Jump to content

சிறுவனுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த மௌலவி கைது


Recommended Posts

ஏழு வய­தான சிறு­வன் ஒரு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மௌலவி ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக களுத்­துறை – வெலி­பென்ன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர் வெலி­பென்ன நகரைச் சேர்ந்த 34 வய­தான மௌலவி ஒரு­வ­ரென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

2803625-3-300x250.jpg

பாதிக்­கப்­பட்ட சிறுவன் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று கடந்த 2 வரு­டங்­க­ளாக மார்க்கக் கல்­வியை கற்று வந்­துள்­ள­தா­கவும், அண்­மையில் சில நாட்­க­ளாக தமது பிள்ளை இவ்­வாறு மௌல­வி­யினால் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக சிறு­வனின் பெற்றோர் வெலி­பென்ன பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

 

சந்­தேக நபர் சிறு­வ­னுக்கு ஆபாசப் படங்­களைக் காண்­பித்து இவ்­வாறு பாலியல் சீண்­ட­லுக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்­டுக்­க­மைய சந்­தேக நப­ரான மௌல­வியை கைது செய்த வெலி­பென்ன பொலிஸார், அவரை மத்­து­கம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, அவரை எதிர்­வரும் டிசெம்பர் 5 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இந்­நி­லையில், சம்­பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வெலிபென்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

http://metronews.lk/?p=17765

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

38 வயது.. முஸ்லீம்  மதகுருவான...  மௌலவிக்கு, 5 வயது சிறுவன் காமத்துக்கு.... வேண்டுமோ..? tw_dizzy:
உங்களுத்தான்... பல கலியாணம் கட்ட முடியுமே....
பிறகு என்ன இழவுக்கு, இஸ்லாம்  சமயம் படிக்க வந்த,  பிஞ்சு பாலகனை... கெடுக்க நினைக்கிறார், :unsure:

பிடி பட்ட,  முஸ்லீம் மத குருவின்...  அந்த,  முக்கிய இடத்தை,   tw_glasses: 
பாக்கு வெட்டியால்....  ஓட்ட  வெட்டி,  ஆளை...  வெளியில் அனுப்ப வேண்டும். 
இவர்களுக்கு... அதுதான், சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த செய்திகள் எல்லாம் அக்குறணை நியூஸ்காரருக்கு கிடைக்காதே!! :216_pig:

Link to comment
Share on other sites


இஸ்லாமியப் பள்ளிகளில் இப்படியான விடயங்கள் சாதாரணம்  எனவும் , பாதிக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் எனவும் அவர்கள் மதத்தைக் காட்டிமிரட்டப்படுவதாகவும் , விடயங்கள் வெளியே வராமல் பாதுகாக்கப் படுவதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். இதை உறுதிப் படுத்தும் விதமாக  வேறொரு செய்தியும் வாசித்திருந்தேன்.

பாகிஸ்தான் இஸ்லாமியப் பள்ளிகளில் பரவலாக ஊடுருவியுள்ள பாலியல் பயங்கரங்கள்: அசோசியேட் பிரஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

 
arrestjpg

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட மதகுருமார் ஒருவர் கையில் விலங்குடன் கோர்ட் வளாகத்தில் நிற்கும் காட்சி. | படம். | ஏ.பி.

பாகிஸ்தான் இஸ்லாமியப் பள்ளிகளில் நாளுக்குநாள் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் சட்டமும், போலீஸும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, தீவிரவாதிகள், மதகுருமார்கள், அதிகார வர்க்க வலைப்பின்னல், வலதுசாரி இயக்கங்களின் துணையுடன் குற்றவாளிகளான மதகுருமார்கள் தப்பி வருவதாக அசோசியேட் பிரஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தனது 9 வயது மகனின் ரத்தம் தோய்ந்த கால்சட்டையை நினைத்துக் கொண்டு கண்ணீருடன் தாயார் கவுசர் பர்வீன் தன் மகன் பாலியல் தாக்குதலுக்கு ஆட்பட்டதை விவரிக்கிறார்.

கெரோர் பாக்கா என்ற ஊரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் இந்தச் சிறுவன் படித்து வந்தான். இந்நிலையில் ஒரு ஏப்ரல் மாத கடும் வெயிலில் இஸ்லாமிக் மத்ரசாவில் தன் அருகே மதகுருமார் படுத்திருப்பதைக் கண்டான் அந்தச் சிறுவன். அதன் பிறகு மூர்க்கமான பாலியல் பலாத்காரத்தில் அவர் ஈடுபட்டதாக தாயார் கூறுகிறார்.

அசோசியேட் பிரஸ் விசாரணையில் இது குறித்து தெரியவந்துள்ளது என்னவெனில் பாகிஸ்தான் மத்ரஸாக்களில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது மிகப் பரவலாக ஊடுருவிய ஒரு தீங்காகி விட்டது என்பதே. மதகுருமார்கள் அதிகாரம் செலுத்தும் ஒரு சமூகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என்பது பேசாப்பொருளாகியுள்ளது. இது பொதுவெளியிலும் எப்போதாவது விவாதிக்கப்பட்டு வருகிறது. எப்போதாவது இத்தகைய தீய செயல்கள் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இத்தகைய விவகாரங்களில் போலீஸாருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து நீதி நிலைநாட்டப்பட முடியாமல் மதகுருமார்களால் தடுக்கப்பட்டும் வருகிறது என்று பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

களிமண் வீடுகள் கொண்ட கிராமங்கள் முதல் நாகரீகம் அடைந்த நகரங்கள் வரை பாகிஸ்தானில் இஸ்லாமியப் பள்ளிகளில் பாலியல் வன்முறைகள் பரவலாகியுள்ளதாக  அசோசியேட் பிரஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட பாலியல் பலாத்கார புகார்கள் எழுந்துள்ளன, 20 லட்சம் குழந்தைகள் பாகிஸ்தான் இஸ்லாமியப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மதகுருமார்களின் பாலியல் வன்முறைகளுக்கு இவர்கள் ஆளாவது பற்றிய விசாரணை போலீஸ் ஆவணங்கள், பாதிக்கப்பட்டோரிடம் நேர்காணல்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், உதவிக்குழுக்கள் மற்றும் மத அதிகாரிகள் ஆகியோரிடம் நேரில் பேசியது என்று இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மதகுருமார்கள் மற்றும் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தீவிரவாத அமைப்புகள் மீது பயம் அதிகரித்துள்ளது. இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை பதிவு செய்யும் பணி அளிக்கப்பட்ட அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,  'மத்ரசாக்களில் பாலியல் வன்முறைகளால் தொற்று நோய் போல் நிரம்பியுள்ளது' என்றார். இவர் தன் பெயரைக் கூற விரும்பவில்லை, காரணம் இவர் மத்ரசா பாலியல் வன்முறைகளைப் புகாராக பதிவு செய்வதால் இவர் தற்கொலைத் தாக்குதல் இலக்காக்கப்பட்டுள்ளார்.

'மத்ரசாக்களில் ஆயிரக்கணக்கில் பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன. இது மிகவும் சகஜமாகி விட்டது' என்றார் அச்சத்துடன் அந்த அதிகாரி.

இத்தகைய மதகுருமார்களை விமர்சித்தால் விமர்சகர்கள் மீது இவர்கள் பிரயோகிக்கும் ஆயுதம் மத நிந்தனை வழக்கு, மத நிந்தனைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை.

'இதனால்தான் அவர்களை (மதகுருமார்கள்) நினைத்து நான் அஞ்சுகிறேன். அவர்களால் என்ன செய்ய முடியும், எந்த அளவுக்கு அவர்கள் போவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன், இவர்களை அம்பலப்படுத்த என்ன தேவைப்படும் என்பது தெரியவில்லை. இவர்களை அம்பலப்படுத்த முயற்சி செய்வதே நம் உயிருக்கு ஆபத்தான காரியமாகும். இதைப்பற்றி பேசுவதே அபாயகரமானது' என்கிறார் அதே அச்சத்துடனேயே மற்றொரு அதிகாரி.

கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை மிரட்டல், அபாயங்களையும் மீறி 359 புகார்கள் பதிவாகியுள்ளன. இது பனிமலையின் ஒரு முகடு மட்டுமே என்கிறார் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் போக்குக்கு எதிரான சாஹில் என்ற அமைப்பை நடத்தி வரும் முனிஸா பானு.

2004-ம் ஆண்டில் மத்ரசாக்களில் இளம் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் தாக்குதல் புகார்கள் மட்டும் 500 என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தினார், ஆனால் அதன் பிறகு அவர் பேசவேயில்லை. இந்தப் புகார்கள் மீது கைதுகள் இல்லை, விசாரணைகளும் இல்லை.

பாகிஸ்தான் மத விவகார அமைச்சர் சர்தார் முகமது யூசப் இஸ்லாமியப் பள்ளிகளில் பாலியல் பலாத்கார புகார்களை மறுத்தார், இது மதகுருமார்களையும் மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் பரப்பப்படுகிறது என்று வழக்கம் போல் மறுத்துள்ளார். மேலும் செய்தித்தாள்களில் இது குறித்து வருவதும் தனக்குத் தெரியாது என்றார், எப்போதாவது நடக்கும். ஏனெனில் எல்லா இடங்களிலும் கிரிமினல்கள் உள்ளனர், மேலும் மதரசாக்களை சீர்த்திருத்தும் பணி உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்றார்.

உள்துறை அமைச்சகத்தை இது தொடர்பாக பேட்டி எடுக்கத் தொடர்பு கொண்ட போது, பல முறை எழுத்துப்பூர்வ கோரிக்கையும், தொலைபேசியில் கோரிக்கை வைத்தும் பேட்டி கொடுக்க மறுத்து விட்டனர்.

பர்வீன் மகன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்பட்டு ரத்தம் தோய்ந்த காற்சிராயுடன் அவமானப்பட்ட விவகாரம் ஒரு மாதத்தில் கேரோர் பாக்கா பகுதிய்ல் 3-வது சம்பவம் என்று போலீஸ் அறிக்கைகளே தெரிவிக்கின்றன.

இன்னொரு சம்பவத்தில் மத்ரசா மாடியில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை முன்னாள் மாணவர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில் 10 வயது சிறுவன் மீது மத்ரசா முதல்வர் பாலியல் வன்முறையை பிரயோகித்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் பையனை மிரட்டியுள்ளார் மதகுருமார்.

இந்தக் குழந்தைகள் பெயர்களை அசோசியேட் பிரஸ் வெளியிடவில்லை, காரணம் பாலியல் பலாத்கார பாதிப்புக்குட்பட்டோர் பெயர்களை வெளியிடக்கூடாது. கேரோர் பாக்காவில் மதகுருமார்கள் மீதான அச்சம் நீதிமன்றங்களில் கூட வெளிப்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பர்வீனின் மகனுடைய ஆசிரியர் குற்றம் இழைத்ததற்காக நீதிபதி முன் ஆஜரானார். இந்த ஆசிரியருக்கு ஆதரவாக தீவிரவாத சன்னி முஸ்லிம் அமைப்பான சிபா-இ-ஷாபா தீவிரவாதிகள் அருகிலேயே இருந்தனர்.

இந்த ஆசிரியர் அருகில் அசோசியேட் பிரஸ் செய்தியாளர் சென்று அமர்ந்தவுடன் இந்த சன்னி தீவிரவாதிகள் ஆசிரியரைச் சுற்றி நின்றனர். அப்போது கோர்ட்டில் குழுமியிருந்தவர்கள் பெரிய ஆபத்து இங்கிருந்து போய்விடுங்கள் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள். ஆசிரியர் ஏற்கெனவே கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்திருந்தார், அதில் ‘எனக்கு திருமணமாகி விட்டது, எனக்கு அழகான மனைவி இருக்கிறார், நான் இந்தச் சிறுவனை அவ்வாறு பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

பயத்தின் ஆட்சி:

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியப் பள்ளிகளின் எண்ணிக்கை 22,000 ஆகும். இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் ஏழைகள், இந்தப் பள்ளிகளில் உணவும், கல்வியும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

2-3 அறைகளே உள்ள கிராமங்களில் உள்ள பல மத்ரசாக்கள் பதிவு செய்யப்படாமலேயே செயல்பட்டு வருகின்றன. இவைகளில் கல்வி என்பது கிடையாது, குர் ஆனைக் கற்பது மட்டுமே நடந்து வருகிறது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பர்வீனின் மகன் இத்தகைய பதிவு செய்யப்படாத பள்ளியில் படித்தவனே.

மத்ரசாக்களுக்கு நிதி அளிப்பவர்கள் பணக்கார வர்த்தகர்கள், மதம் சார்ந்த அரசியல் கட்சிகள், பிற நாட்டிலிருந்தும் அன்பளிப்புகள், நிதிகள் வருகின்றன. குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து நிதி வருகிறது. இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளிகளான ஷியா மற்றும் சன்னி பிரிவினர்களால் மத்ரசாக்கள் வழி நடத்தப்படுகின்றன. வலதுசாரி மதத்தீவிரவாதம் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளதையடுத்து மதரசாக்களில் மதகுருமார்களின் கையும் ஓங்கிவிட்டது, முன்பெல்லாம் இந்த மதகுருமார்கள் கிராம அதிகாரியையே உணவுக்கு நம்பியிருக்க வேண்டியிருந்தது, ஆனால் தற்போது இவர்கள் கை ஓங்கியுள்ளது. புகார்களே வருவதில்லை, அவ்வளவு பயம், ‘முல்லாக்களைக் கண்டு அஞ்சாதவர்களே கிடையாது’ என்று மனித உரிமை வழக்கறிஞர் சயிப் அல் முல்க் ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

கேரோர் பாக்கா யூனியன் கவுன்சிலர் ஆஸம் ஹுசைன் கூறும்போது, “ஏழை மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. முல்லாக்களுக்கு போலீஸார்கள் உதவுகின்றனர். ஏழைகளுக்கு போலீஸ் உதவுவதில்லை. இது ஏழைகளுக்கும் தெரியும் அதனால் போலீஸிடம் செல்வது விரயம் என்பதை அறிந்துள்ளனர்.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீஸ் இருப்பதிலேயே பெரிய ஊழல் வாதிகள் என்று பஞ்சாப் மாகாண ஊழல் எதிர்ப்புத் துறை அறிக்கை ஒன்றே கூறுகிறது. இப்பகுதியில் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுவன், “எனக்கு பயமாக இருக்கிறது, நடந்ததை வெளியே சொன்னால் என் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டினார்” என்கிறான். நடப்பது என்னவென்று தெரியாமல் இந்தச் சிறுவனது அண்ணன், பையனை அடித்து உதைத்து மீண்டும் அதே மதரசாவுக்கு அனுப்புகிறார்.

இதே மதகுருமார் இன்னொரு பையனை பலாத்காரம் செய்ய, போலீஸ் புகார் சென்று அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் பஞ்சாப் அரசு அதிகாரிகள் தலையிட்டு மதகுருமார் விடுவிக்கப்பட்டுள்ளார். மதகுருமாரை மீண்டும் கைது செய்யக் கோரி போராட்டம் வெடித்தது.

பையனின் அண்ணனை மதகுருமார் அழைத்த போது நடந்ததை விவரிக்கும் அவர், “அவர் ஏதோ ‘பாஸ்’ போல் அமர்ந்திருக்கிறார், நான் நின்று கொண்டிருக்க வேண்டுமாம். சமரசமாகப் போக நாங்கள் மிரட்டப்படுகிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்கள் ஏழைகள்” என்றார்.

பாகிஸ்தானில் பிரிட்டிஷ் கால சட்டமும் இஸ்லாமிய ஷரியாச் சட்டமும் இணைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியை மன்னிக்கும் தெரிவைக் கடைபிடிக்கின்றனர். கடந்த ஆண்டு கவுரவக் கொலைகளைத் தடுக்க இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது, கவுரவக்கொலைகளைச் செய்து விட்டு பாகிஸ்தானில் இனி தப்பிக்க முடியாது, ஆனால் மதகுருமார்களின் பாலியல் பலாத்கார விவகாரத்தில் இன்னும் மன்னிக்கும் பிரிவு உள்ளது.

ஆனாலும் உள்ளூர் சமூகத் தொண்டு அமைப்பான ரோஷன் பாகிஸ்தான் மதகுருமாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணைப் போராடி வழக்குத் தொடுக்க சம்மதிக்க வைத்தனர், இதனால் 2016-ம் ஆண்டு குற்றவாளி மதகுருமாருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது.

பல சந்தர்ப்பங்களில் மிரட்டலுக்குப் பயந்தும் சில சமயங்களில் பணம் வாங்கிக் கொண்டும் ஏழை மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பர்வீனும் தன் மகன் விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்று போராடத் துணிந்தார், ஆனால் தீவிரவாதிகள் மதகுருமார் மீதான புகாரைக் கைவிடுமாறும் பணம் வாங்கிக் கொள் என்றும் வற்புறுத்தப்பட்டுள்ளார். கடைசியில் மதகுருமாரை தாய் மன்னித்ததுதான் நடந்தது. 300 டாலர்கள் கைமாறியுள்ளது. மதகுருமார் தப்பித்தார்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய மதகுருமார்கள், தீவிரவாதிகள், மாகாண அதிகாரிகள், பணக்காரர்கள், போலீஸார்கள் ஆகியோர் வலைப்பின்னலான அதிகாரம் வலுவடைந்துள்ளதால் பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம் மக்களுக்காக சேவை செய்வோர் அரிதிலும் அரிதாகி வருகின்றனர்.

 

http://tamil.thehindu.com/world/article20634903.ece

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.