Jump to content

ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ்


Recommended Posts

ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 1

 

WWE

 

வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் சுருக்கமாக `WWE'. சீமான் ஸ்டைலில் சொன்னால், உலக மற்போர் மகிழ் கலை நிறுவனம். பல ஆண்டுகளாக `ப்ரோ ரெஸ்லிங்' எனப்படும் வல்லுநர் மல்லாடல் போட்டிகளை நடத்திவரும் மிகப் பிரபலமான நிறுவனம். வெறும் ஜட்டிதான் அணிந்திருப்பார்கள். ஆனால், பெல்ட்டுக்காக அடித்துக்கொள்வார்களே... அவர்களேதான். அவர்களைப் பற்றித்தான் இந்தத் தொடர் முழுக்கப் பேசவிருக்கிறோம். ஏனெனில், கிரிக்கெட், சினிமாவைத் தாண்டி பெரும்பாலான இந்தியச் சிறுவர்களின் பேசுபொருளாக இருந்தவர்கள் / இருக்கிறவர்கள் இந்த பெல்ட் ப்ரியர்கள்தான்.

நாம் கிழித்துப் போட்ட காலண்டர் பேப்பர்களிலும், கடிகார முள் கடந்து வந்த நேரத்திலும் பசை தடவி அவர்களை ஒட்டவைத்திருக்கிறோம். என்றோ ஒருநாள் அவர்களின் முகமோ, பெயரோ நம் மூளைக்கு எட்டும்போது, அங்கே ஒட்டியிருந்தவர்கள் நம்மை பிற்காலத்துக்கு இழுத்துவிடுகிறார்கள். அந்தத் தாள்களும் நிமிடமும் தாங்கியிருக்கும் வேறு பல நினைவுகளையும் மீட்டெடுத்து தருகிறார்கள். எனவே, இது ஒரு நாஸ்டால்ஜியா உணர்வை உங்களுக்குள் கிளப்பிவிடும் பயோ டெக்னாலஜி தொடராகவும் இருக்கலாம்! 

WWE

முதல் நாள் மாலை `ரா'வையோ, `ஸ்மேக் டவுனை'யோ பார்த்துவிட்டு, அன்றிரவே அதன் மறுஒளிபரப்பையும் `கொட்ட கொட்ட' கண் விழித்துப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் காலையும் அலாரம்வைத்து எழுந்து அதன் `மறுமறு'ஒளிபரப்பையும் பார்த்தவர்கள் நிறையபேர். சிலர் ஆர்வமின்மை, நேரமின்மை போன்ற காரணங்களால் பார்ப்பதை நிறுத்தியிருப்பீர்கள். இன்னும் சிலர் ஒருசில எபிசோடுகளை மட்டும் பார்த்துவிட்டு, `இது ஃபேக். அத்தனையும் நடிப்பு. இதெல்லாம் எப்படித்தான் பார்க்கிறாய்ங்களோ!' எனச் சலித்திருப்பீர்கள். உண்மையில், ப்ரோ ரெஸ்லிங்கில் வீரர்கள் நிஜமாகவே அடித்துக்கொள்வதில்லை என்பது, பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். பிறகு ஏன் அதை ரசிக்கிறோம்?

ப்ரோ ரெஸ்லிங் போட்டிகள் `ஃபேக்'கானது எனும் வார்த்தையைவிட `ஸ்க்ரிப்ட்' செய்யப்பட்டது எனும் வார்த்தைதான் பொருத்தமானதாக இருக்கும். சண்டை தொடங்குவதற்கு முன்பே இங்கே வெற்றியாளன் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறான். ஒரு மேடை நாடகத்தில் வரும் சண்டைக்காட்சியைப் போன்றுதான் ப்ரோ ரெஸ்லிங் போட்டிகளைப் பார்க்க வேண்டும். அது எவ்வளவு சுவாரஸ்யமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் மேட்டர். சில நேரங்களில் அதை அரங்கேற்றும்போது ஏற்படும் தவறுகளால் நிஜமாகவே அடிபடும், எலும்பு உடையும், சதை கிழியும், ரத்தமும் வழியும். சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும்!

உங்களைப் போன்றே `WWE' பற்றி மணிகணக்காகப் பேசிய, டிரம்ப் கார்டுகள் வாங்கிக் குவித்த, தலையணைக்கு அண்டர்டேக்கர் ஸ்மேக் போட்ட, அட்டையை வெட்டி சாம்பியன்ஷிப் பெல்ட் செய்த, ட்ரிப்பிள் ஹெச்சைப் போன்று தண்ணீரைத் தனக்குதானே துப்பிக்கொண்ட WWE-யின் வெறித்தன ரசிகனாகத்தான் இதை எழுதுகிறேன். கோல்டன் ஏஜ், நியூ ஜெனரேஷன். ஆட்டிட்யூட் எரா, ரூத்லெஸ் அக்ரஷன் எரா, பிஜி எரா, தி ரியாலிட்டி எரா, தி `நியூ' எரா என அனைத்து எரா இறால் குழம்பையும் ரௌடி பைப்பர் முதல் ரோமன் ரெய்ன்ஸ் வரை எல்லா படா பயில்வான்கள் பரும்பு சாம்பாரையும் பற்றிப் பேசுவோம். 

அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர், ஸ்டோன் கோல்டு தம்பிதான் கோல்டுபெர்க் போன்ற கலகலப்பான விஷயங்களையும், கிறிஸ் பெனாய்ட் மரணம், மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப் போன்ற சலசலப்பான விஷயங்களையும், த்ரிஷ் ஸ்ட்ராடஸ், லீடா, டோரி வில்ஸன் போன்ற கிளுகிளுப்பான விஷயங்களையும் இன்னும் சுவாரஸ்யமான பல அம்சங்களையும் அடுத்தடுத்து வரும் பகுதிகளில் ஆற அமர அலசுவோம்.

 

WWE-யில் ரசிகர்களாக இருக்கும் பிரபலங்களின் பேட்டிகளும் லிஸ்ட்டில் இருக்கின்றன. ஆர் யூ ரெடி?

https://www.vikatan.com/news/sports/108583-series-about-glitz-and-glam-of-wwe-universe.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

WWE இப்படித்தான் தொலைக்காட்சியின் `கிங்' ஆனது! - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 2

 

WWE

 

 

 
 

இன்று தொலைக்காட்சி உலகின் அரசனாக அரியணையில் அமர்ந்திருக்கிறது WWE. 150 நாடுகளில் பலகோடி மக்களை பார்வையாளர்களாக கொண்டிருக்கும் WWE, ஆண்டுக்கு 700 மில்லியன் டாலர்களுக்கு மேல் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது. வாரவாரம் திங்கட்கிழமைகளில் ஒளிபரப்பாகும் `ரா', 1250 எபிஸோடுகளைத் தாண்டி வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஸ்மேக்டவுனும் 950வது எபிஸோடை கடந்துவிட்டது. இந்த இடத்தை பேருந்தில் சீட் பிடிப்பதுபோல் கர்சீஃபை தூக்கிப்போட்டு பிடித்துவிடவில்லை. பல ஆண்டுகள் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அடிப்பட்டு, மிதிப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறது. பதினாறு வருட போர். போர்... ஆமாம் போர்...

"சிறந்ததொரு இடத்தை அடைய நான் செய்வதெல்லாம் ஒன்றுதான்.

என்றும் என் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை"

- டால்ஃப் ஸிக்லர்

நம் ஊரில் `கலக்கப்போவது யாரு'க்கு போட்டியாக `அசத்தப்போவது யாரு', `ஜோடி நம்பர் ஒன்'னின் போட்டியாக `மானாட மயிலாட' என கிளம்பியதைப்போல் 80'களில் WWE-க்கு போட்டியாக WCW முஷ்டியை முறுக்கி நின்றது. நம்பர் ஒன் இடத்தை அடைய இரண்டு நிகழ்ச்சிகளும் போட்டி போட, ரெஸ்ட்லிங் ரசிகர்கள் பால்பாயாசத்தோடு மல்யுத்த விருந்தை அனுபவித்தனர். இந்த காலக்கட்டம் ப்ரோ ரெஸ்ட்லிங்கின் பொற்பாயாசம்... ஸாரி, பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

மன்டே நைட் வார்

80'களின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் கேபிள் தொலைக்காட்சிகள் வேகமாய் பிரபலமடைந்து கொண்டிருந்தன. குறைந்த தயாரிப்புச் செலவில் பெரிய இலாபம் ஈட்டும் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. WWE அப்போது WWF என்ற பெயரில் சீரும் சிறப்பும் செம்மையுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, WWF-ன் ஆல் அமெரிக்கன் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சி யுஎஸ்ஏ நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்டது. மற்றொருபுறம் TBS ( டெட் டர்னர் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் ) சேனலில் GCW எனும் ரெஸ்ட்லிங் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதுவும் WWF முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணற, CGW நிகழ்ச்சியையே WWF நிறுவனத்திற்கு விற்றுவிட்டு கிளம்பிவிட்டார்கள் அதன் உரிமையாளர்கள். பாவத்த..!

`ஆப்பனன்ட்டா ஆளே இல்ல, சோலா ஆகிட்டேன்' என டப்பாங்குத்து ஆடிக்கொண்டிருந்த WWF-ன் உரிமையாளர் வின்ஸ் மெக்மேஹனைப் பிடித்து ஊமைக்குத்து குத்தியது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். விதி வலியது! TBS சேனலில் ஒளிபரப்பான WWF நிறுவனத்தின் நிகழ்ச்சி, ரேட்டிங்கில் அதளபாதாளத்துக்கு சென்றது. கண்ணைப் பறிக்கும் கலர்களில் சொக்காய்களை போட்டுக்கொண்டு திரிவது, குறுக்க மறுக்க குடுகுடுவென ஓடுவது என குழந்தைகள் பார்க்கும் கார்டூன்களின் ரியல் வெர்ஷனைப் போல் இருந்த WWF நிகழ்ச்சியை மக்கள் வெறுத்தனர். WWF பார்ப்பதை விட, ஓடாத வெறும் டிவியை பார்ப்பதே நிறைய சுவாரஸ்யமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் கொலைவெறி கோபத்திற்கு ஆளான TBS சேனலின் உரிமையாளர் டெட் டர்னர்,`கல்லா கட்டு, இல்லை கடையை சாத்து' என மெக்மேஹனின் கழுத்தை நெறித்தார். இறுதியாக, TBS-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த WWF-க்கு சொந்தமான நிகழ்ச்சியை, `ஜிம் க்ராக்கெட் புரொமோஷன்' எனும் நிறுவனத்திற்கு விற்றுவிட்டு நடையைக் கட்டினர் மெக்மேஹன். அடுத்த மூன்று ஆண்டுகளில், அதே நிகழ்ச்சியை `ஜிம் க்ராக்கெட் புரொமோஷன்' நிறுவனத்திடமிருந்து சேனல் உரிமையாளர் டெட் டர்னரே வாங்கிவிட்டார். நிகழ்ச்சியின் பெயர் WCW என மாற்றப்பட்டது, ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது, இரு உரிமையாளர்களின் வயிறு மாறிமாறி எரிந்தது, பதினாறு வருடப்போரும் ஆரம்பமானது.

தொலைக்காட்சியில் WWE

யுஎஸ்ஏ நெட்வொர்க்கில் WWF-ன் நிகழ்ச்சியும் டிபிஎஸ் சேனலில் WCW நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி பல சலசலப்புகளும் சர்ச்சைகளும் எழுந்தன. WCW நிகழ்ச்சி காசுக்கு (PAY PER VIEW) ஒளிபரப்பாகும் அதேநேரம் WWF நிகழ்ச்சி இலவசமாக ஒளிபரப்பப்படும். இது தலைகீழாகவும் நடக்கும். `வாழு, வாழ விடு' என தல சொன்னதை மறந்து, `ஒண்ணு நீ வாழணும், இல்ல நான் வாழணும்' என சண்டையிட்டுக் கொண்டார்கள். விட்டுக்கொடுத்துப்போனால் கெட்டுப்போகக்கூடிய சூழ்நிலை வராதென தெரிந்தும், ஈகோ இருவரையும் ஆட்டிப்படைத்தது.

"வலியை மறந்துடுவிடுவேன். சண்டையில் ஒருவனை உதைக்கும்போது என் கால் வலிக்குமே,

அந்த வலியை மறந்துவிடுவேன் "

- ரேன்டி ஆர்டன்.

1993, `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியை தொடங்கியது WWF நிறுவனம். ஒரு ரெஸ்ட்லிங் நிகழ்ச்சியை கேபிள் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல் எப்படி கொடுக்கவேண்டும் என்பதை மாற்றியமைத்தது. பெரிய அரங்கம், ஸ்டுடியோ வாய்ஸ் ஓவர் என புத்தம்புது ஐடியாக்களோடு களமிறங்கிய `மன்டே நைட் ரா'வை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். மறுபுறம் க்ளைமாக்ஸில் புதைகுழியில் மாட்டிய கதாபாத்திரத்தைப் போல் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க்கொண்டிருந்தது WCW. பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு, WCW நிறுவனம், `மன்டே நைட் ரா' நிகழ்ச்சிக்கு போட்டியாக `மன்டே நைட்ரோ' எனும் நிகழ்ச்சியை தொடங்கியது. தொடங்கியது மட்டுமில்லாமல் `ரா' ஒளிபரப்பாகும் அதேநாள், அதேநேரம் `மன்டே நைட்ரோ'வும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அது `மன்டே நைட் ரா', இது `மன்டே நைட்ரோ'. தட் `நாகபதனி, நாகப்பதனி' மொமண்ட்.

WCW நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடன்ட் எரிக் பிஷஃப், WWF-யை தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். `மன்டே நைட் ரா' நிகழ்ச்சியின் பெண்கள் சாம்பியனை WCW-க்கு வரச்சொல்லி, அவர் கையாலேயே சாம்பியன்ஷிப் பெல்ட்டை குப்பைத்தொட்டிக்குள் போடவைத்தார். அப்போது `மன்டே நைட் ரா'வில் சூப்பர்ஸ்டார்களாக இருந்தவர்களின் பழைய, தோற்றுப்போன சண்டைகளை ஒளிபரப்பத் தொடங்கினார். உச்சக்கட்டமாக, WWF மேட்ச் ரிசல்ட்டுகளை முன்கூட்டிய WCW நிகழ்ச்சிகளில் வைத்து சொல்ல ஆரம்பித்தார் எரிக். எரிக்கின் இந்தச் செயல் பலரையும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

நியூ வேர்ல்டு ஆர்டர்

இப்படி போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் இருக்கும் "நிகழ்ச்சியிலேயே இருக்கும் மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது" என பலவீரர்கள் WCW-க்கு தாவினார்கள். காரணம், அதிக சம்பளம். 1996 ஆம் ஆண்டு, WWF-ன் மிகப்பிரபலமான வீரர்களான கெவின் நேஷ் மற்றும் ஸ்காட் ஹால் WCW-க்கு கிளம்பினார்கள். அதற்குமுன் கடைசியாக ஒரு மேட்ச் ஆடிவிட்டுப் போலாம் என நினைத்தது, பெரும் வினையாகிப்போனது. ஷான் மைக்கேல்ஸ், ட்ரிபிள் ஹெச், கெவின் நேஷ் மற்றும் ஸ்காட்ஹால் நால்வரும் சண்டையிட்டனர். சண்டை முடிந்ததும் மேடையில் வைத்தே ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து பிரியப்போவதை நினைத்து ஃபீலிங்காக , அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள். ஒருவருக்கு ஒருவர் பரம எதிரிகளைப் போல் சித்தரித்து வந்தது WWF. அவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து நட்பு பாராட்டுவதைப் பார்த்ததும்தான் மக்களுக்கு பிசிறு தட்டியது. WWF ஸ்க்ரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தனர்.

 

கெவின் நாஷ் மற்றும் ஸ்காட் ஹால் WCW மன்டே நைட்ரோ நிகழ்ச்சியில் காலடி எடுத்துவைத்ததும், அங்கே வசூல்மழை வெளுத்துவாங்கியது. ரேட்டிங் எகிறியது. நியூ வேர்ல்டு ஆர்டர் என புது அணியை உருவாக்கி மெர்சல் காட்டினார்கள் இருவரும். 1996-ன் இடையில் இருந்து 1998 வரை `ரேட்டிங் ரேஸில்' நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. தள்ளாடிக் கொண்டிருந்த WWF, இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க தலையை பிய்த்துக் கொண்டிருந்தது. இறுதியாக கண்டுபிடிக்கவும் செய்தது, அதுதான் `ஆட்டிட்யூட் எரா'. ஸ்டோன் கோல்டு, தி ராக், ட்ரிபிள் ஹெச், கர்ட் ஆங்கிள், ஷான் மைக்கேல்ஸ், அண்டர்டேக்கர், கேன், மெக் ஃபோலி, ரிக்கிஷி, க்றிஸ் ஜெரிக்கோ, எட்ஜ் என WWF-ன் பெரியதலைக்கட்டுகள் உருவானது அப்போதுதான். இன்றைய WWF-ன் ஆதி ஊற்று, `தி ஆட்டிட்யூட் எரா'. அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். ஆர் யூ ரெடி?

https://www.vikatan.com/news/sports/109414-how-wwe-won-in-monday-night-war.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

‘விவேகம்’ அஜித்தும் ப்ரெட் ஹார்ட்டும் - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 3

 
 

WWE

Chennai:
 

ருக்குள்ளே WWE-க்கு அவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு விதை ‘ஆட்டிட்யூட் எரா’ போட்டது. ஆட்டிட்யூட் எரா என அழைக்கப்படும் 90'களின் இடைப்பட்ட காலம், WWE வரலாற்றின் மிகமிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. அவை WWE-ன் அலுவலகம் அமைந்திருக்கும் கனெக்டிகட்டில் கல்வெட்டு அமைத்து பொறித்துவைக்கப்பட்டு, மழை பெய்யும் நேரத்தில் நனையாதவாறு குடைப் பிடித்து பத்திரமாக பார்த்துக்கொள்ளப்படவேண்டியது. ஸாரி பாஸ், நான் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்.

சரியாக ‘ஆட்டியூட் எரா’ இந்த நேரத்தில்தான் ஆரம்பித்ததென, எந்த நேரத்தையும் சொல்லி சூடம் அடித்து சத்தியம் செய்யமுடியாது. `விருமாண்டி எஃபெக்ட்' போல் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்கிறார்கள். இருந்தாலும் `ஆட்டிட்யூட் எரா ஆரம்பித்தது அப்போதுதான்' என பெரும்பாலோனோர் குறிப்பிட்டுச் சொல்வது, 1997-ம் ஆண்டு நடந்த `மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப்' சம்பவத்தைதான். அது தரம்கெட்ட சம்பவம்தான், ஆனாலும் தரமான சம்பவம். நாலைஞ்சு இடியாப்பத்தை கொசகொசனு பிசைஞ்சு கையில் கொடுத்தாற்போல் குழப்பமாய் இருக்குமே? நேராக மேட்டருக்கே வருகிறேன்...

ப்ரெட் ஹார்ட்

‘ஹிட்மேன்' ப்ரெட்ஹார்ட், ப்ரோ ரெஸ்ட்லிங் உலகின் உத்தமவீரன். ப்ரொ ரெஸ்ட்லிங்கில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்து ஸ்டேஜில் அரங்கேற்றி அசத்திய சூப்பர் ஸ்டார். திடீரென ஒரு ஆங்கிளில் பார்க்க `வெற்றிவிழா' கமல்ஹாசனைப் போல் தெரியும் இவருக்கு, ரசிகர் கூட்டம் எக்கசக்கம். அதாகப்பட்டது நாணயம்னா, இரண்டு பக்கம் இருக்கு. வாழ்க்கைனா இன்பம், துன்பம் இருக்கு. அந்தமாதிரிதான், வானம், பூமி, இரவு, பகல், நல்லது, கெட்டது. வாழ்க்கையோட அடியில் நோண்டிப் பார்த்தோம் என்றால் இப்படித்தான் எல்லாமே. அப்படி ப்ரெட் ஹார்டுக்கு இணையான இன்னொரு வீரனாக WWE--யை கலக்கிக் கொண்டிருந்தார் ஷான் மைக்கேல்ஸ். ஏற்கெனவே, ப்ரெட் ஹார்டுக்கும் ஷான் மைக்கேல்ஸுக்கும் இடையே சின்னச் சின்ன உரசல்கள் இருந்துவந்தன. இந்நிலையில், WWF-ன் போட்டி நிகழ்ச்சியான WCW-ல் இணைந்துகொள்ளச் சொல்லி ப்ரெட் ஹார்டுக்கு மில்லியன் டாலர் ஆஃபர் வர, அவரும் ஒப்புக்கொண்டார். இது WWF-ன் சேர்மன் மெக்மேஹனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது சாம்பியனாக இருந்த ப்ரெட் ஹார்ட், சாம்பியனாகவே WCW-க்கு புலம் பெயர்ந்தால் WWF-க்கு பெருத்த அவமானமாகிவிடும் என எண்ணினார்.

"நீ WCW-க்கு போ. ஆனால், சாம்பியனாக போகாதே" என மெக்மேஹன் எவ்வளவோ கெஞ்சியும் ப்ரெட் ஹார்ட் கேட்டபாடில்லை. ஷான் மைக்கேல்ஸிடம் சாம்பியன்ஷிப்பை தோற்க அவர் விரும்பவில்லை. மெக்மேஹானும் வேறுவழியில்லாமல் ப்ரெட் ஹார்டிடம் `சரி. உன் இஷ்டபடியே நடக்கட்டும்' என ஒப்புக்கொண்டார். ஆனால், 1997-ம் ஆண்டு நடந்த `சர்வைவர் சீரிஸ்' சிறப்பு நிகழ்ச்சியில், சகுனியாக மாறி சதி ஒன்றை தீட்டினார் மெக்மேஹான். 

WWE

சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, ப்ரெட் ஹார்டுக்கு `ஷார்ப் ஷூட்டர்'* எனும் சப்மிஷன் லாக் மூவை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஷான் மைக்கேல்ஸ். அப்போது ப்ரெட் ஹார்ட் சப்மிஷன் லாக்கை பிரிக்க போராடிக்கொண்டிருக்க, ரெஃபரியோ மணியை அடிக்கச் சொல்லி மேட்ச்சையே முடிக்க, அரங்கில் இருந்தவர்கள் அப்படியே ஷாக் ஆனார்கள். ப்ரெட் ஹார்ட் `கிவ் அப்' கொடுக்காமலேயே, `அவர் கிவ் அப் கொடுத்துவிட்டதாக' நடுவர் மேட்ச்சை முடித்தது, ப்ரெட் ஹார்ட்டுக்கு பெரும் கோவத்தைக் கிளப்பியது. சண்டையில் ஷான் மைக்கேல்ஸ் வென்றார் என அறிவித்து, சாம்பியன் ஷிப் பெல்ட்டையும் தூக்கிக் கொடுக்க, மெக்மேஹான் முகத்தில் காரி உமிழ்ந்தார் ப்ரெட் ஹார்ட். கிட்டதட்ட, `விவேகம்' படத்தில் வரும் அஜித்துக்கு நடந்ததைப் போல நம்பிய நண்பர்களே அவர் முதுகில் குத்தினார்கள்.

மான்ட்ரியல் எனும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் `மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப்' என ரெஸ்ட்லிங் ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. அதுவரை சாஃப்டாக சைடுவகிடு எடுத்து சரத்பாபு மாதிரி திரிந்துகொண்டிருந்த மெக்மேஹான், ஓவர் நைட்டில் மெயின் வில்லனாக மாறினார். அன்பான மெக்மேஹான், அதிகாரத்திமிர் கொண்ட மிஸ்டர்.மெக்மேஹானாக மாறினார். அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த WWF-ம் மாறியது. ப்ரெட் ஹார்டின் இடத்தைப் பிடிக்கும் ரேஸில் பல இளம் திறமையாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர்தான் தி ராக். அடுத்த வாரம் அவரைப் பற்றியே பார்ப்போம்... ஆர் யூ ரெடி?

https://www.vikatan.com/news/tamilnadu/110114-article-about-montreal-screwjob-incident.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.