Jump to content

ஷேவாக்குக்கு எதிராக பாக். சதி: சு.சுவாமி


Recommended Posts

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி.

டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:

வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயலில் தேச விரோத சக்திகள் சில மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேச விரோத சக்திகளின் வலையில் மீடியா சிக்கியுள்ளது. எனவே அவர்கள் உடனடியாக ஷேவாக் குறித்து தவறாக எழுதுவதை நிறுத்த வேண்டும்.

எனக்குத் தெரிந்த வரை, பாகிஸ்தான் மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த சில சூதாட்ட புரோக்கர்கள்தான் இதன் பின்னணியில் உள்ளனர். இதுதொடர்பாக எனக்கு உறுதியான சில தகவல்கள் கிடைத்துள்ளன.

போட்டியின் போக்கை மாற்றக் கூடிய திறமை படைத்தவர் ஷேவாக். அவரது சுய நம்பிக்கையைத் தகர்த்து, மன உளைச்சலை அதிகப்படுத்தினால் அவரது ஆட்டத்தை சிதறடித்து விடலாம் என்ற நோக்கில், அந்த சூதாட்ட புரோக்கர்கள், ஷேவாக்குக்கு எதிராக சதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அணியில் ஷேவாக் இருந்தால் அது தங்களது அணிகளுக்கு ஆபத்து என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான் ஷேவாக்கை விரட்டியடிக்க அவர்கள் இப்படி சதி செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தானில் போய் முச்சதம் அடித்தவர் ஷேவாக். அதைப் பாராட்டும் வகையில், அடுத்த 20 இன்னிங்ஸ்களில் ஒரு ரன் கூட எடுக்காவிட்டாலும் கூட அவருக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் சுவாமி.

http://thatstamil.oneindia.in/news/2007/03/12/swamy.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Useless fellow. If you ask any one to tell any of living fools in India or in the world firstly they point their finger to Subramania swami and the second one is Mr Mottai, Tuklak so.Ramasamy.

Idiots. Don't waste our time talking abt them.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுப்பிரமண்ய சுவாமி இந்தியா தோற்றதுக்கு தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் தான் காரணம் என்று அறிக்கை விட்டாலும் விடுவார்

Link to comment
Share on other sites

அது மட்டுமா சொல்லுவாரு வுல்மார் செத்ததுக்கும் புலிகள்தான் காரணம் என்டு சொன்னாலும் சொலுவாரு :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.