தன் இயல்பான நிறத்தை அது இழந்துவிடும்.

தண்ணீர் : நாம் குடிக்கும் தண்ணீரிலும் பாலிலும் ஃபுளோரைடு அளவு அதிகமாக இருக்குமானால் ‘டென்டல் ஃபுளூரோசிஸ்' ( Dental Fluorosis ) எனும் பிரச்சினை வரும். அப்போது பற்கள் அடர் மஞ்சள், காவி நிறம் எனப் பல்வேறு நிறங்களில் காணப்படும். எனாமலில் மாநிறக்கோடுகள் அல்லது வெள்ளை நிறக்கோடுகள் பட்டை போட்டதுபோல் தெரியும்.

சிகிச்சை : புகையிலை காரணமாக கறை படிந்த பற்கள் உள்ளவர்கள், டென்டல் ஃபுளூரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள், மாத்திரை மருந்துகளால் பற்களின் நிறம் மாறியவர்கள் ஆகியோருக்குப் பற்களின் மஞ்சள் நிறத்தை மாற்றி வெள்ளை நிறத்துக்குக் கொண்டு வருவதற்கு ‘டூத் ஒயிட்டனிங்'( Tooth Whitening ) எனும் சிகிச்சைமுறை தற்போது செய்யப்படுகிறது.

இதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் நிலைத்து நிற்கும். அப்படிச் செய்யும்போது ஏற்படக்கூடிய மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் பற்கள் விரைவிலேயே சிதைந்து விடுவம் என்பது தான்.

வீட்டு மருத்துவம் : மருத்துவ ரீதியாக சிகிச்சை எடுப்பதினால் பற்கள் சிதைந்து பற்களை எடுக்கும் சூழல் வந்துவிடுமோ அல்லது அதில் சேர்க்கப்படக்கூடிய கெமிக்கல்களால் ஏற்படும் மாற்றத்தினால் வேறு எதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். புகைப்பழக்கத்தை நிறுத்திய பிறகும் பற்களில் படிந்திருக்கும் கரையினால் தாழ்வுமனப்பான்மையில் சிக்கித் தவிப்போர் வீட்டிலேயே எளிய முறையில் பற்களின் கறையை போக்கிடலாம்.

ஆரஞ்சு பழத்தோல் : புகைப்பிடிப்பவர்களின் பற்களில் படிந்திருக்கும் கறையை போக்குவதில் ஆரஞ்சு பழத்தோல் முக்கியப்பங்காற்றுகிறது. ஆரஞ்சு பழத்தோலில் அதிகப்படியாக கால்சியம் மற்றும் விட்டமின் சி நிறைந்திருக்கிறது இவற்றில் இருக்கும் மைக்ரோ ஆர்கானிசம் பற்களில் படிந்திருக்கும் கறையை போக்கிடும். ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னால் ஆரஞ்சுப் பழத்தோலைக் கொண்டு உங்கள் பற்களைத் தேய்த்திடுங்கள்.

ஹைட்ரஜன் பெராக்சைட் : இது பற்களில் இருக்கக்கூடிய பாக்டீரியாவை அழித்திடும். வெள்ளையாக்கூடிய எல்லா வகை ப்ராடெக்ட்களிலும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கப்பட்டிருக்கும். ஹைட்ரஜன் பெராக்சைடு பவுடர் ஒரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.

கவனம் இந்த கெமிக்கல் கலந்த நீரை நீங்கள் குடித்து விடாதீர்கள். உங்களுக்கு சென்சிட்டிவ் பற்கள் என்றால் இதைப் பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் அதிகப்படியாக லாவ்ரிக் அமிலம் இருக்கிறது. இவை நம் பற்கள் மற்றும் வாய்ப்பகுதியில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்க வல்லது. தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்ப வேண்டும். நேரடியாக இப்படிச் செய்யலாம் அதற்கு பதிலாக ஒரு துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு பற்களை துடைத்தெடுங்கள்.

பேக்கிங் சோடா : சருமத்தில் ஏற்படக்கூடிய ஏராளமான பிரச்சனைகளை தீர்ப்பதில் பேக்கிங் சோடா முக்கியப் பங்காற்றுகிறது. இது பற்களையும் வெண்மையாக்க உதவிடுகிறது. இதிலிருக்கும் அல்கலைன் வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாவை நீக்க வல்லது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் கூட பேக்கிங் சோடா இருக்கிறது. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரீ : ஸ்ட்ராபெர்ரீயில் அதிகப்படியாக விட்டமின் சி இருக்கிறது இவை பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கிடும். இதிலிருக்கும் மாலிக் அமிலம் பாக்டீரியாவை அழிக்க வல்லது. இரண்டு ஸ்ட்ராபெர்ரீ பழங்களை எடுத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதனைக் கொண்டு பற்களை துடைக்கலாம்.

நன்றி  தற்ஸ்  தமிழ்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.